வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

நீங்களும் பட்டயக் கணக்காளர் (CA )ஆகலாம்.




                   




           







வணிகம் என்பது என்று நாம் சம்பாதித்ததில் இருந்து சேமிப்பிற்காக எடுத்து வைத்தோம அதிலிருந்து தான் தொடங்கியது.

இன்று வணிகவியல் துறை மேன்மேலும் தன்னை காலத்திற்கேற்றாற் போல் தகவமைத்துக் காக்கிறது. முன்பு,  பி. காம் மட்டுமே இருந்தது ஆனால், இன்று பி. காம் எவ்வளவு உட்பிரிவுகள் ஈ-காமர்ஸ்,பினான்ஸியல் மார்க்கெட்டிங்  என வளர்ந்துள்ளது.

எந்த ஒரு நிறுவனத்திலும் நிதிநிலை நடவடிக்கைகள் நடக்காமல் இருப்பது இல்லை.  எனவே பட்டயக்கணக்காளர் என்று சொல்லப்படுகின்ற சார்ட்டேடு அக்கவுண்டன்ட் படிப்பு  மிகச் சிறப்பானதாகும்.  ஏனெனில் ,  அவரின்  துணையின்றி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது. பொருளாதாரம், நிர்வாகவியல், தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றத்தால் தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சி. எ என்று சொல்லப்படும் சார்ட்டேடு அக்கவுண்டன்ட்  எனும் படிப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்  இயங்கும் தி இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டேடு அக்கவுண்ட் ஆஃப் இந்தியா (இ. சி. ஏ. ஐ) நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

சி. எ முடிக்க
                    1.காமன் புரபசியன்ஷி(சி.பி.டி)
                    2.இன்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ்
                   3.ஆர்ட்டிக்கள்ஷிப் டிரெய்னிங்
ஆகிய நிலைகளை கடக்க வேண்டும்.

காமன் புரபசியன்ஷி நுழைவு தேர்வு எழுத பிளஸ் 2முடித்திருந்தாலே போதும்.  பொருளியல் வணிகவியல் சார்ந்த கேள்விகளே அதில் இடம்பெறும்.
  பி. காம் பட்டதாரிகள் சிபிடி தேர்வு எழுத தேவையில்லை. 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு 4 பகுதிகள் கொண்டது. மைனஸ் மார்க் உள்ளது. குறைந்தது 100மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.  40  விழுக்காடு குறைவாக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும்.

இடைநிலைத்தேர்வு (இன்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ்)  இதில் மொத்தம் 7 தாள்கள் உள்ளன. இதில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பட்டயக்கணக்காளரிடம் முன்று ஆண்டுகள் செயல்முறை பயிற்சி வழங்கப்படும்.  இந்த காலகட்டத்தில் ஊதியமாக 10,000 ஆயிரத்திற்கும் அதிகமாக வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகள் செயல்முறை பயிற்சியில் ஈடுபட்டிருந்தால் இறுதித்தேர்வை எழுதலாம்.

இறுதித்தேர்வில் 8 தாள்கள் இடம்பெறும். ஒவ்வொரு தாளிலிலும் 40 விழுக்காடு மதிப்பெண்ணுடன் மொத்தம் 50விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும்.
இதில் வெற்றி பெற்ற பிறகு "அசோசியேட் ஆஃப் சார்ட்டட் அக்கவுண்டன்ஷிப்" சான்றிதழ்  வழங்கப்படும். அதன்பிறகு ஐ. சி. ஏ. ஐ.  யில் சேர்ந்து  ஆடிட்டர் பணியைத் தொடரலாம்.

ஐசிஏஐ யில் இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை.  மாறாக தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்து கட்டணச்சலுகையும் வழங்கப்படுகிறது.
எனவே சி. ஏ படிப்பை சாதிக்கும் வெறியோடும் அர்ப்பணிப்பு உணர்வுடன் படித்தால் குறைந்து முன்று நான்கு வருடங்களில் நீங்களும் சி. ஏ ஆகலாம்.




2 கருத்துகள்: