வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

அஞ்சல் குறியீட்டு எண்

       
                                                          அஞ்சல் குறியீட்டு எண் அல்லது பின்கோடு என்பது இந்தியாவில் அஞ்சல்துறைகாக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் எண் ஆகும். இந்த முறை ஆகஸ்ட் 15 1972ஆம் நடைமுறைக்கு வந்தது. இதில் மொத்தம் ஆறு எண்கள் உள்ளது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் அஞ்சலகம் அமைந்துள்ள மண்டலம். இரண்டாவது இலக்கம் உள் மண்டலம். மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை குறிக்கும்.

மனிதாபிமானம்

 தெரசா ஒரு நாள்  ஒருவரிடம் இல்லாதவருக்காக உதவி கேட்க அவரோ உமிழ் நீரை உமிழ்ந்தார் ஆனால் அன்னையோ கோப படாமல் எனக்கு இதை தந்து விட்டீர்கள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்ட தெரசா வாழ்ந்த இந்த ஊரில் ஏழைகளுக்கு உதவ அனைவரின் உள்ளம் மறுக்கிறது.                             ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன் அப்போது ஒரு மெலிந்த உடலும், அழுக்கான துணியையும், தடுமாறிய நடையும் உடைய முதியவர், ஒருவரிடம் பிச்சை கேட்க அவரோ கண்டு கொள்ளாமல் திரும்பி கொண்டார் அந்த ஈமுதியவரோ பாவமாக மீண்டும் தடுமாறி சென்று விட்டார். நான் அவரை தேடி போய் என்னால் முடிந்த பணத்தை தந்து உதவினேன். இன்றைய சமுகத்தின் அவலமே இது தான். இல்லாதவர்க்கு உதவ நம்மில் பலருக்கு மனம் வருவதில்லை காரணம் கேட்டால் அவர்கள் கூறும் விடையோ கோபம் அளிக்கிறது.  அவர்கள் இவர்களை ஏமாற்றிவிடுவாங்களாம். மாதம் முன்னூறு ரூபாய்க்கு போனுக்கு டேட்டா கார்டு போடுவோம், இருநூறு ரூபாய்க்கு பீட்ஸா வாங்கி மூன்று துண்டுகள் சாப்பிட்டு ஒரு துண்டை குப்பையில் எரியும் நாம் இல்லாதவருக்காக ஒரு பத்து ரூபாய் கொடுத்தால் ஏமார்ந்துவிடுவோமாம். 

நீங்களும் பட்டயக் கணக்காளர் (CA )ஆகலாம்.




                   




           







வணிகம் என்பது என்று நாம் சம்பாதித்ததில் இருந்து சேமிப்பிற்காக எடுத்து வைத்தோம அதிலிருந்து தான் தொடங்கியது.

இன்று வணிகவியல் துறை மேன்மேலும் தன்னை காலத்திற்கேற்றாற் போல் தகவமைத்துக் காக்கிறது. முன்பு,  பி. காம் மட்டுமே இருந்தது ஆனால், இன்று பி. காம் எவ்வளவு உட்பிரிவுகள் ஈ-காமர்ஸ்,பினான்ஸியல் மார்க்கெட்டிங்  என வளர்ந்துள்ளது.

எந்த ஒரு நிறுவனத்திலும் நிதிநிலை நடவடிக்கைகள் நடக்காமல் இருப்பது இல்லை.  எனவே பட்டயக்கணக்காளர் என்று சொல்லப்படுகின்ற சார்ட்டேடு அக்கவுண்டன்ட் படிப்பு  மிகச் சிறப்பானதாகும்.  ஏனெனில் ,  அவரின்  துணையின்றி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது. பொருளாதாரம், நிர்வாகவியல், தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றத்தால் தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சி. எ என்று சொல்லப்படும் சார்ட்டேடு அக்கவுண்டன்ட்  எனும் படிப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்  இயங்கும் தி இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டேடு அக்கவுண்ட் ஆஃப் இந்தியா (இ. சி. ஏ. ஐ) நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

சி. எ முடிக்க
                    1.காமன் புரபசியன்ஷி(சி.பி.டி)
                    2.இன்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ்
                   3.ஆர்ட்டிக்கள்ஷிப் டிரெய்னிங்
ஆகிய நிலைகளை கடக்க வேண்டும்.

காமன் புரபசியன்ஷி நுழைவு தேர்வு எழுத பிளஸ் 2முடித்திருந்தாலே போதும்.  பொருளியல் வணிகவியல் சார்ந்த கேள்விகளே அதில் இடம்பெறும்.
  பி. காம் பட்டதாரிகள் சிபிடி தேர்வு எழுத தேவையில்லை. 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு 4 பகுதிகள் கொண்டது. மைனஸ் மார்க் உள்ளது. குறைந்தது 100மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.  40  விழுக்காடு குறைவாக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும்.

இடைநிலைத்தேர்வு (இன்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ்)  இதில் மொத்தம் 7 தாள்கள் உள்ளன. இதில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பட்டயக்கணக்காளரிடம் முன்று ஆண்டுகள் செயல்முறை பயிற்சி வழங்கப்படும்.  இந்த காலகட்டத்தில் ஊதியமாக 10,000 ஆயிரத்திற்கும் அதிகமாக வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகள் செயல்முறை பயிற்சியில் ஈடுபட்டிருந்தால் இறுதித்தேர்வை எழுதலாம்.

இறுதித்தேர்வில் 8 தாள்கள் இடம்பெறும். ஒவ்வொரு தாளிலிலும் 40 விழுக்காடு மதிப்பெண்ணுடன் மொத்தம் 50விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும்.
இதில் வெற்றி பெற்ற பிறகு "அசோசியேட் ஆஃப் சார்ட்டட் அக்கவுண்டன்ஷிப்" சான்றிதழ்  வழங்கப்படும். அதன்பிறகு ஐ. சி. ஏ. ஐ.  யில் சேர்ந்து  ஆடிட்டர் பணியைத் தொடரலாம்.

ஐசிஏஐ யில் இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை.  மாறாக தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்து கட்டணச்சலுகையும் வழங்கப்படுகிறது.
எனவே சி. ஏ படிப்பை சாதிக்கும் வெறியோடும் அர்ப்பணிப்பு உணர்வுடன் படித்தால் குறைந்து முன்று நான்கு வருடங்களில் நீங்களும் சி. ஏ ஆகலாம்.




வியாழன், 30 ஆகஸ்ட், 2018

புறம் பேசுதல் ஒரு பெரு குற்றம்


சித்திர குப்தரும் எமனும் ஒரு வழக்கை பற்றி பேசி கொண்டு இருந்தனர்,  எம தர்ம ராஜாவிடம் தீர்ப்பு கேட்க விஷயத்தை கூறினார். ஒரு நாட்டில் ஒரு ராஜா தன் ஊரில் உள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார் அப்போது ஒரு கருடன் பாம்பை தூக்கி கொண்டு சென்றது அந்த பாம்பு வலி தாங்க முடியாமல் நஞ்சை கக்கியது அந்த நஞ்சோ உணவின் மீது விழுந்துவிட்டது அதை அறியாமல் அந்த உணவை சமையல்காரர் பரிமாற அதை உண்டு மூன்று பேர் இறந்து விட்டனர். சித்ர குப்தருக்கு இபோது இந்த இறப்பு பாவத்தை யார் மீது சுமத்துவது என்ற சந்தேகத்தை எமனிடம் கேட்டார்,ஏனென்றால் ராஜா நல்ல எண்ணத்தில் உணவு கொடுத்தார் அதில் விஷம் உள்ளது அவருக்கு தெரியாது, சமையல் காரரும் விஷம் உள்ளது தெரியாமல் பரிமாறி விட்டார், கருடன் தன் உணவிற்காக பாம்பை தூக்கி சென்றது, பாம்போ வலி தாங்காமல் விஷத்தை கக்கி விட்டது இவர்கள் யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்று குப்தர்  கேட்க எமனோ பொறுங்கள் காலம் வரும் போது விடை கூறுகிறேன் என்றார். சிறிது காலம் கழித்து அந்த ஊருக்கு புதிதாக  இரண்டு பேர் வந்தனர் அவர்கள் ராஜா அன்னதானம் வழங்குவதை அறிந்து அங்கு போக விரும்பி ஒரு பெண்ணிடம் வழி கேட்டனர் அனால் அவளோ அவர்களிடம் பாத்து போங்கள் எண்ணென்றால் அங்கு உணவு உண்பவர் அனைவரும் செத்து போகிறார்கள் என்று நக்கலாக கூறுகிறாள் இப்போது எமன் சித்ர குப்தரிடம் அந்த இறப்பு பாவத்தை இவள் மீது சுமத்து என்றார். பாவம் அவள் மீது சுமத்த படுகிறது. ஒரு நல்ல செயலை தப்பான எண்ணத்தில் பிறரிடம் புறம் கூறுவது கூட ஒரு பெரும் பாவம் தான். 

அகத்தாய்வு செய்வோம்...

நேற்று ஒரு ஆங்கில புத்தகம ( யூ வில் வின் ) படிக்கும் போது ஒரு கதை படித்தேன் அதிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன என்பது குறித்த பதிவே இது...

ஒரு பலூன் வியாபாரி அழகழகான பலூன்களை விற்றுக் கொண்டிருக்கிறார்.
அவருடைய வியாபாரம் தொய்வு ஏற்படும் போதெல்லாம் அந்த பலூன்களில் ஹுலியம் வாயுவை நிரப்பி பறக்க விடுவார்.
அது பறக்கிறதைப் பார்த்து நிறைய பேர் அதை வாங்கிக் கொள்ள ஓடி வருவார்கள்.
பச்சை நீலம் ஊதா சிவப்பு ஆரஞ்சு என பல நிறங்களில் அந்த பலூன் இருக்கும்.
ஒரு சமயம் ஒரு சிறுவன் அந்த பலூன் வியாபாரியிடம் நின்று கொண்டு " கருப்பு நிற பலூனைப் பறக்க விட்டால் அதுவும் பறக்குமா " என்று கேட்டான்.
அதற்கு அந்த பலூன் வியாபாரி வெளியே இருக்கின்ற நிறத்தால் அந்த பலூன் பறக்கவில்லை அதற்கு உள்ளே இருக்கின்ற ஒரு வாயுவால் தான் அது பறக்கிறது என்று கூறினார்.

ஆம். நமக்குள்ளே ஆயிரமாயிரம் ஆற்றல்கள் கொட்டி கிடக்கின்றன்.
அகத்தாய்வு செய்யாமல் புறத்தாய்வு மட்டும் செய்து கொண்டிருக்கிறோம்.
வெளித் தோற்றம் சில வருடங்களுக்குப் பிறகு இல்லாமல் போய்விடும்.
ஆனால் நம்முடைய அகத்தில் இருக்கின்ற பண்புகள் நாம் இந்த மண்ணில் இல்லாத போது கூட நம்மைப் பற்றி பேச வைக்கும்.

அகத்தாய்வு செய்வோம்.
நம்மைப் பற்றி ஆழமாய் அறிவோம்.
ஆற்றல்களை வெளியே கொண்டு வருவோம்.
சராசரி மனப்பான்மை கடந்து சாதனைகள் புரிவோம்.

புதன், 29 ஆகஸ்ட், 2018

மனமே மாறிவிடு

ஒரு சில ரகசியங்களை நாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.
சில சமயங்கள் அந்த ரகசியங்களெல்லாம் வேறு யாருக்காவது தெரிந்து விட்டது என்றால் கோபம் கொள்வோம்.

அது நியாயமா???
ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.
நம்முடைய ரகசியங்களை நம்மாலேயே பாதுகாக்க முடியவில்லை அதனால் தான் பகிர்ந்து கொள்கிறோம்.
நம்மால் பாதுகாக்க முடியாத நம்முடைய ரகசியங்களை மற்றவர்கள் பாதுகாப்பார்கள் என நம்புவது எப்படி நியாயம்.......????

எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்

சென்ற ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றதற்காக கல்லூரியின் தாளாளரிடம் வாழ்த்துப் பெற சென்றிருந்தேன்.
அந்த சமயத்தில் எங்கள் தமிழ்த் துறைத் தலைவர் குணசீலன் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது ஐயா என்ன தலைப்பு குடுத்தாங்க எந்த கருத்த மூலமா வைச்சு பேசுனீங்க என்று கேட்டார்.
நான் ‌"ஔவைப் பாட்டியின பாட்டே பண்பாடு" எனும் தலைப்பில் அவரின் பாடல் வரிகளை சொல்லி நிகழ்கால உதாரணத்தை சொல்லி பேசினேன் ஐயா என்று சொன்னேன்.
ஐயா : எந்த ஔவையாரைப் பற்றி பேசினீர்கள்?
நான் : எந்த ஔவையாரா! எனக்கு தெரிந்தது ஒரே ஒரு ஔவையார் தான் ஐயா.
ஐயா : இல்லை பா. இலக்கியத்தையும் வரலாற்றையும் நன்றாக படித்து பாருங்கள். நான்கு ஔவையார் இருக்கிறார்கள்...

நீண்ட நாட்கள் கழித்து நினைவுகளை அசை போடும் போது தான் ஒரு கருத்து தோன்றியது.

ஆரம்ப பள்ளியில் ஆரம்ப பாடமாக ஆத்திச்சூடி தந்திருக்கிறார்கள்.அதை எழுதியவர் குறித்த முழுமையான பார்வையும் புரிதலுமே நமக்கு இல்லையே. இன்னும் எத்தனையோ தகவல்கள் நம்மை சுற்றியும் இருக்கின்றன.
அதைத் தேடி கண்டுபிடிக்க வேண்டியது நம் கடமை என தேடித் தெரிந்து கொண்டேன்.
அதனை இன்று எழுத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என விரும்பியதன் விளைவு இந்த பதிவு.

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்கள் அடிமைகளாகவே இருந்தார்கள் என தவறான புரிதல் நம் எண்ணத்தில் திட்டமிட்டு ஏற்றப்பட்டிருக்கிறது..

இன்று ஓர் ஆச்சர்யம்.
சங்க காலத்தில் 41  பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
அவர்களின் பெயர்கள்.

1. அஞ்சியத்தை மகள் நாகையார்
2. அஞ்சில் அஞ்சியார்
3. அள்ளூர் நன்முல்லையார்
4. ஆதிமந்தியார்
5. ஊன்பித்தை
6. ஒக்கூர் மாசாத்தியார்
7. ஔவையார்
8. கச்சிப்பேட்டு நன்னாகையார்
9. கழார்க்கீரன் எயிற்றியார்
10. காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
11. காமக்காணிப் பசலையார்
12. காவற்பெண்டு
13. குமுழிஞாழலார் நப்பசலையார்
14. குறமகள் குறியெயினி.
15. குறமகள் இளவெயினி
16. குன்றியனார்
17. தாயங்கண்ணியார்
18. நக்கண்ணையார்
19. நல்வெள்ளியார்
20. நன்னாகையார்
21. நெடும்பல்லியத்தை
22. பாரி மகளிர்
23. பூங்கண் உத்திரையார்
24. பூதப்பாண்டியன் தேவியார்
25. பெருங்கோழிநாய்கண் மகள் நக்கண்ணையார்
26. பேய்மகள் இளவெயினி
27. பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
28. பொன்மணியார்
29. பொன்முடியார்
30. போந்தைப் பசலையார்
31. மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
32. மாரிப் பித்தியார்
33. மாறோக்கத்து நப்பசலையார்
34. முள்ளியூர்ப் பூதியார்
35. வருமுலையாரித்தி.
36. வெண்ணிக் குயத்தியார்
37. வெண்பூதியார்
38. வெண்மணிப் பூதியார்
 39. வெள்ளிவீதியார்
40. வெள்ளெமாளர்
41. வெறிபாடிய காமக்காணியார்.

புணர்ச்சியில் ஈடுபட மட்டுமே பெண் என்ற நிலையை மாற்றி
 *எழுத்து*  எனும் புரட்சியில் ஈடுபடவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை சங்க காலங்களிலேயே மெய்பித்தவர்கள் இவர்கள்.
வாய்ப்பிருந்தால் இவர்களைப் பற்றிய செய்திகளையும் இவர்கள் இயற்றிய பாடல்களையும் படித்து பார்ப்போம்.
பயன் பெறுவோம்.
நன்றி : இது குறித்த பார்வை என் மனதில் எழக் காரணமாக இருந்த எங்கள் ஐயா முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு.