தெரிந்ததும் தெரியாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்ததும் தெரியாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஏப்ரல், 2017

வாக்கியத்தை முடிக்கத் திணறிய அறிஞர்




           டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ்போர் என்ற அறிவியல் அறிஞர் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆனால், அவர் தன்
மாணவர்களிடம் கட்டுரைகளை எழுதுவதற்காக குறிப்புகளை சொல்லும் போது சில நேரங்களில், ஏற்கனவே எழுதச்சொன்ன வார்த்தைகளை
மாற்ற சொல்வார். நீண்ட நேரம் ஆராய்ச்சி செய்து சமன்பாடுகளை உருவாக்குவார். பான்னர் மீண்டும் கட்டுரைகளை சரிபார்த்து விட்டு மேலும்
செய்திகளை சேர்க்கச் சொல்வார். புத்தக அலமாரிக்குச் சென்று புத்தகங்களை எடுத்துக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அவற்றைக் கட்டுரைகளில்
சேர்த்து விடுவார்.
           இதற்கு நேர்மாறானவர் டிராக். அவர் எதையுமே துல்லியமாக சிந்திக்கக்கூடியவர். தேவையான குறிப்புகளையும், வார்த்தைகளையும்
முறையாக தயார் செய்த பின்னரே கட்டுரைகளை எழுதத் தொடங்குவார். அதன் பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் திருத்தம் செய்ய மாட்டார்.
           ஒருமுறை டிராக், நீல்ஸ்போரை பார்க்கச் சென்றார். நீல்ஸ்போர் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தார். “ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்?”
என்று கேட்டார். அதற்கு, “ஒரு வாக்கியத்தை ஆரம்பித்தால், அதை திருப்திகரமாக முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், எனக்கு உறக்கமே வராது. நீ
இப்படி ரிஸ்க் எடுக்க மாட்டாயா?” என்று கேலியுடன் கேட்டார்.
           அதற்கு டிராக், “எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர், ஒரு வாக்கியத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல், அதைத் தொடங்காதே

என்று தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்” என்றார், அமைதியாக.    

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க என்ன வழி..?




ரத்த கொதிப்புக்கான மாத்திரைகள் உட்கொண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமனை உடற்பயிற்சிகள் மூலம் குறைத்து, சரியான எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உயரத்தை சென்டிமீட்டரில் எடுத்துக்கொண்டு அதிலிருந்து நு}றை கழித்தால் வரும் அளவே உங்களின் சரியான எடையாகும்.

ஒரு கிலோ எடையை குறைத்தால் மூன்றிலிருந்து நான்கு மி.மீ., எச்.ஜி., ரத்த அழுத்தம் குறையும். எடுக்கும் உப்பின் அளவை பாதியாக குறைத்தால், ஏழு மி.மீ., எச்.ஜி., ரத்த அழுத்தம் குறையும். ஊறுகாய், கருவாடு மற்றும் உப்பு போட்டு சமைக்காமல், சாம்பாரில் பாதி உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரவில், 6-8 மணி நேரம் தூங்குதல், யோகா செய்தல், மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவற்றால் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். ரத்த அழுத்தம் சிறிதளவு மட்டும் அதிகமாக இருந்தால், மாத்திரை இல்லாமல் உணவு மற்றும் மன கட்டுப்பாட்டால் சரிசெய்யலாம்.

ரத்த அழுத்தத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும் டீ, காபி குடிப்பதை தவிர்த்து, 1 டம்ளர் மோரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து குடித்து வந்தால், இரத்த அழுத்தம் விரைவில் குறையும்.

முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து, அதை உலர்த்தி பொடியாக்கி, தினமும் இரண்டு வேளைகள் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.

வெந்தயம், பாசிபயறு, கோதுமை, ஆகியவற்றை சிறிதளவு எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனுடன் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும்.

அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து, அதன் சாறு எடுத்து அதனுடன் ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும்.

அரைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, அதை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரண்டு வேளைகள் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

நமது உடல் நலனில் நாம் தனி கவனம் செலுத்த வேண்டும். முறையான தூக்கமும், நிறைவான மன அமைதியும் பல பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும்.


புதன், 29 மார்ச், 2017

உழைப்பின் அருமை...




Image result for டால்ஸ்டாய்...



 இரஷ்ய நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவ்வப்போது உழவுத்தொழிலையும்  செய்து வந்தார்.  ஒருமுறை தொடர்வண்டி நிலையத்தில் அவர் நின்றிருந்தபோது, அங்கிருந்த பெண்மணிஒருவர் அவரைக் கையைத்தட்டி அழைத்தார். அவரின் தோற்றம் ஒரு கூலிக்காரர்போல் இருந்ததோ என்னவோ?

ஐயா, தொடர்வண்டி புறப்படும் நேரமாகிவிட்டது.  என் கணவர் அருகிலுள்ள சிற்றுண்டி விடுதியில் உள்ளார்.  அவரை, இங்கு அழைத்து வாருங்கள். நீங்கள் செய்கின்ற இந்த உதவிக்குக் கூலி பெற்றுக்கொள்ளுங்கள்எனக் கூறிய அப்பெண்மணி, அவருடைய கணவரின் தோற்ற அடையாளங்களைக் குறிப்பிட்டார்.

அவரும் ஒப்புக்கொண்டு அப்பெண்மணியின் கணவரை உடனடியாக அழைத்து வந்தார்.  அவர் செய்த வேலைக்கான கூலியாகச் சிறுதொகையைப் பெற்றுக்கொண்டார்.

சிறிதுநேரங்கழித்த பின்னர்தான்  அப்பெண்மணிக்கு, அவர்தாம் இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பது தெரிந்தது.

தான் செய்த தவற்றை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார் அப்பெண்மணி.  ஆனால் டால்ஸ்டாயோ, “அதனால் என்ன, நீங்கள் சொன்ன வேலைக்காகப் பெற்றுக்கொண்ட கூலியைத் திருப்பித் தரமாட்டேன்என்றார். புகழ் பெற்றவராயினும் உழைப்பின் அருமையை அவர் அறிந்திருந்தார்.

உழைத்து உண்ணும் உணவே சுவைக்கும். உழைக்காமல் உண்பது பிறர் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்பாகும்.  எந்த வயதினராக இருப்பினும், உழைத்தே உண்ணுதல் வேண்டும்.  அப்பொழுதுதான் அந்த வீடும் நாடும் முன்னேறும்……

சனி, 18 மார்ச், 2017

தெரிந்து கொள்ளுங்கள்

 Whatsapp-புலனம்,
 youtube-வலையொளி,  
 kype-காயலை,
 bluetooth-ஊடலை, 
 wifi- அருகலை
,hotspot-பகிரலை,     
 broadband-ஆலலை, 
 online-இயங்கலை,
 offline-முடக்கலை, 
  thumdrive-விரலி,
  hard disk-வன்தட்டு,     
  gps-தடங்காட்டி.                                 

எவ்வளவு தான் ஆங்கில வார்த்தைகள் வந்தாலும் அனைத்திற்கும் தமிழ் மொழியிலும் பொருள் உண்டு என்பது  பெருமைக்குரிய செய்தி ஆகும்.

ஞாயிறு, 12 மார்ச், 2017

அரிய செய்திகள்


பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. * நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். * கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம். * மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. * ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். * மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். * பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். * உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். * ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம். * பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. * பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். * நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. * நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். * யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம். * ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும். * தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன். * முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு. * தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

பென்ஸீன் மூலக்கூறு



Image result for penicillin


பொதுவாக பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது . இதைப் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . அப்படிப்பட்ட பாம்புகள் நம் கனவில் வந்தால் நம் எல்லோருக்கும் அன்றைய உறக்கம் ஒரு கனவாகத்தான் மாறிப்போகும் .ஆனால் ஒரு அறிவியல் அறிக்கை சொல்கிறது பாம்பு கனவில் வந்தால் மிகவும் நல்லது என்று நம்புவீர்களா !? உண்மைதான் நண்பர்களே இன்று உலகத்தில் உயிர் காக்கும் மருந்துகளில் முன்னோடியாக விளங்கும் பென்ஸீன் மூலக்கூறு கண்டறிய அலெக்சாண்டர் ஃப்ளெமிங் நீண்ட நாட்களாக முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாம்பு, புதிய வடிவத்தை உணர்த்திவிட்டுச் சென்றது. அதற்குப் பின்னரே அவர் பென்சிலினுக்கான மூலக்கூறு (பென்ஸீன் கூட்டமைப்பு) வடிவத்தை கண்டு பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

உலகத்தின் முதல் பெண்கள்

                   உலகத்தின் முதல் பெண்கள்

                               

பல் மருத்துவர் – அமாலிய அசூ
பொறியாளர் – அமலின் ராபட்ஸ் ஜோன்ஸ்
மருத்துவர் – எலிசபெத் பெலக்வெல்
காவலர் – சோபியர் ஸ்டான்லி
கடல் பொறியாளர் – சோனாலி
விமானி – அமெரிய இயர்ஹர்டு
குடியரசுத் தலைவர் – பீரபெல் மார்டினைஸ்
ஆளுனர் – பியுட் ரோரிகான்
விண்வெளி பயணி – கல்பனா சாவ்லா
சமூக சேவகி – அன்னை தெரசா
விஞ்ஞானி – மேரி கியுரி 

வெள்ளி, 10 மார்ச், 2017

சில அரிய சுவையான தகவல்கள்...



நீங்கள் இதுவரை அறிந்திராத சில சுவையான உண்மைத் தகவல்கள்

 1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது

. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்

 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

 7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

 10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

 11)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

 12)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம். 13) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

 14) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

 15) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்

. 16)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

 17) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்

வியப்பான பொது அறிவு



அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வியப்பொபான பொது அறிவு தகவல்கள்...

ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.

புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.

யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை நுகர முடியும்.

ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம். 

வியாழன், 2 மார்ச், 2017

பிரமிடு பற்றிய அரிய தகவல்கள்....!! 


Image result for pramit

 கிசாவின் பெரிய பிரமிடு பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும்.

கிசாவின் பெரிய பிரமிடுவை, உலகின் மிகப் பெரிய ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பம் கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் காத்துக்கொண்டு வருகின்றன.

முதல் அறியப்பட்ட பிரமிடு கட்டிட கலைஞர் இம்ஹொடெப், ஒரு பண்டைய எகிப்திய பல்துறை வல்லுநர், பொறியாளர் மற்றும் மருத்துவர்.

 பிரபலமான நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான, பிரமிடுகள் அடிமைகள் அல்லது கைதிகளால் கட்டப்படவில்லை, ஆனால் வழக்கமான ஊதியம் பெறும் தொழிலாளர்களால் கட்டப்பட்டது.

 பண்டைய எகிப்திய பிரமிடுகள் மிகவும் நன்கு அறியப்பட்ட பிரமிடு கட்டமைப்புகள் ஆகும்.

 130க்கும் மேற்பட்ட பிரமிடுகள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

 3800 ஆண்டுகளுக்கும் மேலாக, கிசாவின் பெரிய பிரமிட் உலகில் மனிதரால் கட்டமைக்கப்பட்ட உயரமான அமைப்பாகும்.

 அனைத்து எகிப்திய பிரமிடுகளும் நைல் நதியின் மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ளது. 

 எகிப்திய பிரமிடுகளின் உள்ளே, வெப்பநிலை ஒப்பீட்டளவில் நிலையானதாக சுமார் 20 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

 பிரமிடுகளின் நான்கு முகங்கள் சற்று குழியானதாக இருக்கும், இந்த வழியில் கட்டப்பட்ட ஒன்று பிரமிடு மட்டுமே.

குன்னக்குடி வைத்யநாதன்



பிரபல வயலின் இசைக் கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞர்கள்.

ஒருமுறை இவர்களது கச்சேரிக்கு வயலின் கலைஞர் வரவில்லை. காரணம் கேட்டதற்கு, 'ஏன் உங்கள் வீட்டு கடைசிப் பையனை வயலின் வித்வான் ஆக்கிவிட வேண்டியதுதானே!" என்றார். அதையே சவாலாக எடுத்துக் கொண்ட தந்தை 8 வயதே ஆன மகனுக்கு வயலின் கற்றுத் தந்தார்.

 வயலின் கற்றுக்கொண்டு தனது 12-வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976 முதல், வயலின் இசையை கொண்டு கச்சேரி செய்தார்.

1969-ல் 'வா ராஜா வா" என்ற திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். இசைப் பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

 'வயலின் சக்கரவர்த்தி" என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 73-வது வயதில் (2008) மறைந்தார்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஒன்றா, பலவா பிறப்புக்கள்?


Image result for karuppaiyil ulla kuzhanthai

 பொதுவாக இயற்கையின் நிகழ்வுகளில் ஒரே ஒரு முறை மட்டும் நடக்கக்கூடிய நிகழ்வு என்று எதுவும் இல்லை. எல்லா நிகழ்வுகளும், அனைத்திலும் திரும்பத் திரும்ப நடக்கக் கூடியவைகள் ஆகும். ஒரு முறை மழையாக பூமியில் விழுந்த நீரானது மீண்டும் பல முறை மழையாக பூமியை வந்தடையக் கூடிய ஒன்றாகும். பிறப்பு மட்டும் ஏன் ஒரு தடவையோடு நின்று விடவேண்டும்!

 ஒரு ஆத்மா என்பது ஒரு ஜீவன் ஆகும். அந்த ஆத்மாவிற்கு உடல்கள் மாறி மாறி அமைவது, அதற்கு புதுப்புது அனுபவங்களை கற்று தருவற்கு தான். ஒருவன் பள்ளிக்கு ஒரு நாள் சென்றால் அனைத்தும் கற்றுவிட முடியாது, திரும்பத் திரும்ப சென்றால் தான் கற்றுக்கொள்ள முடியும்.

 ஆத்மாவானது பரிபூரணத் தன்மை அடையும் வரையில் பிறந்துகொண்டே இருக்கும் என்பது இயற்கையின் பேரமைப்பாகிறது.

 ஒரு பிறப்புதான் உண்டு என்பது ஆத்மாவுக்குத் துவக்கமும் முடிவும் உண்டு. மனிதனுக்கு ஒரே ஜென்மத்தைக் கொடுத்து விட்டுப் பிறகு அவனுடைய பாவபுண்ணியத்துக்கு ஏற்பக் கடவுள் அவனை நரகத்திலோ, சொர்க்கத்திலோ நிரந்தரமாக வைத்து விடுகிறார் என்பதும் பொருந்தாது.

 ஒரு ஜென்மம் என்கிற குறுகிய காலத்தில் செய்த குற்றத்துக்கு முடிவில்லாத நரகவேதனை என்ற தண்டனையைக் கருணையுடையவன் விதிக்கமாட்டான். மானுட ஆட்சியிலேயே அத்தகைய கொடுமையில்லை. குற்றத்துக்கேற்ற தண்டனையும் நல்ல மானுட ஆட்சி முறையானது அளிக்கிறது.

 மறுபிறப்பு என்ற புதிய சந்தர்ப்பத்தைக் கடவுள் கொடுக்காவிட்டால் அவன் கொடியவன் என்ற குற்றத்துக்கு ஆளாவான். பேரறிவும், பேரளுமுடைய கடவுள் அப்படி ஒரு ஜென்மத்தை மட்டும் கொடுத்து மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடைப்படுத்த மாட்டார். பூரணமாய் ஆராய்ந்து பார்த்தால் ஜீவர்களுக்குப் பல பிறவிகள் உண்டு என்னும் கேட்பாடுதான் யுக்திக்கும் அனுபவத்துக்கும் பொருந்தும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

குழந்தைகளை முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது ஏன்? 


Image result for vijayadhasami
 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது நமது இந்து சமயத்தில் இதனை சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.

 குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த நிகழ்வானது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

 ஞானத்தின் தேடலில், பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுத்துக்களை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.

 மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் கல்வி ஆகும். இந்த கல்வி கற்பதன் மூலம் ஒருவர், பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேடத்தொடங்குகின்றார்.

 அன்னை சரஸ்வதிக்கு பூஜை செய்து, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதற்படியில் தவழ ஆரம்பிக்கிறோம். கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்தும், இந்த நிகழ்வை இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றியின் அடையாளமான விஜய தசமி அன்று நிகழ்த்தப்படுகிறது.

 இச்சா, கிரியா மற்றும் ஞானம் என்ற மூன்று சக்திகளும் இந்நாளில் ஒன்று சேர்ந்து இருளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன. குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர்.

 அவர்கள் மெதுவாக ஒரு வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது எனக் கற்று இறுதியாக தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். எனவே இந்த நாள் உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

 ஓங்காரம் ஒரு செயல் மற்றும் எண்ணத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது. மேலும் இது நித்தியத்தை குறிக்கின்றது.

 எனவே, ஒரு குழந்தை ஓம் என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இது சமஸ்கிருதத்தில் பீசாட்ஞ்சரமாக கருதப்படுகின்றது. இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகின்றது.

 ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருக்குலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். இதுவே அனைத்தினுடைய தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

 வேதகாலத்தில் உபநயனத்தின் போதே அரிசியில் எழுத்தை ஆரம்பித்து விடுவார்கள். அப்பொழுது குழந்தைகளின் வயது சுமார் ஐந்தாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள்.

 கல்வி தீட்சை, வெற்றியின் அடையாளம், எழுதக் கற்றுக் கொள்வது, ஓங்காரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளவே நாம் ஓம் என்ற முதல் வார்த்தையை மணல், நெல் அல்லது அரிசியில் எழுத சொல்கிறோம். இந்த இந்திய பாரம்பரியமானது குருகுல வாசல் முதல் இன்றைய நவீன பள்ளிகள் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.