செவ்வாய், 10 அக்டோபர், 2017

அலைகள்

நான் ஒவ்வொரு முறையும்
கரையின் உச்சம் அடைய
முயற்சி செய்தேன்...
என்னால்
முடியவில்லை...
இருப்பினும்,
நான் ஒருபோதும்
ஓயவில்லை,
என் இலக்கை
அடைய..
எனக்குள் ஒரு
நம்பிக்கை,
ஒரு நாள்
இந்த பிரபஞ்சமே
திரும்பி பார்க்கும் அளவிற்கு
ஆழி பேரலையாக
உருமாறுவேன் என்று....

# அலைகள் #

----மு. நித்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக