வியாழன், 1 ஆகஸ்ட், 2019

படித்ததில் பிடித்தது......(சிந்தித்து பாருங்கள்)

மண்ணை வச்சி பொண்ணு செஞ்ச
காலம் மாறி போயாச்சி....
பொண்ணு வித்து மண்ணு வாங்கும்
காலத்துக்கு வந்தாச்சி.....
விளை நிலமா இருந்த மண்ணை
வெறு நிலமா போட்டாச்சி.....
விதை நெல்லு போட்ட மண்ணில்
விஷம் எடுக்க துணிந்தாச்சி......
பாட்டி சொன்ன வைத்தியம் எல்லாம்
முக நூலில் போட்டாச்சி.....
வைத்தியம் சொன்ன பாட்டியோட முகம் கூட .....
மறந்து போயாச்சி.....
விவசாயம் வேணுமுன்னு குறும் படமும் பாத்தாச்சி.....
விவசாயி ஆக மட்டும் .....
யார் மனமும் மறுத்தாச்சி......

1 கருத்து: