தெரிந்ததும் தெரியாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்ததும் தெரியாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தேர்வுக்கு தயாராகுங்கள்...



பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டன. இவ்வேளையில் மாணவர்களுக்கு இனம்புரியாத ஒருவித அச்சம், தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை எப்படி தவிர்க்கலாம்?

பொதுத் தேர்வை ஏதோ மிகப் பெரிய தேர்வாக கருதி அஞ்சாமல், வழக்கமான மாதாந்திர தேர்வாக நினைத்தால், இயல்பாக இருக்க முடியும். பதற்றமும் கணிசமாக குறையும். அதற்காக அசட்டையாக இருந்துவிடக் கூடாது.

படிப்பதற்கு அட்டவணை தயார் செய்து கொண்டு படிப்பது நலம். எளிதான பாடங்களை இறுதி கட்டத்தில் படித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, கடினமான பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தேர்வு முடியும் வரை சினிமா, டிவி, கைபேசி, இணையதளம் உள்ளிட்ட, பொழுதுபோக்கு சமாச்சாரங்களுக்கு ஓய்வு கொடுத்துவிடுவது நல்லது.

படிக்கும்போது இடையிடையே நன்றாக மூச்சை உள்ளிழுத்து, கண்களை மூடி, சில நிமிடங்கள் தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்தும்.

அதேபோல், பாடங்களில் சந்தேகம் ஏதேனும் புதிதாக எழுமேயானால், உடனடியாக ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக் கொள்வது சிறந்தது.

கணிதம், இயற்பியல், வேதியியல் பாட சூத்திரங்களை மனப்பாடம் செய்வதை விட எழுதிப் பார்த்து பயிற்சி மேற்கொள்வது நல்லது.

முடிந்தவரை புத்தகங்களைப் பார்த்து மனனம் செய்துகொண்டே இருக்காமல், படித்ததை மனதிற்குள் அசை போட்டு பார்ப்பது நல்ல பலன் தரும்.

இரவு நெடுநேரம் கண் விழித்து படிக்காமல், பத்து மணியோடு படிப்பை நிறுத்திவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின், அதிகாலையில் படிப்பை தொடர்வது நலம்.

அதிகமாக காபி, டீ போன்ற பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். அவை உடலையும், மனதையும் மந்தமாக்க வாய்ப்புண்டு.

தேர்வுக்கு தயாராகும் நேரங்களில் எண்ணெய் மற்றும் கொழுப்பு சார்ந்த பதார்த்தங்களை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ளுதல் நல்லது. அதேபோல் பட்டினி இருப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

தேர்வுக்கு தயார் செய்யும்போது குழுவாக இணைந்து தயாரானாலும், தேர்வுக்கு ஒரு வாரம் முன்பிருந்து தனியாக படித்தலே சிறந்தது. இதனால், தேவையற்ற விவாதங்கள் தவிர்க்கப்பட்டு, மனம் ஒருநிலைப்படும்.

தேர்வு அறையில், வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் விடையளிக்க தேவைப்படும் கால அவகாசத்தை முன்பே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, 'எல்லாம் தெரியும்" என்கிற மனப்பான்மை அறவே வேண்டாம்! அதேபோல், 'எதுவுமே தெரியாது" என்கிற பய உணர்வும் வேண்டாம்!


தியானம் என்றால் என்ன...?






         நம் நாட்டில் தியானத்திற்கு என்று பல பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. தியானம் பற்றி ரமண மகரிஷி கூறிய கருத்து மிகவும் எளிமையான ஒன்று.
        அவரைக் காண வந்த ஒரு பெண், ரிஷி அவர்களே!! என் குழந்தைக்கு ”தியானம் பற்றி எளிமையாக கூறுங்கள்” என்று கேட்டார். அந்த குழந்தையை அழைத்த ரிஷி, குழந்தை கையில் ஒரு தோசையைக் கொடுத்து சில விதிமுறைகளைக் கூறினார். அது என்னவென்றால் நான் “ம்ம்” என்று சொல்லும் போது நீ தோசையை சாப்பிட வேண்டும். அடுத்த முறை நான் “ம்ம்” என்று சொல்வதற்குள் நீ தோசையை சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்றார். மகரிஷி “ம்ம்” என்று கூறினார், குழந்தை தோசையை சாப்பிட ஆரம்பித்தது. குழந்தை, அவர் எப்போது “ம்ம்” என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டே தோசையை வேகமாக சாப்பிட்டது. மகரிஷி சிறிது நேரம் சென்ற பின் “ம்ம்” என்று சொன்னார். அதற்குள் குழந்தை தோசையை. முழுமையாக சாப்பிட்டு முடித்தது. அப்போது மகரிஷி குழந்தையிடம், “இதன் மூலம் நீ என்ன அறிந்தாய்?” என்று கேட்டார். அப்போது அக்குழந்தை சொன்னது, நீங்கள் எப்போது “ம்ம்” என்று சொல்வீர்கள், அதற்குள் தோசையை சாப்பிட்டு விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தேன் என்றது. அப்போது மகரிஷி கூறினார், ”கவனத்தை நீ செய்த காரியத்தில் ஒரு முகமாக செலுத்தினாய் அல்லவா அது தான் தியானம்”. நாம் செய்யும் காரியத்தில் முழு கவனத்துடன் இருப்பதே “தியானம்”. 

வியாழன், 23 பிப்ரவரி, 2017

வாட்ஸ் ஆப் இரகசியம்..


நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை அதிகமாக பாதுகாக்க விரும்பினால் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் வைத்துக் கொள்ளலாம். இந்த முறையின் மூலம் உங்கள் தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக்கொண்டு 6 இலக்க கடவு எண் ஒன்றினை உருவாக்கி உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கினை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் போன் எதிர்பாராத விதமாக தொலைந்து போனால் வேறு எவரும் பயன்படுத்தாத வகையில் நாம் பாதுகாக்க இம்முறை உதவும்.

பார்க்காமல் விட்ட வாட்ஸ்ஆப் குரூப் மெசேஜ் அல்லது தனிப்பட்ட ஏதேனும் ஓர் மெசெஜ்க்கு பதிலளிக்க எந்த மெசஜ்க்கு பதிலளிக்க வேண்டுமோ அதனை அழுத்திப்பிடித்து பின்பக்கம் வரக்கூடிய பட்டனை செலக்ட் செய்து அதற்கான பதிலை அனுப்பலாம்.

வாட்ஸ்ஆப் குரூப்பில் உங்கள் மெசேஜ் எத்தனைப் பேரால் பார்க்கப்பட்டது எனக் கண்டறிய மெசேஜ் பற்றிய தகவல்கள் வேண்டுமோ அந்த மெசேஜ்யினை அழுத்திப்பிடித்து இப்போது திரையில் காட்டும் 'i' என்ற குறியினை செலக்ட் செய்தால் அந்த குறிப்பிட்ட மெசேஜ் எத்தனைப் பேரால் பார்க்கப்பட்டது எனக் கண்டறியலாம்.

வாட்ஸ்ஆப் ஆடியோ பொதுவாக பிளே செய்தால் ஸ்பீக்கர் முறையில் ஒலிக்கிறது என்றால் உடனே மொபைலை உங்கள் காதின் அருகே கொண்டு சென்றால் தானாகவே ஸ்பீக்கர் மோடில் இருந்து சாதாரண நிலையில் ஒலிக்கும்.

வாட்ஸ்ஆப்பில் நமக்கு தேவையான குறியீடுகளை ஏற்ற நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக good morning  இதனைப் போன்று நட்சத்திரக் குறியீடுகள் இடுவதன் மூலம் நாம் முக்கியமானதாக குறிப்பிட நினைப்பதை பிறருக்கு உணர்த்தலாம்.

வாட்ஸ்ஆப் குரூப்பில் தனியாக எவரேனும் குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் அனுப்புகையில், @ குறியிட்டு அனுப்புவதன் மூலம் அந்த நபரின் கவனத்திற்கு நாம் எளிதில் கொண்டு செல்லலாம்.

ஷேர் செய்யப்படும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும்போதே ப்ளே செய்து பார்க்கலாம். இதன்மூலம் முழு வீடியோவையும் தரவிறக்கும் செய்யும் வரை காத்திருக்காமல் ப்ளே செய்து பார்க்க முடியும்.

டிக்... டிக் !

ஒரே ஒரு வெளிறிய டிக் அடையாளம், உங்கள் செய்தி வெற்றிகரமாக, உங்கள் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்டுவிட்டது எனக் காட்டுகிறது. ஆனால், அது இன்னும் அனுப்பப்பட்டவருக்குத் தரப்படவில்லை என்று பொருள்.

இரண்டு வெளிறிய டிக் டிக் : 

வெளிறிய வண்ணத்தில் இரண்டு டிக் அடையாளங்கள் இருந்தால், உங்கள் செய்தி சென்றடைய வேண்டிய ஸ்மார்ட் போனை அடைந்துவிட்டது. ஆனால், அதனைப் படிக்க வேண்டியவர் இன்னும் படிக்கவில்லை. (நீங்கள் செய்தி அனுப்பிய நபர், தான் படித்துவிட்டதனை, செய்தி அனுப்பியவர் அறியக்கூடாத வகையில், முடக்கி வைத்திருந்தாலும், அவர் படித்ததை நாம் அறிய முடியாது. இரண்டு வெளிறிய டிக் அடையாளங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.)

நீங்கள் வாட்ஸ்ஆப்பில், குழு ஒன்றின் உறுப்பினராக இருந்து, தகவல் ஒன்று அந்தக் குழுவில் அனுப்பப்பட்டால், அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அத்தகவல் சென்ற பின்னரே, இரண்டு வெளிறிய டிக் அடையாளங்கள் காட்டப்படும்.

இரண்டு நீல நிற டிக் :

 இரண்டு நீல நிற டிக் அடையாளங்கள், குறிப்பிட்ட அந்த செய்தி படிக்கப்பட்டுவிட்டதனை உறுதிப்படுத்துகிறது. தகவல் பெற்றவர் அதனைப் படித்தாரோ இல்லையோ, அதனைத் திறந்திருந்தாலே, அது படிக்கப்பட்டதாகக் காட்டப்படும்.

குழுவில், அனைவரும் குறிப்பிட்ட தகவலைப் பெற்று, திறந்து படித்திருந்தால் தான், இரண்டு நீல நிற டிக் அடையாளம் காட்டப்படும்.

யானைகளை பற்றிய தகவல்கள்...


உலகில் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு யானை.

யானைகளால் 70 வயதுக்கு மேலும் வாழ முடியும்.

யானை மட்டுமே குதிக்க முடியாத பாலு}ட்டி ஆகும்.

யானையின் தோலானது ஒரு அங்குலம் தடிமனாக இருக்கும்.

விலங்குகளின் ராஜ்ஜியத்தில் ஆப்பிரிக்க யானைக்கு மட்டுமே சிறந்த மோப்ப சக்தி உள்ளது.

ஒரு இளம் யானைக்கு ஒரு நாளைக்கு சுமார் 300 கிலோ உணவும், 160 லிட்டர் நீரும் தேவைப்படுகிறது.

யானையால் நீண்ட தூரத்திற்கு நீந்த முடியும்.

விலங்குகளின் ராஜ்ஜியத்தில் யானைக்கு மட்டுமே மிகப்பெரிய மூளை உள்ளது.

யானையின் வால் 1.3 மீட்டர் நீளம் இருக்கும்.

யானைகள் தாவர உண்ணிகள் ஆகும்.


புதன், 22 பிப்ரவரி, 2017

அன்று இதே நாளில்...



பேடன் பவல் 

தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தைத் தொடங்கிய ராபர்ட் பேடன் பவல் பிரபு 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவர் 1906ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

இவருடைய பிறந்த நாளையே 1995ஆம் ஆண்டிலிருந்து உலக சாரணர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது சாரணியத்தின் லட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவு கூறும் தினமாக உள்ளது.

சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர் தனது 83வது வயதில் (1941) மறைந்தார்.


தில்லையாடி வள்ளியம்மை

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடியில் பிறந்தார்.

சிறு வயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை கவனித்து, ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகளுடன் போராட்டங்கள் நடத்தினார்.

'சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?" என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, 'இதுதான் எங்கள் தேசியக் கொடி" என்றாராம்.

பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை தன்னுடைய 16வது வயதில் (1914) தனது பிறந்த நாளன்றே மறைந்தார்.

ஜார்ஜ் வாஷிங்டன்

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் 1732ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தார்.

இவர் 1753-ல் ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு 1775-ல் அமெரிக்கப் புரட்சியில் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1783-ல் அமெரிக்க சுதந்திரப் போர் முடிந்தது. அர்ப்பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். 1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான்.

அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படும் பெருமைகுரிய இவர் 67வது வயதில் (1799) மறைந்தார்.


செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

டாடா குழும தலைவராக தமிழன் சாதனை...



டாடா தொழிற் குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் இன்று பதவியேற்க உள்ளார்.

டாடா குழும தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்ட நிலையில் அவரது இடத்துக்கு சந்திரசேகரன் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களில் ஒன்றின் தலைவராக பதவியேற்கும் சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் அருகிலுள்ள மோகனு}ர் ஆகும்.

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்ஸின் தலைமைப் பொறுப்பையும் சந்திரசேகரன் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 150 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்க டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பார்சி இனத்தைச் சாராத முதல் நபர் சந்திரசேகராவார்.

 புதிய பணி சவால்கள் நிறைந்தது என்று கருத்து தெரிவித்த அவர், அந்த சவாலை மாறுபட்ட வழியில் திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

 ரூ.1,000 கோடிக்கும் மேலாக இழப்பை ஏற்படுத்தியுள்ள ரத்தன் டாடாவின் கனவான நானோ கார் திட்டம் குறித்தும் முடிவெடுக்கும் பொறுப்பும் சந்திரசேகரனுக்கு தலையில் விழுந்துள்ளது.

 நீண்ட தூர மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான சந்திரசேகரன் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர். பல்வேறு வெற்றிகளைக் குவித்த சந்திரசேகரன், ரூ.7 லட்சம் கோடி மதிப்புள்ள உலகளாவிய டாடா குழுமத்தின் நிர்வாகப் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.

 டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் டி.சி.எஸ்., டாடா பவர், டாடா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா ஸ்டீல், டாடா க்ளோபல் பீவரேஜஸ் உள்பட சுமார் 100 நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

உலக சமூக நீதி தினம்



ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 20ஆம் தேதி உலக சமூக நீதி தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி அதிகமாகிக் கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான வேலைகளை அனைவருக்கும் வழங்கி மனித வளத்தை மேம்படுத்த வேண்டும்.

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நியாயங்களை கேட்டு அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திட வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் 2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் நீதி வாழ்கிறதா என்று நீங்கள் தான் கூற வேண்டும்..?

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

வரலாற்றில் இன்று...





சத்ரபதி சிவாஜி

⚔ வீரமிக்க மாமன்னன் சத்ரபதி சிவாஜி 1627ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள சிவநேரி கோட்டை என்ற இடத்தில் பிறந்தார்.

⚔ தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார்.

⚔ வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் சத்ரபதி சிவாஜி 53வது வயதில் (1680) மறைந்தார்.

உ.வே.சாமிநாத ஐயர்

✍ தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்று}ரில் பிறந்தார்.

✍ பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்று பல இடர்களை எதிர்கொண்டு, அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டு, பதிப்பித்தார்.

✍ இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். அவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

✍ தமிழ் இலக்கியத்துக்காக இறுதிவரை பணியாற்றிய இவர் 87-ஆம் வயதில் (1942) மறைந்தார்.


கோபர்நிகஸ்

👉 உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார். இவர் இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலைக்கழகத்தில் படித்தபோது, நிகோலஸ் கோபர்நிகஸ் என்று மாற்றிக்கொண்டார்.

👉 எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து, சு+ரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கோள்களின் பின்னோக்கிய நகர்வு, அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார். விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார்.

👉 இவரது காலத்துக்குப் பிறகே இவரது கோட்பாடுகளை கலிலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆன் தி ரெவல்யு+ஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நு}லில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பு+மி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும் பு+மியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.

👉 வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசுத் தூதர் என பல துறைகளில் சிறந்து விளங்கிய நிகோலஸ் கோபர்நிகஸ் 70-வது வயதில் (1543) மறைந்தார்.


உருவாக்கியவர்கள்


உருவாக்கியவர்கள்:

  1. இந்திய தேசிய ராணுவம் – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  2. அரவிந்தர் ஆசிரமம் – அரவிந்த கோஷ்
  3. ராமகிருஸ்ண இயக்கம் - சுவாமி விவேகானந்தர்
  4. சர்வதேச இயக்கம் – ஆச்சார்ய வினபா பவே
  5. சாரணர் இயக்கம் – ராபர்ட் பேடன் பவுல்
  6. ஹோம் ரூல் இயக்கம் – அன்னி பெசன்ட்
  7. அரிமா சங்கம் – மெற்வின் ஜோன்ஸ்
  8. செஞ்சிலுவைச் சங்கம் – ஹென்றி டூனான்ட்
  9. பிரம்ம சமாஜம் – ராஜாராம் மோகன் ராய்

வெள்ளி, 20 ஜனவரி, 2017

எடிசன் குறிப்பு

                           
 Image result for எடிசன்
     ஒரு நாள் பள்ளியிலிருந்து  வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே  கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தம் ஆக தன் மகன் கேட்கும்படி இப்படி படித்தாள்.
     “உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகி விட்டார்.
     எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். இப்படி இருக்கையில் ஒரு நாள் தனது வீட்டின் பழைய சமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பு  ஒரு முறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சை ஆக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்.
அதில் இப்படி எழுதியிருந்தது
     ”மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்.” என்று இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்” பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
      மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன்  தனது “தாயாலேயே” மாபெரும் கண்டுபிடிப்பாளனான். என்று தன் பிள்ளைகள்  மீதான “உயர்வான எண்ணங்கள்”. அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்.

                                                      


வியாழன், 29 டிசம்பர், 2016

கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம்..!!



Image result for முதலீடு

கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம் வருமான வரித்துறை அறிவிப்பு | 'கணக்கில் காட்டப்படாத ரொக்கம் வைத்திருப்பவர்கள் பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டம் 2016-ன் கீழ்வரும் 30-ம் தேதிக்குள் அத்தொகையை வங்கிகளிலோ, தலைமை அஞ்சல், துணை அஞ்சல் நிலையங்களில் முதலீடு செய்யலாம்' என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து, மேலும் அறிந்துக் கொள்ள; http://alleducationnewsonline.blogspot.in/2016/12/blog-post_47.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+Kalvisolai-No1EducationalWebsiteInTamilNadu+(Kalvisolai+Education+News+Online)

விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு


Image result for விருதுகள்

விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு

அசோக சக்ரா விருது      -  1952
சாகித்ய விருது            -  1954
ஞான பீட விருது          -  1961
தாதாசாகிப் விருது         -  1969
வியாஸ் சம்மான் விருது   -  1991
சரஸ்வதி சம்மான் விருது  -  1991

   விளையாட்டு விருதுகள்
அர்ஜூனா விருது        -  1961
துரோனாசார்யா விருது   -  1985
தயான் சந்த் விருது       -  2002



விருதுகள்

     
Image result for விருதுகள்

Ø சாகித்ய விருது
Ø தமிழக அரசின் விருதுகள்
Ø இயல் விருது
Ø எர்ன்ஸ்ட் மற்றும் யங் விருது
Ø வியாஸ் சம்மான் விருது
Ø சரஸ்வதி சம்மான் விருது
Ø சாந்தாராம் விருது
Ø இந்திய  பெருமை விருது
Ø தாதாசாகிப் பால்கே விருது
Ø ஞான பீட விருது
Ø அசோக சக்ரா விருது


சனி, 17 டிசம்பர், 2016

பெண்களுக்கு மிகச் சிறந்த ஆரோக்கியம்..!!

பனைப்பொருளான கருப்பட்டி, பெண்களுக்கு மிகச் சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும்.

பருவம் அடைந்த பெண்களுக்குக் கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுத்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தைக் (ஓமம்) கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.



வியாழன், 15 டிசம்பர், 2016

முக்கிய தினங்கள்




Ø  தந்தையர் தினம்    -ஜுன் – 20
Ø  அன்னையர் தினம்  - மே 2வது ஞாயிறு
Ø  உலக தண்ணீர் தினம் - மார்ச் 22
Ø  உலக உணவு தினம் - அக்டோபர் 16
Ø  சர்வதேச தொழிலாளர் தினம்- மே 1
Ø  உலக ஓசோன் தினம்- செப்டம்பர் 16
Ø  செஞ்சிலுவை தினம்- மே 8
Ø  காமன் வெல்த் தினம்- மே 24                     
Ø  உலக தர நிர்ணய தினம்அக்டோபர் 4
Ø  புகையிலை எதிர்ப்பு தினம்-மே 31
Ø  உலக சுற்றுச்சுழல் தினம்- ஜுன் 5
Ø  ஹிரோஷிமா தினம்-ஆகஸ்ட் 3
Ø  உலக கல்வி தினம்-செப்டம்பர் 8
Ø  உலக தொழுநோய் ஒழிப்பு தினம்-ஜுன் 30
Ø  சர்வதேச நட்பு தினம்-ஆகஸ்ட் 3
Ø  உலக விலங்கு நல்வாழ்வு தினம்-அக்டோபர் 4
Ø  உலக ஊனமுற்றோர் தினம்-மார்ச் 15
Ø  உலக ஆஸ்துமா தினம்-மே 3
Ø  உலக சிக்கன தினம்-அக்டோபர் 30
Ø  செயலாளர்கள் தினம்-ஏப்ரல் 21
Ø  தேசிய கிஸான் தினம்-டிசம்பர் 23
Ø  உலக எல்ட்ஸ் தினம்- டிசம்பர் 1
Ø  தேசிய விளையாட்டு தினம்-ஆகஸ்ட் 29
Ø  உலக சுற்றுலாப் பயணிகள் தின-செப்டம்பர் 27
Ø  உலக காசநோய் தினம்-மார்ச் 2
Ø  உலகப் பாரம்பரிய தினம்-ஏப்ரல் 18
Ø  தேசிய அஞ்சல் தினம்-அக்டோபர் 10
Ø  தேசிய கப்பலோட்டு தினம்-ஏப்ரல் 5
Ø  உலக காட்டுவள தினம்-மார்ச் 21
Ø  தேசிய அறிவியல் தினம்-பிப்ரவரி 28
Ø  பூமி தினம் -ஏப்ரல் 22
Ø  தேசிய இளைஞர் தினம்- ஜனவரி12
Ø  உலக சுகாதார தினம்-ஏப்ரல் 7
Ø  தேசிய காக்காய் வலிப்பு தினம்-நவம்பர் 17
Ø  உலக நுகர்வோர் தினம்-மார்ச் 15
Ø  தேசிய தொழில் நுட்ப தினம்-மே 11
Ø  உலக தொலைத்தொடர்பு தினம்-மே 17

சனி, 10 டிசம்பர், 2016

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம்..!!


Image result for anna university

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கனமழை, முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவு மற்றும் பொது விடுமுறை காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வரும் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகள் மற்றும் புதிய தேதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதன், 23 நவம்பர், 2016

இதயத்தை பாதுகாக்க 10 கட்டளைகள்,,,




நம்முடைய வாழ்வு சிறக்க நம் இதயத்தை காக்க நாம் கடைபிடிக்க 10 கட்டளைகள் உள்ளன அவை..

• 0 தொலைக்காட்சியின் முன் அமர்வது

• 1 மணிநேரம் உடற்பயிற்சி

• 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது

• 3 கப் சூடான கிரீன் டீ அருந்துவது

• 4 முறை நம் வேலைகளின் நடுநடுவே சிறிதளவு மூளைக்கும், இதயத்திற்கும் ஓய்வு தருவது

• 5 முறை சிறிய சிறிய அளவில் உணவு உண்பது

• 6 மணிக்கு காலையில் எழுவது

• 7 நிமிடங்களாவது வாய்விட்டு மனம் விட்டு சிரிப்பது

• 8 மணிநேரம் தூக்கம்

• 9 மணிக்கு வேலைகளை முடித்து கொண்டு உறங்க செல்வது

• 10 நிமிடமாவது மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிப்பது

- இந்த 10 கட்டளைகளையும் கடைபிடித்தால் இருதய நோய் வராது.

இருதய நோய் வராமலிருக்க முக்கியமான ஆறு "S" களை தவிர்க்க வேண்டும். அவை ...

1. SALT(உப்பு)
2. SUGAR (இனிப்பு)
3. SMOKE(புகைப்பிடித்தல்)
4. SPIRIT(மதுபானம்)
5. STRESS(மனஅழுத்தம்)
6. SEDENTARY LIFE (சோம்பித்திரிதல்)

இந்த ஆறு "S" களையும் விட்டுவிட்டால் உங்கள் இருதயம் "S" அதாவது SAFE ஆக பாதுகாப்பாக இருக்கும். உணவில் பொதுவாகவே வெள்ளை நிறத்திலுள்ளவற்றை தவிர்ப்பது நல்லது. அதாவது சர்க்கரை, வெண்ணை, பால், தயிர், பாலாடை கட்டி, வெள்ளை அரிசி போன்றவற்றை தவிர்த்தால் இருதயநோய் வராது.

மாறாக வண்ண நிறங்கள் கொண்ட பழங்கள்,காய்கறிகள், கைகுத்தல் அரிசி போன்றவற்றை உண்பதால் இருதயத்தை காப்பாற்றலாம். முறையான வாழ்க்கை, முறையான உணவு, பழக்கவழக்கம், முறையான அணுகுமுறை இவை இருந்தாலே இருதய நோய் வராது. நாமும் நம் இதயத்தை காப்போம்.

எனக்கு இந்த தகவலை வழங்கிய நண்பருக்கு நன்றி..!!

அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையத்தில் இ-புத்தகமாக மாற்றி பதிவிறக்கலாம்...!!



அருங்காட்சியகங்கள்  துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் |   தமிழக அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில் வெளியிடப்படும்   புத்தகங்களை மின்னணு புத்தகங்களாக படிப்பதற்கு வசதியாக அவை   இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  இப்புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம்