திங்கள், 8 அக்டோபர், 2018

கசக்கும் சில உண்மைகள்

                                  ஆடை என்னும் அவசியத்தை
                        
                                    அறைகுறையாக அணியும் வரை,
                         
                             குமரி என்பது மதுவாகும் ,
                         
                                    குற்றம் புரிவது எளிதாகும் ,
                          
                             பதுமை என்பதை மறந்துவிட்டு ,
                          
                                    புதுமையை நாட விரும்பாதே .
                           
                            அடக்கம் என்னும் அரும்மருந்து ,
                          
                                   அவசியம் அறிந்து அதை அருந்து .         

Predominant

Most predominant gift is parents;
Most predominant jewel is education;
Most predominant thing is water;
Most predominant word is love;
Those predominant stuffs
Rules the world.

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

நேற்று இன்று நாளை

முடிந்து போனது என்பது நேற்று
நிகழ்வது என்பது இன்று
நிகழப்போவது என்பது நாளை
முடிந்ததை மறக்க வேண்டும்
நிகழ்வதை நினைவு கொள்ள வேண்டும்...


நிகழப்போவதை எண்ணி திட்டமிட வேண்டும்...
மொத்தத்தில் எதுவுமே நிரந்திரமில்லை...
வாழ்க்கை ஒரு தொடர் சுழற்சியாகவே உள்ளது ..சுழன்றும் நம் குறிக்கோளை அடைய வேண்டும்..






பாடம்

தேங்கிய தண்ணீரும் தேக்கி வைத்த தனித்திறமையும் எவருக்கும் பயன்படாத ஒன்று ....
அதனால் உங்கள் திறமையை வெளிகாட்டுவது நன்று...
அதற்கான முயற்சியை எடுத்திடுங்கள் இன்று......

பெண் குழந்தைகளின் நிலை (கோபத்தின் வெளிபாடு)

                        சுற்றித்  திரியும்  அசுரர்களால்
                                   சூறையாடப்படும்  பெண்சிசுக்கள்
                       கன்னித்  தன்மை  அழிந்து
                                   கதறுகிறது  தமிழகம்
                       அவலம்  போக்க  அகிம்சை  முறையில்
                                  அடங்கிக்  கிடக்கும்  அர்ப்பப்  பதர்கள். 

Real Beauty

Beauty rules the world;
Even
   Admires all;
Creates envy in heart;
   But,
Real beauty -mercy"

சனி, 6 அக்டோபர், 2018

அன்னைக்குச் சில ஆசை வரிகள்

தொட்டணைத்துத் தூக்கி
தொட்டிலில் போட்டு,
முத்தமெனும் முத்திரையால்
முகத்தினை நிரப்பி,
பாசம் என்னும் இசையினிலே
தாலாட்டுப் பாடி,
கல்வி என்னும் கலையறிய
கல்லூரி அனுப்பி,
அணிகலன்கள் பலபூட்டி
அழகு பார்க்கும்,
அன்பு சிறிதும் குறையாத,
அழகு பொழியும் அன்னையை,
நினைவது தவறும் வரை
நித்தமும் மதித்திருப்பேன்.