செவ்வாய், 22 நவம்பர், 2016

தி ப்ராமின்’ஸ் ஸ்சர்வன்ட்

                                                      
 

ஒரு சோம்பேரி ஐயருக்கு நிறைய விலைநிலங்கள் இருந்தது.ஆனால்,அதில் எதையும் நிலத்தில் தூவாமல் அதனை சாகுபடிக்கு உதவாதபடி வைத்திருந்தான்.ஒரு நாள் அவர் வீட்டிற்கு துறவி ஒருவர் வந்தார்.அந்த துறவியை நன்கு கவனித்துக்கொண்டார் ஐயர்.அந்த துறவி ஐயருக்கு ஒரு மந்திரத்தை கூறி சென்றார்.அவர் சென்ற பின் அந்த மந்திரத்தை உச்சரித்தார். உடனே ஒரு பெரிய உருவம் அவர் முன் தோன்றியது.``எனக்கு வேலை கொடுங்கள் முதலாளி எனக்கு பசியாக இருக்கிறது,நான் என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் தின்றுவிடுவேன்’’.என்று கூறினான்.பயந்து போன ஐயர் உடனே அதற்கு வேலை கொடுத்தார்.


அதனை செய்த பின் விரைவாக அவர் கொடுத்த அனைத்து வேலைகளையும் செய்து முடித்தது.இப்பொழுது அந்த உருவத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லை.ஆனால்,எங்கே அந்த உருவம் தன்னை கொன்றுவிடும் என்ற பயத்தில்``அந்த நாயின் வாலை நிமிர்த்து’’.என்று கூறினார்.அதுவும் வெகுநேரம் முயற்சி செய்த பின் அந்த வேலை செய்ய இயலாது ஓடிவிட்டது.இதன்மூலம் உழைப்பால் ஈட்டும் பொருளே நிலையானது என்று கற்றுக்கொண்டார்.
                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

ப்லேம்

ஒரு நாள் ஒருவர் கடற்கரையோரம் நடந்துகொண்டிருந்தார்.அவர் நடந்துசெல்கையில் கடலில் ஒரு படகு முழுக்க பயணிகள் அனைவரும் படகு தடுமாரி தத்தளித்துக்கொண்டிருந்தனர்.அந்த படகு தண்ணீரில் மூழ்கியது,அனைத்து பயணிகளும் தண்ணீரில் விழுந்தன.அவர்களுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால்,ஒருவர் பின் ஒருவர் மூழ்க தொடங்கினர்.அதனை இவர் கரையிலிருந்து எதுவும் செய்ய இயல முடியாத நிலையில் நின்று பார்த்தார்.
      அன்று மாலை இந்த சோக செய்தியை தனது நண்பர்களுடன் பகிர்ந்தார்.அனைவரும் அந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தனர்.அதனைப் பார்த்த மனிதர்``கடவுள் ஒரு பாவியை தண்டிக்க அத்தனை அப்பாவிகளையும் ஏன் தண்டிக்கிறார்?’’,என்று கேட்டார்.இதனை செல்லிக்கொண்டிருக்கையில், அவர் காலில் ஒரு எறும்பு கடித்து அப்பொழுது ஆத்திரத்தில் அங்கிருந்த அனைத்து எறும்புகளையும் மிதித்து தள்ளினார்.அப்பொழுது கடவுள் அவர் முன் தோன்றி``பாரு நீ உன்னை கடித்த ஒரு எரும்பை மட்டுமல்லாமல் ஏனைய எறும்பை மிதித்து தண்டிக்கிறாய்? என்னை குறைசொல்லும் முன் உன் நடவடிக்கையைப் பார்’’ என்று கூறினார்.பின் அவன் தனது தவறை உணர்ந்தான்.
                                                                                                                (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

சனி, 19 நவம்பர், 2016

பழைய ஓய்வூதிய திட்டம் ...!!!



பழைய ஓய்வூதிய திட்டம் வல்லுநர் குழுவின் பதவிக் காலம் மேலும் நீட்டிப்பு | பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பரிந் துரைகளை உருவாக்க அமைக் கப்பட்ட வல்லுநர் குழுவின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு;  http://alleducationnewsonline.blogspot.in


Image result for ஓய்வு ஊதியம்




வெள்ளி, 18 நவம்பர், 2016

வர்த்லெஸ் ஆப்பிகேஷன்

                                                            வர்த்லெஸ் ஆப்பிகேஷன்
                                          --டைனி டாட் ஸ்டோரிஸ்
         

நல்ல கொலு கொலு தேகத்தை உடைய சு நிலத்தில் இருந்த புட்களை ருசித்துக் கொண்டிருந்தது.தன் வயிறு நிறையும் வரை அந்த புட்களை மேய்ந்துக் கொண்டிருந்தது.பிறகு தனக்கு அருகில் உள்ள ஓடைக்கு சென்று நீர் அருந்தியது.வயிறு நிறைந்தவுடன் சோம்பலாக உணர்ந்தது அந்த பசு.பிறகு தூங்க முடிவு செய்து நல்ல நிழல் தரும் பெரிய மரத்தடியில் உறங்கியது.ஒரு காகம் பக்கத்து ஊரிலிருந்து பறந்து பசியுடனும் கலைப்பாகவும் வந்தது.அங்கு கிடந்த ரொட்டித்துண்டு ஒன்றை தின்று பசுவின் முதுகில் உரங்கத் தொடங்கியது.

            சில நேரத்திற்கு பிறகு பசு எழுந்தது.உடனே அந்த காக்கை பசுவின் முன்னே வந்து விழுந்தது.காகம் பசிவிடம்,``அம்மா!நான் உங்கள் முதுகில் இவ்வளவு நேரம் உரங்கிக்கொண்டிருந்தேன்.உங்களுக்கு எனது பணிவான ``நன்றி’’ என்றது.பசு அதற்கு எந்த அவசியமும் இல்லை. உன்னுடைய இடையை நான் என் முதுகில் உணரவே இல்லை.நீ எப்பொழுது வந்தாய்,சென்றாய் என்றுகூட எனக்கு தெரியாது.``சிறிய காரியங்களுக்கு நீ நன்றிக்கடன் பட வேண்டாம்!’’ என்றது பசு.

தி கன்னிங் வுல்ஃப்

                                                              தி கன்னிங் வுல்ஃப்
                                        --டைனி டாட் ஸ்ரோடீஸ்
               

ஒருமுறை கடும் பசியுடன் இருக்கும்``ஓநாய்’’ காடுமுழுக்க இறையை தேடி அழைந்தது.மிக விரைவில் காட்டின் எல்லையை அடைந்தது.அங்கு ஒரு ஓடை ஓடிக்கொண்டிருந்ததுஅதன்வழியில் நடக்கையில் ஒரு சத்தம் அதன் காதில் விழுந்தது.ஒரு சிறிய``ஆட்டின்’’சத்தம் அது.பிறகு ஓநாய் மனம் நெகிழ்ந்தது.ந்த ஆட்டை உண்டு அந்த சுவையான தண்ணீரை குடிக்கலாம் என்று எண்ணியது.விரைவில் அந்த ஆடு சிறிய மலை உச்சியில் இருப்பதை கண்டறிந்தது.ஆனால்,அந்த மலைக்கு தாவ முயற்சிக்கையில் அந்த நரி தடுக்கி கீழே விழுந்தது.

            பின்பு தன் வழிக்கு அந்த ஆட்டை கொண்டுவர,``அந்த சிறிய மலையில் என்ன செய்கிறாய்?’’, என்று கேட்டது ஓநாய்.``நீ கீழே விழுந்துவிடுவாய் ங்கு வந்து பசுமையான புட்களை உண்டு,அந்த சுவைமிகுந்த தண்ணீரையும் பருகலாம் என்றது ஓநாய் தந்திரமாக.அதற்கு திறமையான ஆடு,``இல்லை ஓநாய் ஐயா நான் இங்கு நன்றாக இருக்கிறேன். எனக்கு போதிய உணவு இங்கு கிடைக்கிறது என்றது.’’அப்பொழுது சூழ்ச்சியைவிட சாமார்த்தியம் வலிமையானது என்று எண்ணி அங்கிருந்து சென்றது.