வியாழன், 8 ஜூன், 2017

முருங்கை மரம் :-

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

ரேட்கள் – 12.5%

தாதுக்கள், வைட்டமின்கள்,

கால்சியம் – 440 மி.கி

பாஸ்பரஸ் – 70 மி.கி

அயம் – 7 மி.கி

வைட்டமின் சி 220 மி.கி

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்
படம்

ஒரு பாடம்

                                                                   
பிட்டு ஒரு துருத்துருவென இருக்கும் பையன்.அவன் ஒருநாள் மரத்தின் உச்சியில் தன் கவனுடன் அமர்ந்திருந்தான்.அக்கணம் ஊர் பூசாரி வழியில் சென்றுகொண்டிருந்தார்.அவரது வழுக்கைத்தலை பல பல வென வெய்யிலில் மின்னியது.அவன் ஏரிந்த கல் அவரது தலையில் பட்டு இரத்தம் வரத்தொடங்கியது.வழியில் அவர் குமுரத்தொடங்கினார்.சுற்றிமுற்றி பார்த்து பிட்டுவை கையும் களவுமாக பிடித்தார்.

small boy throwing stone க்கான பட முடிவு

            அவர் பிட்டுவை கீழே அழைத்து``உன்னுடைய குறி அபாரமாக உள்ளது.நாளை இந்த வழியாக மன்னர் வருவார் அவரது தலையில் இதேப்போல் சரியாக குறிவைத்து அடித்தால் உனக்கு பரிசு கொடுப்பார்’’ என்றார்.அடுத்தநாள் மன்னரின் தலையில் அடித்தார்.உடனடியாக மன்னர் தனது பணியாட்களை அனுப்பி பிட்டுவைப்பிடித்தார்.மன்னர் பிட்டுவிற்கு 100 சாட்டையடிகள் பொதுமக்கள்முன் கொடுக்குமாறு ஆனையிட்டார்.பிட்டு அந்த தண்டனை தனக்கு வேண்டாம் என அழுந்தான்.பிறகு இப்படி குறும்புதனம் இனி செய்ய மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்தான்.

                                              தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

ஹவ் கேட்ஸ் பிகம் பேட்ஸ்


பற்பல காலங்களுக்கு முன்பு பூனை காட்டில் தான் வசித்துக்கொண்டிருந்தது. அது எப்பொழுதுமே பலமான மிருகங்களுடனே நட்பு வைத்துக்கொள்ள விரும்பும்.ஒரு நாள் அனைத்து விலங்கினமும் சிங்கத்தினை பார்த்து பயந்ததை பார்த்து அதனுடன் நட்பு வைத்துக்கொண்டது.


            ஒரு நாள் சூரியகுளியலிடும்போது,யானை கடந்தது.சிங்கத்தையும் சேர்த்தி அனைத்து உயிரினங்களும் அதற்கு தண்ணீர் குடிக்க வழி விட்டன.ஆகையால், யானைதான் பலமான விலங்கு என்று எண்ணி அதனுடன் நட்பு வைத்துக்கொண்டது.ஒரு நாள் அவர்கள் நடக்கையில் யானை பிளிக்கொண்டு``அங்கு வேடர்கள் உள்ளார்கள்’’என்று அலரி ஓடியது. ஆகையால் மனிதனுடன் நட்பு கொண்டு,அவனுடன் நகரத்திற்கு சென்றது.வேடன் தனது வீட்டிக்கு அதனை அழைத்துச் சென்றான்.அவனது மனைவி ``உன்னால் ஒரு சிங்கத்தையோ,யானையையோ வேட்டையாட முடியவில்லை இப்பொழுது தேவையில்லாத இந்த பூனையை எதற்காக எடுத்து வந்தாய்?’’என்று கேட்டாள்.

            அப்பொழுது ஒரு எலி கத்திக்கொண்டு ஓடியது.அதனை பூனை விரட்டிபிடித்தது.தனக்கு வெகுநாட்களாக தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த எலியை பிடித்ததால் அந்த பூனையை அன்புடன் அனுமதித்தாள்.
தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

புதன், 7 ஜூன், 2017

கிஷான்’ஷ் ப்லான்

                                                        
கிஷான் ஒரு ஏழை விவசாயி.அவரது ஒரு எருது இறந்து விட்டது.அவரது இன்னொரு எருதையும் நகரத்தில் இருக்கும் தனது நண்பரிடம் விற்க முடிவு செய்தார்.தனது நண்பரிடம் எருதை விற்றவுடன் காட்டுவழியாக வீடுதிரும்பினார்.அப்பொழுது கூட்டுக்கொள்ளையர்கள் அவரை வழி மறைந்தனர்.அந்த கொள்ளையர்கள் அவரிடம் கொள்ளையடிக்க வேண்டுமென்றிருந்தனர்.அவரிடம் இருந்த பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டனர்.அவர்கள் அவரை தப்பி விடச்செய்தால் போலீசாரிடம் தங்களைப்பற்றி புகார் செய்து விடுவான் என்று சிந்தித்தனர்.ஆகையால் அவரை கொள்ள முயன்றனர்.

            ஆனால்,கிஷான் திறமைசாலி சத்தமாக சிரித்து``நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்து கொள்ளுங்கள்,ஒரு ஜோசியக்காரன் என்னிடம் நான்கு கண்பார்வையற்றவர் மட்டுமே என்னை கொள்ள இயலும் என்று கூறி இருக்கிறார்’’என்றான்.


ஆகையால் அவர்கள் நான்கு பேரும் தனது கண்களை துணியினால் கட்டி கொள்ள முயன்றனர்.அதற்குள் கிஷான் தப்பிவிட்டான்.பிரதான சாலைக்கு சென்றவுடன் அங்கு போலீஸ் வண்டியை கண்டான்.அவர்களிடத்தில் நடந்த அனைத்தையும் கூறினார்.ஆகையால் குறுகிய நேரத்திற்குள் காவலாளிகள் அவர்களை கைப்பற்றினர்.கிஷானிற்கு அவனது பணத்துடன் 10ஆயிரம் ரூ பரிசும் கிடைத்தது.
தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

வெள்ளி, 2 ஜூன், 2017

தி ஃப்போடீன்த் மேன்

                                                           

மோகன் ஒரு படித்த வேலையில்லா பட்டதாரி.அவர் ஒருநாள் தனக்கு ஒரு வேலை தேடி பிரதமரை சந்திக்கச் சென்றார்.அப்பொழுது, காலை அவரை சந்திக்க இயலவில்லை மாலை அவரை சந்திக்க காத்திருக்கையில் ஒவ்வொருவராக உள்ளே செல்பவரை எண்ணிக்கொண்டிருந்தான்.மொத்தம் 14 பெயர்கள் உள்ளே சென்றனர்.மாலை பிரதமர் வெளியே வந்தவுடன் தன்னை வேலைக்கு எடுக்கும்படி கோரிக்கை வைத்தான்.

man watching everyone க்கான பட முடிவு

ஆனால், துருதிஷ்டவசமாக அவர் அதனை ஏற்கவில்லை.பின்னர் காலையில் மொத்தம்14 நபர்கள் உள்ளே சென்றனர்.ஆனால்,13பெயர் தான் வெளியே வந்துள்ளனர் இன்னும்1 நபர் வெளியே வரவில்லை.யார்?அவர் என்ற கேள்வி எழுப்பிய பின்னர் உள்ளே அரசரை கொல்லவதற்காக ஒழிந்துகொண்டிருந்த உளவாளியை கண்டறிந்தனர்.பின்னர் மோகனை காவலனாக நியமித்தார்.

                                               தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்