ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 8


Image result for ramayana kaaviyam photos


(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
   
    நிறைய பேச வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சொல் பேசினாலும் மனதிற்கு நிறைவாகப் பேச வேண்டும். இல்லையென்றால் மவுனமாக இருப்பது உத்தமம்.
    
   பன்னீராயிரம் பாடல்களைக் கொண்ட ராமாயணத்தில் சத்ருக்கனன் எங்கே பேசுகிறான்? அவன் வாய்திறந்து பேசியதாக ஒரே ஒரு பாடலைத்தானே கம்ப காவியத்தில் நாம் காண முடிகிறது.
    
    வனவாசம் சென்ற ராமன், பதினான்கு ஆண்டுகள் ஆகியும் நாட்டுக்குத் திரும்பிவரவில்லை. எனவே, பரதன் ஏற்கனவே ராமனிடம் சொல்லியிருந்தபடி நெருப்பில் வீழ்ந்து உயிரைத் துறக்க முடிவு செய்கிறான்.
     
    நாட்டின் பொறுப்பை ஒருவரிடம் தந்து, அதை ராமனிடம் ஒப்படைக்கச் செய்ய வேண்டும். எனவே சத்ருனக்கனனை அழைத்து, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறான்.
     
    அப்போதுதான் சத்ருக்கனன் அந்த முழுக்காவியத்திலும் முதன் முறையாக வாய்திறந்து ஒரே ஒரு பாடல் மூலம் தன் கருத்தைத் தெரிவிக்கின்றான்.

                                            
                            (தொடரும்..)

1 கருத்து:

  1. தங்கள் வருகைக்கும் , மறுமொழிகளுக்கும் நன்றிகள். எனக்கும் எனது தோழிகளுக்கும் வேலை தேவை பட்டால் தங்களை தொடர்ப்புக் கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு