வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

உலக வானொலி தினம்..!!






நவீன உலகில் டிவி,மொபைல்,ஸ்மார்ட்போன்.ஐ.பேட் மற்றும் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துவிட்ட போதிலும் வெகுஜன ஊடகத்தின் முன்னோடியாக திகழ்வது வானொலி தான்.

இத்தகைய அரிய கண்டுப்பிடிப்பை இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியைச் சேர்ந்த குலீல்மோ மார்க்கோனி என்பவர் கண்டறிந்தார்.


தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு மிகவும் அளப்பரியதாகும்.இன்று உலகம் முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளன.

முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றை விரைந்து அளித்தது வானொலி என்றால் அது மிகையாகாது.

அத்தகைய வானொலியின் சிறப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் விதமாக 2012-ம் ஆண்டு ஐ.நாவால் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினம் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


இத்தினத்தின் நோக்கம் என்னவென்றால் குறைந்த செலவில் தகவல்களை பரப்பி ஒலிபரப்பாளர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி வானொலி வலையமைப்புக்களை ஊக்கப்படுத்துவதே ஆகும்.

2 கருத்துகள்: