வியாழன், 6 ஏப்ரல், 2017

முதல் தெய்வம்


             
அம்மா அப்பா முதல் தெய்வம் – அவர்
அடிகளைத் தொழுவதே அருள்பெறுவோம்
இன்றும் என்றும் அவர்வழியில் – நாம்
சென்றே சிறப்பாய் வாழ்ந்துயர்வோம்.

பேசும் தெய்வம் பெற்றோரே – நம்மைப்
பேணிக்ரகாப்பவர் பெற்றோரே
ஊட்டி வளர்ப்பவர் பெற்றோரே – நமக்கு
ஊக்கம் கொடுப்பவர் பெற்றோரே

நல்லதைக் கெட்டதை அறிந்தவர்கள் – இந்த
நாட்டின் நடப்பைத் தெரிந்தவர்கள்
அவர்களைத் தவிர நம்மீது – இங்கு
அக்கறை உள்ளவர் யாருமில்லை.

கல்வியைத் தருபவர் பெற்றோரே – நம்
கவலையைக் களைபவர் பெற்றோரே
அம்மா அப்பா மனம்மகிழ – நாம்

அனைத்தையும் செய்து உயர்வோமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக