சனி, 15 பிப்ரவரி, 2020


36.உன்னோடு நான்
உன்னோடு உயிராக, உயிரோடு உயர்வாக
உன்னத உணர்வோடு உந்தன் உரவோடு
உயிர்வாழ்வேன், உலகினிலே!
ஊசலாய் உய்வேன், உன் மனதினிலே!
உன்னால் தானே, உரைந்தேன் காதலிலே..






37.காதல் கவிதை
கவிதை சொல்ல நினைக்கிறேன்உன்
கண்கள் கண்டு வியக்கிறேன்
கடந்து செல்ல நினைக்கிறேன்
கரைந்தும் நான் கிடக்கிறேன்
கடலில் கலைய நினைப்பினும்
கரையோரம் நின்று தவிக்கிறேன்
கண் முன்னால் நீ நின்றால்
கண் இமைக்க கூட வெறுக்கிறேன்
காதல் சொல்ல நினைக்கிறேன்
உன் பெயரை தானே ஜெபிக்கிறேன்
38.உன்னை கண்டேன்
உன்னை ஏனோ நான் கண்டுக்கொண்டேன்
என்னை நானே உன்னில் விட்டுச்சென்றேன்
தன்னால் நானும் பற்றுக்கொண்டேன்-உன்
முன்னால் நானும் கற்றுக்கொண்டேன்-உன்னை
உற்று நான் கற்றுக்கொண்டேன்……..






39.தலைவா
கவிதை என்ற தலைப்பில்
தலைவா உன்னை நானும் சந்திக்கிறேன்
சரித்திரம் என்ற தலையனை
சொல்லை கற்பித்தேன்
கலைகளை எல்லாம் உன்
கண் முன்னாலே சிற்பித்தேன்.
கவனம் சிதறா கவனிக்க உன்னை
என் கண்களை நானும் அற்பித்தேன்
அழகுற காதல் சிற்பம் அமைய
நானே முற்பித்தேன்
அனைவரும் வண்ணம் களையரவே
நான் வெற்பித்தேன்
வேண்டுதல் இன்றி காணுதல் இல்லை
உன்னை என்று மெய்ப்பித்தேன்




40.தொடர்வோம்
நான் என்பது வினா?
நீ என்பது விடை!
நாம்  என்பது தொடர் கதை……


31.வாடினேன்
காதலாலே கண்ணாமூச்சி ஆடினேன்
காற்றாய் உன்னை மூச்சில் தழுவி பாடினேன்
கவிதையெங்கும் உன்னை தானே தேடினேன்
காணாமலே உன்னால் நானும் வாடினேன்







32.நான் தானோ
நீ என்பதன் அர்த்தமே
நான்!..
நீ கொண்ட சோலையில்
நான் வரவா மலராக
நீ கண்ட பார்வையில்
நான் ஆனேன் முழுநிலவாக
நீ சொன்ன வார்த்தை தான்
நான் வந்த வழி
நான் உன் மீது கொண்ட
காதலை இன்றாவது
உணர்வாயா நீ! என் உறவே
உன் முன்னால் நிலைக்கும்
நான் உன் கண்ணால் கலங்கியதேனோ
தன்னால் சிதைந்தேன் நானோ
இனி நீ என்ற சொல்லும்
நான் தானோ?..








33.மனம் எய்த வில்
உன்னை அன்று கண்டேன் என் கனவில்,
நான் அன்றே நின்றேன் உன் மனதில்,
உன் அழியாத நினைவில்,
என் அலைபாயும் வயதில்,
நம் அணையாத மனதில்,
நீ இட்ட வில்







34. மாலை பொழுதினிலே
உன் பெயரை சொல்ல தோனவில்லை,
என் பெயரும் சொல்ல தேவையில்லை,
கண் இமைக்க கூட நேரமில்லை,
காதலை இழக்கவும் மனமேயில்லை
உன்னை கண்ட மாலையிலே..


35.மறக்கின்ற மனமே
காதல் என்னும் வார்த்தையைஎன்
கவிதையில் நீ பார்க்கிறாய்உன்
கண்ணுடன் அதை சேர்க்கிறாய்என்
மனதில் நீ பதிக்கிறாய்உன்
மனதாய் எண்ணி நினைக்கிறாய்என்
மணமாய் நீ இருக்கிறாய்உன்
அழகால் என்னை இழுக்கிறாய்என்
ஆலமெல்லாம் நீ கடக்கிறாய்உன்
ஆறுயிரையும் எனக்கென சிதைக்கிறாய்
ஏனோ, இதனை என்னிடம் நீ மறைக்கிறாய்..



26.இருக்கிறேன்
நீ முன்னால் வரும் நேரத்தில்
தன்னால் சிரிக்கிறேன்
உன் பின்னால் வரும் நேரத்தை, எண்ணி
இன்னால் இருக்கிறேன்
27.நீயாக வேண்டும்
நீ தான் என்னுடன் நிலையாக
வர வேண்டும்
நான் தான் உன்னுடன் உயிராக
வாழ வேண்டும்
நாம் என்றும் உரையாத உருவாக வீழ வேண்டும்





28.வாழ்வேன்
நான் காதல் கொண்ட உம்மை
கனவு தேசத்திற்கு அழைத்து
கவிதை வசனம் படித்து
கவலை எல்லாம் மறைத்து
கவனம் உன் மேல் வைத்து, உன்,
கண்ணில் என்னை வைத்து, என்,
கயமனதில் உன்னை மெய்த்து
கால வரயரையை பொய்த்து
காதலோடு வாழ்வேன்..
29.உன் உணர்வுகள் கொள்ளை
உன்னை போல் ஓர்,
நிலையான உறவு உலகில் இல்லை
உன்னை தாண்டி ஓர்,
நிலையாக உயர்வும் என்னிடம் இல்லை
உன்னை கண்டும் ஓர்,
நினையாத உள்ளம் எனக்குள்ளும் இல்லை
உன்னுடன் உரைந்தோடும்
உணர்வுகளோ எனக்கேனோ கொள்ளை




30.மறையாத நினைவு
கண்களில் காண்பதெல்லாம் உன்னை தான்
கண்ணாய் காண்பதும் உன்னை தான்
கண் விழி உருகினாலும், என் விழி உரைந்ததே!..
என் கண்மணி இமைத்தாலே கரையுமோ..
உன் உருவம் தான்..
நான் சழிக்காமல் நின்றால் தான் சிதறாதோ..
என் பருவம்..
என் கனவோ கல்லறைக்குள்ளே சென்றாலும்,
என் மனமோ மண்ணாகி மறைந்தாலும்
மறையாதே உன் நினைவும்..



21.மண்ணையடைந்தேன்
உன்னை என் வாழ்வில்
வானவில்லாய் வரைந்து
வண்ணங்கள் தீட்டி
வானாக வளர்ந்து
வாழ ஆசைப்பட்டேன்
எந்தன் எண்ணம் இன்று
வீணாகிபோக
வின்னைவிட்டு, மண்ணையடைந்தேன்.

22.திக்குமுக்கானேன்
காற்றிற்கு கூட எல்லை உண்டு
நம் காதலுக்கில்லை
என்றிருந்தேன், என் காதலே
என் மூச்சுக்காற்றை
முடக்க திக்குமுக்காடி நின்றேன்.







23.வாடுதே
உன்னோடு தான்
என் உயிர் வாழுதே
உன் பேர் சொன்னால்
என் இதல் வாடுதே
24.வாடினோம், நாடினோம்
நான் இன்று காணுகின்ற காட்சியெல்லாம் நீயாக
நான் இரவில் காணுகின்ற நிஜமாக
நீ என்னை காண வேண்டும்
நம் காதல் வாழ…. காலம் வீழ….
இனி நாம் ஆகவேண்டும்நதியோர கரையாக..
இதுவரை,
நதியாக ஓடினோம்
விதியாலே வாடினோம்
பதியாக வேண்டினோம்
மதியாலே மாறினேன்
எனினும்,
நாம் நற்கதியையே நாடினோம்..





25.திகைப்பு
நீ நீர், நிலவு, காற்று
நான் உன் பகலின் இரவு
வேர் என்ன நமக்குள் மறுப்பு
பார் உந்தன் வண்ண சிரிப்பு
உன் மேல் ஏனோ திகைப்பு
உன்னால் தானே ஆனது என் மனதும் சிகப்பு..

தன்னம்பிக்கை

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்!
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்!
உள்ளத்தில் உள்ளது தான் உலகம் கண்ணா!
இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா!

- கவியரசு கண்ணதாசன்