சனி, 21 அக்டோபர், 2017

பலமொழி விளக்கம்

"உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் "

நம்முடைய பேச்சு வழக்கில் அதிகமாய் பயன்படுத்தப் படும் பழமொழிகளில் ஒன்று இது . எதுகை மோனை நடை என்பதற்க்காக தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும் என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் தற்காலத்திற்கு பொருந்தக் கூடிய அறிவியல் உண்மை ஒன்றை அற்புதமாய் எடுத்துரைக்கும் பழமொழி இது .

ஒரு மனிதனின் இரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பின் அளவு இருக்க வேண்டும் .அதற்கு மேல் இரத்தத்தில் சேரும் உப்பு வியர்வை,சிறுநீர் மற்றும் மலம் வழியே வெளியேறி விடுகிறது.ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது நம்சிறு நீரகம். இப்போது சொல்லுங்கள் நாம் நம் உடலில் சேரும் தேவையில்லாத உப்புகளை வெளியேற்ற எவ்வளவு நீர் அருந்த வேண்டும். இதை தான் பெரியவர்கள் உப்பைத் தின்னவன் தண்ணிகுடிக்கணும் என்று சொல்லி வைத்தார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக