வியாழன், 9 ஜூன், 2016

வெர்ஜீனியா வுல்ப்

            
       வெர்ஜீனியா வுல்ப்—20நூ(நாவலர்)

வெர்ஜீனியா ஒரு இலக்கிய குடும்பத்தில் பிறந்தவர்.அவர் தந்தை சர் லேஸ்லை ஸ்டீபன்,முக்கியமான விக்டோரியன் விமர்சகர் மற்றும் கல்விமான்.தன் வீட்டில்ஒரு நூலக சுற்றுசூழலை உறுவாக்கியவர். வெர்ஜீனியா எழுத்தாளராக ஆரம்பத்தில் இலக்கிய பத்திரிக்கைகளுக்கு எழுதினார்.பின்பு லியோனார்ட் வுல்ப் என்ற எழுத்தாளரையே இவரும் திருமணம் செய்தார்பின்னர்,`ப்லூம்ஸ்பெரி`கூட்டதில் முக்கியமானவரானார். வுல்ப்,மேலும் ``ஸ்ரீம் ஆப் கான்சியஸ்னஸ்``என்ற நயத்தை படைத்தார். தனி உலகையே தன் நாவல்கள் மூலம் உருவாக்கினார்.இவரை பெருத்தவரை மனித வாழ்வு என்பது கடினமாகவும் உரைப்பு இல்லாமல் இருப்பதாகும். வுல்பின் நாவர்கள்;
            `தி வாயேஜ் அவுட்` என்பது இவரது முதல் நாவல்.இது `வசனங்கள்`கொண்ட ஒரு நீண்ட படைப்பாக இருந்தது.வுல்பின்``ஜகோப்ஸ் ரூம்``என்பதில் தான் முதல் முதிர்பெற்ற இவரது நாவலாகும்.இதே உருதியுடன் ``மிஸ்சஸ் டல்லோவே``என்ற படைப்பை படைத்தவர்.இந்த நாவல்கள் மூலம் அவர் தலைமையான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல லண்டனில் அன்றய நிலவரல்த்தை தந்தள்ளார்.

            `டு தி லைட்ஹஸ்(1927)இல் `ஸ்டீரீம் ஆப் கான்சியஸ்நஸ்` என்ற நயத்தை உறுதியாக கையாண்டுள்ளார். `தி வேவ்ஸ்` என்பது இவரது ஒரு அலகான கவிரையாகும்.`ப்வஷ்`மற்றும் `தி இயற்ஸ்` போன்ற படைப்புகளில் குடும்ப பந்தத்தை பற்றி எழுதியுள்ளார்.`ஓர்டால்டோ, டையோகிராபி` என்பதில் அவரது வளர்சியை பற்றியானது.இது தட்டுமல்லாமல் பல கட்டுமாமல் பல கட்டுரைகளை அவர்களது கலாச்சார கருத்துகள் கொண்டு எழுதியுள்ளார்.இதி `எ ரூம் ஆப் ஒன்`ஸ் ஓன்` , `தி செகன்ட் காமன் சென்ஸ்` என்பதெல்லாம்.இவரது குறிபிடத்தக்க படைப்புகளாகும்.

எனது ஐயங்களுடன் மீரா.செல்வக்குமார் ஐயா..!!

இப்பதிவில் வலைப்பதிவர் மீரா.செல்வக்குமார் ஐயா அவர்களுடன் எனது ஐயங்களுக்கான விடையை காண உள்ளோம்..

புதன், 8 ஜூன், 2016

ஏ.ஜி.கார்டினர் மற்றும் ஜி.கே.சேஸ்டர்டன்

                                                                     
                                                ஏ.ஜி.கார்டினர்—20ஆம் நூ

ஆல்ப்ரட் ஜியார்ஜ் கார்டினர்(1865—1946)ஒரு பிரிடிஸ் பத்திரிக்கையாள மற்றும் எழுத்தாளருமாவார்.இவரது கட்டுரைகள் அனைத்தும் ``ஆல்பா ஆப் தி ப்லோ`` என்ற செல்லப்பெயரில் எழுதுவார்.தினசரி தகவல்களை சேகரித்து பத்திரிக்கைகளுக்கு தருவதில் வல்லவர்.1915ஆம் ஆண்டுகளில் இவரது படைப்புகளை ``தி ஸ்டார்``என்பதில் `சுடோனிம்` என்ற செல்லப்பெயரில் எழுதினார்.இதன் மூலமாக இவர் ஒரு திறமையான கட்டுரையாளர் என்று நிரூபித்தார்.இவரது கட்டுரைகள் நலினமாகவும்,தனித்துவமாகவும் நகைச்சுவை நயத்துடனும் எழுதியுள்ளார்.இவரது தனித்துவம் வாழ்கையின் அடிப்படையான உண்மையை வியக்கத்தக்க வகையில் தன் கட்டுரைகளில் எழுதியுள்ளார், `பில்லர்ஸ் ஆப் சோசைடி`` ``போபில்ஸ அன்ட் தி ஷோர்`` `தி வேனிடி ஆப் ஒல்ட் ஏஜ்` பின்னர் `ப்ராபிட்ஸ்` என்பதும் இவரது குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

                              ஜி.கே.சேஸ்டர்டன்
கில்பர்ட் கேயித் சேஸ்டர்டன் பிரபலமாக ஜி.கே.சேஸ்டர்டன் என்றழைப்பர். சேஸ்டர்டன் ஒரு பக்தியாளர்,கவிஞர்,தத்துவ,போதகர்,நாடகவியலாலர், நாவலர்,பத்திரிக்கையாளர்,இலக்கிய பேச்சாளர் சமூக விமர்சகர், மற்றும் சுயசரிதையாளருமாவார்.இவரை பொழுதும் ``பிரின்ஸ் ஆப் பாரடோக்ஸ்`` என்பர்.இவர் ஜி.பி.ஷாவிற்கு அன்பான எதிரியாவார்.பேரும் அறிவுத்திறன் படைத்தவரும் கூட.எட்டு புத்தகங்கள்,நூறு கவிதைகள்,இருநூறுக்கும் மேலான சிறுகதைகள்,நாலாயிரம் கட்டுரைகள் மற்றும் நிறைய நாடகங்களும் எழுதியுள்ளார்.``என்சைகிலோபீடியா பிரிடானிகா`` என்பதற்கு தன் படைப்புகளை எழுதுவார்.இவரது சிறந்த கதாப்பாத்திரமான `பாதர் பிரவுனை` குறிப்பிடுவர்.சேஸ்டர்டன் எப்பொ.உதும் தன் நெறுங்கிய நன்பன் கவிஞன் மற்றும் கட்டுரையாளருமான ஹில்லாரி பிலாக்குடன் இணைந்திருப்பார். ஜி.பி.ஷா. இவரை ``சேஸ்டர்பிலாக்`` என்றழைப்பார்.இவர் இருபதாம் நூற்றாண்டின் நவீன இலக்கிய எழுத்தாளராவார்.``தி மேன் ஹூ வாஸ் தோஸ்டே`` என்ற இவரது நாவல் புகழ்பெற்றதாகும்.

                                    

ப்பால் ஆப் ஸ்பேரோ

                                        
           
                                                ப்பால் ஆப் ஸ்பேரோ
                                         --நா.கல்யாணி
ந.கல்யாணி ஒரு சிதந்திரமான பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளருமாவார்.அவரது படைப்புகள் அனைத்தும் சுற்றுசூழல் மற்றும் வணத்தில் ஏற்படும் சிக்கள்களை பற்றி எழுதி நாளிதழ்களுக்கு கொடுப்பார். இந்த கட்டுரையில் மரக்குருவிகள்(அ)சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவு பற்றி கூறியுள்ளார்.இக்குருவிகளைக் காட்டி அம்மா ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு சோர் பருகுவார்.ஆனார்,மனிதனால் நவீனமயமாக்கப்பட்ட இவ்வுலகில் அவை வாழவே இப்பொழுது போராடுகின்றன.


            இச்சம்பவங்கள் எழுத்தாளர் மனதில் சொகத்தை ஏற்படுத்தியதால் அவற்றை காக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்கின்றார்.இயற்கை கண்காணிப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கலெல்லாம்,இந்த எண்ணிக்கை குறைவை கவணிக்கின்றனர்.எழுத்தாளர் கல்யாணி குருவிகளின் தில்லி ஆராய்சியாளரான முனைவர்.நீராஜை குறிப்பிடுகிறார். மனித மனித வாழ்கையை தன் வாழ்கையுடன் இணைத்துக்கொண்டவை இந்த குருவிகள் ஆதலால்,சிறிய மாற்றத்தயும் ஏற்க தகாதது.
            வளமான எண்ணிக்கை கொண்ட கருவிகளே ஆரோக்கியமான சமுதாயத்திற்கான சான்று.சுற்றுச்சூழல் நிபுனர்களான மொகமத் திலாவர் மற்றும் முனைவர்.சேயினுதின் படாலி குருவிகள் பாதுகாக்கப்படவேண்டும் மற்றும் பிலிகளைப்போல குருவிகளும் அழிந்துவரும் இனம்(endangered specis) என்ற பட்டியலில் சேர்க வேண்டும் என்று கூறுகின்றார்.திலாவர் இதற்கெல்லாம் முக்கிய காரனமாக கிரீன் டிசார்ட்(green desert)குறிப்பிடுகிறார். இதில் அதிக படியான நச்சு பொருட்களும்,ரசாயணங்களும் சிறிய பூச்சுகளைக் கொள்வதால் குருவிகள் உணவில்லாமல் இறந்து போகின்றன.புறாக்கள் குருவிகளை விட அதிக உணவு உண்ணும்.அதும் இவைகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.மேலும் நாம் அன்றாடம் பயண்படுத்தும்3ஜி,அலைபேசி முதலியன தாக்கத்தால் வெகு வேகமாக சிட்டு முதல் வளர்ந்த குருவிவரை அடியுடன் அளிந்துபோகின்றன.
திரிந்த புல்நிலக்களின் அழிவு
இயற்கை செடிகளின் அழிவு

நச்சு பொருட்களின் பயண்பாடு போன்றவையே அவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றன.

தி போர்ட்ரேயிட் ஆப் லேடி

                                          
     
                                            தி போர்ட்ரேயிட் ஆப் லேடி
                                          ---குஷ்வன்ட் சிங்
இக்கட்டுரையில் குஷ்வன்ட் சிங் தனது பாட்டியுடன் தனக்கு கிடைத்த அனுபவத்தை இதில் பகிர்ந்துள்ளார்.இதில் கட்டுகோப்பான, நடுத்தரமான ஒரு பெண் அவரது பேரன் பிரிவுக்கு பின் மரக்குருவிகளுடன் ஏற்பட்டபினைப்பை அழகாக கூறியிருப்பார்.அந்த சுருக்கங்கள் நிறைந்த பாட்டி முகம் ஒரு காலத்தில் அழகு பொலிவுடன் காணப்பட்டது என்பதனை இளம் சிறுவனாக சிங்கால் ஏற்க இயலவில்லை.அதனை கட்ட்டுக்கதை என்று நினைத்தார்.குஷ்வன்ட் சிங் தனது குழந்தை பருவத்தை பாட்டியுடன்  செலவிட்டார்.
            அவரது பெற்றோற்கள் குஷ்வன்டை கிராமத்தில் தன் பாட்டியிடம் ஒப்படைத்து அவர்கள் வேலைக்காக நகரத்திற்கு சென்றனர்.பாட்டி சிங் பள்ளிக்கு புரப்படுவதற்கு உதவி செய்வார் அத்துடன் பஜனையும் சத்தத்துடன் பாடுவார்,தனது பேரனுக்கு அந்த கீர்தனங்கள் மனப்பாடம் ஆகும் என்ற நம்பிக்கையில்.தினமும் காலை சில சப்பாத்திகளை செய்து மதிய உணவிர்கும் கொடுத்தும் மேலும் சில சப்பாத்திகளை தன்னுடன் கொண்டு செல்வார்.பள்ளி தனது கேவிலுக்கு கோவிலில் பஜனைக்கு அமர்ந்திருப்பார். பள்ளி முடிந்து திருப்பும் வழியில் தெரு நாய்களுக்கு தான் எடுத்து வந்த சப்பாதிகளை கொடுப்பார்.இந்த நெருக்கம் அனைத்தும் அவர்கள் இருவரும் நெருக்கம் அனைத்தும் அவர்கள் இருவரும் பெற்றோர் வசிக்கும் நகரத்திற்கு சென்றவுடன் குறைந்தது.இப்பொழுது குஷ்வன்டும் ஒரு ஆங்கில பள்ளியில் சேர்தினர் தினமும் பள்ளிக்கு  பேருந்து வந்து அழைத்துச் செல்லும்.
            அங்கு சப்பாதி போட நாய்கள் எதுவும் இல்லாததால் குருவிகளுக்கு ஊட்டி அதுகளிடம் நேரம் செலவிட ஆரம்பைத்தார்.குஷ்வன்ட் அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்றார்.பாட்டிக்கு இது சங்கடத்தை அளிக்கிறது பள்ளியில் தெய்வத்தை பற்றி தன் பேரனுக்கு போதிக்கவில்லையே என்று யேசிக்கிறார்.பின்னர் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றார்.ரயில் திலையத்திற்கு பாட்டி எந்த வித சலந்த்தை தெரிவிக்காமல் தலையில் ஒரு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.ஐந்த வருடங்களுக்கு பிறகு திரிம்பி வந்தபோது பாட்டி பேரனது வருகையால் சந்தோசமானாலும் குறுவிகளையே தன் துனையாக கொண்டார்.

