வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

செல்போனில் விடாது பேசுபவரா நீங்கள்? ஒரு நிமிஷம் இங்க வாங்க!

 


இன்று அனைவரின் கைகளிலும், ஆறா விரலாய் செல்போன் ஒட்டி உறவாடுகிறது.

இந்த செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னென்னவென்று கீழே பாருங்க..!

தலைவலி

செல்போன் பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். 

ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில் அடிக்கடி அதிகமான ஒலியை பாய்ச்சுவதால், அவை தலைவலியை தூண்டிவிடுகிறது.

சோர்வு

மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளையில் உள்ள செல்களை பாதித்து, 

விரைவிலேயே சோர்வை உண்டாக்கிவிடும். இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போய்விடும்.

தூக்கமின்மை

அளவுக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்தினால், மனதில் கவலை மற்றும் ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி, 

நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடும். 

மேலும் சில நேரங்களில் உளவியல் ரீதியான பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.

ஞாபக மறதி

செல்போன்களில் அதிர்வுகள் மூளையில் தகவல்களை சேகரித்து வைக்கும் திறனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

அதனால் தான், அதிகமான அளவில் செல்போன் பயன்படுத்தினால், ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது.

மலட்டுத்தன்மை

நிறைய ஆண்கள் செல்போன்களை பேண்ட் பாக்கெட்டுகளில் வைப்பதால்,

செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள்
மற்றும் வெப்பம், விந்துக்களின் உற்பத்தியில் 
பாதிப்பை ஏற்படுத்தி, 

அவற்றை அழித்துவிடும்.

நச்சு எதிர்வினை

செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் இரத்தணுக்களை உடைத்து, 

மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஒருவித நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

காது கோளாறு
மொபைல் போனில் அளவுக்கு அதிகமான சப்தத்தில் வைத்து, நீண்ட நேரம் பாட்டு கேட்டாலோ அல்லது பேசினாலோ, 

அது செவிப்பறையில் அதிகமான அழுத்தத்தைக் கொடுத்து, காது வலி மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

புற்றுநோய்

செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள், உடலில் கட்டிகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். 

எந்த ஒரு ஆய்விலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், அது பற்றிய ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. 

எனவே “வருமுன் காப்பதே நல்லது” என்பதற்கேற்ப, அதனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

அடிமையாக்கும்

நோமோஃபோபியா என்னும் ஒருவிதமான நோயை இது உண்டாக்கிவிடும். 

அதுவும் இது ஒருவித நிலையற்ற மனநிலையை உண்டாக்கி, 

வித்தியாசமான உலகில் இருப்பது போல் மனநிலையை மாற்றிவிடும். 

மேலும் சில நேரங்களில் அது இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்பது போல் செய்துவிடும்.


செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

புத்தகங்கள் படிக்கவேண்டும் ஏன்?

                                                    புத்தகங்கள் படிக்கவேண்டும் ஏன்?

ஒவ்வொறு மனிதனும் தனக்குள் கேட்க வேண்டிய முதல் கேள்வி,நான் ஏன் புத்தகங்களை படிக்க வேண்டும்?என்பதுதான்.இயறகையோடு எய்தி வாழ்க்கை நடத்துபவன் நல்ல உடல் ஆரோக்யத்தை பெறுகிறான். புத்தகங்களோடுதன் வாழ்க்கையை எய்தி வாழ்பவன் சிறந்த மன உறுதியையும் அறிவு என்னும் அசைக்க முடியாத ஆரோக்கியத்தை பெறுகிறான்.நமக்கு நிறைய அறிவு வேண்டும் என்றால் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும்.ஒரு மனிதன் தன்னை உணரவும் புத்தகங்கள் இன்றியமையா இடத்தை பெறுகின்றன. பெரிய பெரிய அறிஞர்கள் படித்த படிப்பு(பட்டம்) வேண்டுமானால் சிறிதலவு இறுக்கலாம்,ஆனால் அவர்கள் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை அளவிடமுடியாதவை.அவை நமக்கு வாழ்கையை,சமூகத்தை,தடைகளை எப்படி தகர்கவேண்டும் என்கிற நுண்ணறிவை கற்று தறுகின்றன.

      ``புத்தகங்களை தலைகுனிந்து பார்த்தால்
       உலகம் உண்னை தலை நிமிர்ந்து பார்க்கும்’’
என்ற பென்மொழிக்கினங்க இந்த உலகம் உங்களை தலைநிமிர்ந்து பார்கவேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு இன்றுமுதல் நமக்கு நல்புத்தியை புகட்டும் புத்தகங்களை நாம் படிக்கத் தொடங்குவோம்.


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அதிரடியாக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக்கின் 'அகுய்லா'..!

மிகப்பெரிய சமூக வலைதலமான பேஸ்புக், இன்டர்நெட் மூலம் உலகை இணைக்கும் திட்டமான சூரிய சக்தி மூலம் இயங்கும் தனது ட்ரோன் ஆன 'அகுய்லா'வை (Aquila) தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தொடங்கப்பட்ட இந்த ட்ரோன் தான் உலகை முன்னேற்ற உதவும் முதன்மை இணைய அணுகலை (primary internet access) கொண்டு முதல் முழு அளவிலான டிரோன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகுய்லா ட்ரான் ஆனது பறக்கவல்ல தற்கால விமானம் வடிவமைப்பின் முன்னோட்டம் என்றும் இதன் மூலம் வளரும் உலகின் அத்தியாவசிய இணைய அணுகல் பெற முடியும் என்றும் பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் பதிவின் கீழ் 'இரண்டு ஆண்டு பொறியியல் வேலைகளுக்கு அகுய்லா ட்ரோன் வெற்றிகரமாக தனது முதல் விமான விமானத்தை தொடங்கியது என்பதை அறிவிக்க பெருமைப்படுகிறேன். சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த விமானம் உலகின் தொலை தூர பகுதிகளுக்கு 'பீம்' () வழிமுறையில் இணைய வசதியை வலபிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக நீண்ட ஆளில்லா விமானம் சார்ந்த வரலாற்றை நாங்கள் உருவாக்கிவிட்டோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
'மாதிரிகள் மற்றும் விமானம் அமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து இரண்டு ஆண்டுகளாய் சேகரிக்கப்பட்ட தரவுவுகளின் கீழே இதன் இயக்கம் இருக்கும். இதற்கு முன்பு நிகழ்த்தப்படாத வண்ணம் 60,000 அடி உயரத்தில் இருந்துகொண்டே லேசர்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் 'அக்குய்லா' ஒரு மாதங்களுக்கும் மேல் வானத்தில் தங்கும்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
'உலகம் முழுவதையும் இன்டர்நெட் மூலம் இணைப்பது மற்றும் இணைய வசதிக்கான சாத்தியமே இல்லாத 4 பில்லியன் மக்களை ஆன்லைனுக்கு கொண்டு வருவது தான் எங்கள் முக்கிய நோக்கம்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஒன்பது வருட காத்திருப்பு, இஸ்ரோவின் பார்வையில் பட்ட 'ப்ரதம்'..!


மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology Bombay - IIT-B) 'விண்மீன் கனவுகள்' இறுதியாக ஒன்பது ஆண்டு காத்திருப்பிற்கு பின், அடுத்த மாதம் விண்ணை தொட இருக்கிறது.
10 கிலோ எடைகொண்ட அந்நிறுவனத்தின் 'மாணவர் செயற்கைக்கோள்' (Studebt Satellite) ஆன 'ப்ரதம்' (Pratham), இஸ்ரோ நான்கு கட்ட போலார் எஸ்.எல்.வியை (பி.எஸ்.எல்.வி.) உதவியுடன் வரும் செப்டம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த இருக்கிறது.
இஸ்ரோவின் முக்கிய செயற்கைக்கோள்கள் ஆன ஸ்காட்சாட் (ScatSat) மற்றும் பிற சில முக்கியமான செயற்கைக்கோள்களுடன் சேர்த்து ப்ரதம் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. முதலில் 2007-ஆம் ஆண்டில் இஸ்ரோவினால் உறுதி செய்யப்பட்ட 'ப்ரதம்' செயற்கைக்கோள் பல்வேறு காரணங்களுக்காக தாமதங்கள் உண்டாகி , அதன் வெளியீட்டு அட்டவணை தேதியானது பின்தங்கிகொண்டே போனது.
'ப்ரதம்' ஒரு அயன்மண்டலத்துக்குரிய ஆய்வு செயற்கைக்கோள் என்பதும் இதன் முக்கிய பணி பூமியின் மண்டிலத்தின் (Earth's ionosphere) எலக்ட்ரான்களை எண்ணுவதென்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு மாத பணி காலம் கொண்ட ப்ரதம் விண்வெளியில் 720 கி.மீ. என்ற உயரத்தில் நிறுத்தப்படும். அதன் தரவுகள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் ஜி.பி.எஸ் தகவல்களில் உள்ள பிழைகளை திருத்த உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனி, 9 ஜூலை, 2016

கனவு

                                                             Image result for dream     

கற்பனையை முதலெழுத்தாய் கொண்டிருப்பாய் !
உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இயக்குனரை
தூக்கத்தில் வெளிக்கொணர்வாய் !
எண்ணுவன எல்லாம் நிறைவேறுவது உன்னில் மட்டுமே !
கடவுளின் கற்பனை இந்த உலகமென்றால் – அந்த
கடவுளும் கனவு கண்டிருப்பாரோ !
சில நேரங்களில் நித்திரையில் வருகிறாய் ;
சில நேரங்களில் நித்தம் நித்தம் வருகிறாய் !
அந்த ஆதி மனிதனும் சக்கரத்தை
முதலில் உன்னில் தான் கண்டானோ !
மனிதனின் நினைவளைகள் நீ என்றால்
உன்னுடைய நினைவளைகள் தான் மனிதனா ?
கனவு என்னும் மூன்றழுத்தும் ,
கற்பனை என்னும் நான்கெழுத்தும் சேர்ந்துதான்

கண்டுபிடிப்பு என்னும் ஏழெழுத்தை உருவாக்கியதோ ?

படிப்பு எதற்கு..?? அறிவு எதற்கு..??


Image result for கல்வி உளவியல்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.(398)

இக்குறளில் வள்ளுவர் கூறியப் பொருள் ஒருவன் தனது ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது அவனது ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பது பொருள்.

மார்பிங் என்றால் என்ன..??



மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் பல பெண்களுக்கு இன்னமும் சரியாக தெரிவதில்லை.

ஒரு பெண்ணின் புகைப்படத்திலுள்ள தலையை அகற்றி அதை இன்னொரு பெண்ணின் புகைப்படத்தில் பொருத்தி அந்த படத்தை சமூக விரோதிகள் பேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள். இந்த முறைக்கு ‘‘மார்பிங்” என்று ஆங்கிலத்தில் பெயர். இந்த ‘‘மார்பிங்” வகை குற்றங்கள் உலகம் முழுவதும் மிக அதிக அளவில் நடந்து வருகிறது.

தங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்து வைத்திருக்கும் பெண்களின் புகைப்படங்களை, அவர்களுடைய பேஸ்புக் பக்கங்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அந்த புகைப்படங்களை திருடி எடுத்து இவ்வாறு ‘‘மார்பிங்” செய்து விடுகிறார்கள்.

சில பெண்கள் தங்கள் புகைப்படங்களை மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருப்பதுண்டு. அவர்கள் மொபைல் போன் தொலைந்து அது குற்றவாளிகள் கையில் கிடைக்கும் போது அந்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து ‘‘மார்பிங்” செய்து பேஸ்புக் மற்றும் இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.

பொதுவாக இதுபோன்ற குற்றங்களில் பெண்களின் வருங்கால வாழ்க்கையை மனதில் கொண்டு பெற்றோர்களும் காவல் துறையிடம் புகார் கொடுக்க தயங்குகிறார்கள்.

இது போன்ற தங்களது சித்தரிக்கப்பட்ட ஆபாச படங்கள் பேஸ்புக்கிலோ அல்லது இணைய தளத்திலோ வந்தால் அவற்றை எப்படி? உடனடியாக நீக்க வேண்டும் என்ற யுக்தியை பெண்களும் மற்றும் பெற்றோர்களும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களது ஆபாச படத்தை பேஸ்புக்கில் பார்த்தால் உடனடியாக அந்த படத்தின் மேல் வலது பக்கத்திலுள்ள அம்புக் குறியை அழுத்தினால் ‘‘ரிப்போர்ட் போட்டோ” என்ற ஒரு ஆப்சன் வரும். அதை நீங்கள் கிளிக் செய்துவிட்டால் 72 மணி நேரத்தில் அந்த ஆபாச புகைப்படம் பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டு விடும். அதே போல் பேஸ்புக்கிலுள்ள ‘‘ஹெல்ப் சென்டர்” உபயோகித்து புகார் செய்தால் அந்த ஆபாச படம் நிச்சயம் நீக்கப்பட்டு விடும்.

ஒரு வேளை பேஸ்புக்கை தவிர வேறு வெப் சைட்டில் உங்கள் ஆபாச புகைப்படம் வந்தால் ‘‘கான்டெக்ட் யூஸ்” என்ற ஆப்சனுக்கு நீங்கள் புகார் செய்தால் அந்த ஆபாச படம் அல்லது வீடியோ உடனே நீக்கப்பட்டு விடும். இந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காத பட்சத்தில் நீங்கள் காவல்துறையிடம் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான் குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் வேறு யாருக்காவது கெடுதலை செய்வதற்கு முன் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க முடியும்.

பேஸ்புக்கில் ‘‘பிரைவெட் செட்டிங்ஸ்” என்ற ஒரு வசதி உள்ளது. அதை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரும் உங்கள் புகைப்படங்களை பார்க்க இயலாது. இணைய தளத்தில் உங்கள் புகைப்படத்தை பகிர்வு செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் பகிர்வு செய்ய வேண்டும். மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே உங்கள் புகைப்படத்தை பகிர வேண்டும்.

பேஸ்புக்கில் பெண்கள் தனியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்யக்கூடாது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவேண்டும். காரணம் இப்படிப்பட்ட புகைப்படத்திலிருந்து ‘‘மார்பிங்” செய்வது மிகவும் கடினம். யாராவது பெண்களை புகைப்படம் எடுத்தால் அதை தடுத்து நிறுத்துங்கள். இந்த புகைப்படங்கள் ஆபாச புகைப்படங்களாக மார்பிங் செய்யப்படலாம்.

இந்த கணினி உலகத்தில் போலிகளை உருவாக்குவது மிகவும் எளிது. எனவே ஆபாச காட்சிகள் பெரும்பாலும் போலியானவையே. இந்த போலி ஆபாச படங்களால் பெண்கள் பலியாவதை தடுத்து நிறுத்த, அந்த சமயங்களில் பெற்றோர்கள், கணவர்கள் மற்றும் உறவினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அந்த ஆபத்தான கட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான அந்த பெண்களுக்கு உறுதுணையாக இருந்து அந்த பெண்களை மீட்க முயல வேண்டுமே யொழிய, சந்தேக கண்களை அந்த பெண்கள் மீது பாய்ச்சி அந்த பெண்களின் உயிரை மாய்த்துக் கொள்ள பெற்றோர்களும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் காரணமாகி விடக்கூடாது. இது நம் அனைவருக்கும் தெரிவிக்கும் செய்தியாகும்.

செவ்வாய், 5 ஜூலை, 2016

ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்

ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்
                                    --வில்லியம் ஷேக்ஸ்பியர்
வில்லியம் ஷேக்ஸ்பியர்(1564-1616)சிறந்த நாடக மற்றும் கவிதை எழுத்தாளர். இவரது படைப்புகள் பலவற்றை பல மெழிகளில் மெழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சில சிறந்த நாடகங்களான ஹாம்லட்,ஒதல்லோ,மாக்பேத்,கிங் லியர், தி மிட் சம்மர் நைட் டிரீம்,தி மெர்சன்ட் ஆப் வினைஸ் மற்றும் தி டேம்பஸ்ட் என்பனவாம்.

      ஷேக்ஸ்பியரது`ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்` என்ற பகுதி`அஸ் யூ லைக் இட்` என்ற நாடகத்திலிருந்து ஆக்ட்III சீன் 7 பகுதியை இங்கு குறிப்பிடுகிறார்.இதில் வரும் சோகக் கதாப்பாத்திரமான ஜாகுவஸ் கூறும் வாழ்கைத் தத்துவமே இப்பகுதி.அவரைப் பொறுத்த வரை மனித வாழ்வு ஏழு பருவங்களைக் கொண்டது.அவை குழந்தை,பள்ளிச் சிறுவன்,காதலர்,சிப்பாய், வளர்ந்த வருவம்(adult hood),முதுமை பருவம் மற்றும் இரண்டாம் குழந்தை பருவம், என்று கூறுவர்.
      இதில் முதலாம் பருவமான தாய் அரவனைப்பில் உள்ள குந்தை பருவத்தில் எதை சாப்பிடக் கொடுத்தாலும் கக்கிக்கொண்டும்,அழுதுகொண்டும் இருப்பான்.இரண்டாம் பருவத்தில் விருப்மில்லாமல் பள்ளிக்கு செல்வான் பொழுதும் பகார் செய்து கொண்டே இருப்பான்.3ஆம் பருவமான காதலர் பருவத்தில் தன் காதலியை ஆளமாக காதல் செய்வான்,அவளது கண்கள் புருவம் முதலியனவற்றை ஆளமாக வருணித்து பாடுவான்.
பின்னர், 4ஆவர் பருவமான சிப்பாய் பருவத்தில் பல சத்தியங்களை எடுத்துக்கொள்வான்.தனது பெருமை மீது பொறாமை கொள்வான் அதனை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பான்.
      ஐந்தாம் பருவத்தில் சிறு தொப்பை கொண்டு தனக்கு பிடித்த உணவுகளை உட்கொண்டு பழமொழிகளை தன் வாழ்கை ஆனுபவத்துடன் எடுத்துக் கூறுவர்.6ஆம் பருவமான முதுமையில் மெளிந்து,தளர்ந்து போயிருப்பர்.தனது பார்வைக் குறையால் மூக்கின் மீது கண்ணாடி போட்டுக் கொண்டும்,வெற்றிலை போட்டும் சிறிது பணத்தை தனது கப்பையில் வைத்துக் கொண்டு பெரிய சட்டைகளையெல்லாம் அனிந்து கொண்டிருப்பார். கடைசி பருவமான இரண்டாம் குழந்தை பருவத்தில், மனிதன் முழூ குழந்தையாகவே மாருகின்றார்.பெரும்பாலும் அனைத்தையும் இவ்வயதில் மறந்திருப்பர்.இவரது நினைவாற்றல் குறைந்தே இருக்கும். பற்கள், பார்வை ,சுவை அனைத்தும் தளர்ந்தே இருக்கும்.பின்னர் இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு உலகம் என்னும் மேடையை விட்டு வெளியேரிவிடுவான் என்கிறார்.


ஞாயிறு, 3 ஜூலை, 2016

பொறுமை!!

   

மனிதனுக்கு  தேவை மொழி                                        
மொழிக்கு      தேவை பேச்சு

பேச்சுக்கு       தேவை படிப்பு

படிப்புக்கு       தேவை கல்வி

கல்விக்கு       தேவை ஆசிரியர்

ஆசிரியருக்கு  தேவை வேலை


வேலைக்கு    தேவை பொறுமை!!!

சனி, 2 ஜூலை, 2016

கவிதையின் சிறப்பு



 
ஒரு நிமிடம் யோசிக்க வைத்த கவிதை

பல நிமிடங்களில் வாக்கியமானது,                                                         
வாக்கியமான இக்கவிதை பிரபலமானது,

பிரபலமான இக்கவிதை இன்று உலகம்
               
         சுற்றும்  வாலிபனாக திகழ்கிறது!!!                     
   




வெள்ளி, 1 ஜூலை, 2016

பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்படுவதைத் தடுக்கும் வழி..!!!



சில நேரங்களில் உங்களின் பேஸ்புக் கணக்கு வேறு ஒருவரால்  ஹாக் செய்யப்படும் அனுபவம் உங்களுக்கு நேரிட்டிருக்கலாம்.இதுவரை ஏற்படவில்லை என்றாலும் வருமுன் காப்பதற்கு சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம்.இவை அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விஷயங்கள் ஆகும்.

1.பாஸ்வேர்டு பாதுகாப்பு….;

பேஸ்புக்கில் பயன்படுத்தும் பாஸ்வேர்டு கடினமானதாகவும் வேறு தளங்களில் பயன்படுத்தாததாகவும் இருக்க வேண்டும்.நம்பர் மற்றும் ஸ்டிரிங்கையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது.குறைந்தது 6 எழுத்துகள் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

2.பிரைவேட் பிரவுசிங்..;

பேஸ்புக்கை பயன்படுத்திய பின்னர் ’லாக் அவுட்’ செய்து எப்போதும் பிரவுசரை பூட்டி விடுங்கள்.முடிந்தால் கணினியை அணைத்துவிடுங்கள்.இன்டர்நெட் சென்டராக  இருந்தால் இது ரொம்பவும் முக்கியம்..”Remember Me”-ஐ  எப்போதும் செக் செய்யக்கூடாது.

3.மின்னஞ்சல் பாதுகாப்பு..;

பேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் எளிதாக நுழைந்துவிடலாம்.இரண்டுக்கும் எப்போதும் வேறு பாஸ்வேர்டை தருவதே நல்லது.

4.பாதுகாப்பு கேள்விகள்..;

பேஸ்புக் கணக்கைத் தொடங்கும்போது சில பாதுகாப்புக் கேள்விகள் கேட்பார்கள்.அவை,பாஸ்வேர்டை மறந்துவிட்டால் கணக்கை மீண்டும் பயன்படுத்த உதவும்.எனினும் இவற்றில் எப்போதும் கடினமான  கேள்வி-பதில்களை தேர்வு செய்யுங்கள்.அவ்வாறு செய்யும்போது மற்றவர்கள் அவற்றை ஊகிக்க முடியாது.இதுவரை கேள்வி-பதில்களை செட் செய்யவில்லை என்றால் Account settings page சென்று அவற்றை உருவாக்கிக் கொள்வது நல்லது.

5.லாகின் செய்யும்போது..;

எப்போதும் Facebook.com சென்ற பின்னரே லாகின் செய்யுங்கள்.மின்னஞ்சலில் வரும் தெரியாத இணைப்புகளில் லாகின் செய்ய வேண்டாம்.