வெள்ளி, 15 ஜனவரி, 2016

உழவுக்கு உயிரூட்டுவோம்..!!!


முன்னுரை;

உணவு, உடை, இருப்பிடம் என்பது குடிசையில் இருந்து மாட மாளிகையில் வாழ்பவர்கள் அனைவரது அடிப்படைத் தேவைகள் ஆகும்.பூமி எப்படி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதோ அதுபோல தான் விவசாயியும் தனக்கு வேண்டிய உணவை உற்பத்திச் செய்துவிட்டு பிறருக்கும் உணவை உற்பத்திச் செய்து தருகின்றனர்.இப்படிப்பட்ட விவசாயின் உழவுக்கு உயிரூட்வோம் என்ற வகையில் சில கருத்துகளை காண்போம்.

உழவு என்பதன் பொருள்;

உழவு தொழில் அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடைகளை வளர்பதையும் குறிக்கும்.வேள் என்னும் சொல்லின் அடியாகப்  பிறந்த வேளாண்மை எனும் சொல் பொதுவாக கொடை,ஈகை ஆகியவற்றைக் குறிக்கும்.நிலமானது தரும் கொடையால் தான் இப்பெயர் வழங்கியிருக்கலாம்.வேளான் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் என்றும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருளும் உண்டு.

நெல் உற்பத்தி தொடக்கம்;

கி.மு.7000 நூற்றாண்டில் கோதுமை மற்றும் பார்லி வகைப் பயிரிடப்பட்டன.பிறகு தான் கோதுமையை விட நெல் (அரிசி) அதிகளவில் பயிரிடப்பட்டன.கடந்த நமது முன்னோர்கள் காலத்தில் சுமார் 4,00,000 இலட்சம் நெல் வகைகள் பயிரிடப்பட்டன.ஆனால் இன்று 130 நெல் வகைகள் மட்டும் தான் பயிரிப்படுக்கின்றன என்பது எவ்வளவு கசப்பான உண்மை.

உழவுக்கு சான்றோர் தந்த சான்றுகள்;

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது பழமொழி.ஆம் அனைவரும் கணக்கு பார்பது  போல உழுகின்றவனும் கணக்குப் பார்த்தால் உணவு கூட மிஞ்சாது.

செங்கோல் நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோல் என்றுரைத்தார் கம்பர்.

உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி என்றுரைத்தார் வள்ளுவர்.

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்றுரைத்தார் அண்ணல் காந்தி.

ஔவையார், இளவரசரே வாழ்க என்று வாழ்த்தவில்லை.அரசே  உன் வரப்புகள் உயர்க என்று தான் வாழ்த்துவார்.காரணம், வரப்புயர நீருயரும்,நீருயர நெல்லுயரும்,நெல்லுயர குடியுயரும்,குடியுயர கோனுயர்வான் என்ற உம்மையை உவமையாக கூறுவார்.

ஏன் அண்மையில் விதைக்கப்பட்ட அ.ப.ஜெ.அப்துல் கலாம் ஐயா கூட இந்தியா வல்லரசு அடைய வேண்டும் என்றால் விவசாயம் மேன்மை அடைய வேண்டும் என்றுரைத்துச் சென்றனர் நம் சான்றோர்கள்.

நீரின்றி அமையாது உழவு;



என்னடா நீரின்றி அமையாது உலகு என்று தானே வள்ளுவர் கூறிப் படித்திருந்தோம்.இப்போ வேற மாறி இருக்கே என்று நினைக்கத் தோன்றுகிறதா..??உண்மை தான் இனி வரும் காலத்தில் நீரின்றி அமையாது உழவு என்பது மிகைதான்.காவேரியிலும்  நீரில்லை நிலத்தடி நீரும் இல்லை.பிறகு எப்படி உழவு செய்து அறுவடை செய்வது..??இயலாத ஒன்று தான்.

ஒரு உதாரணம்;

சாணத்தை சாணமாக விற்றால் கிலோவிற்கு ஒரு(1) ரூபாய்.அதே சாணத்தில் இருந்து பயோ கேஸ் ஆக பிரித்து விற்றால் கிலோவிற்கு ஆறு (6) ரூபாய்.மேலும் அதே சாணத்தை மீன் வளர்ப்புக்கு கொடுத்து மீனாகப் பெற்றால் கிலோவிற்கு நூறு (100) ரூபாய் எனப் பல்வகையில் இலாபம் ஈட்டலாம்.

விவசாயி அடையும் துயரம்;

மூன்று வேளை சோற்றுக்கு உற்பத்திச் செய்தவன் அடுத்த வேளை சோற்றுக்கு என்னச் செய்வது என்று தெரியாமல் வருந்துகிறான் விவசாயி.மேலும் விவசாயம் செய்ய காலநிலையை நம்பி தான் விவசாயம் செய்கிறான்.ஆனால் அந்த காலநிலை கூட  அவர்களை ஏமாற்றிவிடுகிறது.எப்படி தெரியுமா..??மழை அதிகமாகப் பொழிந்தாலும் கஷ்டம் மழைப் பொழியாவிட்டாலும் கஷ்டம் தான் நமது விவசாயிகளுக்கு.இவ்வுலகம் கண்டிடாத பிரச்சனையும் இல்லை.மாற்றிடாதப் பிரச்சனையும் இல்லை.

உழவர் திருநாள்;

வீட்டில் சூரியன் ரதத்தில்  வருவது போல கோலமிட்டு மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல உழவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.உழவர்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள் வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகவலனுக்கு (சூரியனுக்கு) நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

எப்போது உதயமாகும் விவசாயம் குறித்த ஞானம்;



பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கலாம்..ஆனால் உணவு உற்பத்திச் செய்ய விவசாயம் என்ற ஒருமுறை தான் உண்டு.

வயிற்றுல பசி இருக்கறவரைக்கும் விவசாயம் அழியாது.ஒரு நாள் விவசாயத்த கார்போரைட் கம்பெனி நடத்தும் அப்ப அரிசியோட விலை தங்கத்தை விட அதிகமாக இருக்கும்.அன்னைக்கு தான் தெரியும் நம் விவசாயியின் மதிப்பும், உணவின் மதிப்பும்.இவர்கள் சேற்றில் கை வைத்தால் தான் நம்மால் சோற்றில் கை வைக்கமுடியும்.இவர் தான் விவசாயி.காலம் கடந்து கிடைக்கும் ஞானம் பயனற்றது.

முடிவுரை;



நான் இந்த கட்டுரையை எழுதும் போது நாம் சாப்பிடும் உணவின் பின்னால் ஒரு விவசாயி அடையும் துயரமும் வேதனையும் கண்டு மனம் நொந்து போனேன்.நாம் இது தெரியாமல் உணவை எப்படி எல்லாம் வீண் செய்கிறோம்.உணவின் பின் ஒரு விவசாய குடும்பமே இருக்கிறது.மேலும் விவசாயத்துக்கு அவர்கள் கடன் வாங்கி அதை திருப்ப செலுத்த இயலாமல் சிலர் உயிர் துறந்து விடும் நிலையைக் கண்டு மனம் வேதனை அடைகிறது.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் வள்ளலாராக இருக்க நம்மால் இயலாம் போனாலும் வறுமைத் துயரினால் உயிர் துறக்கும் உழவரின் சோகம் தணிக்கும் மனம் கொண்ட மனிதனாக மாற முயற்சிப்போம்.முடிந்த வரை உணவை வீண் செய்யாதீர்கள்.விளை நிலம் விளை நிலமாகவே இருக்கட்டும் விலை நிலமாக மாறினால் விளைவு மரணம் என்பதை நினைவில் கொண்டு வாழ்வோம். அனைத்து விவசாயக் குடும்பத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பல..

வாழ்க விவசாயம்..!!வளர்க வரப்புகள்..!!






வியாழன், 14 ஜனவரி, 2016

தமிழர் திருநாள் விழா


 

13.01.15 அன்று  கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கோலப்போட்டி, பண்பாட்டு அணிவகுப்பு, நெருப்பின்றி சமைத்தல், இசைமேடை, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பொங்கல் வைத்து தமிழர் பண்பாட்டை நினைவுகொள்வதாக இவ்விழா அமைந்தது.

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஷேக்ஸ்பியருக்கு பிறகு யார்?





          ஆங்கிலத்தில் பல எழுத்தாளர்கள் எனினும் சிலர் மட்டுமே எவருடனும் ஒப்பிட முடியாதவகையில் தம் படைப்புகளை தந்துள்ளனர்.  இந்த வகையில் ஆங்கில இலக்கியத்தை பற்றி சிந்திக்கும்போது நம் நினைவுக்கு வரும் முதல் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். தம் கதாப்பாதிரங்களாலும்,ஒரு சாதரண செய்தியை விவரித்துக்கூறுவதிலும்,இந்த உலகம் முழுவதிலும் பெருமளவில் புகழ் பெற்றார்.  இந்த வகையில் எல்லா இலக்கிய கூறுகளையும் பின்பற்றி, அரிய பல கருத்துக்களை இவ்வுலகிற்கு தந்தவர் ஷேக்ஸ்பியரின் நன்பர் பென்ஜான்சன். 16ஆம் நூற்றாண்டில் இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்தவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்திலும் எல்லா இலக்கண, இலக்கிய முறைகளையும் பின்பற்றி தம் அடையாளத்தை பதித்தவர். இவர் 1573இல் வெச்ட்மினிச்டெர் என்ற இடத்தில் பிறந்தார். லார்டு அமிரல் தியேட்டா் கம்பெனியின் உறுப்பினராவார். நாடக எழுத்தாளர், நடிகர், போர் வீரர், என பல துறைகளில் தடம் பதித்தவர். நகைச்சுவை,சோகம்,காதல் கதைகள் எழுதுவதில் வல்லவர். எலிசபெத் காலத்தை பற்றிய இவரது படைப்பு மிக குறைவுதான். எனினும் அக்காலத்தில்இவர் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. இவர் இவர் இறந்த பிறகு இவர் கல்லறையில் ``ஓ அரிய பென்ஜான்சன்’’என்று எழுதப்பட்டிருந்தது. நகைச்சுவை என்ற படைப்புக்கு இவர் தான் இலக்கணம் வகுத்தார்.


எங்கே செல்கிறது பாரதம்..??


 இந்தியா ஓர் அறிமுகம்..!!!


நமது நாகரீகம் சிந்து சமவெளியில் ஆரம்பம் பெற்று இன்று  வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றும் அவர்களின் நாகரீகத்தை பின்தொடர்கின்றோம்.அன்று நம்மிடம் இருந்த இயற்கை வளத்தைக் கண்டும், வியாபாரம் செய்ய வந்தவர்கள் தான் போச்சுகீசியர்கள்.பிறகு தான் பிரிட்டிஷ் ஆட்சி நமது நாட்டை அடிமைப்படுத்தியது..கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி.1600-ல் இந்தியாவிற்குள்  நுழைந்து நமது வளங்களுக்கு நாமே அவர்களிடம் கட்டினோம் வரி.அதற்கு பதிலடி கொடுத்தார் நமது கட்டபொம்மன் ..அண்ணல் காந்தி,நேரு,திலகர்.வ.உ.சி,குமரன்,காமராசன் மற்றும் பலர் நம்மை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்டத்திற்காக கூக்குரல் எழுப்பினார்கள்.அதன் விளைவு ஆகஸ்ட் திங்கள் 15-ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலக் கொடி இறக்கப்பட்டு இந்தியக் கொடி ஏற்றி எப்படியோ அடைந்து விட்டோம் சுதந்திரம்.


எங்கே நமது ஒருமைபாடு..!!

அன்று நமது பாரத மக்கள் ஒற்றுமை உணர்வோடு இருந்தனர் என்று நமது பாடப்புத்தகங்களில் படித்திருப்போம்.அது உண்மை தான்.அன்றைய காலக்கட்டதில் குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழி மட்டுமே பேசப்பட்டது உண்மை.ஆனால் இன்று நமது நாட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மொத்தம் 22.ஏன் இந்த மொழி பிரிவினை ..?? அதற்கு நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருக்கலாம்.அது மட்டுமா இல்லை ஜாதி, மதம் மற்றும் மொழி போன்ற ஏரளமான பிரிவுகள்..இன்றைய தினத்தில் நமக்காக உயிர் துறந்தவர்கள் இருந்தால் அவர்களின் எண்ணம் இதற்கா சுதந்திரம் பெற்றுத் தந்தோம் என்று வருந்துவர்.இன்று எங்கே ஒருமைபாடு..??


எங்கே விவசாயம்..!!

வானம் பார்த்து விவசாயம் செய்த புண்ணிய பூமி ஆனால் இன்று மானம் மற்றும் பணத்தைப் பார்த்து செய்கின்றோம் விவசாயம்..ஒவ்வொரு விவசாயிகளும் நமக்கு கடவுளாக இருந்த அன்னமிட்ட கைகள்..இன்று கைதிகள் அவர்கள் ஆசை என்னும் பிடியில்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு திடமாக இருந்தோம் இன்று பீட்சா,பர்க்கர்,நூடுல்ஸ் என்ற ஆங்கில உணவைச் சாப்பிட்டு வருக்கின்றோம்..நாளைய சமுதாயத்திற்கு கொடுக்கப்போவது உணவா..??மரணமா..??

பணமா..??பிணமா..??

யார் புதைத்தது பணம் என்ற பிணைத்தை நம்முள்.ஒருக்கட்டத்தில் பணம் தேவைப்பட்டது உயிர் வாழ இன்று வாழ்வதே படணத்திற்காக தான்.பணத்தை உருவாக்கியதே மனிதன் தான் ஆனால் இன்று பணம் தான் மனிதனை உருவாக்குகிறது.என்ன கொடுமை..??

அரசா..??தனியாரா..??




நம் எல்லாருக்கும் தெரிந்த உண்மை.ஆனால் எதுவும் செய்ய இயலவில்லை நம்மால்.!!

அரசு நடத்த வேண்டிய கல்வி இன்று தனியார் நடத்துகிறது.தனியார் நடத்த வேண்டிய டாஸ்மார்க் அரசு நடத்துகிறது.நமது அரசாங்கத்துக்கு டாஸ்மார்க்கில்  இருந்து தான் அதிக வருமானம் கிடைக்கிறது என்பது உண்மை.

கல்வி வியாபாரமா..??சேவையா..??

கல்வி என்பது சேவையாக இருந்தது..இன்று அதே கல்வி வியாபாரம் ஆனது ..படிக்க ஆர்வமுள்ள குழந்தைகளாக படிக்க இயலவில்லை காரணம் கட்டாயக் கல்வி கட்டணம் கல்வியாக மாறியது தான் ..கல்வி முறை என்பது நாளைய சமுதாயத்தை உருவாக்குவது .ஆனால் இந்த வியாபாரம் நம்மை பகைவன் ஆக்குகிறது.அரசு பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை வேண்டாமா ஆனால் அரசு வேலை மட்டும் வேண்டுமா நம் மக்களுக்கு..

முடிவு..!!




எனது பார்வையில் நான் காணும் பாரதம்.இனம்,மொழி,மதம்,ஊழல் மற்றும் லஞ்சம் நிறைந்தது  தான் இந்தியா..இதை யாராலும் மறுக்க இயலாது..எனது கவலைகள் அனைத்தும் நமது இந்தியா எப்போது வல்லரசு அடையும் ..முடியும் இன்றைய தலைமுறைக்கு வழிவிடுங்கள் ..இன்றைய தலைமுறை நாளைய சமுதாயம் என்பது வார்த்தையால் மட்டுமில்லாமல் செயலிலும் வேண்டும்..சிந்தியுங்கள் இது நமது பாரதம்.எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அடிக்கடி என்னிடம் கூறுவது எதையும் நம்மால் மாற்ற இயலாது நம்மை நம்மளே மாற்றினால் தான் உண்டு என்று இது என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..ஒவ்வொருவரும் தன்னை தானே மாற்றினால் கட்டாயம் மாறும் நம் பாரதம்..


முடியாது என்பது முடியாது..!!



யாராலும் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது..!!



பன்றிகள் வானத்தை அண்ணாந்து பார்க்க முடியாது..!!



பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது..!!



முதலைக்களுக்கு நாக்கை வெளியே நீட்ட முடியாது..!!



பறந்தாலும், நின்றாலும்,அமர்ந்தாலும் தட்டான் பூச்சிகளால் இறக்கையை மடக்க முடியாது..!!





முதலை.திமிங்கலம் போன்றவற்றுக்கு மீன்களைப் போல நீருக்குள் மூச்சுவிட முடியாது..!!



கிவி பறவையால் 2 அடி கூட பறக்க முடியாது..!!


பெயர் வந்தது எப்படி..??




எட்வர்டு எலியட்ஸ்   என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியின்  போது சென்னையில் நீதிபதியாக இருந்தவர்,அவருடைய பெயர் தான் எலியட்ஸ் சாலைக்கு சூட்டப்பட்டது..



உஸ்மான் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னரின் ஆலோசகராக இருந்தவர்.அவர் இருந்த தெருவின் பெயர் தான் உஸ்மான் சாலை..



ஹென்றி சேமியர்ஸ்  என்பவர்  மெட்ராஸ் கிளப்பை நிறுவினார்.எனவே தான் அடையாற்றின் கரையில் இருக்கும் இந்தக் கிளப்பை நோக்கிச் செல்லும்  சாலைக்கு சேமியர்ஸ்  சாலை எனப் பெயர் பெற்றது.



பாந்தியன் என்ற பெயரில்  ஒரு தேவாலயம் எழும்பூரில் உள்ளது.அதனால் தான் அந்த சாலைக்கு பாந்தியன் சாலை எனப் பெயர் சூட்டப்படது..



இமம் என்ற சொல்லுக்கு பனி என்று பொருள்.இம்மலைகள் எப்பொழுதும் பனி சூழ்ந்து இருப்பதால் இதனை இமயமலை என்று அழைக்கப்பட்டது.

 சர் ஜார்ஜ் எவரெஸ்ட்  என்பரின் தலைமையில் இந்திய சர்வே குழு அச்சிகரத்தின் உயரத்தைக் கணக்கிட்டனர்.எனவே தான் அச்சிகரம் எவரெஸ்ட் என்று அழைக்கப்பட்டது..  

தமிழ் வளர்த்த அறிஞர்கள்...

தமிழ் வளர்த்த அறிஞர்கள 

அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ள 

இளமைக் காலம் முதலாகவே, திருக்குறளை மிகுந்த வேட்கையோடும், நிறைந்த ஈடுபாட்டோடும் பயின்று வந்த சேதுப்பிள்ளை (1896 - 1961), 'இல்லை உலகில் இது போலொரு நூல்' என வியந்தார். அதன் வெளிப்பாடே 'திருவள்ளுவர் நூல் நயம்' எனும் திருநூலை உருவாக்கம் செய்து, தமிழின் பெருமையை எடுத்துரைப்பதாகியது. அறிஞர் சேதுப்பிள்ளை தமிழில் படைத்தளித்த உரைநடை நூல்கள் பதினேழு. அவற்றிற்குள்ளே சேதுப்பிள்ளையின் புகழைப் பெரிதும் ஓங்கச் செய்த 'தமிழகம் - ஊரும் பேரும்' என்ற ஆய்வுப் பெருநூல், செந்தமிழுக்குச் சிறந்த சொத்தானது. சேதுப்பிள்ளையின் செந்தமிழ்த் திறமறிந்த பேரறிஞர் கா.சு.பிள்ளை, இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பணியாற்ற உதவினார். 


  பண்டிதர் அருணகிரிநாதர்
 எழுத்தாற்றலும், கற்பனையாற்றலும் மிகுந்த நாவல் ஆசிரியராக திகழ்ந்த அருணகிரிநாதர் (1895 - 1974) எழுதிய 'குமுதரஞ்சனி',' அமிர்தசாகரன்',' அமிர்த குமாரி','சற்குணவல்லி','பத்மாசனி','திருக்கழுக்குன்றத்துக் கொலை' ஆகிய நாவல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழாசிரியர் பொறுப்பையே விட்டுவிட்டு புதினங்களைப் படைப்பதில் நாளும் ஈடுபட்டார் இவர். வரலாற்று நூல்கள் படைப்பதிலும் சாதனை படைத்தார் அருணகிரிநாதர். 'புத்தர்', 'அசோகர்', 'அயல்நாட்டுப் பெரியோர்', 'சேம்ஸ் கார்ல்பீல்டு', ' வில்லியம் மில்லர்' ஆகிய நூல்கள் பெரும் புகழ் பெற்றவை. இவருடைய கவியாற்றலை 'வடபழநியாண்டவர் அந்தாதி' தமிழுலகிற்கு தெளிவுபடுத்தியது.
 ந.சி.கந்தையாபிள்ளை
இலங்கையில் கந்தரோடை என்னுமிடத்தில் நன்னியர் சின்னத் தம்பியின் புதல்வராகப் பிறந்தார் அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை (1893 - 1967). பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப் பரணி, பரிபாடல், கலித்தொகை முதலிய சங்கநூல்கள் பலவற்றை வசன நடையில் எழுதிய இவர் இலங்கைத் தமிழறிஞராவார். 'தமிழ் ஆராய்ச்சி', 'தமிழ் விளக்கம்', 'முச்சங்கம்', ' நமதுநாடு', 'திராவிடம் என்றால் என்னஉ', 'நமது நாடு', ' தமிழர் சமயம் எது?', முதலிய ஆராய்ச்சி நூல்கள் அப்பெருந்தகையின் அறிவூட்டத்தையும், ஆய்வு நாட்டத்தையும் தெளிவுபடுத்தின. 'அறிவுரைக்கோவை',' அறிவுரை மாலை', 'பொருளுரைக் கொத்து' ஆகிய நூல்கள் இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தன.
அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை
சங்க இலக்கியங்கள் பலவற்றுக்கு தெளிவான உரை எழுதி தமிழக மக்களால் நினைக்கப்படுபவர் துரைசாமிப் பிள்ளை (1903-1981). துரைசாமிப் பிள்ளை அவர்கள் கம்பீரமான தோற்றமும், கணீரென்ற குரல் வளமும் கொண்டவர். சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். தமிழ்ப்பற்றும், சைவப்பற்றும் இவருடைய இரு கண்களாகத் திகழ்ந்தன. தமிழ்த் தாமரை, சைவத் திறவு, கோமகள் கண்ணகி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் இயற்றிய 'சைவ இலக்கிய வரலாறு' என்னும் நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகமே வெளியிட்டுள்ளது. இவருடைய உரைப்பணியையும், சைவப்பற்றையும் கண்ட, தமிழறிஞர்கள் இவரை 'உரை வேந்தர்' என்றும், 'சித்தாந்த கலாநிதி' என்றும் அழைத்தனர்.
ஞா.தேவநேயப் பாவாணர்
தமிழன்னையின் கண்களில் வழிந்த அவலக் கண்ணீரை தமது எழுத்து வன்மையாலும், வலுவான இலக்கியச் சசான்றுகளாலும் துடைத்தெறிந்தவர் தமிழ்ப் பெரியவர் தேவநேயப் பாவாணர் (1902-1981). தொல்காப்பியம் எழுத்ததிகாரம் குறிப்புரை, தொல்காப்பியம் செசால்லதிகாரம் குறிப்புரை, ஒப்பியன்மொழி நூல், பழத்தமிழாட்சி, தமிழ் இலக்கிய வரலாறு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். சேசலம் தமிழ்ப்பேரவை 1955ம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில், பாவாணரின் அருந்தமிழ்த் தொண்டைப் பாராட்டி 'திராவிட மொழி நூல் ஞாயிறு' என்னும் பட்டமும், வெள்ளித் தட்டமும் வழங்கிப் பாராட்டியது. மேலும் தமிழக அரசு இவருக்கு, 1979ம் ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் 'செசந்தமிழ்ச் செசல்வர்' என்னும் பட்டம் வழங்கி பாராட்டியது.
அண்ணாமலை செட்டியார்
சிவ பக்தியையும், தமிழ்ப்பணியையும் தமது இரு கண்களாகக் கருதியவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் (1881-1948). தனியொருவராய் நின்று இயல் தமிழ் வளர்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும், இசைத் தமிழ் வளர்ச்சிக்காகப் தமிழிசைச் சங்கமும் கண்ட பெருமைக்குரியவர். இவரின் வாழ்வு நகமும், சதையும் போலத் தமிழோடு பின்னிப் பிணைந்தது. பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர், தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென விரும்பினார். ஏற்கனவே தமிழகத்தில் இருந்த சென்னைப் பல்கலையில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம், தர வேண்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை 1929ம் ஆண்டு நிறுவினார். முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் அண்ணாமலை செட்டியாரின் காலத்தில் மிகவும் நலிவுற்றிருந்தது. இதனை கருத்தில் கொண்டு 1943ம் ஆண்டு 'தமிழிசைச் சங்கம்' என்னும் அமைப்பினை உருவாக்கினார். இதற்கு தலைவராகவும் இவரே விளங்கினார். அண்ணாமலை செட்டியாரின் கொடை வன்மையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு 'சர்' என்னும் பட்டத்தை வழங்கி
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
'தமிழத்தாத்தா' உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியராகத் திகழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876). இளமையிலேயே தமிழார்வம் கொண்டு, தமிழை கற்றுத் தெளிய எதையும் செய்யலாம் என்ற ஆவலுடன் இவர் விளங்கினார். தலபுராணங்கள் பாடுவதில் வல்லவரான இவர், கோவை, பிள்ளைத்தமிழ், அந்தாதி போன்ற சிற்றிலக்கியங்கள் பாடுவதில் பெரும்புகழ் பெற்று விளங்கினார். நினைத்த அளவிலேயே விரைந்து கவிபாடும் திறமை மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தனிச் சிறப்பு. இவரது புலமையை கண்டு வியந்த திருவாவடுதுறை ஆதீன மடம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு 'மகா வித்துவான்' என்னும் பட்டமளித்து சிறப்பித்தது.
  தண்டபாணி தேசிகர்
பத்மபூஷண் விருது பெற்ற முதல் தமிழ் அறிஞர் தண்டபாணி தேசிகர் (1903-1990). உ.வே.சாமிநாத அய்யரிடம் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியவர்.திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் இவர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய போது, தற்போது முதல்வராக உள்ள கருணாநிதி இவரது மாணவர். தண்டபாணி தேசிகர் மறைவின் போது, கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'தாய்ப்பால் தந்த அஞ்சுகம் அன்னையைப் போல், தமிழ்ப்பால் தந்த பேராசன்' என்று குறிப்பிட்டிருந்தார். குன்றக்குடி அடிகளாரும் தண்டபாணி தேசிகரின் மாணவர் தான். திருக்குறளில் இவருக்கு இருந்த புலமையால் தமிழக அரசு இவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கிப் பாராட்டியது.
  பா.வே.மாணிக்க நாயக்கர்
பொறியியல் தமிழ் அறிஞர் என்று மாணிக்க நாயக்கரை (1871-1931) குறிப்பிடலாம். 'தமிழ் தொல்பெருந் தனிமொழி. இவ்வுலகிலேயே தன்னிகரற்றுத் தனித்தியங்கும் பண்டைமொழி. ஹா, ஹீ என்று மூச்சைசப் பறிக்காமல் மூச்சுச் செசட்டுடன் இயங்குவது தமிழ் ஒன்றே. வலிய எழுத்தொலிகளால் மூச்சு வீணாகிறது. பிற செசால் கலப்பால் தமிழின் தூய்மை கெடுகிறது' என்று கூறியவர். இவர் இயற்றிய தமிழ் ஒலியிலக்கணம் எனும் நூல் ஆங்கிலத்திலும் வெளியானது. மரநூல் எனும் தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் அறிவியல் தமிழுக்கு இவரது மிக முக்கிய கொடையாகும்.
  மயிலை சீனி வேங்டசாமி
தமிழ் மொழியில் மறந்ததும், மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவு கடந்து உள்ளன. அத்தகைய சீரிய செய்திகளை வெளிக்கொணர்ந்து, வீசிய உணர்வுடன் வெளியிட்ட வித்தகப் பெரும் புலவர், அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி (1900-1980) ஆவார். ஐந்திலக்கணங்களில் ஒன்றான யாப்பைப் பற்றி 'யாப்பருங்கல விருத்தி' என்னும் நூலை படித்தார் சீனி வேங்கடசாமி அவர்கள். இந்த நூலின் உரையாசிரியர், தமது உரை விளக்கத்தில், பல்வேறு நூல்களிலிருந்து சில செய்யுள்களை எடுத்துக் காட்டுகளாக இயம்பியிருந்தார். அப்படி எடுத்துக்காட்டுகளாக கூறிய நூல்கள், தற்போது எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மறைந்து போன, பேணிக் காக்கப்படாத அந்நூல்களைச் சற்றே எண்ணிப் பார்த்து, மனம் கலங்கினார் அறிஞர் சீனி. வேங்கடசாமி. 'அட்டா! எத்தனை, எத்தனை நூல்களைத் தமிழன்னை இழந்து விட்டாள்?' என நெகிழ்ந்து நெடுமூச்சு விட்டார் அப்பெரும் புலவர். இத்தகைய நூல்களின் பெயர்களை தொகுத்து வெளியிட நினைத்து, அதனை செயல்படுத்தினார் சீனி. வேங்கடசாமி.
'மறைந்து போன தமிழ் நூல்கள்' என மகுடமிட்டு, ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர்,' களப்பிரர் காலத் தமிழகம்' என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார். இவை தவிர, 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' என்றோர் அரிய நூலை எழுதி வெளியிட்ட அப்பேராசானே, முதன் முதலில் அழகுக் கலைகள் பற்றித் தமிழில் எழுதிய பெருமை பெற்றார். 'கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், மூன்றாம் நந்தி வர்மன் முதலிய நூல்கள் அறிஞர் சீனி வேங்கடசாமி வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். இவர் தமிழின் வரலாற்றில், தனி ஓர் அத்தியாயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அம்மா

அம்மா






அ – உயிர்

ம் – மெய்

மா – உயிர் மெய்

அம்மா என்ற சொல்லுக்கு இத்தனை அழகான பொருள் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை.உலகிலேயே மிக அழகான சொல் என்றால் அம்மாதான்! எந்த உயிரை எடுத்துக் கொண்டாலும் தன்னலமற்ற ஒரு உறவு என்றால் அம்மாதான். இதை நன்கு அறிந்த ஒரு அறிஞன்,

தெய்வம் பூமிக்கு வருவதில்லை

தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்.

என்று கூறினார். தன்னலமான பிள்ளைகளைப் பார்த்திருப்போம். ஆனால் தன்னலமான அன்னையை எங்கும் பார்த்திருக்கமாட்டோம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் – திருமூலர்

நான் பெற்ற துன்பம் என்னோடு போகட்டும் – அம்மா

தனக்காக வாழாமல் தன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணிப்பவள் தான் அன்னை என்னும் அன்புள்ளம் கொண்டவள். பணத்திற்காக வெளியூர் சென்று பணிபுரியும் மகனைப் பெற்ற தாய் கண்ணீர் மல்க எழுதிய கவிதையை ஒரு நூலில் படித்தேன். அக்கவிதை,

மகனே…

நீ பிறந்த அன்று

தோட்டத்தில் வைத்தோம்

ஒரு தென்னங்கன்று

எங்கள் வியர்வையில்

நீ உயர்ந்தாய்

நாங்கள் வார்த்த தண்ணீரில்

தென்னை வளர்ந்தது

எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்

உனக்கு இன்பம் தருகிறது

இங்கே இருக்கும் தென்னை மரம்

எங்கள் இருவருக்கும்

சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது

ஒருநாள்……

நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது

எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்

இறுதிப் பயணத்தில்

நீ இல்லாமற் போனாலும்

தென்னை ஓலை

எங்கள் கடைசி மஞ்சமாகும்!

ஒரு அன்னையின் தவிப்பை அழகாக கூறுகிறது இக்கவிதை. ஆயிரம் பேர் நம்மிடம் அன்புகாட்டினாலும் அன்னைப் போல வருமா? பிள்ளை தன்னுடைய அன்பைப் பிரதிபலிக்காவிடினும், தாய் அதைப் பொருட்படுத்தமாட்டாள். தாயையோ தாயன்பையோ அலட்சியப்படுத்தாதீர்கள். தாயின் மனதை புண்படுத்தாதீர்கள். தாய் பாசத்தின் வேர்களினால்தான் பாரதத்தின் பண்பாட்டு மரம் பூத்துக் குலுங்குகிறது. அந்த வேர்களை யாரும் வெட்டிவிடாதீர்கள்.   


சனி, 9 ஜனவரி, 2016

சிந்தனை மன்றம்

08.1.16 அன்று நடைபெற்ற சிந்தனை மன்றத்தில் மாணவிகள் கவிதை, பாடல், பொது அறிவுச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனா்.



அறிவுக் களம்

வணக்கம் அம்மா,

7.1.16 வியாழன் அன்று நடைபெற்ற அறிவுக்களம் நிகழ்வில் இயற்பியல் துறைப் பேராசிரியை  கே.வனிதா அவா்கள் அடிப்படை அறிவியல் என்ற தலைப்பில் உரையாற்றினாா்.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

இயற்கை ..!!


இயற்கை..!!!

இறைவனின் படைப்பிலே

இயற்கையும்

ஓர் அற்புதப் படைப்புதான்..!!!

பூமியை அழகுபடுத்தும் ஓர்

அற்புத சாதனம் இயற்கை..!!

கோடையின் கொந்தளிப்பும்

குளிரின் நடுக்கமும்

கொண்டது இயற்கை..!!

மழைக்காலத்தில் செழுமையும்

கோடைக்காலத்தில் வறட்சியும்

மாறி மாறி கட்டித்தழுவும்

ஓர் அற்புத நிகழ்வு இயற்கை..!!

வானிற்கே வர்ணமிடும் வானவில்;

இரவிற்கு கோலமிடும் நட்சத்திரம்;

இருட்டிற்கு வெள்ளையடிக்கும் நிலா;



பசுமைக்கு உயிரிடும் மரங்கள்;எனப்

பல புதுமைகள் கொண்டது இயற்கை..!!

மனித வாழ்க்கையின் நம்பிக்கை இயற்கை..!!

இயற்கை வளம்காத்து

இறைவனடி சேர்வோம்..!!!

மனிதனே..!!!


மனிதனே..!!


மனிதனாய் இருக்கத் தெரிந்து கொள்

மரியாதை கிடைக்கும்..!!

தோழனாய் இருக்கத் தெரிந்து கொள்

நட்பு கிடைக்கும்..!!

ஒற்றுமையாய் இருக்கத் தெரிந்து கொள்

ஒருமைப்பாடு கிடைக்கும்..!!

பாசமாய் பழகத் தெரிந்து கொள்

பாராட்டுக் கிடைக்கும்..!!

பொறுமையாய் இருக்கத் தெரிந்துகொள்

பெருமை கிடைக்கும்..!!

பகைவனை மன்னிக்கத் தெரிந்துகொள்

புகழ் கிடைக்கும்..!!

இறைவனை வணங்கத் தெரிந்துகொள்

அருள் கிடைக்கும்..!!

நம்பிக்கையாய் உழைக்கத் தெரிந்துகொள்

நினைத்தது கிடைக்கும்..!!


முயற்சியின் இலக்கு..!!


முயற்சியின் இலக்கு..!!


உங்களால் பறக்க முடியவில்லையா..??ஓடுங்கள்..

உங்களால் ஓட முடியவில்லையா..??நடங்கள்..

உங்களால் நடக்க முடியவில்லையா..??தவழுங்கள்..

ஆனால் எதையும் செய்தாலும் உங்கள்

இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள்..!!!

முயற்சி செய்  இலக்கை அடையலாம்..!!

முயற்சிக்கானப் பயிற்சியைச் செய்

வெற்றி நிச்சயம்..!!