சா.சரண்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சா.சரண்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஏப்ரல், 2017

வாக்கியத்தை முடிக்கத் திணறிய அறிஞர்




           டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ்போர் என்ற அறிவியல் அறிஞர் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆனால், அவர் தன்
மாணவர்களிடம் கட்டுரைகளை எழுதுவதற்காக குறிப்புகளை சொல்லும் போது சில நேரங்களில், ஏற்கனவே எழுதச்சொன்ன வார்த்தைகளை
மாற்ற சொல்வார். நீண்ட நேரம் ஆராய்ச்சி செய்து சமன்பாடுகளை உருவாக்குவார். பான்னர் மீண்டும் கட்டுரைகளை சரிபார்த்து விட்டு மேலும்
செய்திகளை சேர்க்கச் சொல்வார். புத்தக அலமாரிக்குச் சென்று புத்தகங்களை எடுத்துக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அவற்றைக் கட்டுரைகளில்
சேர்த்து விடுவார்.
           இதற்கு நேர்மாறானவர் டிராக். அவர் எதையுமே துல்லியமாக சிந்திக்கக்கூடியவர். தேவையான குறிப்புகளையும், வார்த்தைகளையும்
முறையாக தயார் செய்த பின்னரே கட்டுரைகளை எழுதத் தொடங்குவார். அதன் பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் திருத்தம் செய்ய மாட்டார்.
           ஒருமுறை டிராக், நீல்ஸ்போரை பார்க்கச் சென்றார். நீல்ஸ்போர் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தார். “ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்?”
என்று கேட்டார். அதற்கு, “ஒரு வாக்கியத்தை ஆரம்பித்தால், அதை திருப்திகரமாக முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், எனக்கு உறக்கமே வராது. நீ
இப்படி ரிஸ்க் எடுக்க மாட்டாயா?” என்று கேலியுடன் கேட்டார்.
           அதற்கு டிராக், “எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர், ஒரு வாக்கியத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல், அதைத் தொடங்காதே

என்று தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்” என்றார், அமைதியாக.    

புதன், 29 மார்ச், 2017

உழைப்பின் அருமை...




Image result for டால்ஸ்டாய்...



 இரஷ்ய நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவ்வப்போது உழவுத்தொழிலையும்  செய்து வந்தார்.  ஒருமுறை தொடர்வண்டி நிலையத்தில் அவர் நின்றிருந்தபோது, அங்கிருந்த பெண்மணிஒருவர் அவரைக் கையைத்தட்டி அழைத்தார். அவரின் தோற்றம் ஒரு கூலிக்காரர்போல் இருந்ததோ என்னவோ?

ஐயா, தொடர்வண்டி புறப்படும் நேரமாகிவிட்டது.  என் கணவர் அருகிலுள்ள சிற்றுண்டி விடுதியில் உள்ளார்.  அவரை, இங்கு அழைத்து வாருங்கள். நீங்கள் செய்கின்ற இந்த உதவிக்குக் கூலி பெற்றுக்கொள்ளுங்கள்எனக் கூறிய அப்பெண்மணி, அவருடைய கணவரின் தோற்ற அடையாளங்களைக் குறிப்பிட்டார்.

அவரும் ஒப்புக்கொண்டு அப்பெண்மணியின் கணவரை உடனடியாக அழைத்து வந்தார்.  அவர் செய்த வேலைக்கான கூலியாகச் சிறுதொகையைப் பெற்றுக்கொண்டார்.

சிறிதுநேரங்கழித்த பின்னர்தான்  அப்பெண்மணிக்கு, அவர்தாம் இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பது தெரிந்தது.

தான் செய்த தவற்றை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார் அப்பெண்மணி.  ஆனால் டால்ஸ்டாயோ, “அதனால் என்ன, நீங்கள் சொன்ன வேலைக்காகப் பெற்றுக்கொண்ட கூலியைத் திருப்பித் தரமாட்டேன்என்றார். புகழ் பெற்றவராயினும் உழைப்பின் அருமையை அவர் அறிந்திருந்தார்.

உழைத்து உண்ணும் உணவே சுவைக்கும். உழைக்காமல் உண்பது பிறர் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்பாகும்.  எந்த வயதினராக இருப்பினும், உழைத்தே உண்ணுதல் வேண்டும்.  அப்பொழுதுதான் அந்த வீடும் நாடும் முன்னேறும்……

வியாழன், 2 மார்ச், 2017

பிரமிடு பற்றிய அரிய தகவல்கள்....!! 


Image result for pramit

 கிசாவின் பெரிய பிரமிடு பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும்.

கிசாவின் பெரிய பிரமிடுவை, உலகின் மிகப் பெரிய ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பம் கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் காத்துக்கொண்டு வருகின்றன.

முதல் அறியப்பட்ட பிரமிடு கட்டிட கலைஞர் இம்ஹொடெப், ஒரு பண்டைய எகிப்திய பல்துறை வல்லுநர், பொறியாளர் மற்றும் மருத்துவர்.

 பிரபலமான நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான, பிரமிடுகள் அடிமைகள் அல்லது கைதிகளால் கட்டப்படவில்லை, ஆனால் வழக்கமான ஊதியம் பெறும் தொழிலாளர்களால் கட்டப்பட்டது.

 பண்டைய எகிப்திய பிரமிடுகள் மிகவும் நன்கு அறியப்பட்ட பிரமிடு கட்டமைப்புகள் ஆகும்.

 130க்கும் மேற்பட்ட பிரமிடுகள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

 3800 ஆண்டுகளுக்கும் மேலாக, கிசாவின் பெரிய பிரமிட் உலகில் மனிதரால் கட்டமைக்கப்பட்ட உயரமான அமைப்பாகும்.

 அனைத்து எகிப்திய பிரமிடுகளும் நைல் நதியின் மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ளது. 

 எகிப்திய பிரமிடுகளின் உள்ளே, வெப்பநிலை ஒப்பீட்டளவில் நிலையானதாக சுமார் 20 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

 பிரமிடுகளின் நான்கு முகங்கள் சற்று குழியானதாக இருக்கும், இந்த வழியில் கட்டப்பட்ட ஒன்று பிரமிடு மட்டுமே.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஒன்றா, பலவா பிறப்புக்கள்?


Image result for karuppaiyil ulla kuzhanthai

 பொதுவாக இயற்கையின் நிகழ்வுகளில் ஒரே ஒரு முறை மட்டும் நடக்கக்கூடிய நிகழ்வு என்று எதுவும் இல்லை. எல்லா நிகழ்வுகளும், அனைத்திலும் திரும்பத் திரும்ப நடக்கக் கூடியவைகள் ஆகும். ஒரு முறை மழையாக பூமியில் விழுந்த நீரானது மீண்டும் பல முறை மழையாக பூமியை வந்தடையக் கூடிய ஒன்றாகும். பிறப்பு மட்டும் ஏன் ஒரு தடவையோடு நின்று விடவேண்டும்!

 ஒரு ஆத்மா என்பது ஒரு ஜீவன் ஆகும். அந்த ஆத்மாவிற்கு உடல்கள் மாறி மாறி அமைவது, அதற்கு புதுப்புது அனுபவங்களை கற்று தருவற்கு தான். ஒருவன் பள்ளிக்கு ஒரு நாள் சென்றால் அனைத்தும் கற்றுவிட முடியாது, திரும்பத் திரும்ப சென்றால் தான் கற்றுக்கொள்ள முடியும்.

 ஆத்மாவானது பரிபூரணத் தன்மை அடையும் வரையில் பிறந்துகொண்டே இருக்கும் என்பது இயற்கையின் பேரமைப்பாகிறது.

 ஒரு பிறப்புதான் உண்டு என்பது ஆத்மாவுக்குத் துவக்கமும் முடிவும் உண்டு. மனிதனுக்கு ஒரே ஜென்மத்தைக் கொடுத்து விட்டுப் பிறகு அவனுடைய பாவபுண்ணியத்துக்கு ஏற்பக் கடவுள் அவனை நரகத்திலோ, சொர்க்கத்திலோ நிரந்தரமாக வைத்து விடுகிறார் என்பதும் பொருந்தாது.

