சனி, 21 அக்டோபர், 2017

பலமொழி விளக்கம்

களவும் கற்று மற.

தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்று கொண்டு, மறந்து விட வேண்டும்

உண்மையான பொருள்:

களவும், கத்தும் மற.
களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
theft க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

ஆயிரம் நோயாளிகளை கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.vaithiyan க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு)

கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...
donkey க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை
தானே வளரும்.

மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்

ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான
பொருள்.
pregnant ladies க்கான பட முடிவு

பலமொழி விளக்கம்

"உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் "

நம்முடைய பேச்சு வழக்கில் அதிகமாய் பயன்படுத்தப் படும் பழமொழிகளில் ஒன்று இது . எதுகை மோனை நடை என்பதற்க்காக தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும் என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் தற்காலத்திற்கு பொருந்தக் கூடிய அறிவியல் உண்மை ஒன்றை அற்புதமாய் எடுத்துரைக்கும் பழமொழி இது .

ஒரு மனிதனின் இரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பின் அளவு இருக்க வேண்டும் .அதற்கு மேல் இரத்தத்தில் சேரும் உப்பு வியர்வை,சிறுநீர் மற்றும் மலம் வழியே வெளியேறி விடுகிறது.ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது நம்சிறு நீரகம். இப்போது சொல்லுங்கள் நாம் நம் உடலில் சேரும் தேவையில்லாத உப்புகளை வெளியேற்ற எவ்வளவு நீர் அருந்த வேண்டும். இதை தான் பெரியவர்கள் உப்பைத் தின்னவன் தண்ணிகுடிக்கணும் என்று சொல்லி வைத்தார்கள் .

பலமொழி விளக்கம்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
இந்தப் பழமொழி தவறுதலாக மருவி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லை, புல்லை, ஜடப்பொருளை தாவரத்தை ஒரு பெண்மனியின் கணவனாக ஏற்கமுடியுமா?

கல்லான் ஆயினும் கணவன், புல்லன் ஆயினும் கணவன். என்பதே சரி.

கல்லான் கற்காதவன். எழுத்தறிவு இல்லாதவன். அவனை அவள் தன் உழைப்பால், அறிவினால் சீர்தூக்கிவிடமுடியும். புல்லன் எனபதற்கு அறிவற்றவன் என்பது பொருள். அவனையும் அவனது மனைவி உயர்ந்தவனாக மாற்றமுடியும்husband க்கான பட முடிவு

தன் நம்பிக்கை

ஒரு விவசாயியின் கிணறில் " கழுதை"ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!
கழுதைவெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் கடும் தோல்வியில் முடிந்தன ..!
பாவப்பட்டு இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?
அந்த பாதி கிணறுக்குள் மண்ணை போட்டு மூடி விடுவதாக .. கழுதைமீது மண்ணை போட்டனர்.கழுதை
சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.
விவசாயிகள் மண்ணை அதன் மீது போட போட கழுதைஉடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது.
.
"மற்றவர்கள் உங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு சூழ்ச்சியாக ஏளனம், நையாண்டி, பழி சுமத்தல் ,சேறு பூசுதல் என்று பல மாறுபட்ட கோணங்களில் வருவார்கள்'.
நீங்கள் அவற்றை அடித்தளமாக வைத்து உண்மையை நிலைநாட்ட விடாமல் முன்னேறி வாருங்கள் இந்த பாதிக்கப்பட்ட கழுதைபோல.
nambikkai க்கான பட முடிவு
எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்தே விடாதீர்கள்.

குளியல்




உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.
அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!
சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
குளியல் = குளிர்வித்தல்
குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.
காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
வெந்நீரில் குளிக்க கூடாது.
எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
எதற்கு இப்படி?
காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.
குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??
உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.
எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக
வெளியேறிவிடுகிறது.
வியக்கவைக்கிறதா... !
நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
படம்

வெள்ளி, 20 அக்டோபர், 2017

      

                                                             உண்டியல்

    மதியம் 2.00மணி ,
        அந்த ஹோட்டலில் நல்ல கூட்டம்  சுற்றி ப் பார்த்த போது ஒரு மூலையில் மட்டும் இடம் காலியாகி இருந்தது.
            யாராவது  போய் அந்த இடத்தில் உட்கார்ந்து விடுவார்களோ என்ற பயத்தில் அவசரமாக சென்று உட்கார்ந்தேன். 
            இரண்டாவது நிமிடத்தில் சர்வர் வந்தார்  .
           "சார் என்ன சாப்பிடுகிறீர்கள்  ",என்று மெனுக்களை அடுக்கி க் கொண்டே சென்றார் .
            மிகவும் பசியாக இருந்ததால்  ஒரு அன்லிமிடேட் சாப்பாட்டுக்கு ஆர்டர் 
கொடுத்து விட்டு காத்திருந்தேன்....
            ஐந்து நிமிடத்தில் உணவு வந்தது .
            உண்ட திருப்தி யில்  சிறிது நேரம் காத்திருக்க பில்  கொண்டு வந்து  கொடுத்தார் சர்வர் ....
             கல்லாப்  பெட்டி யின் முன் ஜரிகை வேட்டி  சட்டை போட்டு,நெற்றியில் திலகமிட்டு கழுத்தில் சில தங்க நகைகள் அண்ந்துகொண்டு குபேரனாய்த் தோன்றினார் அந்த ஹோட்டலின் முதலாளி .
              500ரூபாய் எடுத்து நீட்டினேன் நான் 
"சில்லறை  இல்லையா ?"என்றார்இல்லை என்றேன்,
உடனே பக்கத்தில் உள்ள ஆதரவ்வற்றோர் உண்டியலில் இருந்து சில்லரையை எண்ணித் தந்தார் அந்த கடையின் முதலாளி....restrarent க்கான பட முடிவு