திங்கள், 11 ஜூலை, 2016

திறமை!!!

                                        
Image result for guitar with feet



கிட்ஹார் வாசிப்பதற்கு திறமை 

                             இருந்தால் போதும்...!
கைகளே தேவை இல்லை..!

சனி, 9 ஜூலை, 2016

கனவு

                                                             Image result for dream     

கற்பனையை முதலெழுத்தாய் கொண்டிருப்பாய் !
உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இயக்குனரை
தூக்கத்தில் வெளிக்கொணர்வாய் !
எண்ணுவன எல்லாம் நிறைவேறுவது உன்னில் மட்டுமே !
கடவுளின் கற்பனை இந்த உலகமென்றால் – அந்த
கடவுளும் கனவு கண்டிருப்பாரோ !
சில நேரங்களில் நித்திரையில் வருகிறாய் ;
சில நேரங்களில் நித்தம் நித்தம் வருகிறாய் !
அந்த ஆதி மனிதனும் சக்கரத்தை
முதலில் உன்னில் தான் கண்டானோ !
மனிதனின் நினைவளைகள் நீ என்றால்
உன்னுடைய நினைவளைகள் தான் மனிதனா ?
கனவு என்னும் மூன்றழுத்தும் ,
கற்பனை என்னும் நான்கெழுத்தும் சேர்ந்துதான்

கண்டுபிடிப்பு என்னும் ஏழெழுத்தை உருவாக்கியதோ ?

படிப்பு எதற்கு..?? அறிவு எதற்கு..??


Image result for கல்வி உளவியல்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.(398)

இக்குறளில் வள்ளுவர் கூறியப் பொருள் ஒருவன் தனது ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது அவனது ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பது பொருள்.

மார்பிங் என்றால் என்ன..??



மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் பல பெண்களுக்கு இன்னமும் சரியாக தெரிவதில்லை.

ஒரு பெண்ணின் புகைப்படத்திலுள்ள தலையை அகற்றி அதை இன்னொரு பெண்ணின் புகைப்படத்தில் பொருத்தி அந்த படத்தை சமூக விரோதிகள் பேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள். இந்த முறைக்கு ‘‘மார்பிங்” என்று ஆங்கிலத்தில் பெயர். இந்த ‘‘மார்பிங்” வகை குற்றங்கள் உலகம் முழுவதும் மிக அதிக அளவில் நடந்து வருகிறது.

தங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்து வைத்திருக்கும் பெண்களின் புகைப்படங்களை, அவர்களுடைய பேஸ்புக் பக்கங்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அந்த புகைப்படங்களை திருடி எடுத்து இவ்வாறு ‘‘மார்பிங்” செய்து விடுகிறார்கள்.

சில பெண்கள் தங்கள் புகைப்படங்களை மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருப்பதுண்டு. அவர்கள் மொபைல் போன் தொலைந்து அது குற்றவாளிகள் கையில் கிடைக்கும் போது அந்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து ‘‘மார்பிங்” செய்து பேஸ்புக் மற்றும் இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.

பொதுவாக இதுபோன்ற குற்றங்களில் பெண்களின் வருங்கால வாழ்க்கையை மனதில் கொண்டு பெற்றோர்களும் காவல் துறையிடம் புகார் கொடுக்க தயங்குகிறார்கள்.

இது போன்ற தங்களது சித்தரிக்கப்பட்ட ஆபாச படங்கள் பேஸ்புக்கிலோ அல்லது இணைய தளத்திலோ வந்தால் அவற்றை எப்படி? உடனடியாக நீக்க வேண்டும் என்ற யுக்தியை பெண்களும் மற்றும் பெற்றோர்களும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களது ஆபாச படத்தை பேஸ்புக்கில் பார்த்தால் உடனடியாக அந்த படத்தின் மேல் வலது பக்கத்திலுள்ள அம்புக் குறியை அழுத்தினால் ‘‘ரிப்போர்ட் போட்டோ” என்ற ஒரு ஆப்சன் வரும். அதை நீங்கள் கிளிக் செய்துவிட்டால் 72 மணி நேரத்தில் அந்த ஆபாச புகைப்படம் பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டு விடும். அதே போல் பேஸ்புக்கிலுள்ள ‘‘ஹெல்ப் சென்டர்” உபயோகித்து புகார் செய்தால் அந்த ஆபாச படம் நிச்சயம் நீக்கப்பட்டு விடும்.

ஒரு வேளை பேஸ்புக்கை தவிர வேறு வெப் சைட்டில் உங்கள் ஆபாச புகைப்படம் வந்தால் ‘‘கான்டெக்ட் யூஸ்” என்ற ஆப்சனுக்கு நீங்கள் புகார் செய்தால் அந்த ஆபாச படம் அல்லது வீடியோ உடனே நீக்கப்பட்டு விடும். இந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காத பட்சத்தில் நீங்கள் காவல்துறையிடம் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான் குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் வேறு யாருக்காவது கெடுதலை செய்வதற்கு முன் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க முடியும்.

பேஸ்புக்கில் ‘‘பிரைவெட் செட்டிங்ஸ்” என்ற ஒரு வசதி உள்ளது. அதை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரும் உங்கள் புகைப்படங்களை பார்க்க இயலாது. இணைய தளத்தில் உங்கள் புகைப்படத்தை பகிர்வு செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் பகிர்வு செய்ய வேண்டும். மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே உங்கள் புகைப்படத்தை பகிர வேண்டும்.

பேஸ்புக்கில் பெண்கள் தனியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்யக்கூடாது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவேண்டும். காரணம் இப்படிப்பட்ட புகைப்படத்திலிருந்து ‘‘மார்பிங்” செய்வது மிகவும் கடினம். யாராவது பெண்களை புகைப்படம் எடுத்தால் அதை தடுத்து நிறுத்துங்கள். இந்த புகைப்படங்கள் ஆபாச புகைப்படங்களாக மார்பிங் செய்யப்படலாம்.

இந்த கணினி உலகத்தில் போலிகளை உருவாக்குவது மிகவும் எளிது. எனவே ஆபாச காட்சிகள் பெரும்பாலும் போலியானவையே. இந்த போலி ஆபாச படங்களால் பெண்கள் பலியாவதை தடுத்து நிறுத்த, அந்த சமயங்களில் பெற்றோர்கள், கணவர்கள் மற்றும் உறவினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அந்த ஆபத்தான கட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான அந்த பெண்களுக்கு உறுதுணையாக இருந்து அந்த பெண்களை மீட்க முயல வேண்டுமே யொழிய, சந்தேக கண்களை அந்த பெண்கள் மீது பாய்ச்சி அந்த பெண்களின் உயிரை மாய்த்துக் கொள்ள பெற்றோர்களும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் காரணமாகி விடக்கூடாது. இது நம் அனைவருக்கும் தெரிவிக்கும் செய்தியாகும்.

செவ்வாய், 5 ஜூலை, 2016

ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்

ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்
                                    --வில்லியம் ஷேக்ஸ்பியர்
வில்லியம் ஷேக்ஸ்பியர்(1564-1616)சிறந்த நாடக மற்றும் கவிதை எழுத்தாளர். இவரது படைப்புகள் பலவற்றை பல மெழிகளில் மெழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சில சிறந்த நாடகங்களான ஹாம்லட்,ஒதல்லோ,மாக்பேத்,கிங் லியர், தி மிட் சம்மர் நைட் டிரீம்,தி மெர்சன்ட் ஆப் வினைஸ் மற்றும் தி டேம்பஸ்ட் என்பனவாம்.

      ஷேக்ஸ்பியரது`ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்` என்ற பகுதி`அஸ் யூ லைக் இட்` என்ற நாடகத்திலிருந்து ஆக்ட்III சீன் 7 பகுதியை இங்கு குறிப்பிடுகிறார்.இதில் வரும் சோகக் கதாப்பாத்திரமான ஜாகுவஸ் கூறும் வாழ்கைத் தத்துவமே இப்பகுதி.அவரைப் பொறுத்த வரை மனித வாழ்வு ஏழு பருவங்களைக் கொண்டது.அவை குழந்தை,பள்ளிச் சிறுவன்,காதலர்,சிப்பாய், வளர்ந்த வருவம்(adult hood),முதுமை பருவம் மற்றும் இரண்டாம் குழந்தை பருவம், என்று கூறுவர்.
      இதில் முதலாம் பருவமான தாய் அரவனைப்பில் உள்ள குந்தை பருவத்தில் எதை சாப்பிடக் கொடுத்தாலும் கக்கிக்கொண்டும்,அழுதுகொண்டும் இருப்பான்.இரண்டாம் பருவத்தில் விருப்மில்லாமல் பள்ளிக்கு செல்வான் பொழுதும் பகார் செய்து கொண்டே இருப்பான்.3ஆம் பருவமான காதலர் பருவத்தில் தன் காதலியை ஆளமாக காதல் செய்வான்,அவளது கண்கள் புருவம் முதலியனவற்றை ஆளமாக வருணித்து பாடுவான்.
பின்னர், 4ஆவர் பருவமான சிப்பாய் பருவத்தில் பல சத்தியங்களை எடுத்துக்கொள்வான்.தனது பெருமை மீது பொறாமை கொள்வான் அதனை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பான்.
      ஐந்தாம் பருவத்தில் சிறு தொப்பை கொண்டு தனக்கு பிடித்த உணவுகளை உட்கொண்டு பழமொழிகளை தன் வாழ்கை ஆனுபவத்துடன் எடுத்துக் கூறுவர்.6ஆம் பருவமான முதுமையில் மெளிந்து,தளர்ந்து போயிருப்பர்.தனது பார்வைக் குறையால் மூக்கின் மீது கண்ணாடி போட்டுக் கொண்டும்,வெற்றிலை போட்டும் சிறிது பணத்தை தனது கப்பையில் வைத்துக் கொண்டு பெரிய சட்டைகளையெல்லாம் அனிந்து கொண்டிருப்பார். கடைசி பருவமான இரண்டாம் குழந்தை பருவத்தில், மனிதன் முழூ குழந்தையாகவே மாருகின்றார்.பெரும்பாலும் அனைத்தையும் இவ்வயதில் மறந்திருப்பர்.இவரது நினைவாற்றல் குறைந்தே இருக்கும். பற்கள், பார்வை ,சுவை அனைத்தும் தளர்ந்தே இருக்கும்.பின்னர் இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு உலகம் என்னும் மேடையை விட்டு வெளியேரிவிடுவான் என்கிறார்.


ஞாயிறு, 3 ஜூலை, 2016

பொறுமை!!

   

மனிதனுக்கு  தேவை மொழி                                        
மொழிக்கு      தேவை பேச்சு

பேச்சுக்கு       தேவை படிப்பு

படிப்புக்கு       தேவை கல்வி

கல்விக்கு       தேவை ஆசிரியர்

ஆசிரியருக்கு  தேவை வேலை


வேலைக்கு    தேவை பொறுமை!!!

சனி, 2 ஜூலை, 2016

கவிதையின் சிறப்பு



 
ஒரு நிமிடம் யோசிக்க வைத்த கவிதை

பல நிமிடங்களில் வாக்கியமானது,                                                         
வாக்கியமான இக்கவிதை பிரபலமானது,

பிரபலமான இக்கவிதை இன்று உலகம்
               
         சுற்றும்  வாலிபனாக திகழ்கிறது!!!                     
   




வெள்ளி, 1 ஜூலை, 2016

பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்படுவதைத் தடுக்கும் வழி..!!!



சில நேரங்களில் உங்களின் பேஸ்புக் கணக்கு வேறு ஒருவரால்  ஹாக் செய்யப்படும் அனுபவம் உங்களுக்கு நேரிட்டிருக்கலாம்.இதுவரை ஏற்படவில்லை என்றாலும் வருமுன் காப்பதற்கு சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம்.இவை அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விஷயங்கள் ஆகும்.

1.பாஸ்வேர்டு பாதுகாப்பு….;

பேஸ்புக்கில் பயன்படுத்தும் பாஸ்வேர்டு கடினமானதாகவும் வேறு தளங்களில் பயன்படுத்தாததாகவும் இருக்க வேண்டும்.நம்பர் மற்றும் ஸ்டிரிங்கையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது.குறைந்தது 6 எழுத்துகள் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

2.பிரைவேட் பிரவுசிங்..;

பேஸ்புக்கை பயன்படுத்திய பின்னர் ’லாக் அவுட்’ செய்து எப்போதும் பிரவுசரை பூட்டி விடுங்கள்.முடிந்தால் கணினியை அணைத்துவிடுங்கள்.இன்டர்நெட் சென்டராக  இருந்தால் இது ரொம்பவும் முக்கியம்..”Remember Me”-ஐ  எப்போதும் செக் செய்யக்கூடாது.

3.மின்னஞ்சல் பாதுகாப்பு..;

பேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் எளிதாக நுழைந்துவிடலாம்.இரண்டுக்கும் எப்போதும் வேறு பாஸ்வேர்டை தருவதே நல்லது.

4.பாதுகாப்பு கேள்விகள்..;

பேஸ்புக் கணக்கைத் தொடங்கும்போது சில பாதுகாப்புக் கேள்விகள் கேட்பார்கள்.அவை,பாஸ்வேர்டை மறந்துவிட்டால் கணக்கை மீண்டும் பயன்படுத்த உதவும்.எனினும் இவற்றில் எப்போதும் கடினமான  கேள்வி-பதில்களை தேர்வு செய்யுங்கள்.அவ்வாறு செய்யும்போது மற்றவர்கள் அவற்றை ஊகிக்க முடியாது.இதுவரை கேள்வி-பதில்களை செட் செய்யவில்லை என்றால் Account settings page சென்று அவற்றை உருவாக்கிக் கொள்வது நல்லது.

5.லாகின் செய்யும்போது..;

எப்போதும் Facebook.com சென்ற பின்னரே லாகின் செய்யுங்கள்.மின்னஞ்சலில் வரும் தெரியாத இணைப்புகளில் லாகின் செய்ய வேண்டாம்.

செவ்வாய், 28 ஜூன், 2016

பூத வாத சருக்கம்

நீலகேசி பூதவாத சருக்க விளக்கம்

வேதவாதியை வென்று நிலகேசி வெற்றிகரமாகத் திரும்பிவரும் வழியில், உலோகாயத (அனாத்ம நாஸ்திக) நெறியாகிய பூதவாதத்தின் பேர்போன தலைவனான பிசாசகனைச் சந்தித்தாள். அவன் மதனஜிதனென்ற அரசன் ஆதரவுபெற்று அவன் அரண்மனையிலிருந்தான். எனவே, அவ் அரசன் அவையிலேயே வாதம் தொடங்கிற்று. (இந்நெறியின் முதல்வன் சார்வாகனாதலால் இது சார்வாகம் எனவும் பெயர்பெறும்.
பூதவாதத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்று நீலகேசி வினவ, பிசாசகன் அதை விளக்கிக் கூறலானான்.
பிசாசகன் : பொருள் வேறு, பண்பு வேறு என்ற மயி¡¢ழைப் பாகுபாடுகளை நாங்கள் ஏற்பதில்லை. எங்களுக்கு அடிப்படை உண்மைகளாவன ஐந்து பூதங்களே. உலக நடைமுறைகள் எல்லாம் அவற்றினிடமிருந்தே தோன்றி இயங்கபவை. அனல், மண், நீர், காற்று, வெளி என்ற இவ்வைந்து பூதங்களும் நிலையாயன; மெய்ம்மைகள். இவற்றிலிருந்து முறையே கண்கள், மூக்கு, நாக்கு, உடல் காதுகள் அகிய பொறிகள் தோற்றுகின்றன. அவற்றினிடமிருந்து நிறம், மணம், சுவை, ஊறு; ஓசை ஆகிய புலணுணர்வுகள் எழுகின்றன. மா, வெல்லம் முதலாய ஐம்பொருட்களின் சேர்க்கையால் வெறிதரும் சாராயம் உண்டாவதுபோலவே, இவ் ஐந்தின் சேர்க்கையால் அறிவுதோற்றமெய்துகின்றது. அதனிடமாக இன்ப துன்பமுண்டாய், ஐம்பூதங்களின் செறிவுக்கியைய வளர்ச்சியுற்று வேறுபட்டுப் பி¡¢ந்தொழிதலால் இவை யனைத்தும் அறிவுறுகின்றன.
உயிர் என்ற ஒன்று இல்லை. சூழ்ச்சிமிக்கவர் கற்பனையில் தோன்றிய இப்பொய்ம்மையை அறிவற்ற ஆயிரமாயிர மக்கள் நம்பி ஏமாறுகின்றனர். முக்காலத்தும் உயிர் என்ற பொருள் இல்லை; இருப்பவை, இருந்தவை, இருக்கப்போகின்றவை எல்லாம் ஐம்பூதங்களே.
நீலகேசி : உங்கள் முடிந்த உண்மையை நீங்கள் கண்டறிந்தவகை யாது? புலனுணர்வாலறிந்தீர்களா? உய்த்துணர்வாலா? அல்லது நிறையறிவுடைய உங்கள் தலைவர் அறிவாலா? உங்கள் சமயத்தைத் தோற்றுவித்த முதல்வர் யாருமில்லாததால், அதற்கு வாய்மொழியும் இருக்க முடியாது. நிறையறிவுடைய முதல்வர் மட்டுமே வாய்மொழி போன்ற நிறை அறிவுரை தரமுடியும். வினைச்சார்பற்ற அத்தகைய முதல்வருக்கு உங்கள் கோட்பாட்டிலும் இடமிருக்க முடியாது. நீங்கள் ஏற்கும் அளவை கண்கூடு (புலனறிவு) ஒன்றே. அதன் வாயிலாய் புலனறிவுக்கு மூலமான உடல், அதற்கு மூலமான முடிந்த உண்மைகள் ஆகியவற்றை அறிவதெவ்வாறு? பூதங்கள் ஒன்று சேர்வதால் புதிதான உயிர்த் தன்மையுடைய அறிவு தோன்றுவதெவ்வாறு? பூதங்கள் முதற்காரணமா, (மூலப்பொருளா) நிமித்தகாரணமா (செய்வோனா)? முதற் காரணமானால், புலனன்றி அறிவும் உணர்வும் தோன்றுமா?
பிசாசகன் : விறகிலிருந்து தீ தோன்றுவது போலவே தான் புலன்களிலிருந்து உணர்வும்.
நீலகேசி : விறகில் தோன்றும் தீ, விறகைப்போலவே உணர்வற்றது. விறகுடன் எ¡¢ந்து அதனுடன் ஒழிவதேயன்றித் தன் செயலாக எதுவும் உடையதன்று. பூதங்கள் சேர்க்கையில் உயிர் தோன்றுவது அவ்வாறன்று. பூதங்கள் அறிவும் உணர்வும் அற்றவையாயினும் உயிர் அற்றவை உடையது. அப்படியிருக்க, பூதங்களிலிருந்து உயிர் எவ்வாறு தோன்றும்.
மேலும் விறகு மிகுதிப்பட்டால் தீ வளரும். ஆனால் உடல் வளர்ச்சியுடன் உணர்வு வணர்ச்சியடைவதில்லையே. பூதச் சேர்க்கையாலுண்டாகும் புலனறிவு, பூதச் சார்பான பொருள்களை உணர்ந்தும் உயிர், உணர்வு, அறிவு ஆகியவற்றை உணர்வதில்லை.
நல்வினை உணர்வு, தீவினையச்சம், அகச்சான்று ஆகியவைகள் புலனுடன் தொடர்பற்றவை.
ஐம்பூதங்கள் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்கிறீர்கள். ஆனால் புலன்கள் அவ்வப்பொறிகள் வாயிலாக மட்டும் அறியப்படுவானேன்? ஐம்பொறிகளுள் சிலபொறிகளே உடைய கீழுயிர்கள் ஐம்பூதங்களில் சில பூதங்கள் குறைய உண்டானவையா? சில பூதங்கள் குறைந்தும் ஒரு பூதமே தனித்தும் புலனறிவுண்டாமெனில், ஐம்பூதமும் ஐம்பொறியும் சேர்ந்தே அறிவுண்டாமெனும் கோட்பாடு வீழ்ச்சியுறுகிறது. இவற்றுக்கும் மேலாகப் பொருளுண்டெனின், ஆன்மாவை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
பூதங்கள், புலனுணர்வு இல்லாதபோது முன்நினைவு ஏற்படுகிறதே. மனம் என்ற ஒன்றின்றி அது எவ்வாறு ஏற்படும்? பசி, சினம், அவா, சிற்றின்பம் ஆகியவை புலனுணர்விலடங்குபவை அல்லவே? சிறு குழந்தை அழுவது, பால் குடிக்க முனைவது எவ்வறிவின்பாற்படும்? இவை இயற்கையானால், அவை வளர்ச்சிப் பருவந்தோறும் மாறுபடுவானேன்? உயிர்வகைதோறும் வேறுபடுவானேன்?
உயிர்கள் உணர்விழந்த நிலையில் புலனுணர்வில்லாமலும் உயிர் நிலவுகிறதே. புலனுணர்வு கடந்த உயிர் இருக்கவேண்டுமன்றோ? உடலில் பூதச் சேர்க்கை அழியாமலே உயிர் போவதெவ்வாறு?
பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிர் இல்லை. அவ்வுணர்வு இல்லாததனால் என்கிறீர்கள். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் பூத உணர்வில்லாததால் பூதங்களுமில்லை என்று கொள்ளலாமா?
ஒரேவகை உடலுடைய உயிர்கள் பலபடி அறிவு, பல்வகை அறிவுநிலை, இன்பதுன்ப நுகர்வு உடையவையாயிருப்பானேன்?
பொருள் சேமித்துப் புதைத்துவைத்து இறந்தவன் பிள்ளைகளுக்கு இடமறிவிக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கு ஏற்படுகின்றனவே? இறப்புக்குப்பின் உயிர் இல்லை என்றால், இது எவ்வாறு கூடும்.
பிசாசகன் : (விலாப்புடைக்க நகைத்து) புலனாலறியப் படாதவை பொய்யாகும். பொய்யைப்பற்றி ஏன் இவ்வளவு மயி¡¢ழை ஆராய்ச்சி!
நீலகேசி : ஆசியை நம்பாத உனக்கு நேரிடையாக ஆவியைக் காட்டுகிறேன் என்று கூறித் தன் தெய்வ ஆற்றலால் பிசாசகன் முன் ஒரு பேய் வடிவுடன் தோன்றினாள். பிசாசகன் அஞ்சி உணர்வற்று நின்றான். நீலகேசி அவனைத் தேற்றி, அஞ்சவேண்டாம். இது உன் தாயுருவம்; வேறன்று. நீ பிசாசகன் என்று பெயர்பெற்றதே அதனால்தான்! என்றாள்.
பிசாசகன் நீலகேசியின் அறநெறி ஏறினான். நீலகேசியும் தன் அறப்பணியால் மனநிறைவடைந்து தன் அறிவு நிலையில் நின்று வீடுபேறுற்றாள்.

திங்கள், 27 ஜூன், 2016

ஆப் ட்ரூத்


ஆப் ட்ரூத்
                                          --ப்ரான்சிஸ் பேகன்
பேகனது ஆப் ட்ரூத் என்பது மிக பிரபலமான படைப்பாகும்.பேகன் உண்மையை பேச மறுக்கும் மக்களை கெளி செய்கிறார்.மக்கள் பொய்யையே விரும்புகின்றனர்,எனினும் அந்த போய்யால் இவர்களுக்கு எந்த லாபமும் இல்லை.உண்மை என்பது விளக்கை போல ஒளி வீசக்கூடியதாகும் ஆனால், பெரும்பாலானோர் இருட்டில் அடைபட்டுக் கொள்ளவே விரும்புகின்றனர். உண்மையே மனிதனது பெரிய சொத்து என்கிறார் பேகன்.

            இதிகாசங்களில் வரும் பைலேட் என்பவர் உண்மைக்கு முரண்பட்டவன்.மறுபக்கம் கடவுள் உண்மையை படைத்து கொண்டாடுபவர். இந்த கட்டுரை கிறுஸ்த்துவர்களின் பார்வைக்கு சற்று ஒற்று போகக் கூடியது. பேகன் கவஞ்ர்கள் கூறும் பொய்யை தடுக்கவில்லை.உண்மை என்பது மனிதனதுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய சொத்து என்கிறார். உண்மை என்பது முத்துகளை போல, ஆனால் வைரம் போல பல ஒலிகளால் மின்னக்கூடியவை அல்ல என்கிறார்.

சனி, 25 ஜூன், 2016

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்...!!!



\

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

2. இரண்டு முதல் மூன்று வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றும், வருங்காலத்தில் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ குறிப்பிடுவது, மனதில் பதிய வைப்பது தவறு.

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.

8. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.

9. மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

10. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

11. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

நன்றி: மாலை மலர்

மாய மந்திரம்! இந்திர ஜாலம்!

Image result for maaya jalam photo



மாயா ஜாலாம் தொடர்கிறது..
அரசே நல்ல காட்சியை மங்களமாக முடிக்கவேண்டும் ஆகவே ஒரு திருமணக் காட்சியுடன் முடிக்க அனுமதி தேவை என்கிறான். உங்கள் மகளைப் போலவே அலங்கரிக்கப்பட்ட ஒரு மணமகளை வரவைக்கிறேன் என்றான். மன்னனும் திகைப்பிலிருந்து வெளியே வரவில்லை. ஆகவே என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்கிறான். ஒரு அழகான இளைஞன் மணப் பெண்ணுடன் வருகிறான். ஐயர் ஹோமம் வளர்த்து கல்யாணம் செய்துவைக்கிறார். எல்லாம் மாயாஜாலக் காட்சி போலவே நடக்கிறது. ஆனால் உண்மையில் மணப் பெண் போல வந்தது அவந்தி சுந்தரி. அவளை மணந்தவன் ராஜவாஹனன்.
கல்யாணம் முடிந்தவுடன், சூ! மந்திரக் காளீ! இரண்டு பேரும் மறைந்து போங்கள் என்கிறான். பெண்ணும் மாப்பிள்ளையும் அரண்மனையில் இருந்த ரகசிய சுரங்கக் கதவு மூலம் தப்பித்து ஓடிவிடுகிறார்கள். கதை எப்படிப் போனாலும் அந்தக் காலத்தில் மாயாஜாலக் காட்சிகள் அரண்மனையில் நடத்தப்பட்டதை நாம் அறிய இந்தக் கதை உதவுகிறது.

கயிறு வித்தை தவிர, மந்திரத்தால் மாங்காய் மரம் உண்டாக்குவது, கலர் நூல்களைப் பயன்படுத்தி (சூத்திர க்ரீடா) தந்திரங்கள் செய்வது, கணக்கு வித்தைகளைச் செய்வது, கைகளை லாகவமாகப் பயன்படுத்தி காசுகளை மறைப்பது (ஹஸ்த லாகவம்) முதலியன அக்காலத்தில் தந்திரக் காட்சிகளில் இடம்பெற்றன.
                                                                           (சுபம்)
குறிப்பு; எனவே மாயா ஜாலாம் என்பது நேரத்தை போக்குவது மட்டும் அல்லமல் ஒரு ஏமாற்று வேலையும் கூட…
                                நன்றி!!!!

வியாழன், 23 ஜூன், 2016

ஹிஸ் டிசரேசன் அபான் ரோஸ்ட் பிக்


ஹிஸ் டிசரேசன் அபான் ரோஸ்ட் பிக்
                              --ச்சார்லஸ் லேம்ப்
லேம்ப் உலகரிந்த விமர்சகரும் கட்டுரையாளருமாவார்.அவரது கட்டுரைகள் நகைச்சுவைக்கு பெயர் போனவை.எப்படி பன்றி இறைச்சி சமைக்கப்பட்டது என்ற முறையை இக்கட்டுரையில் கூறியிருப்பார்.சீன பழங்குறிப்பில் இவை தற்செயலாக கன்டுபிடிக்கப்பட்ட பரிசு என்று கூறுகிறது.
            ஒரு காலத்தில் போ—போ(bo-bo)என்ற சிறுவன் தன் தந்தையான ஹோ—டி(ho—ti)யின் பன்றி மந்தையில் இருந்தான்.பன்றிகளுக்கு ஹோ—டி அப்போது உணவு வாங்க சென்றான்.மந்தையை தன் மூத்த மகனான போ—போவிடம் விட்டு சென்றான்.அவனோ சுட்டி அங்கும் இங்குமாய் திரிந்து நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்த அவனுக்கு ஓர் அதிர்ச்சி.
அந்த நெருப்பின் ஒரு சிறு துளி தனது மூன்று பன்றி மந்தையில் பட்டு இடத்தையே சாம்பல் ஆக்கிவிட்டது.சில பன்றிகள் ஒடி தப்பித்துவிட்டன.சில பன்றிகள் காயத்துடனும் ஓடின.ஆனால் ஒன்பது பன்றிகள் முழுவதும் எறிந்து போயின.செய்வதறியாது திகைத்து தந்தையிடம் என்ன கூறுவது என்று எண்ணிக்கொண்டிருந்த அவனுக்கு தன் வாழ்நாளில் நுகராத அப்படி ஒரு அற்புதமான மணம் வீசியது.அது என்னவென்று காப்பகறிகள்,கோதுமை, மரக்கட்டை என பலவற்றை நுகர்ந்து பார்த்து இருதியில் பன்றி என்று கண்டரிந்தார்.அதனை அருகில் சென்று தன் விரலால் தொட்டான்.கையில் பட்ட நெருப்பை அனைக்க தன் விரல்களை சூப்பினான்.அவனுக்கு அதில் அற்புதமான சுவை கிடைத்தது.
            பிறகு அதில் மெதுவாக ஒரு கறித்துண்டை எடுத்து தன் வாயில் ருசித்தான்.ஹோ—டி வந்த பின் தன் மகனை திட்டினான்.எதையும் பொருட்படுத்தாமல் தின்றுகொண்டே இருந்தான்.போ—போ பின்பு தன் தந்தையும் சுவைத்து பார்க்க சொல்லி இருவரும் சேர்ந்து அனைத்து பன்றியையும் சுவைத்தனர்.இந்த விஷயம் வெளியே தெரிந்து நீதிமன்றம் வரை சென்றது.நீதிபதி அந்த கரியை சுவைத்து பார்த்து அவர்களுக்கு விடுதலை அளித்தார்.பின்பு அதனை எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு போ—போவை போல தன் பன்றி மந்தை முழுவதையும் எரித்தார். பின்னர்,அனைத்து இடங்களிலும் சீன பன்னி மந்தைகள் எரிக்கப்பட்டன.சில நாட்களுக்கு பிறகு இதனை முறையாக சமைக்க அடுப்பு கண்டுபிடிக்கப்பட்டன.