செ.வைசாலி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செ.வைசாலி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜூன், 2016

வலியை மறக்க குழந்தையிடம் கற்று கொள்ளுங்கள்..!!



ஒரு திருநங்கை சகோதரியுடன் பேசி கொண்டிருந்தேன்.கடவுள் செய்த தவறுதானே உங்கள் இந்த வலிக்கு காரணம் என்றேன்,
சகோதரி சொன்னால் இது வலி அல்ல வரம் என்று

ஒரு பெண்ணின் உணர்வுகளை உன்னால் உணரமுடியுமா என்று கேட்டாள் ?

நான் என்னால் முடியாது என்றேன் ஆனால் அவள் சொன்னாள் எங்களால்
முடியும் என்று

ஒரே நேரத்தில் ஆண் பெண் இருவர் உணர்வுகளை எங்களால் உணரமுடியும் இது எங்களுக்கு வலியல்ல வரம் என்றாள்

இந்த சமுகத்தால் புறக்கணிக்கப்பட்டு மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள்
கடவுள் செய்த தவறையும் வரம் என நினைத்து வாழ கற்று கொள்கிறார்கள்
நாமோ சின்ன சின்ன வலிகளையும் பேரிய வலியாய் நினைத்து வருந்தி வாழ்நாளை கண்ணீரில் கழிக்குறோம்

உலகில் கவலையில்லாத மனிதர்கள் கல்லறையில் தான்இருக்கிறார்கள்
கருவறையில்கூட மனிதனுக்கு வலி இருக்கிறது

மனிதனை தாய் வலியில்தான் பிறசவிக்கிறாள்
அந்த வலியைவிடவா
நம் கவலையின் வலி பெறியது
அந்த வலிக்கு தாய் பயந்திருந்தால் இங்கு மனிதர்களே இருந்திருக்க போவதில்லை

எனக்கு தெறிந்த தம்பதிகள் ஒருவர் இருந்தார்கள் அவர்களுக்கு வேறு ஒரு உறவே இல்லை
இருவருக்கும் ஒருவருக்கொருவர்தான் உறவு

ஓர்நாள் அதிகாலையில் அந்த கணவன் மரித்துப்போனான் நான் அங்கு போனபோது அந்த சகோதரி தனிமையில் அழுது கொண்டிருந்தாள்.
இப்போது நான் யாருக்கு அழுவது

இறந்த அந்தபோன அந்த கணவனுக்கா?
இல்லை இருந்த அந்த ஒரே உறவையும் இழந்து வாடும் அந்த சகோதரிக்கா? மனமெல்லாம் பாரமாய் அங்கிருந்து வந்து விட்டேன்
சமிபத்தில் அந்த சகோதரியை பார்த்தேன் புன்னகையோடு! சொன்னாள் அண்ணா நீங்கள் எல்லாம் இருக்கும் நம்பிக்கையிதான் வாழ்கிறேன் என்று
நம்பிக்கைகள்தான் வலியை மறக்க மருந்தாகிறது

வலியை மறக்க குழந்தையிடம் கற்று கொள்ளுங்கள்

முடிந்த போன நொடி போழுதை அப்போதே குழந்தைகள் மறந்து விடுகிறது
பிறக்க போகும் அடுத்த நிமிடங்களை எண்ணிக்கொண்டிருப்பதில்லை கிடைத்த நிமிட பொழுதை வலிகளை மறந்து அனுபவிக்கிறது
அதனால் தான் குழந்தைகள் எப்போதும் புன்னகையோடு இருக்கிறது
அந்த புன்னகைதான் எல்லோருக்கும் பிடிக்கிறது
கோவமாய் அடித்துவிட்டு
அழுது கொண்டிருக்கும் குழந்தையை
புண்ணகையோடு கரம்விரித்து
அழைத்து பாருங்கள்
கண்ணீர் கோடுகள் அழியாமலே புண்ணகையோடும் வந்துவிடும் அக்குழந்தைகள்

அதுதான் குழந்தையின் சந்தோசத்திற்குக்  காரணம்
கவலைகள் மறப்பது

வலிகளை மறப்பதற்கு இழந்து போன இழப்புகளை மறந்து விடுங்கள் எல்லாவற்றையும் ரசிக்க கற்று கொள்ளுங்கள்
பிறருக்கு விட்டு கொடுங்கள்
அடுத்தவர்கள் தவறுகளை முடிந்தவறை மன்னித்து மறந்துவிடுங்கள்

சின்ன சின்ன விட்டு கொடுத்தல்கள்தான் பெரிய வலிகளுக்கு மருந்தாய் இருக்கிறது.

புதன், 1 ஜூன், 2016

பென் டிரைவில் வைரஸ் தாக்கினால்..!!!






தற்போது தகவல்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுவை யு.எஸ்.பி,பென் டிரைவ்கள்.இதில் முக்கியமான பிரச்சனை ’வைரஸ்’ தான்.வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென் டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
அவ்வாறு பாதிக்கும் போது உங்கள் பென் டிரைவில் உள்ள பைல்கள்  மறைக்கப்பட்டு விடும்.கணினியில் பென் டிரைவை திறந்தால் எந்த பைலும் இருக்காது.காலியாக இருக்கும்.ஆனால் ‘பிராப்பர்டீஸ்’ சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.காரணம் நம் தகவல்களை வைரஸ் மறைத்து வைத்துவிட்டது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் பார்மட்(format) செய்து பென் டிரைவை திரும்பப் பெறலாம்.ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்தப் பைல்களை பத்திரமாக மீட்பது என்று பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மெனபொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாகச் செய்துவிடலாம்.கீழே உள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றி பைல்களை மீட்டெடுக்கலாம்.
 



1.முதலில் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகிக் கொள்ளுங்கள்.
2.Start-Run-CMD-Enter கொடுக்கவும்.
3.இப்பொழுது பென் டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்று பாருங்கள்.மை கம்ப்யூட்டர் செல்வதன் மூலம் அதைக் கண்டறியலாம்.
4.உதாரணமாக E என்ற டிரைவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அதற்கு நீங்கள் E என்று கொடுத்து ‘என்டர்’ அழுத்த வேண்டும்.
5. attrib s h/s/d *.* என டைப் செய்யுங்கள்.ஒவ்வொரு பகுதிக்கும் சரியான ஸ்பேஸ் கொடுக்கவும் .நீங்கள் சரியாகக் கொடுத்துள்ளீர்கள் என்று உறுதி செய்துகொண்டு என்டரை அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள்.இப்போது உங்கள் பென் டிரைவை சோதித்துப் பாருங்கள்.பைல்கள் அனைத்தும் திரும்ப வந்திருக்கும்.

திங்கள், 30 மே, 2016

பலத்துறைச் சார்ந்த காணொலிகள்..!!!




பலத்துறைச் சார்ந்த காணொலிகள் ஒரே இடத்தில் காண இயலக்கூடிய  வலைப்பக்கம் குறித்த பதிவாக இப்பதிவு அமையவுள்ளது.சமீபத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறைக்கு சென்று இருந்தோம்.அங்கு கான் அகாடமி என்ற வலைப்பக்கம் குறித்தும் அவற்றில் பலத்துறைச் சார்ந்த காணொலிகள் பற்றியும் வகுப்புகள் நடைபெற்றன.

வியாழன், 26 மே, 2016

மே டின் ஜப்பான்…!!!


இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவத்தின் அணுக்குண்டு வீச்சால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நகரம் தான் ஜப்பான்.பொருளாதாரத்தில் மிகவும் அடிப்பட்டு பின் தங்கிய நிலையும் ஏற்பட்டு இருந்தது.போர்முனையில் தோற்றாலும்,பொருளாதாரத்தில் தோற்க விரும்பாமல் தன்னம்பிக்கையும் உழைப்பையும் உரமாக்கி மண்ணில் விதைத்தனர் ஜப்பானியர்கள். பல தலைவர்களால் ஜப்பான் பொருளாதாரம் விரிவடையக் காரணமாக இருந்தாலும் 30 ஆண்டுகளில் ஜப்பான் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நிகராக மாற்றியவர், மே டின் ஜப்பான்(made in japan) என்ற வாசகத்திற்கும்,தரக்கட்டுபாட்டிற்கும் ஒரு பிரம்மாவாக திகழ்ந்தவர் தான் அகியோ மொரிட்டோ( Akio Morito ) இவரைப் பற்றி தான் இப்பதிவு அமைய உள்ளது.

1921 ஆண்டு ஜனவரி 26 அன்று ஜப்பானில் உள்ள டோக்கியோ என்ற நகரில் பிறந்தவர் தான் மொரிட்டோ.400 வருடங்களாக தனது குடும்பம் செய்து வந்த மதுபானம் தயாரிக்கும் தொழிலை ஜப்பானியர்களுக்கு கற்று தருவதால் எந்தவித பொருளாதார முன்னேற்றமும் ஏற்படாது என்று நினைத்தார்.அவருக்கு சிறுவயதில் இருந்தே கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் ஆர்வம் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் மின்னியல் பொருள்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்யலாம் என்று நினைத்தார்.1946 ஆண்டு மே 7 அன்று தனது கடற்படை நண்பரோடு 375 டாலர் மதிப்பில் அதாவது 190 ஆயிரம் யெண் முதலீட்டில் டோக்கியோ டெலி கமுனிகேசன் என்ஜினியரிங் கார்பரேசன் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னியல் பொருள் தான் டேப் ரெக்காடர் என்ற ஒலிப்பதிவு கருவி ஆகும்.போருக்கு பிந்திய காலம் என்பதால் அவர்களால் அதிக பணம் கொடுத்து வாங்க இயலாது என்பதால் அமெரிக்காவின் வெல் லேப்ஸ்  நிறுவனத்திலிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டை பையில் வைக்கக்கூடிய அளவில் ஒரு வானொலியை உருவாக்கினார்.அமெரிக்காவில் இருந்து வாங்கி உற்பத்தி செய்து அதனை அவர்களிடமே விற்பனை செய்தார்.எனவே உலகம் முழுவதும் இவர்களின் பொருள்கள் வலம் வர வேண்டும் என்று பல அகராதிகளில் தேடிய போது தான், சோனஸ் என்ற சொல் அதாவது அதற்கு ஒலி என்று பொருள்.பிறகு சோனிபாய்ஸ் என்ற இசைக்குழுவின் பெயரை இணைத்து தான் சோனி கார்பரேசன் என்ற பெயரை உருவாக்கினார்.

தனது குழந்தைகளுடன் சுற்றுலா செல்லும் போது தனது பிள்ளைகள் பெரிய வானொலிகளை எடுத்துச் செல்வதை கவனிந்த மொரிட்டோ,உடனே யோசித்து உருவாக்கிய பொருள் தான் வாக்மேன்.இதனை உருவாக்கிய போது அருகில் இருந்தவர்கள் காதில் வாக்மேனை மாட்டிக் கொண்டு போனால் பைத்தியம் என்று நினைப்பர் எனக்கூறினார்கள்.அதனை முறியடித்தது வாக்மேன்.இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.பிறகு தொலைகாட்சி,வானொலி போன்ற பல்வேறு பொருள்கள் தரக்கட்டுபாடு கொண்டு உற்பத்தி செய்து விநியோகம் செய்தார்.இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில்முனைவோரில் அமெரிக்கா இல்லாத ஒரு ஜப்பானிய நபர் தான் மொரிட்டோ.


தனக்கு 72-வயது நடைபெற்ற போது வாதத்தால் பாதிக்கப்பட்டார்.பிறகு அனைத்து பொறுப்புகளையும் தனது பொருளை குறைக்கூறி கடிதம் எழுதிய நொரியோ ஒகா என்பவரின் குறையில் நிறைக் கண்டு அவரிடம் ஒப்படைத்தார்.1966 ஆண்டு அவர் எழுதிய Never Mind School’s Records என்ற நூலில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப் பெற பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள் முக்கியமல்ல என்று மொரிட்டோ வாதாடினார்.ஆர்வம் தான் படைப்பாற்றலின் திறவுகோல் என்பவது மொரிட்டோ நமக்கு விட்டுச் சென்ற பொன்மொழி.நாம் அனைவரும் ஆர்வம்,தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

திங்கள், 16 மே, 2016

டிஸ்னியும் மிக்கியும் ..!!!





வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்  இந்த உண்மை நம்மை உணர வைத்த ஒரு கேலிச்சித்திர நாயகன் தான் நமது சார்லி சாப்ளின் இவர் உயிரோடு நம்மை சிரிக்க வைத்தவர்.நம்மை கனவு உலகில் இன்றும் கண் மூடினால் சிரிக்க வைக்கும்  உயிரற்ற ஒரு கேலிச்சித்திரம் தான் மிக்கி மௌஸ் என்ற ஒரு எலி.இது உருவானதை பற்றி பகிரவுள்ளேன்.



சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பும் இன்றும் நம் சிரிப்புக்கெல்லாம் காரணமாக இருந்தவர் என்றால் அது நிச்சயம் சார்லி சாப்ளின் அவர்கள் தான்.பிறகு வால்ட் டிஸ்னி என்பவர் 05-12-1901 அன்று அமெரிக்காவில் பிறந்தார்.இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதிலும் ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் மிக்கவர்.தனக்கு 7-வயது இருக்கும் போதே ஓவியங்களை வரைந்து அண்மையில் இருப்பவர்களுக்கு விற்பனை செய்வாராம்.அவருடைய தந்தைக்கு டிஸ்னி ஓவியம் வரைவது பிடிக்காது.ஆனால் அவரின் தாயார் உனக்கு பிடித்ததில் கவனம் செலுத்து என்று ஆதரவு அளித்தாராம்.

இவர் பள்ளியில் சார்லி சாப்ளின் போல நடித்து காட்டுவாராம்.ஆசிரியர்கள் டிஸ்னியை நகைச்சுவை நாடகம் நடித்துக்காட்டுமாறு கேட்பார்களாம் அப்போது டிஸ்னி கரும்பலகையில் வரைந்துக் கொண்டே நடித்துக்காட்டுவாராம்.அவருடைய தந்தைக்கு தெரியாமல் நகைச்சுவை நாடகத்தில் நடித்த அனுபவமும் டிஸ்னிக்கு உண்டு.


1922-ஆம் ஆண்டு தனது சகோதரர் ராய் உடன் தனது  Laugh Oh Grand என்ற நிறுவனத்தை ஆரம்பித்து ஆலிஸ் இன் காட்ரூண்ஸ் என்ற  முதல் கேலிச்சித்திரத்தை துவங்கினார்.அது தோல்வியடைந்தது.பிறகு  1932 ஆண்டு டிஸ்னி இரயிலில் பயணம் செய்யும் போது தனது ஓவியக் கிறுக்கலில் உருவானதே மிக்கி மௌஸ் என்ற கேலிச்சித்திரம். Flower And Tree என்ற முழு நீளப்படமத்தில் மிக்கியின்  சேட்டையும் அடித்த லூட்டியும் அப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை பெற்று தந்தது.அதனை அடுத்த டிஸ்னி உருவாக்கிய மற்றொரு கேலிச்சித்திரம் தான் டொனல் டக் என்ற வாத்து.மிக்கியும் டொனல்டும் சேர்ந்து அடித்த லூட்டியை இன்றும் கண் மூடி நினைத்து சிரிப்பவர்களுமுண்டு.
1955-ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி 17 மில்லியன் டாலர் செலவு செய்து டிஸ்னி லேண்ட் பார்க் என்ற பொழுது போக்கு பூங்காவை அமெரிக்காவில் ஒலொன்டா என்ற நகரில் மக்களின் பூலோகச் சொர்க்கமாக  ஏற்படுத்தினார்.அவருடைய வெற்றியின் தாரக மந்திரம் ஆர்வம்,தன்னம்பிக்கை,தைரியம் மற்றும் நிலைபாடு.இவற்றில் மிக முக்கியமானது தன்னம்பிக்கை எந்த ஒரு செயலையும் பல்வேறு கேள்விகளோடு தொடங்கக் கூடாது எதுவாக இருந்தாலுமே தன்னம்பிக்கையோடு செயலாற்றினால் வெற்றி நிச்சயம் என்று அவர் கூறிவாராம்.இது நம் அனைவருக்குமே பொருந்தும்.


சனி, 16 ஏப்ரல், 2016

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் எப்படி..??

அன்புடையீருக்கு வணக்கம்,

கடந்த வாரம் பங்குச் சந்தையில்  ஈடுபடுவர்களை பற்றி பார்த்தோம்.இப்பொழுது  பங்குச் சந்தையில் எவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி காணலாம்.

திங்கள், 28 மார்ச், 2016

இலவசமாகப் புத்தகங்களை தரவிறக்கலாம்..!!

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் எப்படி இலவசமாக தரவிலரக்கலாம் என்பது பற்றிய பதிவு தான்.

ஞாயிறு, 27 மார்ச், 2016

வாங்க போலாம் பங்குச் சந்தைக்கு..!! (தொடர்ச்சி)

அன்புடையீருக்கு வணக்கம்,

இந்த வாரம் பங்குச் சந்தைக்கு தயார் ஆயிட்டிங்கனு நினைக்கிறேன் நட்புகளே.சரி கடந்த வாரங்களாக பங்குச் சந்தை பற்றிய தகவல்களை சிறிது சிறிதாக பார்த்து வருகிறோம்.இந்த வாரம்  பங்குத் தரகர்களிடம் எவ்வகையான கணக்கை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

Image result for பங்கு சந்தை


பங்குத் தரகர்கள்;

பங்குச் சந்தையில் பங்குகளை நேரடியாக வாங்கவோ விற்கவோ இயலாது.அதற்கென இருக்கும் பங்குச் சந்தையில் உரிமம் பெற்ற உறுப்பினர்களிடம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய இயலும் அவர்களே தரகர்கள்.இத்தகைய தரகர்களிடம் இருவகையான கணக்குகளை உருவாக்க வேண்டும் அவை,

1.டீ-மேட் கணக்கு(demat account)
2.வியாபார கணக்கு(trading account)

டீ-மேட் கணக்கு என்றால் என்ன..?? 

                    வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பேணப்படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.
விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.

Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும். 


வியாபார கணக்கு  என்றால் என்ன? 

                            Demat Account நமது கணக்கில் உள்ள பங்குகள், பராமரிக்கப் படும். அவ்வளவே! நாம் வாங்கி விற்க வேண்டுமானால், வர்த்தகத்திற்கான தனிக்கணக்கு (Trading Account) தொடங்கியாக வேண்டும். Demat Account உள்ளவர்கள் மட்டுமே Trading Account தொடங்க முடியும். வீட்டில் இருந்தவாறே இணையம் மூலமாகக் கூட பங்குப் பரிவர்த்தனை செய்யலாம். அதற்கான கணிணி மென்பொருளைப் பங்குத் தரகு நிறுவனத்திடம் பெற்று ( ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி) நமது கணிணியில் நிறுவிக் கொள்ளலாம். இதைச் செய்தோமானால், சந்தை நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து வாங்குவதா / விற்பதா என்று முடிவெடுப்பதும் வியாபாரம்  செய்வதும் எளிதாக இருக்கும். ஆனாலும், நமது பங்கு வணிகம், அப்பங்குத் தரகர் வழியாகவே நடைபெறுகிறது. ஆகவே, நமது பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு, நாம் அவர்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். 

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
                          01.  முதலீட்டாளர் (Investor)
                           02.  நாள்வணிகம் செய்வோர் (Day Trader) 

அடுத்த வாரம் இதுக் குறித்து விரிவாக பார்க்கலாம்.நன்றி.




வியாழன், 3 மார்ச், 2016

தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி..!!

தமிழ்-99 விசைமுக அமைப்பு, தமிழில் அதிகமாகத் தட்டெழுதும் (டைப் செய்யும்) பயனர்களுக்குப் பல வசதிகளைத் தருகின்றது. அவற்றில் புள்ளி சேர்க்கையும் (auto-pulli) ஒன்று.

இந்த விதியின் சுருக்கம்:

1. ஒரு அகரமேறிய உயிர்மெய் எழுத்து இருமுறை வந்தால், முதலில் வந்த எழுத்தில் தானாகப் புள்ளி சேரும். சில எடுத்துக்காட்டுகள்:
முதல் தட்டு2வது தட்டுவிழைவு
க்க
ய்ய
ர்ர
ங்ங
ஜ்ஜ
2. கீழ்க்காணும் எழுத்துகள் இணையாக வந்தால் முதல் எழுத்தில் தானாகப் புள்ளி சேரும்:
முதல் தட்டு2வது தட்டுவிழைவு
ண்ட
ஞ்ச
ங்க
ந்த
ம்ப
ன்ற
தமிழ்-99 அமைப்பு முறையில் விதிமுறைகள் உள்ளன. இந்த அமைப்பு முறையை நடைமுறைப் படுத்தும் செயலிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் மேற்குறிப்பிட்ட இரண்டும் அடங்கும். செல்லினத்தில் உள்ள தமிழ்-99 விசைமுகமும் இவ்விரு விதிகளையும் முழுமையாகக் கடைப்பிடித்து வருகின்றது.

புள்ளி தவிர்ப்பு

தானாகச் சேர்க்கப்படும் புள்ளி வசதி, தட்டெழுத்தை எளிமைப் படுத்தினாலும், சில சொற்களை எழுதும் போது சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வேற்று மொழி சொற்களைத் தமிழில் எழுதும் போது இந்தச் சிக்கல் தோன்றலாம்.
‘பூதத்தின்’, ‘சமமாக’, ‘சுந்தரராஜன்’, ‘மனனம்’, ‘கெமமான்’ (மலேசியாவில் உள்ள ஊர்), போன்ற சொற்களை எழுதும்போது, தேவை இல்லாத இடத்தில் புள்ளி சேந்து விடும். ‘பூதத்தின்’ என்று எழுதினால் ‘பூத்ததின்’ என்றும் ‘மனனம்’ என்று எழுதினால் ‘மன்னம்’ என்றும் வந்துவிடும். இதைத் தவிர்ப்பதற்கு புள்ளி தேவையற்ற இடத்தில் ‘‘ எழுத்தைத் தட்டலாம்.
எழுத்துக்காட்டுகள்:
சொல்தட்டு
பூதத்தின்ப ஊ த  த த இ ன புள்ளி
சமமாகச ம  ம ஆ க
சுந்தரராஜன்ச உ ந த ர  ர ஆ ஜ ன புள்ளி
மனனம்ம ன  ன ம புள்ளி
கெமமான்க எ ம  ம ஆ ன புள்ளி

சொல்லின் தொடக்கத்தில் ஏற்படும் சிக்கல்

‘சச்சின்’, ‘சச்சரவு’, ‘தத்துவம்’, ‘பப்பி’, ‘பப்புவா’ (நியூகினி) போன்ற சொற்கலில் ஒரே எழுத்தை தொடக்கத்தில் மும்முறை தட்டவேண்டும்.
எ.கா:  ச ச ச இ ன புள்ளி எனத் தட்டினால், ‘சச்சின்’ என்பதற்கு பதில் ‘ச்சசின்’ என்று தவறாகத் தோன்றும்.
‘ச’ அடுத்தடுத்து வருவதால், முதல் எழுத்தில் புள்ளி தானாகச் சேந்துவிடுகிறது. இதைத் தடுப்பதற்கும் ‘‘ எழுத்தைப் பயன் படுத்தலாம்.
சொல்தட்டு
சச்சின்ச  ச ச இ ன புள்ளி
சச்சரவுச  ச ச ர வ உ
தத்துவம்த  த த உ வ ம புள்ளி
பப்பிப  ப ப இ
பப்புவாப  ப ப உ வ ஆ
குறிப்பு: சொல்லின் தொடக்கத்தில் ஏற்படும் இச்சிக்கல் ஆண்டிராய்டு-செல்லினத்தின் 4.0.4ஆம் பதிகையில் தீர்க்கப்பட்டு எளிமையாகப்படும். எனினும் இவ்வழிமுறையை தொடர்ந்து பின்பற்றலாம்.
நான் இங்கு பகிர்ந்துள்ள பதிவு ஆரம்பத்தில் நானும் இந்த பிரச்சனையை  மேற்கொண்டேன்.அதன் காரணமாக தான் இன்று இதை பகிர்ந்துள்ளேன்.இனி புதியதாக தமிழ் தட்டச்சு செய்யும் அனைவருக்கும் உதவும் என்ற நோக்கில் பகிர்ந்துள்ளேன்.
நன்றி.