வியாழன், 6 ஏப்ரல், 2017

பிறப்பு முதல் இறப்பு வரை..




உதிரம் என்ற நான்கு எழுத்திலே விழுந்து
        கருப்பை என்ற நான்கு எழுத்திலே மலர்ந்து
பிறப்பு என்ற நான்கு எழுத்திலே பிறந்து
        உலகம் என்ற நான்கு எழுத்திலே பார்த்து
பாலகன் என்ற நான்கு எழுத்திலே தவழ்ந்து
       பருவம் என்ற நான்கு எழுத்திலே அடைந்து
முயற்சி என்ற நான்கு எழுத்திலே முயன்று
       உழைப்பு என்ற நான்கு எழுத்திலே உயர்ந்து
இன்பம் என்ற நான்கு எழுத்திலே குளித்து
      குழந்தை என்ற நான்கு எழுத்திலே மகிழ்ந்து
முதிர்மை என்ற நான்கு எழுத்திலே  முதிர்ந்து

      மரணம் என்ற நான்கு எழுத்திலே உதிரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக