வியாழன், 6 ஏப்ரல், 2017

மகள்[ன்]

                                                                             

           கடசியா   என்ன   முடிவெடுத்துருக்கிங்க ?    என்றார்    பஞ்சாயத்துத்    தலைவர் .
            ஆளுக்கொரு    மூளையில்      அமர்த்திருக்க    வண்ணாத்தா    நடு    முற்றத்தில்  அழுது     கொண்டிருந்தாள். 
           இதைப்   பாருங்க     பிள்ளைகளா,      மூத்தவனுக்கு    இந்த  வீடும்    வயக்காடும் ,  இரண்டாவது  மகனுக்கு   தோட்டத்தில    இருக்க   வீடும்     தோப்பும்     மூனாவது   மகனுக்கு      ரைஸ்   மில்லும்       பக்கத்தில      இருக்க   மாடி  வீடும்        கடைசிய       இருக்கறது     உங்காத்தா     மட்டுந்தான்     கடைசி    காலத்தில    யார்    பாத்துக்கப்    போறீங்க.
            இதுவரைக்கும்      அதுவேணும்    இதுவேணும்    இருந்த   பயளுங்க      இப்ப   ஊமை    மாதிரி      பேசாம    இருந்தானுங்க.
             வண்ணாத்தாவுக்கு    செத்து   போலாம்     போலத்   தோணுது    அப்போ    ஒரு   ஆட்டோ    வந்து   நிக்குது      அதுவ  இருந்து      வரவங்களப்   பாத்து   அந்த   வீடே    அதிர்ச்சில    பேய்   பாப்த்த      மாறி    நிக்கராங்க.
           மருமவகாரிகளுக்கெல்லாம்       சொத்துல    பங்கு    கேட்டு      வராங்ளோன்னு    பயம்.
         எனக்கு   என்னோட    அம்மா    மட்டும்    போதும்னு   வண்ணாத்தாக்கைய    புடிச்சி    கூட்டிட்டு    போறாங்க        வண்டில    வந்தவங்க  
          தான்     பெத்த    பையன்       திருநங்கைனு      தெரிஞ்சதும்     வீட்ட  விட்டு   துரத்தினதையும்       இன்னைக்கு   அவனே   தன்னை    காப்பதறதையும்     நினைச்சி  கண்ணீர்    சிந்தினாள்    அத்தாய். 





                                                                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக