வியாழன், 16 ஆகஸ்ட், 2018

நட்பு




அப்பாவின் முன்னின்று உரையாட ஒருவீரனால் மட்டுமே முடியும். 

அம்மாவின் முன்னின்று உரையாட  சீரியல்களை பார்த்தாலே முடியும்.

அண்ணனிடம் முன்னின்று உரையாட 
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்தாலே முடியும்.

தங்கையிடம் முன்னின்று உரையாட பேஸ்புக்கில் போஸ்ட் பார்த்தாலே முடியும்.

ஆனால், நண்பனிடம் முன்னின்று உரையாட எந்தவித காரணமும் தேவையில்லை உன்வாழ்க்கையின் சுகம் துக்கம் அனைத்தையும் எந்தவித ஒளிவுமறைவின்றி நண்பனிடம் மட்டுமே உன்னால் பகிர்ந்து கொள்ளை முடியும். 

வாழ்க்கை


வாழ்க்கை என்பது புத்தகம் போல்
அதில் முதல் பக்கம் கருவறை
கடைசி பக்கம் கல்லறை
இடையில் உள்ள பக்கங்களை
கண்ணீரால் வாசிக்காதே
புன்னகையால் வாசி
தவிர்க்க முடியாமல் சில இழப்புகள்
வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்
அனுபவிக்க முடியாமல் சில சந்தோசங்கள்
இவைகள் நிறைந்தது  தான்
வாழ்க்கை,

கவிதையாக்கம் - 
ப.குமுதம், இரண்டாமாண்டு கணிதவியல்

தட்டச்சு - ச.கீர்த்தனா, முதலாமாண்டு கணிதவியல்


புதன், 15 ஆகஸ்ட், 2018

பிறப்பின் வலி


நடந்து கொண்டிருக்கிறது பாலியல் பிரச்சினைகளுக்கெல்லாம் என்னுடைய தீர்வு என்னவென்றால்
இனிமேல் ஒவ்வொரு பெண்ணின் பிரசவ அறைகளிலும் கணவன் அணுமதிக்கப் பட வேண்டும்.அந்தப் பெண் படுகின்ற வேதனை காட்சிப் படுத்தப் பட வேண்டும்.
தன்னுடைய மனைவி இவ்வளவு கஷ்டப்பட்டு தன் பிள்ளையைப் பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த ஆணும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
தன்னுடைய தாய் இவ்வளவு வேதனைகளைத் தாங்கி தன்னை பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த பிள்ளையும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
வெளிநாடுகளில் இருக்கிற மருத்துவமனைகளிலெல்லாம் கணவர்கள் அணுமதிக்கப் படுகிறார்கள்.
தமிழகத்திலும் இதை அமுல்படுத்தினால் பாலியல் பிரச்சனைகள் குறையும்.

பள்ளிக்கூட நாட்கள்

                பள்ளிக்கூட நாட்கள்



             






கிழிஞ்ச மஞ்சப்பையோடு
ஒட்ட சிலேட்டடோடும்
ஒடுங்கிப்போன தட்டோடும்
இன்று யாரும் பள்ளி செல்வதில்லை.


புத்தகங்களை மலை போல
சுமந்து கொண்டு
மனதிலே வீட்டுப்பாடத்தை
எழுதவில்லையே என்ற பயத்தை
சுமந்து கொண்டு வேன் என்று சொல்லப்படும் அந்த நாய் பிடிக்கும்
வண்டியில் அவர்களது பயணம்
தொடங்குகிறது.

அன்று,
மதிய உணவு இடைவேளையில்
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
என்று குறள் சொல்லி தோழி,காகம்,மைனாவோடு
பகுத்து உண்டதை மனம் மறக்க மறுக்கிறது.

முட்டை சாப்பிடவேண்டும்
என்ற ஆசையில் தான்
வருகைப்பதிவேட்டில் 100/100 கிடைத்தது

தாய்மொழியாம் தமிழில்
ஆசிரியர் பாடம் நடத்தும் வேளைகளில்,
முணுமணு வென்று பேசிய தருணங்கள்
ஆனால்,
 இன்றோ தாய்மொழியில் பேசினால்
அபராதமாம்...
ஆசிரியர் அடித்தால் கூட "அம்மா" என்று  கத்தக்கூடாது. "மம்மி" என்றே கத்த வேண்டும்.
பள்ளிக்கு செல்வதை மாணவர்கள்
நேசிக்க வேண்டும்
வெறுக்க கூடாது.
பள்ளிக்கூடங்கள்
எவ்வாறு சாதிக்க வேண்டும் என்பதை
கற்றுக்கொடுக்கவேண்டும்
எவ்வாறு சம்பாதிக்க வேண்டும்
என்பதை அல்ல......




   



அம்பறாத்தூணி

இன்றைய இளைய சமுதாயத்தை அதிகம் கவர்ந்த பாட்டு இது.
பாக்காத நேரத்தில் பாக்குறதும்.
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் எனத் தொடங்கும் பாடல்.என் நட்பு வட்டத்தில் அதிகம் நிலைப்பாட்டில் வைக்கப்பட்ட பாட்டு இது.
சரி முழுமையாகத்தான் கேட்டுப் பார்ப்போமே என கேட்டேன்.இடையில் இருந்த நான்கு வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.அவை
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இவை தான் என்னை கவர்ந்த அந்த வரிகள்.
சமீபத்தில் நூலகத்தில் நாஞ்சில் நாடன் அவர்களின் கம்பனின் அம்பறாத்தூணி எனும் நூலை எடுத்தேன்.
திடீரென ஒரு பக்கத்தில் மேற்கண்ட பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன.
எனக்கோ அது ஆச்சர்யத்தின் உச்சம்.
அதை படிக்கும் போது தான் தெரிந்தது அது ஒரு குறுந்தொகை பாடல் என்று.
இது நம் சங்க இலக்கியத்தில் இருக்கும் பாடல் என்று தெரிந்ததும் மனதிற்குள் ஒரு பூரிப்பு.
தவறாது இனிமேல் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் படிப்போம்.
நம் தமிழில் இல்லாத கருத்துக்கள் இல்லை என்பதை ஏற்போம்.
நன்றி: இந்த பாடலை இயற்றியவருக்கு.