வெள்ளி, 3 ஜூன், 2016

சனிக்கிரகத்தில் நிலவுகள்


                    சனிக்கிரகத்தில் நிலவுகள்

முன்னுரை

     இரவு நேரங்களில்  நிலவின் ஒளியை இரசிக்காதவர் யவரேனும்  உண்டா?? இத்தகைய நிலவு பூமியில் மட்டும் தான் உள்ளதா? என்று கேட்டால் இல்லை. சனிக்கிரகத்திலும் நிலவுகள் உள்ளன. அதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

ஆறாவதுகோள்

சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் சனி கிரகம் ஆறாவதாக இருக்கிறது. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு முறை சூரியனை சுற்றி வர 29% ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி 34 நிமிடம் நேரம் ஆகிறது. சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக் கோளினுள் சரியாக 763 பூமிகளை உள்ளடக்கிவிடலாம். அவ்வளவு பெரியது. இருந்தாலும் சனியின் எடை பூமியை விட 95 மடங்கு தான் அதிகம். இதிலிருந்து சனி ஒரு பெரிய வாயுக்கோளம் என்பதையும், கடினமாக இருக்கும் அதன் உட்பகுதி மிகச் சிறியது என்பதையும் ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

ஈர்ப்புவிசை

சனியின் சராசரி அடர்த்தி 0.71 என குறைவாக இருக்கிறது. சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்கு தான் அதிகம். பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதன், சனியில் 82 கிலோ இருப்பான். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், சனியின் சராசரி வெப்பநிலை மிக மிக குறைவாகவே இருக்கிறது. சனியின் காற்று மண்டலத்தில் அம்மோனியா குறைந்து போவதால் கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாக காணப்படுகிறது.

சனிக்கிரகத்தில் நிலவுகள்

நமது பூமிக்கு ஒரு நிலவு என்றால் சனிக்கு 62 நிலவுகள். இந்த நிலவுகளின் மொத்த அளவில் 90% “டைட்டான்” என்ற ஒரு நிலவு மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இது கிட்டத்தட்ட நமது பூமி அளவுக்கு பெரியது. சனியின் இரண்டாவது பெரிய நிலவான “ரியா”வுக்கு சுற்று வளையங்கள் உண்டு. 10 கி.மீ.க்கும் குறைவான  விட்டம் கொண்ட நிலவுகள் 34 இருக்கின்றன. 10கி.மீ இருந்து 50 கி.மீக்குள் விட்டம் கொண்ட நிலவுகள் 44 இருக்கின்றன. இவை தவிர மீதமுள்ள மிகச் சிறிய அளவுகள் கொண்ட நிலவுகள் சனியில் இருக்கின்றன.

சிறப்பம்சம்

பிற கோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் கோளின் நடுப்பகுதியைச் சுற்றி இருப்பது சனியின் சிறப்பம்சமாகும். சனியைப் பற்றி பல புதிர்களில் அதன் வளையம் தான் மிக முக்கியமானது. வியாழனுக்கும், யுரேனசுக்கும் இது போன்ற வளையம் உள்ளது. ஆனாலும் சனிக்கு இருப்பதைப் போல குறிப்பிடும் படியாய் அதுக்கு இல்லை. சனி வளையங்களைப் பற்றிய உண்மைகளை 1981 “வாயேஜர்” விண்கலம் மூலம் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. கோடிக்கணக்கான பனிக்கட்டிகள், சிறியதும் பெரியதுமாய் துணைக்கோள்கள் போலச் சுற்றி வருகின்றன. அவை கூட்டம் கூட்டமாக பிரிந்து பரந்த இடைவெளியுடன் கூடிய பல வளையங்களாக தோன்றுகின்றன என்பதும், இவ்வாறு ஆயிரக்கணக்கான வளையங்கள் அதில் உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. சனியின் துணைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியதால் இந்த வளையங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சனிக்கு அருகில் உள்ள வளையங்கள் வட்ட வடிவமாகவும், தள்ளி உள்ளவை முட்டை வடிவமாகவும் காணப்படுகின்றன.

முடிவுரை

சனி வளையத்தின் கட்டமைப்பு சீர்குலையமால், கோடிக்கணக்கான துகள்கள் எப்படி சீராக ஒரு குறிப்பிட்ட வளையத்தினுள் இயங்கி வருகின்றன என்பது இன்றும் புரியாத ஒரு விசயமாகவே இருந்து வருகிறது. வருங்கால விஞ்ஞான வளர்ச்சி இதற்கும் விடை கொடுக்கும். மேலும் சனிக்கிரகத்தில் குடியேறும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அகஸ்டின் காச்சி


                  
              

     


     அகஸ்டின் காச்சி பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணிமமேதை ஆவார்.  கணிதத்தல் பல்வேறு கடினமான கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து உலகிற்குக்கு கூறியவர் இவர்.
     காச்சி 1789 ஆம் ஆண்டு பாரீஸ் நகரத்தில் பிறந்தார்.  இவர் சிறுவயதிலேயே கணிதத்தில் ஆற்றலும் ஆர்வமும் கொண்டு விளங்கினார்.  இவரது கணித ஆற்றலைக் கண்டு வியந்த கணிதமேதை “லாக்ரேஞ்ஜ்” காச்சியின் கல்வியில் பெரிதும் அக்கறை கொண்டார்.
     காச்சி தனது 16 ஆவது வயதில் எகோல் பாலிடெக்னிக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, கட்டடக்கலை பொறியாளா் பட்டம் பெற்றார்.  1819 ஆம் ஆண்டு, தனது 18ஆவது வயதிலேயே உதவிப் பொறியாளராக உயர்ந்தார்.  அதன்பிறகு கப்பல்படைத்தளக் கட்டுமானப் பணிக்காக பாரீஸ் நகரத்திலிருந்து “செர்போர்க்” என்னும் நகருக்குச் சென்றார்.  அங்கு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த காச்சி, உடல்நிலை பாதிப்படைந்து மீண்டும் பாரீஸ் நகருக்கே திரும்பி வந்தார்.
     பாரீஸ் வந்தபிறகு இவர் பல கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.  தனது கணித ஆராய்ச்சியின் விளைவாக 1812ஆம் ஆண்டு “ஒத்த அமைப்புடைய எண்களின் செயல்பாடுகள்” (symmetric function) பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.  இக்கட்டுரையே பின்னாளில் குழுஎண்களின் தோற்றத்திற்கு (Group theory) அடித்தளமாக அமைந்தது.
     காச்சிக்கு நாளடைவில் பொறியாளர் பணியில் சலிப்பு தோன்றியது.  அவர் தனக்கு ஆர்வமான கணிதத் துறையிலேயே பணி தேட ஆரம்பித்தார்.   அல்ஜீப்ரா சமன்பாடுகளின் எண்களைத் தீர்மானிக்கும் வழி முறைகள் பற்றி கற்றறிந்தார்.
     காச்சியின் ஆர்வத்திற்கு ஏற்ப, எதோல் பாலிடெக்னிக்கிலேயே அவருக்கு உதவிப் பேராசிரியா் பணி கிடைத்தது.  விரைவிலேயே அவர் இயந்திரவியல் துறையின் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
    அல்ஜீப்ராவில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் புரிந்து வந்த காச்சி, புதிய கருத்தொன்றை தனது ஊகத்தின் அடிப்படையில் கூறினார்.  அக்கருத்து, ”முழு எண்கள் தானாகவே கூட்டு எண்களாக தாறுவது போல, ஒடுங்கும் எண்களின் தொடரானது விரிவடையும் எண்களின் தொடராகவும் மாறும்” என்பதாகும்.
    காச்சியின் இக்கண்டுபிடிப்புகள் பின்னாளில் கூட்டு எண்களைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட பல கணித மேதைகளுக்கு உதவியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    இவர் 1825 ஆம் ஆண்டு “எக்ஸர்ஸைஸஸ் ஆன் மேத்தமேடிக்ஸ்” (Exercise on Mathematics) என்னும் மாத இதழ் ஒன்றை ஆரம்பித்து பயிற்சிகளை வெளியிட்டார்.  அப்பயிற்சிகள் ஐந்து பாகங்கள் வெளியாகின.  காச்சி தனது கணித ஆராய்ச்சியின் மூலமாக 17-ன் வர்க்க மூலத்தை பத்தின் பின்ன இலக்கங்களாகக் கண்டறியும் வழி முறையைக் கூறினார்.
     இவர் தனது வாழ்நாளில் மொத்தம் 789 கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.  கூட்டு எண்களின் திறனறியும் நவீன கணிதத்தைப் பற்றிய பல உண்மைகளை அவர் கண்டறிந்து கூறினார்.  அவரது கணித ஆராய்ச்சியில் “பலகோணம்” என்னும் வடிவம் முக்கியத்துவம் பெற்றது.
     காச்சி கணிதத்தில் மட்டுமின்றி ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கி, ஏழைகள், ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பலருக்கும் பல உதவிகள் செய்தார்.
    “திரவங்களில் அலைகளை ஊடுருவச் செய்தல்” பற்றிய ஆராய்ச்சிக்காக பிரெஞ்சு அகாடமி விருதைப் பெற்றார்.
குறிப்பு – படித்ததில் பிடித்தது

வியாழன், 2 ஜூன், 2016

ஜான் எஃப் கென்னடி

                                              Image result for ஜான் எஃப் கென்னடி

அமெரிக்க நாட்டின் முப்பத்தைந்தாவது குடியரசுத் தலைவர். கென்னடியும் அவரது மனைவி ஜாக்குலின் கென்னடியும் உலக மக்களை அப்படியே கவர்ந்து இழுத்தார்கள்.
     கென்னடி குடியரசுத் தலைராக ஆவதற்கு அவருடைய தந்தையால் உருவாக்கப்பட்டவர். அவருடைய தந்தை முதலில் கென்னடியின் மூத்த சகோதரரைத்தான் அந்தப் பதவிக்கு உருவாக்கி வந்தார். அவரின் எதிர் பாராத மரணம், கென்னடியை அந்த பதவிக்கு ஏற்றவராக அவரது தந்தையை தீர்மானிக்க வைத்தது.
     கென்னடி அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றப்போது அவர் ஆற்றிய உரை உலகப் புகழ் வாய்ந்தது.
     ‘     உன்னுடைய நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; உன்னுடைய நாட்டிற்கு நீ என்ன செய்யப் போகிறாய் என்று சொல் ’ என்ற அவருடைய உரை புகழ் பெற்றது.
     ’ அமெரிக்காவின் குடிமகனாக இருந்தாலும், உலகத்தின் குடிமகனாக இருந்தாலும் சக்தியும், தியாகமும் அவசியம் என்று ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்’ என்று விரும்பினார்.
     அவரது காலக்கட்டத்தில் கியூபா பிரச்சனை, வியட்நாம் யுத்தம் எல்லாம் அவருக்கு ஏராளமான தலைவலியைக் கொடுத்த பிரச்சனைகள். உள்நாட்டில் அப்பிரிக்க – அமெரிக்கர்களுக்கு மேலும் பல சலுகைகள் கிடைக்க ஆதரவு தெரிவித்தார்.
     விண்வெளி ஆராய்ச்சியில் இன்று அமெரிக்கா முன்னணியில் நிற்பதற்கும், சந்திர மண்டலத்திற்கு விண்வெளி வீரர் அனுப்பப்பட்டு அவர் பூமிக்குத் திரும்பி வந்ததும், கென்னடி விண்வெளி ஆராய்ச்சிக்கு அளித்த உற்சாகாமான ஆதரவினால் தான்.
     அவரது உற்சாகமான பேச்சைக் கேட்ட பிறகுதான், பத்து வருடத்திற்குள் சந்திர மண்டலத்துக்கு மனிதனை அனுப்பி திருப்பிக் கொண்டு வரவேண்டும் என்று ஆராய்ச்சிகள் அதிவேகத்தில் நடைபெறத் தொடங்கின.
     மக்களின் மனதைக் கவர்ந்த ஜான் எஃப் கென்னடி 1963 ஆம் வருடம் நவம்பர் 22 ஆம் நாள், ஆஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
     1961 ஆம் வருடத்தில் கென்னடி அமெரிக்க குடியரசுத் தலைவராக பதவியேற்ற போது அவருக்கு வயது 43 தான். அமெரிக்காவின் சரித்திரத்திலேயே மிகவும் இளமையான குடியரசுத் தலைவர் என்று பாராட்டப்பட்டவர்.


                                (படித்ததில் பிடித்தது)

ஸ்டீவன் ஆலென் ஸ்பீல்பெர்க்

                                             
Image result for ஸ்டீவன் ஆலென் ஸ்பீல்பெர்க்

இவர் யார்? என்று சட்டென்று புரிந்து கொள்ளாதவர்கள் கூட, இவர் தயாரித்த ஜாஸ், ஈ.டி, ஜூராஸிக் பார்க் போன்ற படங்களைப் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள்.
     ஜூராஸிக் பார்க் படம் பார்த்த போது ஒரு பெரிய டயனேஸர் ஒன்று நம்மை துரத்திக்கொண்டு வருவதைப் போல பார்த்து பயந்து அலறியது உங்கள் நினைவுக்கு வருகிறது அல்லவா? மிகமிக வித்தியாசமான படங்களை எடுத்து புகழ் பெற்றவர் ஸ்பீல்பெர்க்.
     உலக அளவில் சிறந்த டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர். பல ஆஸ்கார் விருதுகள் வாங்கி இருக்கிறார். இவரது படங்கள் உலக அளவில் அதிக வசூலைத் தந்து வருகின்றன. அமெரிக்காவில் ஓகையோ மாநிலத்தில் சின்சினாட்டி என்னும் இடத்தில் 1946ஆம் வருடம் பிறந்தவர் இவர். தந்தை ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவரது இளமைக் காலம் ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பதை உணர்த்தியது.
     இவர், தனது சிறு வயதிலேயே 8 மில்லி மீட்டர் திரைப்படங்களைத் தயாரித்து தன் நண்பர்களிடம் போட்டுக் காண்பிப்பதில் ஆர்வம் காட்டினார். வீடே தான் திரையரங்கு. ஜன்னல்களுக்கு கருப்புத் திரைகளைப் போட்டு இருட்டாக்கி படத்தைக் காட்டினார். கட்டணம் உண்டு 25 சென்ட்(ஒரு டாலர் 100 சென்ட்) சினிமா என்றால் தின்பண்டம் இல்லாமலா? இவரது சகோதரி பாப்கான் விற்றார்.
     1958 ஆம் வருடத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது சாரணர் படையில் சேர்ந்த அவர், ‘தி லாஸ்ட் கன் ஃபயிட்’ என்னும் படத்தை 8 மில்லி மீட்டரில் எடுத்தார். அதற்கு பரிசும் பாராட்டுகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து தனது பதின்மூன்றாவது வயதில் அவர் தயாரித்த, ‘எஸ்கேப் டூ நோ வேர் ‘ என்னும் 40 நிமிட படத்திற்கு விருது கிடைத்தது. யுத்தத்தின் விளைவுகளை பற்றிய படம் இது. மிகவும் இளம் வயதில் திரைப்படம் தயாரித்து அதற்கு விருதும் பெற்றவர் ஸ்பீல்பெர்க்.

                                (படித்ததில் பிடித்தது)

எங்கள் வலைப்பூவின் வண்ணங்கள்..!!




பேரன்புடையீருக்கு வணக்கம்,

எங்கள் வலைப்பூவின்  இப்பதிவு மிகவும் முக்கியமான ஒன்றாக அமையவுள்ளது.வலைப்பதிவர்களுக்கும்,வாசகர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.

புதன், 1 ஜூன், 2016

அனி ஃப்ராங்க்

                                                          
Image result for anne frank

1942 ஆம் காலகட்டத்தில் அந்தச் சிறுமி எழுதிய நாட்குறிப்பு உலகப் புகழ் பெற்றது.
     ஜெர்மெனியை ஹிட்லர் ஆண்ட காலகட்டம். ஹிட்லர் மது அருந்துவதில்லை. சைவ சாப்பாடு. சித்திரம் வாரைவதில் ஆர்வம் உண்டு. இது போன்ற நல்ல குணங்கள் கொண்ட ஒருவர் மிகவும் நல்லவராகத்தானே வாழ்ந்திருக்க வேண்டும்!
     ஆனால் அவ்வாறு இல்லை. மிகவும் கொடூரமானவனாக வாழ்க்கை நடத்தினார். யூதர்களைக் கண்டால் அவ்வளவு வெறுப்பு. லட்சக்கணக்கான யூதர்களை விஷ வாயு உள்ள ஒரு அறையில் அடைத்து அந்த விஷக் காற்றை அவர்கள் சுவாசிக்கச் செய்து மடிய வைத்தவர். அந்த காலகட்டத்தில் அறுபது லட்சம் யூதர்கள் இவ்வாறு கொல்லப்பட்டனர். அனி ஃப்ராங்க் யூத இனத்தை சேர்ந்தவள்.
     1923 ஆம் ஆண்டில் ஃப்ராங்க்பர்ட்டில் பிறந்தவர் அனி ஃப்ராங்க். அவரது பெற்றோர்கள் 1933 இல் ஆம்ஸ்டர்டாம் வந்தார்கள். 1941 காலகட்டத்தில் ஹிட்லரின் ஆட்கள் யூதர்களை துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.
அந்த காலகட்டத்தில் அனி ஃப்ராங்கும் இன்னும் சிலரும், ஓட்டோ ஃபிராங்க் என்பரவது வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். இவரது வீட்டில் ஒரு புத்தக அலமாரி இருந்தது. அதன் பின் ஒரு ரகசிய அறை இருந்தது. அனி ஃப்ராங்க்கும் மற்றவர்களும் அந்த சிறிய அறையில் தான் தங்கி இருந்தார்கள். அனி ஃப்ராங்க் தான் ரசித்தது, பார்ததது, தன்னை பாதிக்க வைத்தது, பார்த்து கொதித்தது போன்ற பல சம்பவங்களை மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ள படியே எழுதி வந்தார். 1942 ஆம் வருடம் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் எழுத ஆரம்பித்தார். 1944 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரை எழுதி இருக்கிறார். இந்த நாட்குறிப்பு ஹிட்லரின் காலக்கட்டத்தில் நடந்த கொடுமைகளையும் சித்தரிக்கிறது.
     இந்த நாட்குறிப்பு உலகின் பல மொழிகளில் பிரசுரமாகி இருக்கிறது. தான் எழுதிய நாட்குறிப்பு புத்தகத்தை தனது நெருங்கிய நண்பனாகக் கருதினாள். அனி ஃப்ராங்க் தங்கியிருந்த இடம் தற்போது ஒரு அருங்காட்சியகமாக 1960 முதல் திகழ்ந்து வருகிறது. அங்கே அவர் கைப்பட எழுதிய அவரது நாட்குறிப்பு புத்தகமும் காணப்படுகிறது.
     பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்ற இந்த நாட்குறிப்பை, மரண பயத்துடன் எழுத தொடங்கும் போது அவருக்கு வயது 13 தான்.
     போர் வகை இலக்கியத்தில் உன்னதப் படைப்பான இந்நூல் 1947 இல் ஆங்கிலத்தில் “தி டயரி ஆப் தி யங் கேல்” என்னும் பெயரில் வெளிவந்தது.

                                     (படித்ததில் பிடித்தது)

பள்ளியின் முதல் நாள்...

                                      
Image result for பள்ளியின் முதல் நாள்

என்னமோ பட்டப்படிப்பு படிப்பது போல
தேவையானதை எல்லாம் தயார் செய்ததும்!
அ, ஆ போட்டு போட்டு பழகியதும்!
போகும் வழியில் அனைவரிடமும் பள்ளிக்குச்
செல்வதை தெரியமாய் கையசைத்து கூறியதும்! ஆனால்
பள்ளியில் நுழைந்ததும் பயம் தொற்றிக்கொண்ட நிமிடங்களும்!
காதிற்கு கை எட்டவில்லை என்றாலும் எட்டி எட்டி
     காதை தொட்டு ஏமாற்றியதும்!
அம்மாவின் கையை பற்றி இருக்கும் வரை
     இருந்த அந்த நம்பிக்கை ஆசிரியர் என்
கையை பிடித்து கூப்பிடும் போது கண்ணீராய் கரைந்ததுமாக
     இப்படி, கண்களில் கண்ணீர் வடித்த அந்த
பள்ளி முதல் நாள் இன்று நினைத்தால்
     இதழ்களில் புன்னகை தவழ்கிறது!

    



வலைத்தளம் ’திறப்பதற்கு’ அதிக நேரமாகிறதா..??





உங்கள் வலைத்தளம் (ஓபன்) திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா..??அப்படியானால் நீங்கள் படிக்க வேண்டிய விஷயமாக  இப்பதிவு அமையவுள்ளது.

பென் டிரைவில் வைரஸ் தாக்கினால்..!!!






தற்போது தகவல்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுவை யு.எஸ்.பி,பென் டிரைவ்கள்.இதில் முக்கியமான பிரச்சனை ’வைரஸ்’ தான்.வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென் டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
அவ்வாறு பாதிக்கும் போது உங்கள் பென் டிரைவில் உள்ள பைல்கள்  மறைக்கப்பட்டு விடும்.கணினியில் பென் டிரைவை திறந்தால் எந்த பைலும் இருக்காது.காலியாக இருக்கும்.ஆனால் ‘பிராப்பர்டீஸ்’ சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.காரணம் நம் தகவல்களை வைரஸ் மறைத்து வைத்துவிட்டது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் பார்மட்(format) செய்து பென் டிரைவை திரும்பப் பெறலாம்.ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்தப் பைல்களை பத்திரமாக மீட்பது என்று பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மெனபொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாகச் செய்துவிடலாம்.கீழே உள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றி பைல்களை மீட்டெடுக்கலாம்.
 



1.முதலில் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகிக் கொள்ளுங்கள்.
2.Start-Run-CMD-Enter கொடுக்கவும்.
3.இப்பொழுது பென் டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்று பாருங்கள்.மை கம்ப்யூட்டர் செல்வதன் மூலம் அதைக் கண்டறியலாம்.
4.உதாரணமாக E என்ற டிரைவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அதற்கு நீங்கள் E என்று கொடுத்து ‘என்டர்’ அழுத்த வேண்டும்.
5. attrib s h/s/d *.* என டைப் செய்யுங்கள்.ஒவ்வொரு பகுதிக்கும் சரியான ஸ்பேஸ் கொடுக்கவும் .நீங்கள் சரியாகக் கொடுத்துள்ளீர்கள் என்று உறுதி செய்துகொண்டு என்டரை அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள்.இப்போது உங்கள் பென் டிரைவை சோதித்துப் பாருங்கள்.பைல்கள் அனைத்தும் திரும்ப வந்திருக்கும்.