சனி, 10 ஜூன், 2017

தி ப்பாட்டர்ஸ் ப்ரேயர்ஸ்

                            

ஒரு காலத்தில் பானை வியாபாரி ஒருவர் மண்பானைகளை செய்து கொண்டிருந்தார்.அவரது தொழில் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது எனினும் சிலர் அவரது பானை எளிதில் உடையக்கூடியதாக இருக்கிறது என்றனர்.ஆகையால் கடவுளிடம் வேண்டினார்.கடவுள் கண் முன்னே தோன்றிய பிறகு``என்னுடைய பானையை உடையாபடி செய்யுங்கள் ஆகையால் எனது வாடிக்கையாளர்கள் புகார் கூற மாட்டார்கள்’’ என்றார்.



            கடவுளும் அவரை வாழ்த்தி விட்டு மறைந்தார்.இப்பொழுது அவர் செய்யும் எல்லாப் பானைகளும் உடையாமல் இருந்தன.ஆனால் அவருடைய வாடிக்கையாளர்கள் புதிய பானையை வாங்காமல் இருந்தன.மறுபடியும் கடவுளிடம் தாயே நான் செய்தது பிழை எனது பானையை பழைய படி மாற்றிவிடுங்கள் என்றார்.நான் இயற்கைக்கு புறம்பாக மாற நினைத்தேன் அது எனது தவறுதான் என்னை மன்னித்துவிடுங்கள்.அவரது பிராத்தனையை கேட்டு அவரத் கோரிக்கையை நிறைவேற்றினார்.இப்போழுது அவரது தொழில் பழையபடி நன்றாக சென்றது.சில விஷயங்களை நாம் மாற்ற நினைக்கக் கூடாது.

                               தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக