ஆர்ப்பாட்டம் எதுவும் இன்றி சாதனை படைக்கும் நிறுவனம் என்றால் சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையை சொல்லலாம். “இன்டிக்ரல் கோச் பேக்டரி” எனப்படும். இது, சென்னையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று.இங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் வேலை செய்கிறார்கள்.
ஞாயிறு, 24 ஏப்ரல், 2016
புதன், 20 ஏப்ரல், 2016
தமிழ் எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள்
முன்னுரை
தமிழ்
எழுத்துகளின் வகைகளையும் அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழ் எழுத்துக்களை உயிர்
எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என
இரண்டு வகையாக பிரிக்கலாம்.
உயிர் எழுத்துக்கள்
அ முதல் ஔ வரை
உள்ள 12 எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறோம். உயிர் இன்றி எந்த உயிரும்
உயிர் வாழ முடியாது, அதுபோல உயிர் எழுத்துக்கள் இன்றி எந்த எழுத்தையும் உச்சரிக்க முடியாது.
பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படையாக இருப்பதால் உயிர் எழுத்து எனப் பெயர் பெற்றது.
உயிர் எழுத்துக்களை தனியே ஒலிக்கலாம். உதாரணமாக அ-பசு, ஈ-உயிரினம்.
மெய் எழுத்துக்கள்
க் முதல் ன் வரை
உள்ள 18 எழுத்துக்கள் மெய் எழுத்துகள் எனப்படும். மெய் எழுத்துக்களை தனியே ஒலிக்க முடியாது.
தனியே ஒலித்தால் பொருள் தராது. க் தனியே ஒலித்தால் எந்த பொருளும் தராது. உயிர் இன்றி
மெய் இயங்காது.
க் என்ற மெய் எழுத்திற்கு
முன்னால் “இ” என்ற உயிரும் பின்னால் “உ” என்ற உயிரும் மென்மையாக சேரும் போது க் என்ற
மெய் எழுத்து தோன்றுகிறது.
உயிர்மெய்எழுத்துக்கள்
க முதல் ன வரை
உள்ள 216 எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எனப்படும். உயிரும் மெய்யும் சேர்ந்து
தோன்றுவது உயிர்மெய் எழுத்தாகும். க் என்ற மெய் எழுத்தோடு “அ” என்ற உயிர் சேர்ந்தால்
“க” என்ற உயிர்மெய் எழுத்து தோன்றுகிறது. இவ்வாறே பிற எழுத்துக்களும் தோன்றுகிறது.
மாத்திரை
உயிர் மெய் எழுத்தை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு மாத்திரை எனப்படும். ஒரு முறை கண்ணிமைக்கும்
நேரம் அல்லது ஒரு முறை கைநொடிக்கும் நேரம் ஒரு மாத்திரை எனப்படும். எழுத்துக்களுக்கு
ஏற்றார் போல் கால அளவு மாறுபாடுகிறது.
குறில் எழுத்துக்கள்
ஒரு எழுத்தை உச்சரிக்க
எடுத்துக் கொள்ளும் கால அளவு குறைவாக இருந்தால் அது குறில் எனப்படும். அ, இ, உ, எ, ஒ போன்ற எழுத்துக்கள் ஒலிக்க குறைந்த கால அளவு அதாவது ஒரு மாத்திரை கால அளவு
எடுத்துக் கொள்வதால் இது குறில் எனப்படுகிறது.
நெடில் எழுத்துக்கள்
ஒரு எழுத்தை உச்சரிக்க
எடுத்துக் கொள்ளும் கால அளவு அதிகமாக இருந்தால் அது நெடில் எனப்படும். ஆ, ஈ, ஊ, ஏ,
ஓ, ஔ போன்ற எழுத்துக்களை உச்சரிக்க அதிக கால அளவு அதாவது இருமாத்திரை கால அளவு எடுத்துக்
கொள்வதால் இது நெடில் எனப்படுகிறது.
மெய் எழுத்திற்குரிய
மாத்திரை
மெய் எழுத்துக்கள்
குறுகிய காலத்தில் மறைந்து விடும். மெய் எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால
அளவு அரை மாத்திரை ஆகும். உயிரும் மெய்யும் சேரும் போது உயிர் தெரியாது மெய் மட்டுமே
தெரியும். க் என்ற மெய் எழுத்தோடு அ என்ற உயிர் எழுத்து சேரும் போது க என்ற உயிர்மெய்
தோன்றும் க என்ற மெய்யே தெரியும். அ என்ற உயிர் எழுத்து தெரியாது.
ஆய்த எழுத்து
ஆய்த எழுத்து எப்போதும்
உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் தான் இருக்கும். அஃது என்ற சொல்லில் வருவது போல உயிர்மெய்
நடுவில் மட்டுமே ஆய்தம் இடம்பெறும். எனவே இது உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் வைக்கப்படுகிறது.
ஆய்த எழுத்து ஒலிக்க ஆகும் கால அளவு சில இடங்களில் ஒரு மாத்திரையாகவும் சில இடங்களில்
இரண்டு மாத்திரையாகவும் இருக்கும்.
முடிவுரை
இத்தகைய பாகுபாடு தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை எனலாம். தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இக்கட்டுரையில் தமிழ் எழுத்துக்களின் வகைகளையும் அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு பற்றியும் பார்த்தோம்.
செவ்வாய், 19 ஏப்ரல், 2016
குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்
குழந்தைகள்
பயத்துக்கு பெற்றோரே காரணம்
முன்னுரை
ஒரு குழந்தைப் பயப்படுகிறது என்றால், உடனே நாம் பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும் போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பொற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.
இளங்கன்று பயமறியாது
பெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும் போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது. மாறாக பெரியவர்களுக்கு பயந்து குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ “பூச்சாண்டி வருகிறான்” என்று பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க
அவங்க வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க என்கிறது ஒரு பாடல்.
பயத்தின் அறிகுறிகள்
அதேபோல், “இவனுடன் பேசாதே”, “அவனுடன் பேசாதே” என்று கூறி வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருவித பய உணர்ச்சியோடு வளருவார்கள். பயத்தை உளவியலாளர்கள் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். உடல் ரீதியான பயத்திற்கு அதிக வியர்வை, வழக்கத்தை விட அதிகமான இதயத்துடிப்பு போன்றவை அறிகுறிகள். எவ்வளவு பெரிய சோகம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதும், முகத்தை கடுமையாக உர்ரென்று வைத்துக் கொள்வதும் உணர்வு ரீதியான பயத்தின் வெளிப்பாடுகள். பெரியமீசையோடு திரிபவர்களுக்குத்தான் அதிக பயம் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். பேய்ப் படங்கள் பயத்தை தருவதற்கு மட்டும் அல்ல, பயத்தைப் போக்குவதற்கும் பயன்படுமாம். அதற்காகவே சிலர் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.
பயத்திற்கான காரணங்கள்
பயத்துக்கான காரணங்களில் ஒன்று, அளவு கடந்த எச்சரிக்கை உணர்வு கொண்டது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே எதிர்மறையாக, நடந்து விடுமோ என்று பூதாகரமாக கற்பனை செய்து கொள்வதில் பயம் தொடங்குகிறது. மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறி கீழே விழுந்துவிடுமோ, பயணம் செய்யும் பேருந்து விபத்தில் சிக்கி விடுமோ, பாலத்துக்கு அடியில் போகும்போது அந்த பாலம் இடிந்து தம் தலையில் விழுந்து விடுமோ என்றெல்லாம் நிறைய பேர் பயப்படுவதுண்டு. இத்தகைய பயத்தைப் போக்க முதலில் குழந்தைகளை வெளியுலகோடு பழக விட வேண்டும்.
முடிவுரை
வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து வீடியோ கேம்ஸ் ஆடவிடும் போது அவர்களுக்கு பயமும் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அதிகமாகி விடுகிறது. அதுமட்டுமல்ல, உடன் பழகும் நண்பர்கள் பயம் மிக்கவர்களாக இருந்தால், உங்களுக்கும் அந்த பயம் குணம் தொற்றி கொள்ளும் என்கிறார்கள். மனநல மருத்துவர்கள்.
முன்னுரை
ஒரு குழந்தைப் பயப்படுகிறது என்றால், உடனே நாம் பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும் போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பொற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.
இளங்கன்று பயமறியாது
பெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும் போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது. மாறாக பெரியவர்களுக்கு பயந்து குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ “பூச்சாண்டி வருகிறான்” என்று பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க
அவங்க வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க என்கிறது ஒரு பாடல்.
பயத்தின் அறிகுறிகள்
அதேபோல், “இவனுடன் பேசாதே”, “அவனுடன் பேசாதே” என்று கூறி வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருவித பய உணர்ச்சியோடு வளருவார்கள். பயத்தை உளவியலாளர்கள் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். உடல் ரீதியான பயத்திற்கு அதிக வியர்வை, வழக்கத்தை விட அதிகமான இதயத்துடிப்பு போன்றவை அறிகுறிகள். எவ்வளவு பெரிய சோகம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதும், முகத்தை கடுமையாக உர்ரென்று வைத்துக் கொள்வதும் உணர்வு ரீதியான பயத்தின் வெளிப்பாடுகள். பெரியமீசையோடு திரிபவர்களுக்குத்தான் அதிக பயம் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். பேய்ப் படங்கள் பயத்தை தருவதற்கு மட்டும் அல்ல, பயத்தைப் போக்குவதற்கும் பயன்படுமாம். அதற்காகவே சிலர் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.
பயத்திற்கான காரணங்கள்
பயத்துக்கான காரணங்களில் ஒன்று, அளவு கடந்த எச்சரிக்கை உணர்வு கொண்டது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே எதிர்மறையாக, நடந்து விடுமோ என்று பூதாகரமாக கற்பனை செய்து கொள்வதில் பயம் தொடங்குகிறது. மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறி கீழே விழுந்துவிடுமோ, பயணம் செய்யும் பேருந்து விபத்தில் சிக்கி விடுமோ, பாலத்துக்கு அடியில் போகும்போது அந்த பாலம் இடிந்து தம் தலையில் விழுந்து விடுமோ என்றெல்லாம் நிறைய பேர் பயப்படுவதுண்டு. இத்தகைய பயத்தைப் போக்க முதலில் குழந்தைகளை வெளியுலகோடு பழக விட வேண்டும்.
முடிவுரை
வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து வீடியோ கேம்ஸ் ஆடவிடும் போது அவர்களுக்கு பயமும் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அதிகமாகி விடுகிறது. அதுமட்டுமல்ல, உடன் பழகும் நண்பர்கள் பயம் மிக்கவர்களாக இருந்தால், உங்களுக்கும் அந்த பயம் குணம் தொற்றி கொள்ளும் என்கிறார்கள். மனநல மருத்துவர்கள்.
சனி, 16 ஏப்ரல், 2016
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் எப்படி..??
அன்புடையீருக்கு வணக்கம்,
கடந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடுவர்களை பற்றி பார்த்தோம்.இப்பொழுது பங்குச் சந்தையில் எவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி காணலாம்.
கடந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடுவர்களை பற்றி பார்த்தோம்.இப்பொழுது பங்குச் சந்தையில் எவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி காணலாம்.
செவ்வாய், 12 ஏப்ரல், 2016
அலுவலகங்கள்
ஹந்தி – கார்யாலய் தமிழ் – அலுவலகங்கள்
1.ஆயகர் கார்யாலய் - வருமானவரி அலுவலகங்கள்
2.ஸர்காரீ தஃப்தர்
சாஸகீய கார்யாலய் - அரசாங்க அலுவலகங்கள்
3.டாக்கர் - தபால் நிலையம்
4.த்தானா - காவல் நிலையம்
5.ரேல்வே ஸ்டேஷன் - ரயில்வே ஸ்டேஷன்
6.புஸ்தகாலய் -நூலகம்
7.பைங்க் - வங்கி
8.அதாலத் நியாலய் - நீதிமன்றம்
9.பத்ரிகா கார்யாலய் - பத்திரிக்கை அலுவலகம்
10.பத்தன் நியாஸ் - துறைமுகம்
திங்கள், 11 ஏப்ரல், 2016
ஏலாதி
முன்னுரை:
பதிணெண் கீழ்கணக்கு
நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் கணிமேதாவியர். இது 80 வெண்பாக்களைக் கொண்டது.ஏலம் முதலிய
வாசனைப் பொருட்களை சேர்த்து தயாரிக்கும் மருந்தை ஏலாதிப்பொடி என்றும் ஏலாதிக் குளிகை
என்றும் கூறுவர். இதை போன்று மனதிற்கு உகந்த நல்ஒழுக்கங்களை முதலாவதாக வைத்து புனையப்பட்ட
பாடல்களை உடையதால் இது ஏலாதி எனப்பட்டது.
பெரியோர்க்கு உரிய தன்மைகள்:
தானே ஒருவனை கொலை செய்யாமல் இருத்தல். பிறர் கொலை செய்தலையும்
விரும்பாதல், பொய் சொல்லாமல் இருப்பவர் பிறர் மனைவியை விரும்பாதவர். கீழ்மக்களுடன்
சேர்தலை விரும்பாதவர். தீய சொற்களை பேசாமல் இருத்தல் ஆகிய இயல்புகள் பெருந்தன்மையில்
பெரியவனுக்கு உரியனவாம்.
எளிது அரிது:
சாவது எளிது, அரிது,
சான்றாண்மை, நல்லது
மேவல் எளிது, அரிது,
மெய்போற்றல், ஆவதன் கண்
சேறல் எளிது, நிலை அரிது,
தெள்ளியர் ஆய்
வேறல் எளிது, அரிது,
சொல்.
விளக்கம்:
சாவது எளிது ஆனால் கல்வியில் சிறந்து விளங்குதல் அரிது திருமண
வாழ்வை ஏற்பது எளிது ஆனால் பற்றற்ற ஒழுக்கத்தை காத்தல் அரிது. துறவறத்தின் கண் செல்லுதல்
எறிது ஆனால் அதன் படு நடப்பது அரிது. எதனையும் சொல்லுதல் எளிது. ஆனால் தெளிந்து அதன்படி
நடத்தல் அரிது.
நண்பர்களுக்கான ஆறு குணங்கள்:
சாதல், பொருள் கொடுத்தல்,
இன்சொல், புணர்வு உவத்தல்
நோதல், பிரிவில் கவறலே,
ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன
ஆறுகுணம் ஆக,
மென் புடையார் வைத்தார்
விரித்து
.
விளக்கம்:
நண்பர்கள் இறந்தவிடத்து
தாமும் துக்கம் தாங்காமல் இறத்தலும் அவர்களுக்கு பொருள்குடுத்து உதவி செய்தலும், இனசொல்
கூறுதலும், அவர்களுடன் இருப்பதை விரும்புதலும், அவர்கள் வருந்தும்போது வருந்துதலும்
, அவர்கள் பிரியும்போது, கலங்குதலும் ஆன ஆறு இயல்புகளும் நண்பர்களுக்கு இருக்க வேண்டிய
குணமாகும்.
மங்கையற்கு அறிவுரை:
மையேர் தடங்கண் மயில்
சாயலாய்!
மெய்யே உணர்ந்தார் மிக
உரைப்பர்; பொய்யே
குறளை, கடுஞ்சொல், பயன்இல்
சொல்நான்கும்
மறலையின் வாயினவாம்
மற்று.
விளக்கம்:
மைதீட்டிய
அழகான பெரிய கண்கனையுடைய மயிலைப் போன்ற பெண்ணே! சான்றோர் மேன்மையான நற்சொற்களையும்
மெய்யையும் மிகவும் பேசுவார்.பொய்யும் புறங்கூறலும் வன்சொல்லும் பயனில்லாத சொற்களும்
ஆகிய இவை நான்கும் புல்லறிவு உடையான் வாயில் வருவனவாம்.
உதவ வேண்டியவர்கள்:
தாய்இழந்த
பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி
வாய் இழந்த
வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்
கைத்தூண்
பொருள் இழந்தார், கண்ணிலவாக்கு ஈந்தார்
வைத்து
வழங்கி வாழ்வார்
விளக்கம்:
தாயை இழந்த மகனுக்கும், தன் மணவனை இழந்த மனைவிக்கும்,
ஊமைக்கும், வாணிகத்தில் பொருள் இழந்தவர்க்கும், கண்ணில்லாத குருடர்களுக்கும் வேண்டுவன
கொடுத்தவர்கள் பொருளை மிச்சமாய் வைக்காமல் தனக்கும், மற்றவர்க்கும் கொடுத்து உதவுவர்.
முடிவுரை:
இவ்வாறு
வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை கணிமேதவியார் ஏலாதியில் கூறியுள்ளார்.
இனியவை நாற்பது
முன்னுரை:
பதிணெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று இனியவை நாற்பது.
இது நாற்பது வெண்பாக்களை கொண்டது. ஒவ்வொரு வெண்பாவிலும் 3 முதல் 4 கருத்துகள் இடம்
பெறுகின்றன. மக்கள் தங்கள் வாழ்வில் பின் பற்ற வேண்டிய இனிய செயல்கள் இந்நூலில் திரட்டித்
தரப்பட்டுள்ளன.மேலும் சங்க காலத்தில் நடைமுறையில் இல்லாத பழக்கங்கள் பற்றி இந்நூலில்
கூறுகிறது.
நட்பு கொள்ளுதல்:
குற்றங்களை செய்யாமல் தீய வழியை பின் பற்றாமல் நாடோறும்
சென்று கற்றல் மிக இனியவை, பிறரிடம் கடன் வாங்காமல் தன் மாட்டை கொண்டு உழுவுதல் மிக
இனியவை. அது போல் ஒருவரிடம் நட்பு கொள்ளும் போது அவரது குணத்தையும் பழக்கங்களையும்
நன்கு அறிந்து நட்பு கொள்ளுதல் வேண்டும்.
தரும செயல்கள்:
நம்மால் முடிந்தவரை
தரும செயல்களை செய்தல் மிக இனியவை, நன்னெறிப்பட்டார் சொல்லும் பயனுடைய சொல்லைக் கேட்டு
அதன் வழி பின்பற்றுதல் இனியவை.
மாட்சிமையுடைவரின்
செல்வம்:
குழந்தைகள் மிக
ஆரோக்கியத்துடன் எந்த நோய் நொடியும் இல்லாமல்
வாழ்வது இனியவை. சபையில் அஞ்சாதவனாய் சபைகேற்ற கருத்துகளை சொல்பவனின் கல்வி
இனியவை. எந்த பொருளின் மீதும் மயக்கம் இல்லாதவராய் உள்ளத்தில் மாட்சிமை உடையவரை அடையும்
செல்வம் நீங்காமல் இருப்பது இனியவை.
குற்றம் இல்லாமல்
வாழ்தல்:
சமூகத்தில் தனது
மானம் இழந்த பின் உயிர்வாழாமல் இருப்பது இனியவை. தான் பெரியன் என்று கூறிக்கொண்டு வாழாமல்
பிறரிடத்தில் அடங்கி வாழ்வது இனியவை.அது போல் குற்றம் ஒன்றும் செய்யாமல் நல்ல வழியில்
பொருள் ஈட்டியதும் பொருளுடைமையும் எல்லா மக்களுக்கும் இனியவை.
பிறக்கு கொடுத்தல்
இனியவை:
நன்கு கற்றவர்
முன் தன் கல்வியை சொல்லி பெருமையடைவது இனியவை. எள்ளவும் பிறரிடம் இரவாமல் தன்னிடம்
இருப்பதை பிறக்கு கொடுத்து வாழ்வது இனியவை.
ஆராய்ந்து வாழ்தல்:
பிறர் பொருளை அபகரிக்காமல்
தன் பொருளைக் கொண்டு வாழ்வது இனியவை. பாவங்களை செய்து சேர்க்காமல் அறம் செய்து வாழ்வது
இனியவை. மறந்தும் கூட நல்ல குணங்கள் இல்லாதவரிடம் சேராமல் நல்ல வழியை ஆராய்ந்து அறிந்து
வாழ்தல் இனியவை.
வேறுபடாமல் வாழ்தல்:
தனக்கு பொருள்
வருகின்ற நெறியினை அறிந்து பிறக்கு கொடுத்தல் இனியவை. பெரிய பயனையுடைதாம் விரும்பியவற்றை
ஆராய்ந்து செய்யாதவராய் தாயினும் தம்மியல்பின் வேறுபடாமல் வாழ்வது இனியவை.
பொருளை அபகரிக்காமல்
வாழ்தல்:
ஒருவன் செய்த நன்றியின்
பயனைக் கருதி வாழ்வது இனியவை, சபையில் ஒரு சார்பாக மாட்சிமையோடும் வாழ்தல் இனியவை.
அறிவில்லாதவரிடம் இருக்கும் பொருளை அபகரிக்காமல் வாழ்வது மிகவும் இனியவை.
முடிவுரை:
அவ்வாறு கூறப்படும்
கருத்துகளை, நல்ல செயல்களை பின் பற்றி வாழ வேண்டும் என்று பூதஞ் சேந்தனார் கூறுகிறார்.
ஞாயிறு, 10 ஏப்ரல், 2016
பழங்களின் பெயர்
ஹந்தி -ப்பல் தமிழ் - பழம்
1.ஆம் மாம்பழம்
2.அங்கூர் திராட்சை
3.கேலா வாழைப்பழம்
4.அனார் மாதுளம்பழம்
5.அம்ருத் கொய்யாப்பழம்
ஞாயிறு, 3 ஏப்ரல், 2016
பங்குச் சந்தைக்கு நேரமாச்சு.. (தொடர்ச்சி)
அன்புடையீருக்கு வணக்கம்,
பங்கு வர்த்தகம் என்றால் என்ன என்பது தெரியாமலும் தெரிந்தும் அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது அதில் இலாபம் அதிக அளவில் கிடைக்குமா..???அல்லது நஷ்டம் தான் அதிகளவில் கிடைக்குமா..???இல்லை அதில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு பயனை நம்மால் அடைய முடியுமா என்ற எண்ணத்தோடு குழம்பி தவிப்போருக்கான ஒரு சிறிய தெளிவை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளை மட்டும் பார்த்து வருகிறோம்.இந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு வகைக்களாக பிரிக்கலாம் என்பதை பற்றி காணலாம்.
பங்கு வர்த்தகம் என்றால் என்ன என்பது தெரியாமலும் தெரிந்தும் அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது அதில் இலாபம் அதிக அளவில் கிடைக்குமா..???அல்லது நஷ்டம் தான் அதிகளவில் கிடைக்குமா..???இல்லை அதில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு பயனை நம்மால் அடைய முடியுமா என்ற எண்ணத்தோடு குழம்பி தவிப்போருக்கான ஒரு சிறிய தெளிவை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளை மட்டும் பார்த்து வருகிறோம்.இந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு வகைக்களாக பிரிக்கலாம் என்பதை பற்றி காணலாம்.
புதன், 30 மார்ச், 2016
யான் வாசித்து வரும் வலைப்பக்கங்கள்..!!
வலைப்பதிவர்
நா.முத்து நிலவன் ஐயா,தனது வலைப்பக்கத்தில் தொடரும் தொடர் வலைப்பதிவர் என்று ஒரு பதிவை
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தார்.
திங்கள், 28 மார்ச், 2016
இலவசமாகப் புத்தகங்களை தரவிறக்கலாம்..!!
கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் எப்படி இலவசமாக தரவிலரக்கலாம் என்பது பற்றிய பதிவு தான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)