புதன், 8 ஜூன், 2016

தி போர்ட்ரேயிட் ஆப் லேடி

                                          
     
                                            தி போர்ட்ரேயிட் ஆப் லேடி
                                          ---குஷ்வன்ட் சிங்
இக்கட்டுரையில் குஷ்வன்ட் சிங் தனது பாட்டியுடன் தனக்கு கிடைத்த அனுபவத்தை இதில் பகிர்ந்துள்ளார்.இதில் கட்டுகோப்பான, நடுத்தரமான ஒரு பெண் அவரது பேரன் பிரிவுக்கு பின் மரக்குருவிகளுடன் ஏற்பட்டபினைப்பை அழகாக கூறியிருப்பார்.அந்த சுருக்கங்கள் நிறைந்த பாட்டி முகம் ஒரு காலத்தில் அழகு பொலிவுடன் காணப்பட்டது என்பதனை இளம் சிறுவனாக சிங்கால் ஏற்க இயலவில்லை.அதனை கட்ட்டுக்கதை என்று நினைத்தார்.குஷ்வன்ட் சிங் தனது குழந்தை பருவத்தை பாட்டியுடன்  செலவிட்டார்.
            அவரது பெற்றோற்கள் குஷ்வன்டை கிராமத்தில் தன் பாட்டியிடம் ஒப்படைத்து அவர்கள் வேலைக்காக நகரத்திற்கு சென்றனர்.பாட்டி சிங் பள்ளிக்கு புரப்படுவதற்கு உதவி செய்வார் அத்துடன் பஜனையும் சத்தத்துடன் பாடுவார்,தனது பேரனுக்கு அந்த கீர்தனங்கள் மனப்பாடம் ஆகும் என்ற நம்பிக்கையில்.தினமும் காலை சில சப்பாத்திகளை செய்து மதிய உணவிர்கும் கொடுத்தும் மேலும் சில சப்பாத்திகளை தன்னுடன் கொண்டு செல்வார்.பள்ளி தனது கேவிலுக்கு கோவிலில் பஜனைக்கு அமர்ந்திருப்பார். பள்ளி முடிந்து திருப்பும் வழியில் தெரு நாய்களுக்கு தான் எடுத்து வந்த சப்பாதிகளை கொடுப்பார்.இந்த நெருக்கம் அனைத்தும் அவர்கள் இருவரும் நெருக்கம் அனைத்தும் அவர்கள் இருவரும் பெற்றோர் வசிக்கும் நகரத்திற்கு சென்றவுடன் குறைந்தது.இப்பொழுது குஷ்வன்டும் ஒரு ஆங்கில பள்ளியில் சேர்தினர் தினமும் பள்ளிக்கு  பேருந்து வந்து அழைத்துச் செல்லும்.
            அங்கு சப்பாதி போட நாய்கள் எதுவும் இல்லாததால் குருவிகளுக்கு ஊட்டி அதுகளிடம் நேரம் செலவிட ஆரம்பைத்தார்.குஷ்வன்ட் அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்றார்.பாட்டிக்கு இது சங்கடத்தை அளிக்கிறது பள்ளியில் தெய்வத்தை பற்றி தன் பேரனுக்கு போதிக்கவில்லையே என்று யேசிக்கிறார்.பின்னர் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றார்.ரயில் திலையத்திற்கு பாட்டி எந்த வித சலந்த்தை தெரிவிக்காமல் தலையில் ஒரு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.ஐந்த வருடங்களுக்கு பிறகு திரிம்பி வந்தபோது பாட்டி பேரனது வருகையால் சந்தோசமானாலும் குறுவிகளையே தன் துனையாக கொண்டார்.

            அந்த குருவிகள் பாட்டியின் தோல்கள்,கைகளில் அமர்ந்திருக்கும்.சாய்ங்கால நேரத்தில் அருகில் இருக்கும் பெண்களை சேத்தி இசைக் கருவிகளைக் கொண்டு பாடல் பாடினார்.இதுவரை இதுபோல பாட்டி நடந்து கொண்டதே இல்லை.அடுக்க நாள் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது,பாட்டி இயற்கை எய்தினார்.பின்னர்,அந்த இடத்தில் ஆயிரக்கனக்கான குறுவிகள் அந்த இடத்தில் குவிந்தன.ரொட்டித் துண்டுகளையும் பொருட்படுத்தாமல் அமைதியாக அமர்ந்தது.சடலத்தை எடுத்த பின் அவை பறந்து சென்றன.

டைட் கார்னர்ஸ்

                                                            

ஆன் கேட்டிங் ஆப் டு ஸ்லீப்

                                  
                   
                ஆன் கேட்டிங் ஆப் டு ஸ்லீப்
                                                --ஜெ.பி.பிரிஸட்லி

இந்த நகைச்சுவை கட்டுரையில் பிரிஸ்ட்லி``இன்சோமானியா``என்று சொல்லப்படும் தூக்கமின்னை நோயிலிருந்து எப்படி மீன்டார் என்று கூறியிருப்பார்.பிரிஸ்ட்லீக்கு தூக்கம் அவர் அமர்ந்து எழுத நினைக்கும் போது அவருக்கு உறக்கம் ஏற்படுகிறது ஆனால்,இரவில் தூக்கமின்மையால் வருந்துகிறார்.இந்த நோயிலிருந்து விடுபட இயலவில்லை.இவர் தாள்,மை போன்றவற்றை படைப்புகளை உருவாக்கியிருப்பார்.
            பிரிஸ்ட்லி க்ரோம்வேல் மற்றும் நெப்போலியன் போன்ற உன்னத மனிதர்களை பற்றி சிந்தித்துப் பார்கிறார்.அவர்கள் இரவில் படுத்த உடன் உறங்கி விடுகின்றனர் என்று வியக்கிறார்.அவர்களைப்போல படுத்தவுடன் உறங்க இரவில் பல மணிநேரம் முயற்சிக்கிறார். ஆனால்,பிரிஸ்ட்லியால் இயலவில்லை அவர்களிடம் ஏதோ விசித்திரமாக, விலங்குபோன்று தெரிகிறதாம்.நாம் கடந்து வந்தஅந்த நாளை பற்றி சிறிதும் சிந்தித்து பாராமல் படுத்த உடன் உறங்கும் அந்த மனிதர்களின்மீது பிரிஸ்ட்லி கேள்வி எழுப்புகிறார்.

            இவர்களை போன்ற மனிதர்களிடம் தன் உறங்கும் அறையை பகிர முடியாது என்கிறார்.அவர்கள் மற்றவர்களுக்கு பேசவோ அவர்கள் எண்ணங்களை பகிரவோ வாய்ப்பளிக்கமாட்டார்கள்.அவரது தூக்கமின்னை சிக்கலிருந்து வெளிவர நிறைய கருத்துகள் அவருக்கு கூறப்பட்டன.அவருடன் வெட்ஸ்வெர்தின் கவிரைகளை படிப்பது, தாவும் ஆடுகளை எண்ணுவது
போன்ற பலவற்றை அவர் நண்பர்கள் இன்சோமானியாவிலிருந்து வெளிவர கூறினர்.ஆனால் எதுவுமள அவருக்கு கை கொடுக்க வில்லை.இறுதியாக இரவில் அனைவரும் போல தூங்குவதற்கு ஒரு வழியைக்கண்டார்.அது அவர் தன் கனவில் வெறுப்பூட்டும்(boring)ஒரு மனிதரிடம் பேசிக்கொள்வது போல கற்பனை செய்வதே அந்த தீர்வு.

செவ்வாய், 7 ஜூன், 2016

எனது ஐயங்களுடன் தி.தமிழ் இளங்கோ ஐயா...!!

அன்புடையீருக்கு வணக்கம்,

திருபாய் அம்பானி

                                             
Image result for திருபாய் அம்பானி

இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் கவனத்தைக் கவரும் இந்தியாவின் கோடீஸ்வரர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி ஆகியாரின் தந்தை திருபாய் அம்பானி ஆவார்.
     சினிமாவில் ஆரம்பத்தில் ஏழையாக தோன்றும் கதாநாயகன், படம் முடிவதற்குள் திடீரென்று மிகப்பெரிய பணக்காரனாகி பார்ப்பவர்களுக்கு அதிசியத்தைத் தருவது போல அமைந்தது திருபாய் அம்பானியின் வாழ்க்கை.
‘இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த மனிதர்’ என்று பல தொழிற்நுட்பக் கழகங்களாலும் பாராட்டப்பட்டவர். ‘ இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமாக செல்வத்தை சேர்த்த மனிதர் ’ என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
செய்யும் தொழிலில் விடாமுயற்சியுடனும் நம்பக்கையுடனும் முழுமையாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்று நம்பியவர்.
இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் பணிபுரிய தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி, உற்சாகப்படுத்தினால் அதன் விளைவு கணக்கில் அடங்காதது என்று நினைத்ததே அவரது தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் காரணமாகும்.
இன்றைய தினத்தில் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரிலையன்ஸ் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களில் தங்களின் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்.
சாதாரண மக்களும் பங்கு சந்தையில் ஈடுபட்டு அதிக லாபம் சம்பாதிக்கலாம். தங்கள் வாழ்க்கை வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்னும் ஆர்வத்தை தூண்டியது ரிலையன்ஸ் என்று கூறினால் அது மிகையல்ல.
தற்சமயம் குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜீனகத் என்னும் நகரத்தில் 1932 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். இளமையிலேயே பணம் சம்பாதிப்பதில் அதிக நாட்டத்துடன் காணப்பட்டார். விடுமுறை நாட்களில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வரும் இடங்களுக்குச் சென்று உணவுப் பண்டங்களை விற்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
படித்தது பள்ளி இறுதி வகுப்பு வரை தான். தனது பதினாறாவாது வயதில் ஓமன் நாட்டில் உள்ள ஓடன் என்னும் இடத்திற்குச் சென்று அங்குள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்தார். தன்னுடைய திறமையால் அந்த நிறுவனத்தில் முக்கிய பதவியை வகித்தார்.
அவர் வேலையில் இருந்தாலும் அவருடைய எண்ணமெல்லாம் ஒரு தொழிலதிபராக ஆக வேண்டும் என்பதிலேயே இருந்தது.
இந்தியா திரும்பிய அவர் 1962 ஆம் ஆண்டில் ‘ ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் ’ என்னும் நிறுவனத்தை தனது உறவினரான சம்பக்லால் தமானி என்பவருடன் சேர்ந்து வெறும் 15000 ரூபாய் ( ஆம் வெரும் பதினைந்தாயிரம் ரூபாய்த்தான் அந்த எண்ணோடு லட்சங்களோ கோடிகளோ இல்லை ) முதலீட்டுடன் தொடங்கினார்.
அப்போது அவருக்கு வயது முப்பது தான். அந்த நிறுவனம் 350 சதுர அடி அளவே உள்ள ஒரு அறையைல் ஒரே ஒரு தொலைபேசி, ஒரு மேஜை, மூன்று நாற்காலிகளுடனும் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டு உதவியாளர்கள் அவர்களுடன் சேர்ந்து பணி புரிந்தனர்.
அந்த காலகட்டத்தில் அம்பானியின் குடும்பம் ஒரே ஒரு படுக்கையறையுள்ள ஒரு இடத்தில் வசித்து வந்தது. இன்று அம்பானி குடும்பத்தின் வளர்ச்சி எல்லாரும் அறிந்ததே.
இதற்கு எல்லாம் வழிகாட்டியவர் திருபாய் அம்பானி என்பதும் அவர் முதல்முதலில் சொந்தமாக தொழில் புரியத் தொடங்கியபோது அவருக்கு வயது முப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.

                           (படித்ததில் பிடித்தது)

ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்

                                                       
     Image result for ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்


அமெரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடியவர். அமெரிக்காவில் அந்த காலக்கட்டத்தில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் கருப்பர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு பள்ளிகளில் தனி இடம், ஓட்டல்களில் தனி இடம், பேருந்துகளில் கூட தனி இடம் தான்.
இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் பிறந்த மார்ட்டின் லூதர் கிங், இத்தகைய வேறுபாடுகள் நியாமானது அல்ல இவற்றிற்கு முடிவு காண வேண்டும் என்று தீவிரமாக சிந்தித்து செயல்பட்டு வந்தார்.
மகாத்மா காந்தி காட்டிய வழியில் சாத்வீகமான போராட்டங்கள் நடத்தினார். மக்களின் ஆதரவைத் திரட்டி கூட்டங்கள் நடத்துவது, பத்திரிக்கைகள் மற்றும் இதர ஊடகங்களின் ஆதரவைத் திரட்டுவது, அநீதிக்கு எதிராக போராடுவது இது போன்ற வழிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தினார்.
அவரது வரவேற்பு அறையில் மகாத்மா காந்தியின் படம் இருந்தது. 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் இவர்கள் இனத்தை சார்ந்த ரோஸாபார்க்ஸ் என்னும் பெண்மணி, ஒரு வெள்ளையனுக்கு பேருந்தில் தான் உட்காந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து இடம் தர மறுத்தது பெரிய போராட்டத்தை உருவாக்கியது. மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் போராட்டம் நடந்தது.
1956 ஆம் வருடம் இது மாதிரி வித்தியாசம் பாராட்டுவதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கக் கூடாது என்று நீதி மன்றம் தீர்ப்புக் கூறியது.
1963 ஆம் ஆண்டில் வேறு பல துறைகளிலும் வெள்ளையர்களுடன் சம உரிமை வேண்டும் என்று போராடுவதற்கு, வாஷிங்டனில் உள்ள லிங்கன் மெமோரியல் ஹால் எதிரே 2,50,000 பேர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். “ நான் ஒரு கனவு காண்கிறேன் ” என்று தொடங்கும் இவரது உரை உலக புகழ் பெற்றது.
     வாஷிங்டன் சரித்திரத்திலேயே ஒரு போராட்டத்திற்காக அவ்வளவு பேர் கூடியது அந்த சம்பவத்தில் தான். இன்று அமெரிக்காவில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் சம உரிமைகளைப் பெறுவதற்கு மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் சாத்வீகமான போராட்டங்கள் பெரிதும் உதவின.
     இவரது சேவையை பாராட்டி இவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 1964 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 35 தான். நோபல் பரிசு வாங்கியவர்களிலேயே அத்தகைய காலக்கட்டத்தில் மிகவும் வயது குறைந்தவர் இவர் தான்.
     1968 ஜனவரி மூன்றாம் நாள் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவு நாள் அன்று அமெரிக்காவில் தேசிய விடுமுறை நாளாக நடைமுறையில் உள்ளது.

                                ( படித்ததில் பிடித்தது )

திங்கள், 6 ஜூன், 2016

நாம் எல்லோரும் மே டின் இந்தியாவா?


Image result for made in india logo

நாம் தினமும் உபயோகப்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுத் தயாரிப்புக்களாகவே உள்ளன. அதை நாம் பெரிதும் கண்டுக்கொள்வதில்லை. உதாரணமாக இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளையும் பார்ப்போம்.
சோப்பு;
லக்ஸ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
டவ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
பியர்ஸ் – இங்கிலாந்த்
டெட்டால் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
லைபாய் – அமெரிக்கா
கைபேசி;
சாம்சங் – தென் கொரியா
நோக்கியா – பின்லாந்த்
மைக்ரோ சாப்ட் – அமெரிக்கா
பிலாக் பெரி – ஹங்கேரி
சோனி – ஜப்பான்
மடி கணினி;
ஹச்பி – ஐக்கிய இராஞ்சியம் (UK)
டெல் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
ஆப்பிள் – கலிபோர்னியா
வையோ – ஜப்பான்
லெனோவா – சீனா
தொலைக்காட்சி;
சோனி – ஜப்பான்
எல்ஜி – தென் கொரியா
பிலிப்ஸ் – நெதர்லாந்த்
ஹிடாச்சி – ஜப்பான்
சாம்ப்;
சன் சில்க் – ஐக்கிய இராஞ்சியம் (UK)
பேண்டீன் – சுஜர்லாந்து
ஹெட் அண்ட் சோல்ஜர்ஸ் – அமெரிக்கா
இப்படி நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் வெளிநாட்டின் தயாரிப்புகளாகவே உள்ளன. ஆனால் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நாட்டின் தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. உதாரணமாக சீன மக்கள் சீன நாட்டின் தயாரிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றன. அது போல ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியது நமது கடமை. ஆனால் அவ்வாறு நாம் செய்வது இல்லை. இந்தியாவின் தயாரிப்புகளுக்கு இந்தியாவிலேயே முக்கியத்துவம் இல்லாத போது உலக அளவில் எவ்வாறு முக்கியத்துவம் பெறும்.
நாம் ஒரு பொருளை வாங்கும் போது அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று பார்ப்பதே இல்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். இனிமேலாவது இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்போம்.