 ஒரு ஜென்மம் என்கிற குறுகிய காலத்தில் செய்த குற்றத்துக்கு முடிவில்லாத நரகவேதனை என்ற தண்டனையைக் கருணையுடையவன் விதிக்கமாட்டான். மானுட ஆட்சியிலேயே அத்தகைய கொடுமையில்லை. குற்றத்துக்கேற்ற தண்டனையும் நல்ல மானுட ஆட்சி முறையானது அளிக்கிறது.

 மறுபிறப்பு என்ற புதிய சந்தர்ப்பத்தைக் கடவுள் கொடுக்காவிட்டால் அவன் கொடியவன் என்ற குற்றத்துக்கு ஆளாவான். பேரறிவும், பேரளுமுடைய கடவுள் அப்படி ஒரு ஜென்மத்தை மட்டும் கொடுத்து மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடைப்படுத்த மாட்டார். பூரணமாய் ஆராய்ந்து பார்த்தால் ஜீவர்களுக்குப் பல பிறவிகள் உண்டு என்னும் கேட்பாடுதான் யுக்திக்கும் அனுபவத்துக்கும் பொருந்தும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

குழந்தைகளை முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது ஏன்? 


Image result for vijayadhasami
 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது நமது இந்து சமயத்தில் இதனை சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.

 குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த நிகழ்வானது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

 ஞானத்தின் தேடலில், பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுத்துக்களை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.

 மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் கல்வி ஆகும். இந்த கல்வி கற்பதன் மூலம் ஒருவர், பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேடத்தொடங்குகின்றார்.

 அன்னை சரஸ்வதிக்கு பூஜை செய்து, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதற்படியில் தவழ ஆரம்பிக்கிறோம். கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்தும், இந்த நிகழ்வை இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றியின் அடையாளமான விஜய தசமி அன்று நிகழ்த்தப்படுகிறது.

 இச்சா, கிரியா மற்றும் ஞானம் என்ற மூன்று சக்திகளும் இந்நாளில் ஒன்று சேர்ந்து இருளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன. குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர்.

 அவர்கள் மெதுவாக ஒரு வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது எனக் கற்று இறுதியாக தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். எனவே இந்த நாள் உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

 ஓங்காரம் ஒரு செயல் மற்றும் எண்ணத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது. மேலும் இது நித்தியத்தை குறிக்கின்றது.

 எனவே, ஒரு குழந்தை ஓம் என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இது சமஸ்கிருதத்தில் பீசாட்ஞ்சரமாக கருதப்படுகின்றது. இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகின்றது.

 ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருக்குலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். இதுவே அனைத்தினுடைய தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

 வேதகாலத்தில் உபநயனத்தின் போதே அரிசியில் எழுத்தை ஆரம்பித்து விடுவார்கள். அப்பொழுது குழந்தைகளின் வயது சுமார் ஐந்தாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள்.

 கல்வி தீட்சை, வெற்றியின் அடையாளம், எழுதக் கற்றுக் கொள்வது, ஓங்காரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளவே நாம் ஓம் என்ற முதல் வார்த்தையை மணல், நெல் அல்லது அரிசியில் எழுத சொல்கிறோம். இந்த இந்திய பாரம்பரியமானது குருகுல வாசல் முதல் இன்றைய நவீன பள்ளிகள் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

'கூச்ச சுபாவமே எனது கேடயம்!"





 'கூச்ச சுபாவமே எனது கேடயம்!" என்றார் மகாத்மா காந்தி. அன்று அவருக்குக் கேடயமாக இருந்த விஷயம், இன்று இளைஞர்களுக்குத் தடையாக இருக்கிறது. கை குலுக்குவதில் இருந்து மைக் பிடிப்பது வரை, இன்று பல இளம் பருவத்தினரை கூச்சம்தான் ஆட்டிப் படைக்கிறது. கூச்ச சுபாவத்தினால் இளைஞர்கள் இழக்கும் வாய்ப்புகள், சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? இதில் இருந்து மீண்டு வருவது எப்படி?



 பொதுவாக, கூச்சம் என்பது அறிமுகம் இல்லாதவரிடம் ஆறு முதல் எட்டு நிமிடங்கள் வரையும், அறிமுகமானவர்களிடம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரையும் நீடிப்பதாகச் சொல்கின்றன மனநல ஆய்வுகள். அந்த நிமிடங்களைத் தைரியமாகத் தாண்டிவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த நேரத்தைச் சாதகமாக மாற்றத் தெரியாவிட்டால் அதுவே உங்களுக்குப் பாரமாகி விடும். உங்களின் கூச்சத்துக்கு நீங்கள் மட்டும்தான் முழுமுதற் காரணம். ஏனெனில், பிறக்கும்போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை.



 'கூச்சம் என்பது ஒருவகையில் பலர் தங்களின் சௌகர்யத்துக்காக அவர்களே வளர்த்துக் கொள்ளும் ஒரு குணம்" என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். 'மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும், கருணையாகப் பார்க்க வேண்டும்" என்று உள்ளுக்குள் வேண்டி விரும்பியே பலர் கூச்ச சுபாவத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். பின்னாளில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும் வந்து நிற்கிறது. ஏனெனில், கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறிவிடும். நீங்கள் பயந்து ஒதுங்கும்போது, உங்கள் மேல் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அப்புறம் எப்படி ஜெயிப்பீர்கள்?



 சின்ன தயக்கம் கூட, நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்துவிடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம். 'சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை" என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டுபிடித்தவர்களே சாதனையாளர்களாகின்றனர்.



 பெற்றோரின் அதிகப்படியான பாதுகாப்பும், அக்கறையும் ஒருவனுக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்திவிடும். பெற்றோர்கள் ஒருவனை எதற்கெடுத்தாலும் 'தப்பு", 'இது குற்றம்" என்று அடக்கி வைக்கும் போது, அவனுக்கு மன தைரியம் இல்லாமல் போய்விடுகிறது. மகனையோ, மகளையோ எந்தக் காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்து, பெற்றோர்களே செய்து முடிப்பது ஆபத்தான வளர்ப்பு முறையாகும். இதனால், எந்தக் காரியத்தையும் துணிச்சலாகச் செய்யும் தைரியம் அவர்களுக்குள் வளராமலேயே போய்விடும்.



 கூச்சம் 'ஒரு வியாதி" என்பதைக் கண்டுபிடித்து அதை அடியோடு அழித்து விடவேண்டும்.



 உலகத்தில் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கூச்சம், பயம், தயக்கத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்களை இரண்டுபடி கீழே இறக்கி விட்டுவிடும். உடல், சூழல் என இரண்டு காரணங்களால் அதீத கூச்ச உணர்வு ஏற்படுகிறது.



 மூளையில் செரட்டோனின் (serotonin) என்ற ரசாயனம் குறையும்போது தானாகவே பயம், பதற்றம், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, தயக்கம் போன்ற உணர்ச்சிகள் உருவாகும். இதை மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையென்றால், கூச்சம் நம் குணமாகவே மாறிவிடும். இதைத்தான் கூச்ச சுபாவம், பயந்த சுபாவம் என்று சொல்கிறோம்.



 ஒன்றே ஒன்றுதான்... கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவன்தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்!

திருக்குறள் கதை


                      
                                                 

குறள் :

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

குறள் விளக்கம் : 

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

குறளுக்கான கதை :

சுவாமிநாதன் அந்த கிராமத்தில் பண்டிதர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார். ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் பண்டிதரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

கண்ணப்பன் என்ற செல்வந்தனும், அதே கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய கண்ணப்பன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. செல்வந்தனாக இருந்தும் தனக்கு கிடைக்காத மதிப்பும், மரியாதையும் பண்டிதருக்கு கிடைக்கிறதே? என்று கண்ணப்பன் பண்டிதரின் மீது பொறாமை கொண்டான்.

பண்டிதரை எங்கு கண்டாலும், கண்ணப்பன் வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.

ஒருநாள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பின் பண்டிதர் சுவாமிநாதன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கண்ணப்பன் தன் தோட்டத்திலிருந்து பறித்த பூசணிக்காயோடு வந்து கொண்டிருந்தான். கண்ணப்பனுடன் அவனது இரு தோழர்களும் வந்தனர்.

கண்ணப்பனையும், அவனது தோழர்களையும் கண்ட பண்டிதர் ஒதுங்கி நடந்தார்.

ஆனால் அவர்களோ, என்ன, பண்டிதரே பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா? என்று வழியை மறித்தபடி கேட்டு வம்பிழுத்தனர்.

ஆமாம் கண்ணப்பா. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு என்றபடி பண்டிதர் விலகி நடக்கத் தொடங்கினார். நீங்கள் பெரிய அறிவாளி என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன் என்று வீம்பாகப் பேசினான்.

சரி, உன் கேள்வி என்னவென்று கேளு கண்ணப்பா! எனக்கு நேரமாகிறது என்றார் பண்டிதர்.

என் கையிலுள்ள இந்த பூசணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் நிறுத்திப் பார்ப்போம். சரியாக சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று திமிராகப் பேசினான் கண்ணப்பன்.

பண்டிதர் ஒரு கணம் யோசித்தார். கண்ணப்பா இந்த பூசணிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள் என்று பதில் சொன்னார் பண்டிதர்.

இதை கேட்ட கண்ணப்பனும், அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து போனார்கள்.

அட பண்டிதர் நம்மை மடக்கிவிட்டாரே? பு+சணிக்காயின் எடையை சரி பார்க்க நம் தலையை கொய்தால் அல்லவா முடியும். தலையை கொய்ய முடியுமா? பூசணியை எடைபோட முடியுமா? என்று திகைத்த கண்ணப்பன், தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியே போனான். அதன்பின் அவன் பண்டிதரிடம் வம்பு செய்வதே இல்லை! 

புதன், 26 அக்டோபர், 2016

துறைகளின் தந்தை….!!!!!

Image result for question marks background


                            துறை
                               தந்தை
அரசியல் மற்றும் விலங்கியல்
அரிஸ்டாடில்
தாவரவியல்
தியோபிராஸ்டஸ்
வரலாற்று
ஹரோடோட்டஸ்
புவியியல்
எராஸ்டோதீன்ஸ்
மரபியல்
கிரிகர் மெண்டல்
மருத்துவம்
ஹிப்போகிரட்டஸ்
நோய் எதிர்ப்பியல்
எட்வர்டு ஜென்னர்
சட்டத்துறை
ஜெராமி பென்தம்
ஆங்கிலத்துறை
ஜியாப்ரி சாஸர்
பொருளாதாரவியல்
ஆடம் ஸ்மித்
சமூகவியல்
அகஸ்டஸ் கொம்டி
ஹோமியோபதி
சாமுவேல் ஹானிமன்
ஆயுர்வேதம்
சரகர்
வேதியியல்
ராபர்ட் பாயில்
நவீன வேதியியல்
லவாய்சியர்
நகைச்சுவை
அரிஸ்டோனேஸ்
அணுகுண்டு
ராபர்ட் ஓபன்ஹெய்மர்
ரெயில்வே
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
தொலைபேசி
கிரகாம்பெல்
கணிப்பொறி
சார்லஸ் பேபேஜ்
செல்போன்
மார்ட்டின் கூப்பர்
இந்திய சினிமா
தாதா சாஹேப் பால்கே
இந்திய அணுக்கருவியல்
ஹோமி பாபா
இந்திய விண்வெளியியல்
விக்ரம் சாராபாய்
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து
ஜெ.ஆர்.டி.டாட்டா
இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பம்
அ.ப.ஜ.அப்துல் கலாம்
அணுக்கரு இயல்
எர்னஸ்ட் ரூதர்போர்ட்