வெள்ளி, 14 டிசம்பர், 2018

மகளிரின் மாண்பு

            பெண்ணின் பல வேடம்

                            பெண்

 கற்பனைகளின் கடல்,              கனவுகளின் அரசி,            கவிதைகளின் உருவம்,  கஸ்டங்களின்  கவரி,                    அவள் தான் பெண் ! ! ! ! .

                             மகள்

 தாயின் அன்பை சுவாசித்து,          தந்தை   அன்பை நேசித்து,                      குடும்ப   நிலையை யோசித்து,  பிறருக்காக யாசிக்கிறாள்,              ஒரு நல்ல மகள் ! ! ! .

                             மனைவி

 தன் வீட்டினை மறந்து,                        புது வீட்டினை  அடைந்து,  அனைவரின் குணம்  அறிந்து,  துன்பங்களில் துவண்டு,  கஸ்டங்களில் கவிழ்ந்து,      கரைசேரும் படகாய்            வாழ்கிறாள் மனைவி ! ! ! .

                                தாய்

 தன் பிள்ளையை
            கருத்தில்  கொண்டு ,
 பிறர் உண்ட
            மிச்சத்தை உண்டு ,
மணம் குறையாத
            மல்லிகை செண்டு ,
போல தாயோ
            பூவுக்குள் சிக்கிய வண்டு ! ! ! . 

2 கருத்துகள்: