திங்கள், 21 மார்ச், 2016

கல்வி கட்டணம் குறைப்பதற்கான கூக்குரல்..!!


Image result for மாற்று

அன்புடையீருக்கு  வணக்கம்,

தலைப்பு வைத்தே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.ஆம் கல்வி கட்டணம் குறித்த விழிப்புணர்வு தான் இந்த கட்டுரையை  அமைக்க  இருக்கிறேன்.

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஒரு இந்தியனின் கடமை..!!

  •   படைபாளர் பலர் உருவாக வேண்டும் .பாரதம் பாரினில் உயர்ந்தாக வேண்டும் .ஒவ்வொரு மனிதனும் படித்தாக வேண்டும் ஊருக்கும் நாட்டுக்கும் உழைத்தாக வேண்டும்.
Image result for ஒற்றுமை


  •  எறும்பிடம் நாம் பாடம் கற்றாக வேண்டும். என்றென்றும் ஓய்வின்றி பொருள் தேடவேண்டும். காகங்கள் போல நாமும் ஒற்றுமையுடன் உறவாட வேண்டும்.



  •  ஒவ்வொரு குடிமகனும் ஒரே வீட்டில் உள்ளோர் போல் இந்தியாவை உருவாக்க வேண்டும். ஒருமைபாட்டால் நாம் ஒன்றாக வாழ வேண்டும்!

Image result for ஒற்றுமை

கொசுக்களுக்கு இரத்தப் பிரிவு உண்டா?


               கொசுக்களுக்கு இரத்தப் பிரிவு உண்டா?
முன்னுரை


          மாலை நேரம் ஆகிவிட்டால் போதும், போர்ப்படைப் போல புறப்பட்டு வரும் கொசுப்படையும், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களும் தொடங்கிவிடுகின்றன.
ஒரு கடியில்
         கொசுக்கள் நம்முடைய ரத்தத்தை உறிஞ்ச, ரம்ப வடிவத் தூவிகள் கொண்ட உறிஞ்சுகுழலைத் தோலுக்குள் செலுத்துகின்றன. இந்த தூவிகள் லேசான வலியைத் தரலாம். ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து போய்விடாமல் இருக்க, நொதிகள் கொண்ட எச்சில் போன்ற பொருளைச் சுரக்கின்றன. இந்த எச்சில் ஏற்படுத்தும் அலர்ஜியால் தான் கொசு கடித்த இடத்தில் சிலருக்கு தடிப்பு ஏற்படுகிறது. ஒரு கொசு ஒரு கடியில் 3 மில்லிகிராம் ரத்தத்தைக் குடிக்கும். ஆனால், ஒரு கொசுவின் சராசரி எடையே 2.5 கிரான்தான்.
எப்படிக் கண்டுபிடிக்கின்றன?
          மனிதர்கள் சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு, வியர்வையில் உள்ள நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்கள், உடல் சூடு ஆகியவற்றை வைத்துக் கொசுக்கள் நம்மை நெருங்குகின்றன. இந்த அம்சங்கள் யாரிடம் அதிகம் இருக்கின்றனவோ, அவர்களைக் கொசு கடிக்க வாய்ப்பு அதிகம். அத்துடன் ‘ஓ’ ரத்த வகையைச் சேர்ந்தவர்களைக் கொசுக்கள் அதிகம் கடிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு காரணம் அந்த ரத்த வகையைக் கொண்டவர்களின் ரத்தத்தில் உள்ள புரதம்தானாம். கொசுக்கள் முட்டையிடுவதற்குப் புரதம் அவசியம்.
ரத்தப்பிரிவு
        இப்படியாகப் பெண் கொசுக்களுக்கு மனித ரத்தமே முதன்மை உணவாக இருக்கிறது. மனிதர்களிடையே பல்வேறு ரத்தப் பிரிவுகள் உண்டு. மனிதர்களில் ஒருவருடைய ரத்தத்தை வேறொரு ரத்தப் பிரிவைக் கொண்டவருக்குச் செலுத்தினால், உடல் ஏற்றுக் கொள்வதில்லை (ஓ பாசிட்டிவ் வகையைத் தவிர). அதே நேரம் வெவ்வேறு ரத்தப் பிரிவுகளைக் குடிக்கும் கொசுக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதா?

கொசுரத்தம்
          மனிதர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் மேற்புறத்தில் ஒரு வகையான புரதம் இருக்கிறது. இந்தப் புரதம் இருந்தால் அது பாசிட்டிவ் ரத்தம், இல்லையென்றால் அது நெகட்டிவ் வகை ரத்தம். அதே நேரம் நமது ரத்தத்தைக் குடித்து வாழும் கொசுக்களுக்கு எந்த ரத்தப் பிரிவும் கிடையாது. அதிகம் வளர்பானேன், கொசுக்களுக்கு ரத்தமே கிடையாது.
ரத்தத்திரவம்

         கொசுக்களுக்கு உடல் திரவங்கள் உண்டு, ஆனால் அது ரத்தமில்லை. ஹீமோலிம்ப் என்ற ரத்தத்தைப் போன்ற திரவம், அதன் உடலில் ஓடுகிறது. இது மனித ரத்தத்தைப் போன்றது அல்ல. அதில் ரத்தச் சிவப்பணுக்கள் கிடையாது. சிவப்பணுக்கள் தானே ரத்த வகைகளை பாசிட்டிவ், நெகட்டிவ்  என்பதை நிர்ணயிக்கன்றன. எனவே, கொசுக்களுக்கு ரத்தமோ, ரத்த வகைகளோ கிடையாது.

பங்குச் சந்தைக்கு தயாரா..??(தொடர்ச்சி)

Image result for பங்கு சந்தை

அன்புடையீருக்கு வணக்கம்,

இந்த வாரம் பங்குச் சந்தையின் வகைகளை பார்க்க உள்ளோம்.அதற்கு முன்னர் கடந்த பதிவுகளை சற்றுத் திருப்பிப் பார்க்க விரும்புவோர் நினைவுக்கு அவற்றின் தலைப்புகளை கீழே பார்க்கலாம்.

1.மூலதனம் என்றால் என்ன..??
2.ஏன் தேவை பங்குச் சந்தையில் முதலீடு..??
3.பங்குச் சந்தை வர்த்தகம்.
4.பங்குச் சந்தை வர்த்தகம்(தொடர்ச்சி)
5.பங்குச் சந்தைக்கு போலாமா(தொடர்ச்சி)

சரி ஒவ்வொரு வாரமும் பங்குச் சந்தை குறித்த விவரங்களை தாங்கள் எளிதில் அறியும் வண்ணம் இங்கு ஓவியம் தீட்டி வருகிறேன்.தொடர்ந்து படித்து தாங்களும்  பங்குச் சந்தையின் பங்குகள் குறித்து தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள் நட்பூக்களே.வாங்க சந்தைக்குள் போகலாம்,


பங்குச் சந்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.அவை,

1.முதன்மைப் பங்குச் சந்தை.
2.இரண்டாம் நிலை பங்குச் சந்தை.


முதன்மைப் பங்குச் சந்தை;

    ஒரு நிறுவனம் நேரடியாகப் பங்குகளை வெளியிடுவதற்கு முதன்மைப் பங்குச் சந்தை என்று பெயர். பொதுப்பங்கு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் முதலியவை, நிதி திரட்டும்பொருட்டு, பங்குகளை வெளியிடுகின்றன. அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்புபவர்கள், அதற்கான படிவங்களை நிரப்பி, முதலீடு செய்ய விரும்பும் தொகைக்கான காசோலை  அல்லது வரைவோலையை (Demand Draft) இணைத்து, முகவர்கள் மூலமாக விண்ணப்பிப்பார்கள். அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு, பங்குகள் ஒதுக்கீடு செய்யப் படலாம் அல்லது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படலாம். ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை விற்பனை செய்வதை 'முதல் பங்கு வெளியீடு' என அழைப்பர். அதற்குப் பின்னர் வெளியிடும் பங்குகளை 'தொடர் பங்கு வெளியீடு'  என்பர்.

பங்குகளின் அடிப்படை விலை 'முக மதிப்பு ' என அழைக்கப்படும். அதாவது, ஒரு பங்கின் விலை ரூபாய் 10 என நிர்ணயிக்கப்பட்டால், அப்பங்கின் முக மதிப்பு ரூ.10.00 ஆகும். மீண்டும் பங்குகளை விற்கும் பொழுது, அப்பங்குகளுக்கான தேவை அல்லது தேவை  (Demand) எவ்வாறு உள்ளதோ அதற்கேற்றவாறு முக மதிப்பைவிட அதிகமாகவோ (Premium),குறைவாகவோ (Discount) அதே அளவிலோ (At Par) நிர்ணயிக்கப் படலாம்.

இரண்டாம் நிலை பங்குச் சந்தை;


முதன்மைச் சந்தையில் பங்குகளை வாங்கியவர்கள், தம் பங்குகளை விற்கவோ, மற்றவர்கள் வாங்கவோ அணுகுவது இரண்டாம் நிலைப் பங்குச் சந்தை அல்லது வெளிச்சந்தை ஆகும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை மட்டுமே வாங்கவோ விற்கவோ இயலும். அதாவது, பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள், விதிமுறைப்படி பங்குச் சந்தையில் தங்கள் பங்குகளைப் பதிவு செய்து, பட்டியலில் சேர்க்கச் செய்ய வேண்டும். பின்பே அப்பங்குகளின் பரிவர்த்தனை நடைபெறும். பங்குகளின் விலை, நிறுவனத்தின் தரத்திற்கும், சந்தையின் பல்வேறு காரணிகளைப் பொறுத்தும், சந்தையில் அப்பங்குகளுக்கான தேவையைப்  பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும் (volatile). பரிவர்த்தனை செய்ய விரும்புபவர், சந்தை நிலவரத்திற்கேற்ற விலையைக் கொடுத்து பங்குகளை வாங்கவோ, அல்லது விலையைப் பெற்றுக்கொண்டு விற்கவோ செய்வார்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர் அந்நிறுவனத்தின் பங்குதாரர் எனப்படுவார். பங்குதாரருக்கு, நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்து ஈவுத்தொகை/பங்காதாயம் (Dividend) கிடைக்கும். தேவையான பொழுது, தரகர்கள் மூலமாக, பங்குகளை விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் செய்யலாம்.
அடுத்த வாரம் பங்குத்தரகர்கள் மற்றும் அவர்களிடம் நாம் இரண்டு வகையான கணக்குகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.நன்றி..!!

வெள்ளி, 18 மார்ச், 2016

தமிழ் விக்கிப்பிடீயாவை உருவாக்கியது ஒரு தமிழன்..!!

Image result for e.mayooranathan writer photo

தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாறு 2003, செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கங்கள் 2,47,367, கட்டுரைகள் 85,133, கோப்புகள் 9,020, தொகுப்புகள் 21,16,060, பயனர்கள் 96,425, சிறப்பு பங்களிப்பாளர்கள் 292, தானியங்கிகள் 182, நிருவாகிகள் 37, அதிகாரிகள் 4 என வளர்ந்து நிற்கின்றது. இதன் ஆரம்பக் காலம் எப்படி இருந்திருக்கும் எனும் கேள்வி விக்கிப்பீடியாவுக்குள் நுழையும் ஒவ்வொரு பயனருக்கும் ஏன் எனக்கும் மட்டுமன்றி, தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிந்துக்கொள்ள முற்படும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றன. அதேவேளை விக்கிப்பீடியா குறித்தக் கருத்துக்கள், கட்டுரை எழுதுதல், உரையாடல்கள், ஆய்வுகள் நிகழும் போதும் இக்கேள்விகள் முதன்மையாகின்றன.

தமிழ்  விக்கிப்பீடியாவைப் பொருத்தவ வரையில்  இ. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டார். ஆரம்பக்காலங்களில் சிலர் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கும், இடைமுகத்தை உருவாக்குவதற்கும் என சிற்சில முயற்சி செய்துப்பார்த்துள்ளனர். இருப்பினும் இலங்கை, யாழ்பாணத்தைச்  சேர்ந்த இ. மயூரநாதன் என்பவரே 2003 நவம்பர் 20 ஆம் தேதி இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவின் இடைமுகத்தை உருவாக்கி, முறைமைப்படுத்தி ஆரம்பம் முதல் முனைப்புடன், தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு வளர்ச்சிப் பாதை நோக்கி கொண்டுவந்தவராவர். இன்றோ உலகெங்கும் வாழும் தமிழர்களின் முன்னெடுப்பால் தமிழ் விக்கிப்பீடியா ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்து, மேலும் முன்னேற்றத்துடன் முன்னோக்கிச் செல்கிறது.

மயூர நாதன் வரவின் பின்னரே தமிழ் விக்கிப்பீடியாவுக்கான ஒரு இடைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 20 ஆம் தேதி பதிவாகியுள்ளது. அவர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடைமுகத்தை வடிவமைத்தப்போதும், ஏற்கெனவே பயனர்கள் செய்த தொகுத்தல் முயற்சிகளை அழிக்காமல் அப்படியே விட்டுள்ளார். அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றத்தின் போது மற்றவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் மயூரநாதன் முன்மாதிரியாக நின்று, அவற்றை முறையாக நெறிப்படுத்தி வந்திருப்பதை, தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றுப் பக்கங்கள் சான்றுகளாக  காட்டுகின்றன. தற்போது விக்கிப்பீடியாவில் பயனர்கள் 96,425 பேர் புகுபதிகை செய்துள்ளனர். அதில் முன்னிலையில் நின்று பங்களிக்கும் சிறப்புப் பயனர்கள் 292 உள்ளனர். இப்போதைக்கு அனைத்துப் பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை 85,133 ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% கட்டுரைகள் இ. மயூரநாதனுடையதாகவே இருப்பதே. 2015 ஆம் ஆண்டின்படி மயூரநாதன் எழுதியக் கட்டுரைகள் 4000 எனும் எண்ணிக்கையினை கடந்துச் செல்கிறது.

இவரது பயனர் பக்கம் 2003 நவம்பர் 25 ஆம் திகதி தொகுக்கப்பட்டுள்ளது. இவரது பயனர் பேச்சு தொடக்கம் 2005 மே 2 ஆம் திகதி என காணப்படுகின்றது.

தமிழன் என்று தலைநிமிரலாமே..!!தமிழன் கண்டுபிடிக்காதவை என்று எதுவுமில்லை இன்று..!!


ஊழல் உருவாகவில்லை உருவாக்கப்பட்டது..!!


Image result for ஊழல்

ஊழல் உருவாகவில்லையா..??உருவாக்கப்பட்டதா..??அப்படினா அதற்கு காரணமானவர்கள் யார்..??எதனால் உருவானது..??எதற்காக உருவாக்கபட்டது..??அதை ஒழிக்க முடியாதா..??அதற்கு என்ன தீர்வு..??ஊழலுக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?? என்ற பலவிதமான கேள்விகள் அனைவருக்கும் தோன்றும் காரணம்.

ஊழலால் உருவாக்கபட்டது தான் நம் இந்தியா.இந்திய ஊழலில் கடந்த  வருடம் உலக நாடுகளின் கணக்கெடுப்பின்படி 76-வது இடத்தில் உள்ளது என்பது அறியப்பட்டுள்ளது.முதல் இரண்டு இடத்தில் சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் தான்.சீனா நம் இந்தியா நாட்டைவிட சிறிய நாடு தான் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.ஆனால் நம் நாட்டு அப்படி என்ன பண கஷ்டமோ தெரியல..??ஊழல் ,இலஞ்சம்,சூது,கொலை,கொள்ளை மற்றும் கற்பழிப்பு என்ற அனைத்திலுமே முதல் பத்து இடத்தில் இடம் பிடித்துள்ளோம்.இது நமக்கு பெருமையா..???அடுத்த தலைமுறைக்கும்,மற்ற நாடுகளுக்கும்  முன்மாதிரியாக இருக்க வேண்டிய நம் நாடு ஏன் பின் உதாரணமாக இருக்கிறது என்று யோசிப்பதுண்டா..??யோசித்தாலும் அதை மாற்ற நினைத்துண்டா..??

Image result for ஊழல்

ஆனால் நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.இப்ப சாதாரணமா துப்புரவு வேலையிலிருந்து துப்பறியும் வேலை வரை அனைத்திற்கும் இலஞ்சம் தரவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளோம்.பணம் படைத்தவன்   இலஞ்சம் தந்து வேலை முடித்துக் கொள்கிறான்.ஏழை இலஞ்ச பெருசாளிகள் இடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

இது மட்டுமா இல்லையே.பஞ்சாயத்துல இருந்து சட்டமன்றம் வரை அனைத்திலும் ஊழல்.பொதுமக்களுக்கு சேவை செய்யும் அரசோ,அரசியலோ இரண்டுமே அதே பொது மக்களிடமிருந்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் பணம் தரவேண்டிய ஒரு சூழலை உருவாக்கியுள்ளனர்.

Image result for ஊழல்

இப்படி தாங்க  நாடு பொருளாதாரம்  முன்னேறுதோ இல்லையோ.நல்ல அரசாங்க  வீடுகளும் அரசியல் வீடுகளும் பொருள் தாராளமாக வளர்ச்சியடைந்து வருகிறது.இவ்வளவு ஊழல் வாங்கியுமே பணப்  பற்றாகுறையால் நம் இந்திய அரசு உலக வங்கிகளிலும் கடன் வாங்குகிறது.
அப்படி என்னங்க இவ்வளவு பணமிருந்தும் நம் நாடு வல்லரசாக மாறவில்லை.என்னிடம்  நா.முத்துநிலவன் ஐயா கூறிய கருத்து ஒன்றை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.நம் நாடு வல்லரசாவது பிறகு இருக்கட்டும் முதலில் நல்லரசு ஆகட்டும் என்று கூறினார்.இந்த வரிகளில் எவ்வளவு உண்மையுள்ளன.நம்மை பார்த்து தான் அடுத்த தலைமுறை வளரும் அதை கருத்தில் கொண்டு ஊழல் ஊழல் என்று சொல்லாமல் ஊழலுக்கு வழிவகைக்காமல் ஊழலை தகர்த்து உடைத்திடுவோம்.

Image result for ஊழல்

இனிப்  பிறக்கும் குழந்தையாவது கடன் சுமை இல்லாமல் பிறக்கட்டும்.
ஒரு தேசம் ஊழலில்லாமலும்,அறிவாளிகளின் தேசமாகவும்  இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்ற இயலும் தந்தை,தாய் மற்றும் ஆசிரியர் தான் அந்த மூன்று பேர் என்று அண்மையில் விதைக்கப்பட்ட அப்துல் கலாம் ஐயாவின் கூற்றுபடி நம் தேசத்தை ஊழலில்லா நாடாக மாற்றிட  முயற்சி செய்வோம்.
மாற்றம் ஒன்றே மாறாதது.ஒவ்வொருவரும் தன்னை மாற்றினால் கட்டாயம் நம்மை சுற்றி மாற்றங்கள் நிகழும் இது எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா எனக்கு கூறியது.

இப்ப சொல்லுங்க ஊழலால் உருவானதா நம் தேசம்..??அல்லது தேசத்தை ஊழல் நிறைந்தாய் மாற்றப்பட்டதா.??

Image result for ஊழல்


எழில் நிரலாக்க மொழி



எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும்.[4]. இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.
தற்சமயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொழி, விரைவில் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு எழில் நிரலாக்கம்