            அந்த குருவிகள் பாட்டியின் தோல்கள்,கைகளில் அமர்ந்திருக்கும்.சாய்ங்கால நேரத்தில் அருகில் இருக்கும் பெண்களை சேத்தி இசைக் கருவிகளைக் கொண்டு பாடல் பாடினார்.இதுவரை இதுபோல பாட்டி நடந்து கொண்டதே இல்லை.அடுக்க நாள் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது,பாட்டி இயற்கை எய்தினார்.பின்னர்,அந்த இடத்தில் ஆயிரக்கனக்கான குறுவிகள் அந்த இடத்தில் குவிந்தன.ரொட்டித் துண்டுகளையும் பொருட்படுத்தாமல் அமைதியாக அமர்ந்தது.சடலத்தை எடுத்த பின் அவை பறந்து சென்றன.

டைட் கார்னர்ஸ்

                                                            

ஆன் கேட்டிங் ஆப் டு ஸ்லீப்

                                  
                   
                ஆன் கேட்டிங் ஆப் டு ஸ்லீப்
                                                --ஜெ.பி.பிரிஸட்லி

இந்த நகைச்சுவை கட்டுரையில் பிரிஸ்ட்லி``இன்சோமானியா``என்று சொல்லப்படும் தூக்கமின்னை நோயிலிருந்து எப்படி மீன்டார் என்று கூறியிருப்பார்.பிரிஸ்ட்லீக்கு தூக்கம் அவர் அமர்ந்து எழுத நினைக்கும் போது அவருக்கு உறக்கம் ஏற்படுகிறது ஆனால்,இரவில் தூக்கமின்மையால் வருந்துகிறார்.இந்த நோயிலிருந்து விடுபட இயலவில்லை.இவர் தாள்,மை போன்றவற்றை படைப்புகளை உருவாக்கியிருப்பார்.
            பிரிஸ்ட்லி க்ரோம்வேல் மற்றும் நெப்போலியன் போன்ற உன்னத மனிதர்களை பற்றி சிந்தித்துப் பார்கிறார்.அவர்கள் இரவில் படுத்த உடன் உறங்கி விடுகின்றனர் என்று வியக்கிறார்.அவர்களைப்போல படுத்தவுடன் உறங்க இரவில் பல மணிநேரம் முயற்சிக்கிறார். ஆனால்,பிரிஸ்ட்லியால் இயலவில்லை அவர்களிடம் ஏதோ விசித்திரமாக, விலங்குபோன்று தெரிகிறதாம்.நாம் கடந்து வந்தஅந்த நாளை பற்றி சிறிதும் சிந்தித்து பாராமல் படுத்த உடன் உறங்கும் அந்த மனிதர்களின்மீது பிரிஸ்ட்லி கேள்வி எழுப்புகிறார்.

            இவர்களை போன்ற மனிதர்களிடம் தன் உறங்கும் அறையை பகிர முடியாது என்கிறார்.அவர்கள் மற்றவர்களுக்கு பேசவோ அவர்கள் எண்ணங்களை பகிரவோ வாய்ப்பளிக்கமாட்டார்கள்.அவரது தூக்கமின்னை சிக்கலிருந்து வெளிவர நிறைய கருத்துகள் அவருக்கு கூறப்பட்டன.அவருடன் வெட்ஸ்வெர்தின் கவிரைகளை படிப்பது, தாவும் ஆடுகளை எண்ணுவது
போன்ற பலவற்றை அவர் நண்பர்கள் இன்சோமானியாவிலிருந்து வெளிவர கூறினர்.ஆனால் எதுவுமள அவருக்கு கை கொடுக்க வில்லை.இறுதியாக இரவில் அனைவரும் போல தூங்குவதற்கு ஒரு வழியைக்கண்டார்.அது அவர் தன் கனவில் வெறுப்பூட்டும்(boring)ஒரு மனிதரிடம் பேசிக்கொள்வது போல கற்பனை செய்வதே அந்த தீர்வு.

செவ்வாய், 7 ஜூன், 2016

எனது ஐயங்களுடன் தி.தமிழ் இளங்கோ ஐயா...!!

அன்புடையீருக்கு வணக்கம்,

திருபாய் அம்பானி

                                             
Image result for திருபாய் அம்பானி

இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் கவனத்தைக் கவரும் இந்தியாவின் கோடீஸ்வரர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி ஆகியாரின் தந்தை திருபாய் அம்பானி ஆவார்.
     சினிமாவில் ஆரம்பத்தில் ஏழையாக தோன்றும் கதாநாயகன், படம் முடிவதற்குள் திடீரென்று மிகப்பெரிய பணக்காரனாகி பார்ப்பவர்களுக்கு அதிசியத்தைத் தருவது போல அமைந்தது திருபாய் அம்பானியின் வாழ்க்கை.
‘இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த மனிதர்’ என்று பல தொழிற்நுட்பக் கழகங்களாலும் பாராட்டப்பட்டவர். ‘ இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமாக செல்வத்தை சேர்த்த மனிதர் ’ என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
செய்யும் தொழிலில் விடாமுயற்சியுடனும் நம்பக்கையுடனும் முழுமையாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்று நம்பியவர்.
இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் பணிபுரிய தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி, உற்சாகப்படுத்தினால் அதன் விளைவு கணக்கில் அடங்காதது என்று நினைத்ததே அவரது தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் காரணமாகும்.
இன்றைய தினத்தில் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரிலையன்ஸ் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களில் தங்களின் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்.
சாதாரண மக்களும் பங்கு சந்தையில் ஈடுபட்டு அதிக லாபம் சம்பாதிக்கலாம். தங்கள் வாழ்க்கை வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்னும் ஆர்வத்தை தூண்டியது ரிலையன்ஸ் என்று கூறினால் அது மிகையல்ல.
தற்சமயம் குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜீனகத் என்னும் நகரத்தில் 1932 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். இளமையிலேயே பணம் சம்பாதிப்பதில் அதிக நாட்டத்துடன் காணப்பட்டார். விடுமுறை நாட்களில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வரும் இடங்களுக்குச் சென்று உணவுப் பண்டங்களை விற்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
படித்தது பள்ளி இறுதி வகுப்பு வரை தான். தனது பதினாறாவாது வயதில் ஓமன் நாட்டில் உள்ள ஓடன் என்னும் இடத்திற்குச் சென்று அங்குள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்தார். தன்னுடைய திறமையால் அந்த நிறுவனத்தில் முக்கிய பதவியை வகித்தார்.
அவர் வேலையில் இருந்தாலும் அவருடைய எண்ணமெல்லாம் ஒரு தொழிலதிபராக ஆக வேண்டும் என்பதிலேயே இருந்தது.
இந்தியா திரும்பிய அவர் 1962 ஆம் ஆண்டில் ‘ ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் ’ என்னும் நிறுவனத்தை தனது உறவினரான சம்பக்லால் தமானி என்பவருடன் சேர்ந்து வெறும் 15000 ரூபாய் ( ஆம் வெரும் பதினைந்தாயிரம் ரூபாய்த்தான் அந்த எண்ணோடு லட்சங்களோ கோடிகளோ இல்லை ) முதலீட்டுடன் தொடங்கினார்.
அப்போது அவருக்கு வயது முப்பது தான். அந்த நிறுவனம் 350 சதுர அடி அளவே உள்ள ஒரு அறையைல் ஒரே ஒரு தொலைபேசி, ஒரு மேஜை, மூன்று நாற்காலிகளுடனும் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டு உதவியாளர்கள் அவர்களுடன் சேர்ந்து பணி புரிந்தனர்.
அந்த காலகட்டத்தில் அம்பானியின் குடும்பம் ஒரே ஒரு படுக்கையறையுள்ள ஒரு இடத்தில் வசித்து வந்தது. இன்று அம்பானி குடும்பத்தின் வளர்ச்சி எல்லாரும் அறிந்ததே.
இதற்கு எல்லாம் வழிகாட்டியவர் திருபாய் அம்பானி என்பதும் அவர் முதல்முதலில் சொந்தமாக தொழில் புரியத் தொடங்கியபோது அவருக்கு வயது முப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.

                           (படித்ததில் பிடித்தது)

ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்

                                                       
     Image result for ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்


அமெரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடியவர். அமெரிக்காவில் அந்த காலக்கட்டத்தில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் கருப்பர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு பள்ளிகளில் தனி இடம், ஓட்டல்களில் தனி இடம், பேருந்துகளில் கூட தனி இடம் தான்.
இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் பிறந்த மார்ட்டின் லூதர் கிங், இத்தகைய வேறுபாடுகள் நியாமானது அல்ல இவற்றிற்கு முடிவு காண வேண்டும் என்று தீவிரமாக சிந்தித்து செயல்பட்டு வந்தார்.
மகாத்மா காந்தி காட்டிய வழியில் சாத்வீகமான போராட்டங்கள் நடத்தினார். மக்களின் ஆதரவைத் திரட்டி கூட்டங்கள் நடத்துவது, பத்திரிக்கைகள் மற்றும் இதர ஊடகங்களின் ஆதரவைத் திரட்டுவது, அநீதிக்கு எதிராக போராடுவது இது போன்ற வழிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தினார்.
அவரது வரவேற்பு அறையில் மகாத்மா காந்தியின் படம் இருந்தது. 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் இவர்கள் இனத்தை சார்ந்த ரோஸாபார்க்ஸ் என்னும் பெண்மணி, ஒரு வெள்ளையனுக்கு பேருந்தில் தான் உட்காந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து இடம் தர மறுத்தது பெரிய போராட்டத்தை உருவாக்கியது. மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் போராட்டம் நடந்தது.
1956 ஆம் வருடம் இது மாதிரி வித்தியாசம் பாராட்டுவதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கக் கூடாது என்று நீதி மன்றம் தீர்ப்புக் கூறியது.
1963 ஆம் ஆண்டில் வேறு பல துறைகளிலும் வெள்ளையர்களுடன் சம உரிமை வேண்டும் என்று போராடுவதற்கு, வாஷிங்டனில் உள்ள லிங்கன் மெமோரியல் ஹால் எதிரே 2,50,000 பேர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். “ நான் ஒரு கனவு காண்கிறேன் ” என்று தொடங்கும் இவரது உரை உலக புகழ் பெற்றது.
     வாஷிங்டன் சரித்திரத்திலேயே ஒரு போராட்டத்திற்காக அவ்வளவு பேர் கூடியது அந்த சம்பவத்தில் தான். இன்று அமெரிக்காவில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் சம உரிமைகளைப் பெறுவதற்கு மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் சாத்வீகமான போராட்டங்கள் பெரிதும் உதவின.
     இவரது சேவையை பாராட்டி இவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 1964 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 35 தான். நோபல் பரிசு வாங்கியவர்களிலேயே அத்தகைய காலக்கட்டத்தில் மிகவும் வயது குறைந்தவர் இவர் தான்.
     1968 ஜனவரி மூன்றாம் நாள் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவு நாள் அன்று அமெரிக்காவில் தேசிய விடுமுறை நாளாக நடைமுறையில் உள்ளது.

