இளஞ்சூடான வெயிலில் பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகள் மத்தியில் நானும் தயாரானேன் என் கல்லூரிக்கு செல்ல !!
பரபரபரப்பான நகரத்தை தாண்டி என் கல்லூரிக்கு செல்ல அழகான அமைதியான ஒரு காட்டு வழி பாதை !!
பனி போல் பொழியும் சாரல் மழையில் குளங்கள் சிரித்திட,
அதில் உள்ள அல்லி மலர்கள் ஆனந்தத்தில் மூழ்கிட !
ஊரை காவல் காத்தப்படி உள்ள எல்லை சாமியை ரசித்தவாறு பயணம் தொடர்கிறது
மழை பெய்தால் இரு புறமும் ஓடைகள் அதில் முளைக்கும் கோரைகள் ,
பச்சை போர்வை போர்த்தியது போல் உள்ள கடலை சாகுபடி ,
பெண் மயிலை கவர தொகை விரிதாடும் ஆண் மயிலின் சிறகு ஓசையில் நான் சிலிர்த்தட!!
ஏர் உழுத இடத்தில் தாயுடன் உணவு தேடும் மயில் குஞ்சுகள்
அதை விரட்ட வந்த கிழவி வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை கன்றை கன்று குட்டி திங்க ,
அதன் மேல் ஒய்யாரமாய் காதல் பேசும் இரட்டை வால் குருவிகள்,
கரையோர பனைகள் அதில் பனங்காய்களை விட அதிகமான கல் பானைகள் அதன் சுவையில் மயங்கிய வண்டுகளின் கூட்டம் ,
மீனை எதிர்நோக்கும் மீன்கொத்தி, பாறை மீது தண்டால் எடுக்கும் ஓணான், தார் ஊற்றிய சாலையில் ஒரு புறம் திதிப்பான கரும்பும், மறுபுறம் சூரியனும் ஈடு தரும் நிறத்தில் மாம்பழங்கள்.
தாயிடம் பால் குடிக்க ஓடும் இளங்கன்று அதனை மெய்தபடி மரத்தடி நிழலுக்கு ஓடும் பாசமிகு அண்ணன் தங்கையின் அளவில்லா ஆனந்தத்தை ரசித்தவாரு கல்லூரிக்குள் நுழைந்தேன் என் எதிர்காலத்தை நோக்கி?????