ஜனனிஜெயச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனனிஜெயச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஜூன், 2017

ஒரு பாடம்

                                                                   
பிட்டு ஒரு துருத்துருவென இருக்கும் பையன்.அவன் ஒருநாள் மரத்தின் உச்சியில் தன் கவனுடன் அமர்ந்திருந்தான்.அக்கணம் ஊர் பூசாரி வழியில் சென்றுகொண்டிருந்தார்.அவரது வழுக்கைத்தலை பல பல வென வெய்யிலில் மின்னியது.அவன் ஏரிந்த கல் அவரது தலையில் பட்டு இரத்தம் வரத்தொடங்கியது.வழியில் அவர் குமுரத்தொடங்கினார்.சுற்றிமுற்றி பார்த்து பிட்டுவை கையும் களவுமாக பிடித்தார்.

small boy throwing stone க்கான பட முடிவு

            அவர் பிட்டுவை கீழே அழைத்து``உன்னுடைய குறி அபாரமாக உள்ளது.நாளை இந்த வழியாக மன்னர் வருவார் அவரது தலையில் இதேப்போல் சரியாக குறிவைத்து அடித்தால் உனக்கு பரிசு கொடுப்பார்’’ என்றார்.அடுத்தநாள் மன்னரின் தலையில் அடித்தார்.உடனடியாக மன்னர் தனது பணியாட்களை அனுப்பி பிட்டுவைப்பிடித்தார்.மன்னர் பிட்டுவிற்கு 100 சாட்டையடிகள் பொதுமக்கள்முன் கொடுக்குமாறு ஆனையிட்டார்.பிட்டு அந்த தண்டனை தனக்கு வேண்டாம் என அழுந்தான்.பிறகு இப்படி குறும்புதனம் இனி செய்ய மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்தான்.

                                              தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

ஹவ் கேட்ஸ் பிகம் பேட்ஸ்


பற்பல காலங்களுக்கு முன்பு பூனை காட்டில் தான் வசித்துக்கொண்டிருந்தது. அது எப்பொழுதுமே பலமான மிருகங்களுடனே நட்பு வைத்துக்கொள்ள விரும்பும்.ஒரு நாள் அனைத்து விலங்கினமும் சிங்கத்தினை பார்த்து பயந்ததை பார்த்து அதனுடன் நட்பு வைத்துக்கொண்டது.


            ஒரு நாள் சூரியகுளியலிடும்போது,யானை கடந்தது.சிங்கத்தையும் சேர்த்தி அனைத்து உயிரினங்களும் அதற்கு தண்ணீர் குடிக்க வழி விட்டன.ஆகையால், யானைதான் பலமான விலங்கு என்று எண்ணி அதனுடன் நட்பு வைத்துக்கொண்டது.ஒரு நாள் அவர்கள் நடக்கையில் யானை பிளிக்கொண்டு``அங்கு வேடர்கள் உள்ளார்கள்’’என்று அலரி ஓடியது. ஆகையால் மனிதனுடன் நட்பு கொண்டு,அவனுடன் நகரத்திற்கு சென்றது.வேடன் தனது வீட்டிக்கு அதனை அழைத்துச் சென்றான்.அவனது மனைவி ``உன்னால் ஒரு சிங்கத்தையோ,யானையையோ வேட்டையாட முடியவில்லை இப்பொழுது தேவையில்லாத இந்த பூனையை எதற்காக எடுத்து வந்தாய்?’’என்று கேட்டாள்.

            அப்பொழுது ஒரு எலி கத்திக்கொண்டு ஓடியது.அதனை பூனை விரட்டிபிடித்தது.தனக்கு வெகுநாட்களாக தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த எலியை பிடித்ததால் அந்த பூனையை அன்புடன் அனுமதித்தாள்.
தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

புதன், 7 ஜூன், 2017

கிஷான்’ஷ் ப்லான்

                                                        
கிஷான் ஒரு ஏழை விவசாயி.அவரது ஒரு எருது இறந்து விட்டது.அவரது இன்னொரு எருதையும் நகரத்தில் இருக்கும் தனது நண்பரிடம் விற்க முடிவு செய்தார்.தனது நண்பரிடம் எருதை விற்றவுடன் காட்டுவழியாக வீடுதிரும்பினார்.அப்பொழுது கூட்டுக்கொள்ளையர்கள் அவரை வழி மறைந்தனர்.அந்த கொள்ளையர்கள் அவரிடம் கொள்ளையடிக்க வேண்டுமென்றிருந்தனர்.அவரிடம் இருந்த பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டனர்.அவர்கள் அவரை தப்பி விடச்செய்தால் போலீசாரிடம் தங்களைப்பற்றி புகார் செய்து விடுவான் என்று சிந்தித்தனர்.ஆகையால் அவரை கொள்ள முயன்றனர்.

            ஆனால்,கிஷான் திறமைசாலி சத்தமாக சிரித்து``நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்து கொள்ளுங்கள்,ஒரு ஜோசியக்காரன் என்னிடம் நான்கு கண்பார்வையற்றவர் மட்டுமே என்னை கொள்ள இயலும் என்று கூறி இருக்கிறார்’’என்றான்.


ஆகையால் அவர்கள் நான்கு பேரும் தனது கண்களை துணியினால் கட்டி கொள்ள முயன்றனர்.அதற்குள் கிஷான் தப்பிவிட்டான்.பிரதான சாலைக்கு சென்றவுடன் அங்கு போலீஸ் வண்டியை கண்டான்.அவர்களிடத்தில் நடந்த அனைத்தையும் கூறினார்.ஆகையால் குறுகிய நேரத்திற்குள் காவலாளிகள் அவர்களை கைப்பற்றினர்.கிஷானிற்கு அவனது பணத்துடன் 10ஆயிரம் ரூ பரிசும் கிடைத்தது.
தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

வெள்ளி, 2 ஜூன், 2017

தி ஃப்போடீன்த் மேன்

                                                           

மோகன் ஒரு படித்த வேலையில்லா பட்டதாரி.அவர் ஒருநாள் தனக்கு ஒரு வேலை தேடி பிரதமரை சந்திக்கச் சென்றார்.அப்பொழுது, காலை அவரை சந்திக்க இயலவில்லை மாலை அவரை சந்திக்க காத்திருக்கையில் ஒவ்வொருவராக உள்ளே செல்பவரை எண்ணிக்கொண்டிருந்தான்.மொத்தம் 14 பெயர்கள் உள்ளே சென்றனர்.மாலை பிரதமர் வெளியே வந்தவுடன் தன்னை வேலைக்கு எடுக்கும்படி கோரிக்கை வைத்தான்.

man watching everyone க்கான பட முடிவு

ஆனால், துருதிஷ்டவசமாக அவர் அதனை ஏற்கவில்லை.பின்னர் காலையில் மொத்தம்14 நபர்கள் உள்ளே சென்றனர்.ஆனால்,13பெயர் தான் வெளியே வந்துள்ளனர் இன்னும்1 நபர் வெளியே வரவில்லை.யார்?அவர் என்ற கேள்வி எழுப்பிய பின்னர் உள்ளே அரசரை கொல்லவதற்காக ஒழிந்துகொண்டிருந்த உளவாளியை கண்டறிந்தனர்.பின்னர் மோகனை காவலனாக நியமித்தார்.

                                               தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

தி கிங்ஸ் க்யூர்

 ஒரு காலத்தில் சோம்பேறியான அரசர் ஒருவர் இருந்தார்.அவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்து இறுதியில் அவருக்கு அது ஒரு வியாதியாகிவிட்டது.மன்னர் வைத்தியரை அழைத்து``என் உடலிற்கு என்ன ஆகிறது என்றே தெரியவில்லை?என்னை எப்படியாவது குணப்படுத்துங்கள் இல்லையெனில் மரண தண்டனை விதித்துவிடுவேன் என்று கூறினார். மருத்துவருக்கு தெரியும் அவருக்கு இருக்கும் ஒரே வியாதி ``சோம்பேறிதனம்’’என்று.

lifting dumbbells க்கான பட முடிவு

ஆகையால், வைத்தியர் ``அரசே! தாங்கள் தினமும் இந்த மந்திரக்கோலான``டம்புல்ஸ்’’ தூக்கி அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும்.தினமும் இப்படி செய்தீர்களெனில் உடல் எளிதில் முன்னேற்றம்  பெறும் மேலும் இந்த பயிற்சி முறையை உடல் குணமான பிறகும் செய்ய வேண்டும் இல்லையெனில் பழைய நிலைக்கு திரும்புவீர் என்றார் வைத்தியர்.அரசரும் தினமும் அவர் கூறிய படி செய்தார் பின்பு தான் தனது சிக்கல் சோம்பல் என அறிந்து சுறுசுறுப்பாக செயல்பட்டார்.
                                             தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்