                                ( படித்ததில் பிடித்தது )

திங்கள், 6 ஜூன், 2016

நாம் எல்லோரும் மே டின் இந்தியாவா?


Image result for made in india logo

நாம் தினமும் உபயோகப்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுத் தயாரிப்புக்களாகவே உள்ளன. அதை நாம் பெரிதும் கண்டுக்கொள்வதில்லை. உதாரணமாக இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளையும் பார்ப்போம்.
சோப்பு;
லக்ஸ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
டவ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
பியர்ஸ் – இங்கிலாந்த்
டெட்டால் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
லைபாய் – அமெரிக்கா
கைபேசி;
சாம்சங் – தென் கொரியா
நோக்கியா – பின்லாந்த்
மைக்ரோ சாப்ட் – அமெரிக்கா
பிலாக் பெரி – ஹங்கேரி
சோனி – ஜப்பான்
மடி கணினி;
ஹச்பி – ஐக்கிய இராஞ்சியம் (UK)
டெல் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
ஆப்பிள் – கலிபோர்னியா
வையோ – ஜப்பான்
லெனோவா – சீனா
தொலைக்காட்சி;
சோனி – ஜப்பான்
எல்ஜி – தென் கொரியா
பிலிப்ஸ் – நெதர்லாந்த்
ஹிடாச்சி – ஜப்பான்
சாம்ப்;
சன் சில்க் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
பேண்டீன் – சுஜர்லாந்து
ஹெட் அண்ட் சோல்ஜர்ஸ் – அமெரிக்கா
இப்படி நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் வெளிநாட்டின் தயாரிப்புகளாகவே உள்ளன. ஆனால் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நாட்டின் தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. உதாரணமாக சீன மக்கள் சீன நாட்டின் தயாரிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றன. அது போல ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியது நமது கடமை. ஆனால் அவ்வாறு நாம் செய்வது இல்லை. இந்தியாவின் தயாரிப்புகளுக்கு இந்தியாவிலேயே முக்கியத்துவம் இல்லாத போது உலக அளவில் எவ்வாறு முக்கியத்துவம் பெறும்.
நாம் ஒரு பொருளை வாங்கும் போது அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று பார்ப்பதே இல்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். இனிமேலாவது இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்போம்.


சர் விஸ்வேஸ்வரய்யா

                                                           
Image result for விஸ்வேஸ்வரய்யா


ஆங்கிலேயர் ஆட்சியில் இவரின் பொது சேவையை பாராட்டி இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது.
     சுகந்திர இந்தியாவில் மிக உயர்ந்த ‘ பாரத ரத்னா ’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் தலைசிறந்த பொறியியலாளர் ஆவார். இவரது நினைவாகவே செப்டம்பர் 15 ஆம் நாள் இந்தியாவில் “பொறியாளர் தினம்” கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் அன்றைய தினம் விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
     மைசூருக்குச் செல்பவர்கள் கிருஷ்ணராஜ சாகர அணைக்கட்டுக்குச் செல்லாமல் திரும்பி வரமாட்டார்கள். அதை உருவாக்கியவர் சர் விஸ்வேஸ்வரய்யா தான்.
     சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் முதல்முதலில் மின்சார உற்பத்தியை தொடங்கியவர் இவர் தான். மைசூர் சாண்டல் சோப் பேக்டரி தொடங்க காரணமாக இருந்தவர் இவர் தான்.
     பத்ராவதி இரும்பு உற்பத்தி தொழிற்சாலை, பெங்களூர் விவசாய பல்கலைக் கழகம், மைசூர் சர்க்கரை ஆலை போன்ற இன்னும் பல தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஆதரவு அளித்தார். ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் தொடங்குவதற்கும் ஆதரவு அளித்தார்.
     திருமலை - திருப்பதி சாலை அமைப்பதற்கும் முன்னின்று ஆலோசனைகள் வழங்கினார். பெங்களூரில் பொறியியல் கல்லூரி நிறுவ ஆதரவு அளித்தார். மைசூர் பல்கலைக் கழகம் நிறுவ காரணமாக இருந்தவரும் இவரே.
தற்போது ‘ கர்நாடகா ’ என்று வழங்கப்படும் மாநிலம் அவரது காலக்கட்டத்தில் மைசூர் மாநிலம் என்றே கூறப்பட்டு வந்தது. மைசூர் மாநிலத்தின் தந்தை என்று சர் விஸ்வேஸ்வராய்யா ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
அவரது பெயரால் பல பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவரது நூற்றாண்டு விழாவின் போது பெங்களூரில் “ விஸ்வேஸ்வரய்யா இண்டஸ்ட்ரியல் அண்ட் டெக்னாலஜிகல் மியூசியம்” என்று ஒரு மியூசியம் ஆரம்பிக்கப்பட்டது. பெங்களூர் செல்பவர்கள் தவறாமல் சென்று பார்க்கும் மியூசுயம் இது. இவர் படித்து பொறியியல் பட்டம் பெற்ற பூனா பொறியியல் கல்லூரியில் இவரது உருவச்சிலை நிருவப்பட்டுள்ளது.
உண்மை, உழைப்பு, நேர்மை, தேசபக்தி என்று வாழ்ந்தவர். மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். 1860 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1962 ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது அவருக்கு வயது 102 ஆகும்.
                           ( படித்ததில் பிடித்தது )


