புதன், 26 செப்டம்பர், 2018

அன்புள்ள அம்மா

உன் கருவரையை எனக்கு
வசிப்பிடம் ஆய் தந்தவள் நீ
நான் கொடுக்கும் வலியிலும்
இன்பம் கண்டவள் நீ
நான் தவழ்ந்து நடக்கும்
நடையில் நயம் கண்டவள் நீ
என் மழலைப் பேச்சினை
ரசித்தவள் நீ....
என் அறியா பருவம் முதல்
இன்றுவரை எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி என்னை
காதலித்ததும் நீ...... என்னுயிர் தாயே

ஊழல்

    

      ஊழல் என்பது புற்றுநோய் போல் வளர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் உச்சநீதிமன்றதின் புதிய யோசனை.
 
  தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தன் மேல் உள்ள வழக்கின் விவரம் பற்றியும் குற்றங்களை பற்றியும்  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.   

     ஓட்டு போட வேண்டும் என்ற அதிகாரம் உள்ள மக்களுக்கு யார் மெல் எவ்வளவு குற்றங்கள் உள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.

    மேலும் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வழக்கு ரீதியான செய்திகளை தன் கட்சி இணையத்தில் வெளியிட வேண்டும்.

       மேலும் இவ்வாறு செய்வது மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான வழி இல்லை. நம் ஓட்டை யாருக்கு போட வேண்டும் என்பதை யார் அதிகமாக பணம் தந்துள்ளார் என்பதை சார்ந்து இருக்க கூடாது.

   அரசால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது. மக்களாகிய நாமும் ஒரு படி சென்று ஊழலை அழிக்க முற்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசத்தை எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் ஊழல் என்பதை மக்கள் உணர வேண்டும்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

முதல் பிரிவு

என் கண்களில் ஒரு நீர்த்துளி
நம் காதலை எண்ணி....
எனது இதழ்களில் சிறிது சிரிப்பு
நம் கால நினைவுகளை எண்ணி
மறுவாழ்வு தேடி சென்றது
நீயா? அல்லது உன் நிழலா?
நீ சென்றுவிட்டாய்...
இருப்பினும் ஏன் உன் நிழல்
மீண்டும் நான் உன் காதலியாக வேண்டும் என்று
என் பின்னே நிற்கிறது?

திங்கள், 24 செப்டம்பர், 2018

ஏழை என்றால் எவர்க்கும் எளிது

           
                                       காய்கறிகளை தெருக்களிலும் காலணிகளை பெரிய மால்களிலும் விற்கும் நிலைக்கு ஆலகிய இவுலகில் ஏழைகளுக்கு உதவ நம் மனம் மறுக்கிறது. பெரிய கடைகளில் விலை அதிகமாக விற்கும் பொருள்களை பேரம் பேசாமல் வாங்கி கொண்டு செல்லும் நாம் வயதான ஏழை விற்கும் கடைகளில் தான் நம் சதுரியத்தை காட்டி பேரம் பேசி ஒரு பொருளை வாங்கி விட்டு அதுவும் போதாமல் இலவசமாக கொத்தமல்லி கருவேப்பிள்ளை கேட்கும் நம் மக்கள் அந்த ஏழை  வியாபாரியின் வலியையும் துன்பத்தையும் புரிந்து கொள்வதில்லை. இந்நிலை மாற வேண்டும். இனியாவது ஏழைகளின் வழியை புரிந்து கொண்டு நம் எண்ணத்தை உயர்த்துவோம்....

சனி, 22 செப்டம்பர், 2018

பெண் சுதந்திரம்

                                                                                       
                                                               ஒரு பெண் நகை போட்டுகொண்டு இரவில் தனியாக சாலையில் நடப்பது மட்டும் சுதந்திரம் கிடையாது. தன் சுய சிந்தனையை வளர்க்க உதவும் மனிதர்களால் சூழப்பட்டு இருப்பதையே உண்மையில் சுதந்திரம் என்று சொல்ல முடியும். எண்ணென்றால் ஒரு சிறிய செயலை செய்ய கூட அவள் அனைவரிடமும் ஒப்புதல் வாங்க வேண்டும். அதை மீறி முடிவு செய்தால் அவளுக்கு இந்த உலகமும் சமூகமும்  கொடுக்கும் பெயர் திமிரு பிடித்தவள். இந்த பரந்த உலகத்தில் என்று ஒரு பெண் தன் முடிவை யார் உதவியின்றி எடுத்து செயல்படுத்தி வெற்றி காண்பதையே உண்மையில் சுதந்திரம் என்று கூற முடியும். இந்த எண்ணம் அனைவரின் எண்ணத்தில் தோன்றும் வரை பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம் கிடையாது