புதன், 2 மார்ச், 2016

வியக்க வைக்கும் எறும்புகள்

           வியக்க வைக்கும் எறும்புகள்


முன்னுரை

எறும்புகள் வரிசையாக போவதைப் பார்த்து நாம் வியப்படைந்ததுண்டு. நாம் அதை சில நேரங்களில் கலைத்துவிட்டு மகிழ்ச்சி அடைவதுண்டு. எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை குலையாமால் போவதிற்கு  காரணம் வாசனைதான். 
வாசனையால் பின் தொடரும் எறும்பு
முன்னாள் போகும் எறும்பு ஒருவித வாசனையை தரையில் அல்லது சுவரில் விட்டுச் செல்கிறது. பின்னால் வரும் எறும்புகள் அந்த வாசனையை முகர்ந்து கொண்டு ஒரே வரிசையாக செல்கின்றன. எறும்புகள் வரிசையாக செல்வதை  நீங்கள் பார்த்தால் அவற்றின் பாதையில் ஒரு இடைவெளி கிடைத்தால் அந்த இடத்தை தேய்த்து விட்டால், அப்போது அங்கு வரும் எறும்புகள் சற்று தடுமாறும். முன்னால் சென்ற எறும்பு விட்டுச் சென்ற அதற்கு வாசனை கிடைக்காமல் போவதுதான் இதற்கு காரணம். எறும்புகளுக்கு கண் உண்டு. ஆனாலும் வாசனையை வைத்துதான் வரிசையாக செல்கின்றன. 
ஒற்றுமையே பலம்
  ஒற்றுமையே பலம் சொன்னது நாம் தான். ஆனால் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றன. எறும்பைப் பார்த்தோம் என்றால் அது நமக்குப் புலப்படும்.அவற்றை போன்று ஒழுங்கான உயிரினத்தை பார்ப்பது கடினம். எல்லாமே மிகவும் சிநேகிதமாக இருக்கக்கூடியவை. எறும்புகள் தங்கள் கூட்டுக்குள் பூச்சிகளை கட்டிப்போட்டு வளர்கின்றன. சில எறும்புகள் மற்ற எறும்புகளின் கூட்டுக்குள் சென்று அங்கிருக்கும் எறும்புகளை கடத்தி வந்து அடிமைகளாக வைத்துக் கொள்கின்றன. 
ராணுவ அதிகாரிகள் வியப்பு
 எறும்புகளின் செயல்களைக் கண்டு ராணுவ அதிகாரிகளே வியப்பில் ஆழ்ந்ததுண்டு. இவ்வளவு சிறிய உயிரினத்துக்கு இந்த ஒற்றுமையை யார் சொல்லித் தந்தார் என்று நாமே வியப்பில் ஆழ்வதுண்டு.அவற்றிலும் ஆக்கிரமிப்பு உண்டு. நமக்கு படைகள் அதற்கு அதிகாரிகள் இருப்பது போன்று ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா எறும்பு வகைகள், ராணுவ அதிகாரிகள் வியக்கும்படி, தங்களது படைகளை படு எச்சரிக்கையுடன் நடத்திச் செல்கின்றன. அவைகளில் முன்னணிப்படை, பக்கவாட்டுப் படை, ஒற்றர்கள் எல்லாம் உண்டு. 
எறும்புகளின் ஆயுதம்

உடவை கச்சிதமாக அடுக்கி வைக்க சின்னக்குச்சி, இலை நுனி போன்றவற்றை ஆயுதமாக உபயோகிக்கும் எறும்புகளும் உண்டு. இவை எல்லாமே கூட்டமாக இருக்கும் போதுதான். தனி எறும்பு என்று பார்த்தால் ஒன்றுக்கும் பயன்படாத பூஜ்யம்தான். எறும்புகளில் ஆயிரம் வகைகள் உள்ளன. பாலைவனத்திலும் எறும்புகள் உண்டு. கடற்கரையில், மலைச்சாரலில் காட்டில் என்று எல்லா இடத்திலும் (எவரெஸ்ட் சிகரத்தைத் தவிர) இருக்கின்றன. 20 அடி உயரத்துக்கு புற்றுகள் கட்டும் எறும்புகளும் உண்டு.

நாலடியார்

         Image result for நாலடியார்

அறியாமையை நீக்கும் மருந்து;

        பாடல்:

            இம்மை பயக்குமால்; ஈயக் குறைவு இன்றால்;              
            தம்மை விளக்குமால்; தாம் உளராக் கேடு இன்றால்;
            எம்மை உலகத்தும் யாம் காணேம், கல்விபோல்
            மம்மர் அறுக்கும் மருந்து.

          பொருள்;

                 கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும் பிறர்க்குத் தருவதால் குறைவாகாது கற்றவர் புகழை எங்கும் பரவச் செய்யும்.நம் உயிர் உள்ளவரை கல்வி என்றுமே அழியாது. அதனால் இந்த உலகத்தில் கல்வியைப்போல அறியாமையைப் போக்கும் மருந்தையாம் கண்டதில்லை.


சிக்கனமும் சேமிப்பும்

Image result for சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல
     
      சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!

சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!
     
      ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!

ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!
     
      உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை

தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்
     
      சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்

நீ வாழ்க்கை என்னும் படியை

வெற்றியுடன் தாண்ட முடியும்!

சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ
     
     விரும்பிய படி கொண்டு செல்லலாம்!


சிக்கனமாய் இரு! சேமித்து பழகு!

முகடு

                                முகடு



முகடு என்பது ஒரு மையப்போக்கு அளவாகும். எந்த மதிப்பு அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அதுவே முகடு ஆகும்.
எடுத்துக்காட்டாக நாம் ஒரு  கடைக்கு  போனால் எந்த என்ன செய்வோம், எந்த பொருள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளதோ அதையே நாமும் வாங்குவோம். அது தான் முகடு எனப்படும்.
2 4 5 2 1 2 3 4 4 6 2
முகடு = 2
நீங்க கேட்கலாம் 4 அதிக அளவில் வந்துள்ளது அதுவும் முகடுதானே என்று. ஆனால் எந்த மதிப்பு அதிக எண்ணிக்கையில் திரும்ப வந்துள்ளதோ அது மட்டுமே முகடு. இரண்டாவது மதிப்பை நாம் முகடாக எடுத்துக்கொள்ளமாட்டோம்.

1. 22 25 21 22 29 25 34 37 30 22 29 25 முகடு காண்க?

சி.ஆர்.ராவ்








கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ் என்னும் இவா் புள்ளியல் நிபுணா் ஆவார்.  இவர் கா்நாடக மாநிலத்தில் பிறந்தார்.  ஆந்திராவிலுள்ள பல்வேறு நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்தார்.  பிறகு, விசாகப்பட்டினம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.  அதன் பிறகு ஆந்திர பல்கழை கழகத்தில் எம்.ஏ கணிதம் பட்டம் பெற்றார்.
     இவருக்கு சிறுவயதிலிருந்தே புள்ளியயலின் மீது ஆர்வம் அதிகம்.  அதன் காரணமாக “மதிப்பீட்டுத் தேற்றத்”தைக் (theory of estimation) கண்டுபிடித்தார்.  மதிப்பீட்டுத் தேற்றத்தின் மூலம் சேமித்து வைத்துள்ள ஏராளமான தகவல்களிலிருந்து, ஒரு குறிப்பிட்ட அளவு தகவல்களின் அளவுகளைக் கண்டறிய முடியும்.
     “கிரேம்ஸ் – ராவ் இனீக்குவாலிட்டி“, ஃபிஷர்-ராவ் தியரம், மற்றும் “ராவ்-பிளாக் வெலிசேஷன்” போன்ற ராவ் கண்டுபிடித்த சூத்திரங்களும், தேற்றங்களும் புள்ளியியல் பாடப் பிரிவில் பாடங்களாக அமைந்துள்ளன.
     புள்ளியியல் என்பது மனித விஞ்ஞானம் என்று ராவ் கருதினார்.  செங்கோண முக்கோணம் பற்றிய ராவின் ஆய்வுகள் பல தொழில் நிறுவனங்களில் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பயன்பட்டு வருகின்றன.
     இவரது கண்டுபிடிப்புகள் உயிரியலில் பல அளவுகளைக் கணக்கிட உதவுகின்றன.  உதாரணமாக பூ, இலை மற்றும் சிறு உயிரிகளின் நீள-அகலங்களையும் கணக்கிட உதவுகின்றன.
     மஹலானோபிஸ் என்னும் அறிஞர், ராவின் உயிரியல் அளவீடுகள், உயிரியல் அளவீட்டு அட்டவணைகள் போன்றவற்றை வியந்து கூறியுள்ளார்.
     சி.ஆர். ராவ் “சங்க்யா” என்னும் இந்திய புள்ளியியல் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
        குறிப்பு: படித்ததில் பிடித்தது
        நூல் :  உலக கணித மேதைகள்

அப்துல் கலாம்

               அன்புள்ள கலாமுக்கு

Image result for அப்துல் கலாம்

  கோடி மக்களில் ஒருத்தியாய் பல கோடி மனங்களின் பிரதிபலிப்பாய் நான் யார் எனக் கூட அறிந்திராத உனக்காக நான் எழுதும் சில வார்த்தைகள் இதோ`……..

        இந்த எழுத்துக்கள் யாவும்
        உன் அஞ்சலிக்காகவோ
        சாதனைக்காகவோ
       சிறந்த விஞ்ஞானிக்காகவோ
       சாதனைகளின் சொந்தக்காரன் என்பதற்காகவோ
       குடியரசு தலைவன் என்பதற்காகவோ
       உன் மனித நேயத்திற்காகவோ அல்ல…
       காரணம் ஒன்று மட்டுமே
என் கலாம் ஒரு ஆசிரியர் என்பதுவே அது என் கண்கள் ஒரு முறை கூட உன்னை நேரில் கண்டதில்லை.
ஆனால் உன்னை பற்றி நான் எழுதுவதை எண்ணி நானும் என் பேனா முனையும்  பெருமை கொள்கிறோம்.
உலகின் மாசுபாட்டை பற்றி சிந்தித்தாய்
இளைஞர்களை பற்றி சிந்திதாய், கனவுளை பற்றி சிந்தித்தாய்
நீ ஒருவன் இல்லையெனில் நாங்கள் அனைவரும் என்ன செய்வோம்
என்பதை மட்டும் சிந்திக்க மறந்து விட்டாயா?
   நான் கேள்வியுற்றேன்.
உன்னை  நேசிக்கும் ஒரு சிறு மாணவி கூறினாளாம்…..
கலாமை ஒரு முறை கண்டிராத
நான் ஏன் ஒரு கலமாக மாறி
நம் நாட்டிற்க்கு சேவை செய்யக்கூடாதென?

உன் மீது எத்தனை அன்பு பார்த்தாயா!.....

கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா






கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (02.03.16 ) கணித்தமிழ் பேரவையின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை தாளாளா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி எம்ஜே.எப் அவா்கள் தொடங்கிவைத்தாா். விழாவில் செயலாளா் திரு ஆா் சீனிவாசன் அவா்களும், செயல் இயக்குநர் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களும் முன்னிலை வகித்தனா். முதல்வர் முனைவா் மா.காா்த்திகேயன் அவா்கள் வாழ்த்துரை வழங்கினாா். கணித்தமிழ்ப் பேரவையைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றிய தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குநரும் கணித்தமிழ்ப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி அவா்கள் கணித்தமிழின் தேவையை எடுத்துரைத்து. இணையத்தில் தமிழை உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தாா். மாணவா்கள் கணித்தமிழ் குறித்த பல்வேறு நுட்பங்களையும், வலைப்பதிவு, விக்கிப்பீடியா, குறுஞ்செயலிகள், மென்பொருள்கள் என பல வழிகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து அறிந்துகொண்டனா். கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் இரா.குணசீலன் அவா்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுபெற்றது.

எடுத்துக்காட்டாக அமைய நினைக்காதே!


   Image result for கேள்வி குறி

ஒவ்வொருவர் வாழ்க்கையின்

தேவைகளும் தேடல்களும்

வேறுவேறாக இருக்கும்பொழுது

எவ்வாறு மற்றவர் நமக்கு

எடுத்துக்காட்டாக,

பாடமாக அமைய முடியும்?

செவ்வாய், 1 மார்ச், 2016

தேவையான தொடர்பு எண்கள்..!!


Image result for கைபேசியில் இருக்க வேண்டிய எண்கள்

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, 

செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

வாகனத்தின் பதிவும்,உரிமையாளர்களும்..!!

Image result for வாகனச் சட்டம்


ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 

0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். 

எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.

விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தெரிந்து கொள்ளுங்கள்








நில்,கவனி,சொல்..!! (சுற்று-1)


Image result for கேள்விகள் குறி

அன்புடையீருக்கு வணக்கம்,

இன்று முதல் எங்கள் கல்லூரி வலைப்பூவின் ஆடுகளத்தில் விளையாடி நட்சத்திரனராக முயற்சி செய்யுங்கள் நட்பு பூக்களே..!!தங்களின் திறமை வெளிப்படுத்த அமைந்த இக்களத்தை பயனுள்ளதாக மாற்றுங்கள்..!!

1.இந்திய வேதங்களை முதன்  முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்..??
அ) ஜியு போப்          ஆ) வீரமாமுனிவர்
இ)மாக்ஸ் முல்லர்   ஈ) யாருமில்லை

திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார்



             ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார்

முன்னுரை

         உலகில் யாவரும் நூறு சதவிதம் நல்லவர்களும் இல்லை. நூறு சதவிதம் கெட்டவர்களும் இல்லை. ஒருவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும்  அவர் செய்யும் ஒரு சில தவறு அவர் செய்த அத்துனை நன்மைகளையும் மறைத்துவிடும்.அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஹிட்லரைக் கூறலாம்.
ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்

             உலகமே கொடுங்கோலனாக நினைக்கும் ஹிட்லர் தான் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடிப்படையானவர். பின்னாளில் அவர் நடத்திய கொடுங்கோலாட்சி காரணமாக அவருடைய சாதனைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டன.
நல்லவர் என்று பெயர் எடுப்பது கடினம்
கெட்டவர் என்று பெயர் எடுப்பது எளிது