     

சனி, 4 ஜூன், 2016

முகம்மது அலி

                                                           
    Image result for முகம்மது அலி


உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்று உலகப் புகழ்பெற்ற பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டவர்.
     குத்துச் சண்டையில் அவர் காட்டும் தீவிரம், வேகம், நளினம் எல்லாம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த அம்சங்கள்.
     இவரது இயர்ப்பெயர் காஷியஸ் மார்ஸ்ல்லஸ் க்ளே ஜூனியர் என்பதுதான். இவரது இளமைக் காலத்தில் அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடியது. அதனால் இவரது பிரிவைச் சார்ந்தவர்களுக்காக இருந்த தனியான பள்ளியில் சேர்ந்து படித்தார்.
     ஒரு காலக்கட்டத்தில் முஸ்லீம் மதத்தில் சேர்ந்து முகம்மது அலி என்கிற பெயரை வைத்துக்கொண்டார்.
     சிறந்த குத்துச் சண்டை வீரராக அமெரிக்காவில் வசித்து வந்தாலும் பல சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் கொள்கைகளைப் பிடிக்காமல் பகிரங்கமாக அரசாங்கத்தை எதிர்த்தார். அதன் விளைவாக அவர் அமெரிக்க நாட்டின் சார்பாக குத்துச் சண்டை போட்டிகளில் பங்கு எடுக்க கூடாது என்று அரசாங்கம் தடை விதித்தது. பலகோடி ரூபாய் வருமானம் நஷ்டம். இருந்தாலும் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.
     ஒரு காலக்கட்டத்தில் அவருக்கு பார்க்கின்ஸன் வியாதி வந்து அவர் குத்துச் சண்டையே போட இயலாத நிலை வந்தபோதும் மனம் கலங்காமல் பொதுத் தொண்டுகளில் ஈடுபடத் தொடங்கினார்.
     பார்க்கின்ஸன் வியாதியால் துன்புறுபவர்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கவும், அரசாங்கத்தின் நிதி உதவி, அது சம்மந்தமான ஆராய்ச்சிகளுக்கு கிடைக்கவும் முயற்சி செய்தார்.
     லூயிஸ்வில்லி என்னும் இடத்தில் ‘முகம்மது அலி சென்டர் ‘ என்ற பெயரில் மிகவும் வித்தியாசமான கண்காட்சிசாலையும் நிரந்தரமாக செயல்பட்டு வருகிறது. தன்னை வளர்த்த சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டு வந்தார். 1942 ஆம் ஆண்டில் லூயிஸ்வில்லி என்னும் இடத்தில் பிறந்த இவர், முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹெவி வெயிட் சாம்பியன் என்னும் பட்டத்தைப் பெற்றபோது, இவருக்கு வயது 18 தான். ஐம்பத்தொம்பது போட்டிகளில் இவர் மூன்றில் தான் தோல்வி கண்டிருக்கிறார். இவ்வளவு சாதனைகள் படைத்த முகம்மது அலி நேன்று (3.6.2016) காலமானார் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.