புதன், 19 டிசம்பர், 2018

அன்பே மனிதம் 👼👼


           

மனிதனுக்கு  மனிதனே கருணை காட்ட மறுத்ததால் தான் இன்று நமக்கு இயற்கை கூட கருணை காட்ட மறுகிறது. சாலையில் விபத்து ஏற்பட்டால் அம்புலன்ஸை கூப்புடுவதை விட போட்டோ எடுத்து whatsupp ல் ஷேர் செய்து இதை பகிர்ந்தால் ஓர் உயிரை காப்பாற்றலாம் என்று வதந்தியை பரப்பும்  கும்பல் தான் அதிகம். நாம்  இந்த உலகில் மனிதனாய் வாழ்வதை விட மனிதாபிமானம் உள்ள ஒருவனாக வாழ்வது கடினம். எனவே சமூக வலைத்தளங்களில் வெறும் போட்டோக்களை பகிர்வதை விட ஒரு உயிருக்கு மற்றோரு உயிர் அன்பை பரிமாற்றம் செய்ய வேண்டியது தான் இன்று அவசியமான ஒன்று. நாம் எவ்வாறு வாழ்க்கையை அன்போடு வாழ்ந்தோம் என்பது நாம் இறந்தபின் நமக்காக உண்மையாக எத்துணை பேர் வருத்தப்பட்டனர் என்பதில் தான் உள்ளது. எனவே பணம், பொருள் என்று சுயநல வாழ்க்கையை விடுத்து அன்போடும் கருணையோடும் வாழுவோம். ஏனென்றால் அன்பே மனிதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக