தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கனமழை, முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவு மற்றும் பொது விடுமுறை காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வரும் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகள் மற்றும் புதிய தேதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செ.வைசாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செ.வைசாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 10 டிசம்பர், 2016
புதன், 7 டிசம்பர், 2016
உயிருள்ள பெயர்கள்..!!
நான் சமீப்பத்தில் வாசித்த நூல் ‘உயிருள்ள பெயர்கள்’ இந்நூல் குறித்த விமர்சமாக இப்பதிவு அமைய உள்ளது.
வியாழன், 1 டிசம்பர், 2016
உணவு பழமொழி..!!
குறள்;945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
விளக்கம்;
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி உண்டால்,அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
செவ்வாய், 29 நவம்பர், 2016
மின்னூல் உருவாக்குவது எப்படி?
LibreOffice Writer, sigil, Calibre போன்ற கட்டற்ற இலவச மென்பொருட்கள் கொண்டு மின்னூல் உருவாக்குவது எப்படி?
காணொளி – https://youtu.be/0CGGtgoiH-0
FreeTamilEbook.com ல் மின்னூல் வெளியிட விரும்பும் நூலாசிரியர்களும்,
பங்களிப்பாளர்களும் இந்தக் காணொளியைக் காண வேண்டுகிறேன்.
பங்களிப்பாளர்களும் இந்தக் காணொளியைக் காண வேண்டுகிறேன்.
இனி நீங்களே எளிதில் மின்னூல் உருவாக்கி அனுப்பலாம்.
நன்றி இலவச மின்னூல் தகவல் மையம்.
புதன், 23 நவம்பர், 2016
இதயத்தை பாதுகாக்க 10 கட்டளைகள்,,,
• 0 தொலைக்காட்சியின் முன் அமர்வது
• 1 மணிநேரம் உடற்பயிற்சி
• 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது
• 3 கப் சூடான கிரீன் டீ அருந்துவது
• 4 முறை நம் வேலைகளின் நடுநடுவே சிறிதளவு மூளைக்கும், இதயத்திற்கும் ஓய்வு தருவது
• 5 முறை சிறிய சிறிய அளவில் உணவு உண்பது
• 6 மணிக்கு காலையில் எழுவது
• 7 நிமிடங்களாவது வாய்விட்டு மனம் விட்டு சிரிப்பது
• 8 மணிநேரம் தூக்கம்
• 9 மணிக்கு வேலைகளை முடித்து கொண்டு உறங்க செல்வது
• 10 நிமிடமாவது மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிப்பது
- இந்த 10 கட்டளைகளையும் கடைபிடித்தால் இருதய நோய் வராது.
இருதய நோய் வராமலிருக்க முக்கியமான ஆறு "S" களை தவிர்க்க வேண்டும். அவை ...
1. SALT(உப்பு)
2. SUGAR (இனிப்பு)
3. SMOKE(புகைப்பிடித்தல்)
4. SPIRIT(மதுபானம்)
5. STRESS(மனஅழுத்தம்)
6. SEDENTARY LIFE (சோம்பித்திரிதல்)
இந்த ஆறு "S" களையும் விட்டுவிட்டால் உங்கள் இருதயம் "S" அதாவது SAFE ஆக பாதுகாப்பாக இருக்கும். உணவில் பொதுவாகவே வெள்ளை நிறத்திலுள்ளவற்றை தவிர்ப்பது நல்லது. அதாவது சர்க்கரை, வெண்ணை, பால், தயிர், பாலாடை கட்டி, வெள்ளை அரிசி போன்றவற்றை தவிர்த்தால் இருதயநோய் வராது.
மாறாக வண்ண நிறங்கள் கொண்ட பழங்கள்,காய்கறிகள், கைகுத்தல் அரிசி போன்றவற்றை உண்பதால் இருதயத்தை காப்பாற்றலாம். முறையான வாழ்க்கை, முறையான உணவு, பழக்கவழக்கம், முறையான அணுகுமுறை இவை இருந்தாலே இருதய நோய் வராது. நாமும் நம் இதயத்தை காப்போம்.
எனக்கு இந்த தகவலை வழங்கிய நண்பருக்கு நன்றி..!!
அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையத்தில் இ-புத்தகமாக மாற்றி பதிவிறக்கலாம்...!!
அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இபுக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் | தமிழக அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில் வெளியிடப்படும் புத்தகங்களை மின்னணு புத்தகங்களாக படிப்பதற்கு வசதியாக அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
சனி, 19 நவம்பர், 2016
பழைய ஓய்வூதிய திட்டம் ...!!!
பழைய ஓய்வூதிய திட்டம் வல்லுநர் குழுவின் பதவிக் காலம் மேலும் நீட்டிப்பு | பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பரிந் துரைகளை உருவாக்க அமைக் கப்பட்ட வல்லுநர் குழுவின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, 18 நவம்பர், 2016
கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு..!!
தமிழக அரசு பணியில் தட்டச்சர்,சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய தேர்வு 2017 ஜனவரி மாதம் 7,8-ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 11-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.தற்பொழுது அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
வியாழன், 17 நவம்பர், 2016
பன்னாட்டுக் கருத்தரங்கம் அறிவிப்பு
தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை இணையத்தளம் வழியாகவும் சமர்பிக்கலாம்.
இணையத்தளம்; http://nccepfm16.wixsite.com/ksrcasw
ஞாயிறு, 13 நவம்பர், 2016
வியாழன், 27 அக்டோபர், 2016
TNPSC தொகுதி-IV தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்...!!!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்-செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 06.11.2016 அன்று முற்பகல் தொகுதி-4 அடங்கிய 5451 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துள்ளது.
திங்கள், 17 அக்டோபர், 2016
குழந்தைகளைக் கவரும் பொருட்கள்..!!
குழந்தைகளின் முதல் நண்பன் பொம்மை. குழந்தைகளுக்குப் பொம்மைகளோடு விளையாடுவதும் உறவாடுவதும் அலாதியான ஆனந்தம். பார்க்கும் ஒவ்வொரு பொம்மையையும் வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிக்காத குழந்தைகளே இல்லை. தூங்கும்போது, குளிக்கும்போது என நாள் முழுக்க பொம்மைகளை உடன் வைத்திருந்தாலும் அவர்களின் ஆசை தீராது.
விலங்குகளை, பறவைகளை, பொருட்களை… மொத்தத்தில் வெளி உலகை குழந்தைகள் தெரிந்துகொள்ள உதவும் முதல் சாதனம் பொம்மைகளே. அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். இப்போதோ, பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொம்மைகள்தான் குழந்தைகள் கைகளில் தவழ்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளில் அதிக அளவில் காரீயம் உள்ளிட்ட நச்சுக்கள் கலந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்.
பொம்மைகளில் எது பாதுகாப்பானது, எது ஆபத்தானது எனக் கண்டறிந்து வாங்குவது அவசியம். விலை மலிவானது, எளிதில் கிடைக்கக்கூடியது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எது குழந்தைக்கு அவசியம் என அறிந்து, வாங்கிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளைக் கவரும் பொருட்கள்
பிரபல கார்ட்டூன் வடிவங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பைகளில், தாலேட்ஸ் (Phthalates) என்ற ரசாயனம் 3,000 பி.பி.எம் என்ற அளவுக்குக் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த பிளாஸ்டிக் பொருளாக இருந்தாலும் அதில், 1,000 பி.பி.எம் வரைதான் தாலேட்ஸ் கலந்திருக்க அனுமதி உள்ளது. ‘பாக்பேக்’ எனும் பைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன்களை அச்சிட்டு, அதன் முன் வடிவத்தில் தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் இந்தப் பொம்மையைப் பயன்படுத்தும்போது, வாயில்வைக்க வாய்ப்பு உள்ளது. எனவே தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்பட்ட பைகளைத் தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள் குளிக்கும் வாட்டர் டப்பில் ரப்பர் வாத்துகளை நீந்தவிடுவது உண்டு. குழந்தைகளைக் குளிக்கவைக்க பெற்றோர் செய்யும் யுக்தி இது. இந்த வாத்து பொம்மையில் 1,400 பி.பி.எம் தாலேட்ஸ் கலக்கப்படுகிறது.
இரும்பை ஈர்க்கும் அல்லது ஒட்டிக்கொள்ளும் காந்தங்களில் (Magnet) செய்யப்பட்ட பொம்மைகளைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. மிகச்சிறிய பொம்மைகளில்கூட இப்போது, காந்தம் இருக்கிறது. இதைக் குழந்தைகள் விழுங்கிவிட வாய்ப்புள்ளது. காந்தம் மற்றும் காந்தத்தால் தயாரிக்கப்படும் பொம்மைகளை 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குத் தரலாம்.
குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் கிளிப்கள், பிரேஸ்லெட், மேலாடைகளில் தகதகவென மினுங்கும் ஜிகினா மற்றும் ஜிமிக்கிகள் பதிக்கப்பட்டு இருக்கும். இவை கை, முகம், ஆடைகளில் ஒட்டி அலர்ஜியை ஏற்படுத்தலாம். தெரியாமல் கண், வாயில் பட்டால், எரிச்சல் உணர்வும் ஏற்படும்.
ஃபர் பொம்மை பாதுகாப்பானதா?
ஃபர் பொம்மைகளில் தூசு அதிகமாகப் படிய வாய்ப்பு இருக்கிறது. இதை வைத்து குழந்தைகள் விளையாடும்போது தும்மல், வீசிங் அலர்ஜி, சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். ஃபர் பொம்மை தூசுகளை ஈர்த்து வைத்துக்கொள்ளும். அதைத் தொடும்போதும் உதறும்போதும் தும்மல் மூலமாக நுரையீரல் வரை தூசுகள் செல்லும்.
குழந்தைகள், ஃபர் பொம்மைகளை வாயில் கடித்து, பஞ்சு போன்ற அதன் நூலைச் சப்பி விழுங்கவும்கூடும். இது, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். சாலையோரக் கடைகளில் வாங்கும் ஃபர் பொம்மைகள், தரமானவையாக இருக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நாளடைவில் பஞ்சு போன்ற முடிகள் வீடு முழுதும் பரவி, உணவு, நீர் போன்றவற்றிலும் கலந்து, பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதாலும் இதே பிரச்னை வரும். விலங்குகளின் முடி, மூக்கு, வாய் மூலமாக உடலுக்குள் சென்று ஆஸ்துமா, வீசிங், நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.
கிரயான், கலர் பெயின்டிங்சீனாவில் தயாரிக்கப்படும் கிரயானில் ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) எனும் பிளாஸ்டிக் கெமிக்கல் உள்ளது. இது, காற்றில் பரவி குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பானப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்தும்போது, நுரையீரல் வீக்கம், புற்றுநோய் வரலாம் என்கிறது அமெரிக்க சுகாதார நிறுவனம் (U.S. Occupational Safety and Health Administration (OSHA)).
தொடர்ந்து, பிளாஸ்டிக் பொம்மைகளை வாயில் வைப்பதால், அதிலிருக்கும் பெயின்ட் உரிந்து, வாய்க்குள் செல்லலாம். இந்தப் பழக்கத்தைக் குழந்தை தொடர்ந்து செய்தால், ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உள் உறுப்புகள் பாதிக்கக்கூடும்.
பொம்மைகளை அருகில் வைத்து விளையாடலாம். ஆனால், வாயில் வைக்கக் கூடாது என்பதைக் குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது நல்லது.
பொம்மைகளை வாங்கும்போது பிராண்டட் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம். CE Mark, BS EN 71, Lion Mark போன்ற முத்திரைகள் கொண்ட வெளிநாட்டு பொம்மைகள் ஓரளவுக்குப் பாதுகாப்பானவை.
ஃபர் பொம்மைகளின் நூல் இழைகள் உதிர்கின்றனவா என உதறிப்பார்த்து வாங்கலாம். நூல் உதிராத பொம்மைகள் என்றாலும், சாலை ஓரங்களில் வாங்குவதைவிட பொம்மைக் கடையில் வாங்குவது பாதுகாப்பானது. ஃபர் பொம்மையைத் தவிர்த்து, நூலிழைகள் இல்லாத, சாஃப்ட் துணியில் வரும் பொம்மைகளை வாங்கலாம். பிளாஸ்டிக் பொம்மைகளில் 2, 3 அல்லது `V’, 7 எனப் பொறிக்கப்பட்டிருக்கும் எண்கள் இருந்தால், அவற்றை அவசியம் தவிர்க்கவும். எண் 1, 2, 4, 5 எண்கள்கொண்ட பொம்மைகளை வாங்கலாம். எடை இல்லாத மரபொம்மைகள் வாங்கலாம். இதில், செதில்கள் இருக்காது. புரியாத மொழியில் லேபிள் இருப்பவற்றைத் தவிர்க்கலாம்.
ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள்
இரும்பு ஸ்பிரிங், எலாஸ்டிக் ரப்பர் பாண்டு, எலாஸ்டிக் கயிறு கட்டிய பொம்மைகளைக் குழந்தைகள் இழுத்து விளையாடும்போது, கண், கை, கால்களில் சுளீரென அடிபட நேரலாம்.
குட்டி பொம்மைகள், அழகான வடிவில் இருக்கும் மெழுகு பொம்மைகளைக் குழந்தைகள் விழுங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கூர்மையான முனைகள்கொண்ட பொம்மைகளால் ஆபத்து ஏற்படலாம். கண் போன்ற முக்கிய உறுப்புகள் பாதித்தால், குழந்தையின் எதிர்காலமும் மோசமாகும்.
பாலிஸ்டர், நைலான் துணிகளால் ஆன கைவினைப் பொம்மைகளைக் குழந்தைகள் வாயில்வைத்துச் சப்பினால், அந்த சாயங்கள் வயிற்றுக்குள் சென்றுவிடும்.
காரீயம், பாதரசம், காட்மியம் போன்ற உலோகங்கள் கலந்த பொம்மைகளை முற்றிலும் தவிருங்கள்.
பிஸ்பீனால் ஏ (Bisphenol A), வினைல் குளோரைடு (Vinyl chloride), டையாக்சின் (Dioxin), மற்றும் தாலேட்ஸ் (Phthalates) கலந்த பிளாஸ்டிக் பொம்மைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
வயதுக்கேற்ற பொம்மைகள்
0-3 மாதங்கள் – கண்களால் மட்டுமே பார்க்கும் வயது. அடர் நிறங்கள்கொண்ட திரைச்சீலைகள், ஊஞ்சலில் கட்டிவிடும் பொம்மைகள், பெரியவர் கை வைத்து அழுத்திச் சத்தம் ஏற்படுத்தும் பொம்மைகளைத் தரலாம்.
3-6 மாதங்கள் – தலைகுப்புற விழுந்து, நகர்ந்து செல்வதால், மென்மையான பொம்மைகள், நகர்ந்து செல்லும் பெரிய பொம்மைகளைத் தரலாம். பல் மருத்துவர் ஆலோசனையுடன், பற்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘டூத் டாய்ஸ்’ வாங்கித் தரலாம்.
6-9 மாதங்கள் – உட்கார்ந்து, நிற்கும் குழந்தைகளுக்கு, நடைவண்டி, பெரிய பந்து ஆகியவற்றைத் தரலாம்.
9-12 மாதங்கள் – நடப்பது, ஒடுவது எனச் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, கியூப்ஸ் விளையாட்டுப் பொருட்கள், பெரிய படங்கள் பதிந்த கதைப் புத்தங்கள், எடையில்லாத, அடுக்கிவைக்கும் பொம்மைகளைத் தரலாம்.
12- 18 மாதங்கள் – வண்ணம் தீட்டும் புத்தகம், படங்கள் இருக்கும் புத்தகங்களைக் கொடுக்கலாம். கலர் பென்சிலைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கற்றுத்தருவது நல்லது.
பொம்மைகள்… கவனம்!
பிராண்டட் பொம்மைகள் மற்றும் பெயின்ட் உதிராத பொம்மைகளைக் கொடுக்கலாம்.
சாஃப்ட் டாய்ஸ்களைத் தரலாம். பி.வி.சி இல்லாத பொம்மைகள் ஓரளவுக்குப் பாதுகாப்பானவை.
நூலிழைகளால் செய்யப்படும் பொம்மைகள், எளிதில் தீப்பிடிக்கக்கூடியவை. இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
பெயின்ட் அடித்த பொம்மைகளாக இருந்தால், அது காரீயம் (Lead) கலக்காத பொம்மையாக இருக்க வேண்டும்.
எடை குறைவான பொம்மைகளைத் தேர்ந்து எடுக்கலாம்.
வண்ணம் தீட்டும் விளையாட்டுப் பொருட்களில், கெமிக்கல்கள் கலந்திருக்கக் கூடாது.
பெரிய பொம்மைகளை வாங்கித் தரலாம். இதனால், வாயில் வைத்து விழுங்குவது தடுக்கப்படும்.
குட்டிப் பந்து, கோலி போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. அல்லது இந்தப் பொருட்களைப் பெற்றோர் பார்வையில் விளையாட அனுமதிக்கலாம்.
பேட்டரி பொருத்தப்பட்ட பொம்மைகள் என்றால், பேட்டரியைக் கழற்றாதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும்.
மர பொம்மைகளில் செதில் செதிலாக வந்தால் அவற்றைத் தரவே கூடாது. நன்கு மோல்டு செய்யப்பட்ட பொம்மைகளைத் தரலாம்.
மெட்டல் பொம்மையில் துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இயன்றவரை மெட்டல் பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
கார், பைக் போன்ற பொம்மைகளைவிட பந்து, மனித வடிவில் உள்ள பொம்மைகளை வாங்கித் தரலாம்.
வெள்ளி, 7 அக்டோபர், 2016
உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு…!!
நான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வலையுலகில் அடியெடுத்து வைத்தேன்.என்னுடைய சிறு வயதில் இருந்தே பொதுநலக் கருத்துகள் அரசுக்கும் அரசியலுக்கும் எதிராக
இருந்தாலும் அதை அனைவரின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு வர வேண்டியதற்காக நான்
என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த போது தான் என்னுடைய கல்லூரியின் முதல் பருவத்தில் தமிழ் ஆசிரியர் தமிழுக்கு மட்டுமின்றி எனது கருத்துக்களுக்கும் முழு சுதந்திரமும் ஆதரவும்
வழங்கி தொடர்ந்து ஊக்குவித்தும் ஒரு வழிக்காட்டியாக வந்துக் கொண்டு இருக்கிறார்.இவரை
தமிழ் ஆசிரியர் என்பதா..?? கணினி ஆசிரியர் என்பதா..?? என்று பலமுறை நான் யோசித்ததுண்டு.காரணம்
அவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றும் இன்று எல்லாம் கணினி என்ற நிலை இருக்கையில்
தனது மொழிக் குறித்து கணினி உலகில் ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வத்தையும்
கண்டு நான் வியந்ததுண்டு.அவரின் உதவிகளுடன் நான் எனது கருத்துகளை வலையுலகில் பதிக்க
ஆரம்பித்தேன்.எனது நெறியாளரும் வழிக்காட்டியும் இன்னொரு தந்தையுமாகிய முனைவர்.இரா.குணசீலன்
இவரை தங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.இவரும் ஒரு வலைப்பதிவரே.
என்னடா உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு-னு தலைப்பு வைத்துவிட்டு
எதையோ சொல்லுறாங்களே என்று நினைக்க வேண்டாம்.வலையுலகில் எனது எழுத்தைப் பதிக்க ஆரம்பித்த
போது நான் வாசித்து வந்தது எனது குருவின் பக்கம் மட்டுமே பிறகு அவரின் உதவியோடு அவரின்
நண்பர்களை தொடர ஆரம்பித்தேன்.பிறகு வலையுலகில் எனக்கென்று ஒரு நண்பர் வட்டத்தை உருவாக்கிக்
கொண்டேன்.இதன் மூலம் எனக்கு பலத்துறைச் சார்ந்த அறிவும் ஒரு உத்வேகமும் கிடைத்தது.எனவே
எனது முதல் கையேடு எனது குருவே அதனால் தான் முதலில் எனது குருவை பற்றி தங்களிடம் பகிர்ந்துக்
கொண்டேன்.இப்போது இந்த தலைப்புக்குள் போலாம்...,
ஆரம்பத்தில் நான் நினைத்தேன் வலைப்பூ என்பதை தமிழ்நாட்டில்
உள்ள தமிழர்களால் தான் எழுதப்பட்டு வருகின்றன என்று.பிறகு எனக்கு நா.முத்துநிலவன் ஐயா
அறிமுகமானார். அவர் எனக்கு “உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு” என்ற ஒரு நூலை அன்பளிப்பாக
அளித்தார்.அந்நூலைப் படித்த பிறகே எனக்கு தெரிந்தது வலையுலகில் எழுதி வருப்பவர்கள்
“ஏழு கடல் தாண்டி…ஏழு மலை தாண்டி..” வாழ்பவர்களாலும் தனது தாய்மொழியின் பற்றாலும் உலகில்
பலப் பகுதிகளில் வசித்து வருபவர்களாலும் எழுதப்பட்டு
வருகின்றன என்று தெரிந்துக் கொண்டேன்.இந்நூல் எனக்கு வலையுலகில் பலரை தொடர்வதற்கும்
அவர்களின் துறைச் சார்ந்தும் துறைச் சாராமல் பல அரசியல் மற்றும் அரசு-க்கு தொடர்பான கருத்துகளையும் தொடர்ந்து வாசித்து, எனது
கருத்துகளையும் மறுமொழியாக கொடுக்கவும், உதவியாக இருந்து வருகின்றது.
இன்றைய தலைமுறை தங்களது நேரத்தை அதிகமாக இணையத்தில் தான்
செலவிடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக முகநூல்(face book),கட்செவி(whats app) மற்றும்
பொழுதொரு கட்டுரை(twitter) போன்ற சமூக வலைத்தளங்களில்
நேரத்தை செலவிடும் பட்சத்தில் இதுப் போன்ற வலைப்பூவிலும் தனது படைப்புகளை பலரும் படித்து
பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற்று
வருகின்றன.
நமக்கு பழகிப் போன ஒன்று ’கையேடு’ என்பது, பள்ளிக் காலத்தில்
இருந்து இன்று வரை எதற்கு எடுத்தாலுமே கையேடு என்று, இதே போல் தான் கடந்த வலைப்பதிவர்
சந்திப்பு-2015-ல் வலைப்பதிவர் கையேடு என்ற
ஒன்றை யோசித்து, இது வலையுலகில் புதியதாக என்னை போல் வருபவர்களுக்கு பெரிதும் உதவியாகவும்
வழிக்காட்டுதலுமாக இருக்கும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டுள்ளன.இதனை தங்களின் கவனத்திற்கு
கொண்டு வருவதன் நோக்கமே இப்பதிவு.எனது கருத்துக்களையும் எனது சகோதரிகளின் கருத்துகளுக்கும் தொடர்ந்து ஆதரவும்,ஊக்கமும் அளித்து வரும் அனைவருக்கும் இக்கணம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
’சுடர் விளக்காயினும், தூண்டுகோல் ஒன்று வேண்டும்’ என்ற பழமொழிக்கு
ஏற்ப எங்களை ஆதரித்து வரும் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் எனது சகோதரிகளின் சார்பிலும்
எனது சார்பாகவும் நெஞ்சம் கனிந்த நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி...!!!
திங்கள், 3 அக்டோபர், 2016
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது..???
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??
சனி, 1 அக்டோபர், 2016
இட்லியாக இருங்கள்...!! இது சாப்பிடும் இட்லி இல்லை..!!
நான் சமீப்பத்தில் வாசித்த நூல் ’எமோஷனல் இன்டலிஜனஸ் இட்லியாக இருங்கள்’ இந்நூல் குறித்த விமர்சனமாக இப்பதிவு அமைய உள்ளது.
ஞாயிறு, 25 செப்டம்பர், 2016
இலவச மின்நூல்கள்...!!
இன்று நான் பகிரவுள்ள இணைய தள முகவரியில் தாங்கள் இலவசமாக மின் நூல்களை படிக்கலாம்,பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் யாருக்கு வேண்டுமானாலும் இந்நூல்களை இலவசமாக வழங்கலாம்.
குறிப்பாக தங்களின் நூல்களையும் அல்லது வேறு நூல்களையும் இந்த தளத்தில் வழங்கலாம்.
மேலும் தகவல் மற்றும் இணைய முகவரி; இலவச மின்நூல்கள்
ஆஸ்கார் சான்றிதழ் பெற்ற தமிழர்..!!
ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு பிறகு, ஆறு வருடங்கள் கழித்து திரைத்துறை பிரிவில் உயரிய விருதான, ஆஸ்கார் விருதின் சான்றிதழை பெற்றுள்ள தமிழர் ஒருவர். கொட்டலங்கோ லியோன் என்ற வெளிநாட்டு வாழ் தமிழருக்குதான் கிடைத்திருக்கிறது ஆஸ்கார் சான்றிதழ்.
யார் இந்த கொட்டலங்கோ லியோன்:
திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட கோட்டாலங்கோ லியோனியின் தந்தைக்கு சங்கரன் கோவில் சொந்த ஊர். கோயம்புத்தூரில் வளர்ந்த லியோனி, தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.
அடிப்படையில் டெக்னிக்கல் இன்ஜினியரான லியோனி. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் டெக்னிக்கல் டிசைன் பிரிவில் உள்ளார். அத்துறை சார்ந்த பிரிவிலேயே லியோனிவிற்கு ஆஸ்கார் விருது, கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது.
சனி, 24 செப்டம்பர், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)