திங்கள், 16 மே, 2016

கண்தானம் செய்வோம்!! மறைந்த பின்னும் வாழ்வோம்!!




         கண்தானம் செய்வோம்!! மறைந்த பின்னும் வாழ்வோம்!!

முன்னுரை


தானங்களில் சிறந்தது கண்தானம் என்று கூறுவர். ஏனென்றால் நாம் இவ்வுலகை பார்க்க நமக்கு உதவியாக இருப்பவது கண்தான். எந்த உறுப்பு இன்றியும் நம்மால் வாழ முடியும். ஆனால்கண்ணில்லாமல் வாழ்வது போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை. ஆனால் இந்த கொடுமையை உலகில் 4 கோடி மக்கள் அனுபவிக்கின்றனர். கண்தானம் செய்வதன் மூலம் நம்மால் மீண்டும் இவ்வுலகில் வாழ முடியும்.  நாம் இறந்த பின்பு நம் கருவிழியை பிறருக்குப் பொருத்துவதன் மூலம் நம்மால் இந்த அழகிய உலகை நாம் இறந்த பின்னும் காண முடியும். கண் தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி இனி பார்ப்போம்.
கண்தானம் என்பது

கண்தானம் என்றாலே எல்லோரும் பயப்படுவர். கண்ணை அப்படியே எடுத்து பிறருக்கு பொருத்துவது என்று. அது தவறான புரிதல் ஆகும். கண்தானம் என்றால் நம் கண்ணையே எடுத்து பிறருக்கு பொருத்துவது அல்ல. கருவிழியை மட்டும் தனியாக எடுத்து பார்வையற்றவர்க்கு பொருத்துவது ஆகும். இது எல்லோருக்கும் பொருந்தாது. கருவிழியில் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே கண்தானத்தால் சரிசெய்ய முடியும். கருவிழி ஒளி ஊடுருவும் தன்மையை இழக்கும் போது ஒளிக்கதிர்கள் கண்ணுக்குள் செல்ல முடியாமல் கண் இருட்டாகிறது.  இதை கண்தானத்தின் மூலம் சரிசெய்ய முடியும்.
பார்வையற்றவர்கள்

உலகில் 4 கோடி மக்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.5 கோடிக்கும் மேலானோர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை பல கோடியைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. தினமும் எத்தனையோ பேர் பிறக்கின்றனர், எத்தனையோ பேர் இறக்கின்றனர். இறப்பவர்களின் கண்கள் பெறப்பட்டு பார்வையற்றவர்களுக்கு பொருத்தப்பட்டால் இந்தியா பார்வையற்றவர்களே இல்லாத அழகிய இந்தியாவாக மாறும்.
யார் கண்தானம் செய்யலாம்

செப்டம்பர் 8 ஆம் நாள் தேசிய கண்தான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கண்தானம் செய்ய சில வரம்புகள் உள்ளன. கண்ணில் எந்த குறையும் இல்லாதவர்கள் கண்தானம் செய்யலாம். மேலும் மூக்கு கண்ணாடி அணிந்தவர்களும் கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது முதல் எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம். கண்தானம் செய்வதில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. கண்தானம் செய்ய 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மதுவால் இறந்தவர்கள், நோய் வாய்ப்பட்டு இறந்தவர்களால் கண்தானம் செய்ய முடியாது.
முடிவுரை
தற்பொழுது கண்தானம் குறித்து விழிப்புணர்வு பரவலாக பரவி வருகிறது. நாமும் கண்தானத்தின் முக்கியத்துவத்தை பிறருக்கு எடுத்து சொல்வோம். அழகிய உலகை பார்வையற்றவர்கள் காண வழிவகை செய்வோம். பார்வையற்றவர்கறளே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

சனி, 14 மே, 2016

யான் நுகருகின்ற தமிழ்மணம்..!!





வலைப்பதிவர் தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களின் கருத்திற்கு இணங்க இன்று இப்பதிவில் தமிழ்மணத்தில் நான் பெற்றுவரும் அனுபவங்களை பகிரவுள்ளேன்.

தங்களுடைய சிந்தனைகளையும்,கருத்துக்களையும் எவ்வித தடைகளுமின்றி எவரும் படிக்க இயலும் என்பது எனக்கு தெரியாது.எங்கள் கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன்  ஐயா அவர்களின் வலைத்தளத்தை ஒரு நாள் பார்வையிட்டேன்.உடனே அவரிடம் எனக்கும் இதுப் போன்று தங்களின் நட்பு வட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டேன்.அவர் தங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியுமா என்று கேட்டார் தெரியாது என்றேன்.எனக்கு அதற்கான இலவச மென்பொருளான என்.எச்.எம்.ரைட்டரில்  பயிற்சி வழங்கினார்.பிறகு வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம் வழங்கினார்.

வலைப்பதிவு குறித்து என்னுடைய கருத்து நாம் எழுதுவது யார் படிக்க போகிறார்கள் என்று தான் நினைத்தேன்.ஆரம்பத்தில் எனக்கு எப்படி எழுதுவது என்று தெரியாமல் இருந்தேன்.பிறகு குணசீலன் ஐயா தமிழ்மணம், வலைப்பதிவுகளின் திரட்டியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.தமிழ்மணம் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.அவற்றில் எனது கருத்துக்களை மறுமொழியாக தந்தேன்.

தமிழ்மணத்தில் முதலில் நான் ஒரு மறுமொழியாளராக அறிமுகமானேன்.பிறகு எங்களுடைய கல்லூரி வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்தோம் பிறகு ஒரு ஆசிரியராக வலம் வந்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்மணத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவுகளை எளிமையாகப் பெற்றேன்.தொடர்ந்துப் பெற்று வருகிறேன்.உலகில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தமிழர்களால் தமிழில் பதிவுகளை தந்துவருகின்றனர்.தமிழ்மணம் மூலமாக எனக்கு ஒரு மிகப்பெரிய  நட்பு வட்டராமே கிடைத்துள்ளது.மூத்த வலைப்பதிவர்கள் நான் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் மறுமொழி அளித்து என்னுடைய தமிழ் எழுத்துகளுக்கு  ஆதரவு தருகின்றனர்.எங்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும்,வலைப்பதிவின் சிறந்த உபயோகிப்பாளர் என்ற மற்றொரு விருதும் எங்கள் கல்லூரி முதல்வர் மா.கார்த்திகேயன் ஐயா வழங்கி பெருமைப்படுத்தியும் ஆதரவையும்  வழங்கி வருகிறார்.மேலும் கல்லூரி ஆண்டுவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வலைப்பதிவர்  நா.முத்துநிலவன்  ஐயா எனக்கு ஒரு நூலை பரிசாக அளித்தார்.இந்த தமிழ்மணத்தில் எனக்கென்ற ஒரு அடையாளத்தை பதித்து வருக்கின்றேன்.இவை அனைத்திற்கும்  மூலதாரம் என்னுடைய தமிழ் ஆசிரியரான முனைவர்.இரா.குணசீலன் ஐயா.அவர் எனக்கு ஆசிரியராகவும் ஒரு தந்தையாகவும்  இருந்து வழிக்காட்டி வருகிறார்.அவருடைய மாணவியாக அவரை பெருமிதம் அடையச் செய்வேன்.
                 
                          


தமிழர்களின் ஒரு குரல்,தமிழனின் அடையாளம்,வலைப்பூக்களின் பூந்தோட்டம்,தமிழின் மண் வாசனை அனைத்தும் ஒரே இடத்தில் சேர்ந்து நான் நுகருகின்ற  வாசனை தான் தமிழ்மணம்.பதிவு நீண்டு வருகிறது என்பதால் முடிகிறேன்.பொறுமையாக வாசித்த அனைவருக்குமே என்னைடைய நன்றிகள்.தொடர் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

வெள்ளி, 13 மே, 2016

நமது உடலும் ஒரு தொழிற்சாலையாம்..!!





ஓர் ஆரோக்கியமான மனித  உடலில் 46 லிட்டர் நீர் இருக்கிறது.

7 சோப்புக்கட்டிகள் செய்வதற்கு தேவையான கொழுப்புப் பொருள் உள்ளது.

900 பென்சில்கள் செய்வதற்கு தேவையான கார்பனும் 2200 தீக்குச்சிகள் செய்வதற்கு தேவையான பாஸ்பரசும்,2 அங்குல நீள ஆணி செய்வதற்கு தேவையான இரும்பும் உள்ளன.

ஒவ்வொரு மனித உடலிலும் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கிறது.இதில் 25 கோடி ரத்த அணுக்கள் உள்ளன.இவற்றைக் கொண்டு 3000 சதுர மீட்டர் பரப்புள்ள சுவருக்கு  வண்ணம் அடிப்பது போது பூசி மெழுகலாம்.

25 வாட் மின் பல்பு சில நிமிடங்கள் எறியத் தேவையான மின்சாரம் நம் உடலில் உள்ளது.

வியாழன், 12 மே, 2016

வலைப்பூக்களின் பூந்தோட்டங்கள்..!!



ஒரு மொழியின் அடையாளம் என்பது அதற்கு தரும் முக்கியத்துவத்தை பொறுத்தது.உலக முழுவதும்  பல்வேறு மொழிகளால்  ஆட்சி செய்யப்பட்டு வருகிறது.உலக மொழிகள் எவ்வளவு இருந்தாலுமே நமது தமிழ் மொழிக்கென்று ஒரு தனிச் சிறப்புண்டு.ஒரு காலக்கட்டத்தில் குமரி முதல் இமயம் வரை அனைவராலும் பேசப்பட்ட மொழி தமிழ் மட்டுமே.ஆனால் இன்று தமிழ் மொழி குறைவாகவும் அன்னிய மொழிகள் அதிகமாகவும் பேசப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு தமிழனின் அடையாளம் அவர்களின் தாய்மொழியான தமிழ் மொழியே.அதற்கு உதாரணமாக இந்த பதிவு அமைய உள்ளது.
நம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளில் வசித்து தமிழர்களால் தமிழ் மொழி உயிர் பெற்று வருகிறது.தமிழின் ஓசை பல்வேறு திசையில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது..தமிழ் வலைப்பூக்கள் மூலமாக தமிழ் மொழி மணம் வீசி வருகிறது.வேறு நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டு மொழிக்கு அடிமையாகாமல் தனது அடையாளமான தமிழ் மொழியில் பதிவுகளை தருகின்றனர்.இப்படி பல்வேறு தமிழ் வலைப்பூக்கள் ஒன்று சேர்ந்து தமிழ் மணம் வீசி வரும் பூந்தோட்டங்கள் சில உள்ளன.அவை,




செவ்வாய், 10 மே, 2016

மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!



                மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!

முன்னுரை

 



      கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கிறதே இன்றி குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணம் புவி வெப்பமாதல் தான். புவி வெப்பமடைய காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமான காரணம் மரங்களை வெட்டுவதுதான்.
மரம் என்றாலே நன்மை தான்
      மரங்களும் குழந்தைகளைப் போலத் தான் விதை மண்ணில் விழுந்து சிறு செடியாய் முளைத்து அது மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகிறது. ஒரு செடி மரமாக வளர குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும். புவியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆயுட்காலம் உண்டு. ஆனால் ஆயுட்காலம் இல்லாத ஒரே உயிர் மரம் மட்டும் தான். மனிதர்களாலும் இயற்கையாலும் எந்தவித இடையூறும் ஏற்படாத வரை மரங்கள் எத்தனை ஆண்டு காலம் வேண்டுமாலும் புவியில் உயிர்வாழ முடியும். மரங்கள் நமக்கு தரும் நன்மைகள் பல. எதை எடுத்துக்கொண்டாலும் நன்மை தீமை என்று இரு பக்கம் இருக்கும். நன்மை மட்டுமே அதிக அளவில் நிறைந்திருக்கும் ஒரே உயிர் மரம் தான்.
புவி வெப்பமடைதலை தடுக்கிறது
       மரங்களால் உயிரனங்கள் அடையும் நன்மைகள் பல பல. மரங்கள் புவி வெப்பமாதலைத் தடுக்கிறது. மரங்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் அதிக கார்பன் வெளியேற்றதாலும் 2000 ஆண்டு வரை 25% மாக இருந்த புவி வெப்பம் இன்று 37%மாக அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்தும் திறன் மரங்களுக்கு மட்டுமே உண்டு. நன்றாக வளர்ந்து முதிர்ந்த ஒரு மரம் ஒரு ஆண்டில் 48 பவுண்ட் கார்பன்-டை-ஆக்ஸைடை இழுத்துக் கொள்கிறது.

வெள்ளி, 6 மே, 2016

சரணாலயம் – ஓர் அறிமுகம்



சரணாலயம் – ஓர் அறிமுகம்
    இந்த பகுதியானது தமிழக அரசின் 1972 வருட வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 26(1)ன் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அரசானை எண் 44 நாள் 29.2.2000ன் படி அரசிதழில் அறிவிக்கப்பட்டு 22.03.2000 அன்று சரணாலயமாக உருவெடுத்தது.
    வடமுகம் வெள்ளோட்டில் அமைந்துள்ள பெரியகுளம் ஏரியில் (புல எண் 584) 75.935 ஹெக்டேர் பரப்பும், ஓடை புறம்போக்கில் அமைந்துள்ள (புல எண் 503) 1.250 ஹெக்டேர் பரப்பும் சேர்த்து மொத்தம் 77.185 ஹெக்டேரில் இந்த பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
     இந்த பகுதி அதிக அளவில் புலம் பெயர்ந்து வரும் பறவைகளுக்கும், குடியிருக்கும் பறவைகளுக்கும் தொடர்ந்து ஒரு சிறந்த புகழிடமாக இருந்து வருவதால் இங்கு வருகை புரியும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.    


சரணாலதயத்தை பார்வையிட உகந்த காலம்
    ஜூலை முதல் செப்டம்பர் வரை பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதை காண உகந்த மாதங்கள். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான மாதங்கள் அதிக அளவில் புலம் பெயர்ந்து வருகை புரியும் பறவைகளை காண்பதற்கு உகந்த மாதங்கள். மார்ச் முதல் ஜூன் மாதங்கள் இங்கு குடியிருக்கும் பறவைகளின் இனப்பெருக்கத்தை காண உகந்த மாதங்கள்.

பறவைகள்
     வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் தங்கி வாழும் பறவைகள் தவிர இடம் பெயர்ந்து (வலசை) வாழும் பறவைகளும் பெரிய அளவில் வருகை புரிகின்றன. இவற்றில் சுமார் 25 வகையான நீர் பறவை இனங்கள் அடங்கியது. இடம் பெயரும் (வலசை) பறவைகள் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் நேரத்தில் சரணாலம்  வரத் தொடங்கும். சரணாலத்தில் உள்ள  குளம், சதுப்புநிலம், மரங்கள் மற்றும் புகழிடத்தின்  அருகில் உள்ள விவசாய வயல்வெளிகளில் பறவைகளுக்கு தேவையான அளவு மீன்கள், பூச்சிகள், மற்ற உணவுப்பொருட்கள் கிடைப்பதற்கும், பறவைகள் ஓய்வு எடுப்பதற்கும், கூடுகட்டி முட்டைகள் இடுவதற்கும் உகந்த வாழ்விடமாக திகழ்கிறது. சரணாலயத்தில் தங்கி வாழும் பறவை இனங்களுக்கு தேவையான மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இக்குளத்தில் ஏராளமாக உள்ளன.




   சமீபத்திய கணக்கெடுப்பின்படி 150 வகைக்கும் மேற்பட்ட நிலம் சார்ந்த மற்றும் நீர்வாழ் பறவையினங்களை உள்ளடக்கி மொத்தம் 27,000 க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் உண்ணிக்கொக்கு, சின்னக்கொக்கு மற்றும் சிறிய நீர்காகம் போன்ற வகைகள் அதிகமாக இருக்கின்றன.