வியாழன், 6 செப்டம்பர், 2018

ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே


பண்டைய காலங்களிலெல்லாம் ஒரு  பெண் குழந்தையைப் பெற்று விட்டால் என்றால் அவளால் தான் அந்த குழந்தை பிறந்தது என்றும் பெண் குழந்தை பிறந்ததற்கும் தந்தைக்கும் சம்மதமே இல்லை என்பது போன்ற ஒரு சூழலும் அறியாமையும் இருந்தது.
தற்போதைய காலகட்டத்தில் நாகரீக மாற்றத்தாலும் அதிகப்படியான மக்கள் கல்வியறிவு பெற்றிருப்பதாலும் இது குறைந்திருக்கிறது.
இருந்தாலும் எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்வது எனது கடமை என்ற நோக்கில் எழுதுவதே இந்த பதிவு...


பிறப்பு என்பது ஆணின் விந்துவிலிருந்து ஒரு செல் பெண்ணின் கருமுட்டையிலுள்ள ஒற்றைச் செல்லுக்குள் நுழையும் போது ஏற்படுகிறது.
செல்லில் 46 குரோமோசோம்கள் உள்ளன.இதனை 23 ஜோடிகளாகப் பிரிக்கலாம்.
23 ல் 22 குரோமோசோம்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டிருக்கும்..
23 வது ஜோடி தான் இருவருக்கும் வேறுபடுகிறது.
ஆணிடம் உள்ள செல்லின் கடைசி ஜோடி   XY ஆகவும்.. பெண்ணிடம்  XY ஆகவும் இருக்கிறது.
கர்ப்பமுறும் போது தாய் தந்தை செல்கள் இணைகின்றன.
23 ஆண் குரோமோசோம்களும் 23 பெண் குரோமோசோம்களும் ஜோடி சேரும் போது ஆணின் விந்து செல்லிருந்து X தேர்ந்தெடுக்கப் படுகிறதா அல்லது Y தேர்ந்தெடுக்கப் படுகிறதா என்பதைப் பொறுத்துத்தான் குழந்தையின் பாலினம் அமையும்...
XX சேர்ந்தால் பெண் குழந்தையும்
YY சேர்ந்தாலும் ஆண் குழந்தையும் பிறக்கும்.
குழந்தையின் பாலினம் என்பது ஆணின் குரோமோசோம்களால் தான் நிர்ணயிக்கப் படுகிறது.
குழந்தை பெறுதல் என்பதில் இருவருடைய பங்களிப்புமே இருக்கிறது.
எனவே குழந்தைய பெத்துப் பாத்தா தான உங்களுக்கு என் கஷ்டம் தெரியும் என்று பெண்களும்..
 இந்த குழந்தை பொறந்திருச்சே அந்த குழந்தை பொறந்திருச்சே என வருத்தப் படாமல் ஆண்களும்....
நான் எனும் மடமையிலிருந்து நாம் எனும் வெளிச்சத்திற்கு வரும் போது தான் குடும்பம் வலுப்பெறும்...
குழந்தையும் வளமாய் வாழும்...

குழந்தை இல்லையே என ஏங்குபவரின் நிலையை நினைத்துப் பாருங்கள்  நீங்களெல்லாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள் என்பது புரியும்...

மசக்கையும் இல்லை..
மாங்காய் தின்னும் ஆசையும் இல்லை..
வளைகாப்பு வளையல் ஒலி எதுவும் இல்லை.
ஆனாலும் குழந்தை பெறுகிறது குப்பைத் தொட்டி..

இந்த வரிகளை வாசிக்கும் போதே நம் மனம் இறுகிப் போகிறதென்றால் நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள்...

கருக்கலைப்பு எவ்வளவு பெரிய கொடுமை...


தாய்மை என்றாலே புனிதம்...
அந்த தாய்மை எல்லா இடங்களிலும் வெல்லட்டும்...
பாலினம் கடந்த காதல் வென்றால் குடும்பமும் குழந்தையும் சேர்த்து இந்த பிரபஞ்சமும் முன்னேறும்...

1 கருத்து:

  1. நல்லதொரு பதிவு காவியா. அறிவியலுக்கும் மேலானது இயற்கை. வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் உள்ளனர்..

    பதிலளிநீக்கு