திங்கள், 23 அக்டோபர், 2017

நியாயம்



‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.

‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மாஆவலுடன்,

‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக் குடித்தனம் போயிடு அப்ப தான் உனக்கு நிம்மதின்னு’ – அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்.

‘ரொம்ப மகிழ்ச்சி. இப்பதான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்னடா?’

‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’
family க்கான பட முடிவுஅம்மாவிற்கு அதிர்ச்சி. மனச்சுமை கூடியது. முகம் இறுகியது.யாரோ முகத்தில் அறைந்தது போல இருந்தது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக