சனி, 10 ஆகஸ்ட், 2019

வாழ்க்கை என்பது....!!!


நாம்பா  விரும்புற பாட்டை
போட்டுக் கேட்க ....
வாழ்க்கை ஒன்னும்
Mp3 player இல்ல....
அது FM Radio மாதிரி...
அது போடுற பாட்டை
நாம்ப ரசிக்க தான் கத்துக்கனும்...!!!

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

படித்ததில் பிடித்தது......(சிந்தித்து பாருங்கள்)

மண்ணை வச்சி பொண்ணு செஞ்ச
காலம் மாறி போயாச்சி....
பொண்ணு வித்து மண்ணு வாங்கும்
காலத்துக்கு வந்தாச்சி.....
விளை நிலமா இருந்த மண்ணை
வெறு நிலமா போட்டாச்சி.....
விதை நெல்லு போட்ட மண்ணில்
விஷம் எடுக்க துணிந்தாச்சி......
பாட்டி சொன்ன வைத்தியம் எல்லாம்
முக நூலில் போட்டாச்சி.....
வைத்தியம் சொன்ன பாட்டியோட முகம் கூட .....
மறந்து போயாச்சி.....
விவசாயம் வேணுமுன்னு குறும் படமும் பாத்தாச்சி.....
விவசாயி ஆக மட்டும் .....
யார் மனமும் மறுத்தாச்சி......

என்னுடைய வாழ்க்கையை மாற்றிய கவிதை......!!!

தோற்றால் புலம்பாதே
             "போராடு"
கிண்டலடித்தால் கலங்காதே
        "மன்னித்துவிடு"
தள்ளினால் தளராதே
           "துள்ளியெழு"
நஷ்டப்பட்டால் நடுங்காதே
       "நிதானமாய் யோசி"
ஏமாந்து விட்டால் ஏங்காதே
           "எதிர்த்து நில்"
    """""வெற்றி நிச்சயம்""""

தமிழை ...தாய்யோடு ...ஒப்பிடல்

ஐம்பெரும் காப்பியங்களை போல்  எனக்காகவே வாழும் தாயே.....   நான்கு வேதங்களில் சொல்ல  தவறிய
நற் செயல்களை கூட.......
என் நல்வாழ்விற்காக கற்றுக்
கொடுத்த தாயே....
முக்கனியை போல் நானும் சிறப்பாக
வாழ வேண்டும்........
என்று .....
தான் எனக்கு கனி என்று
பெயர் வைத்தாயோ........
உன் இரு பாதம் தொட்டு வணங்கி
சொல்கிறேன்.....
தாயே என் ஓர் உயிர் நீ தான்
என்று........!!!!!!!