ஞாயிறு, 12 மார்ச், 2017

அரிய செய்திகள்


பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. * நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். * கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம். * மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. * ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். * மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். * பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். * உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். * ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம். * பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. * பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். * நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. * நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். * யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம். * ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும். * தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன். * முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு. * தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

பென்ஸீன் மூலக்கூறு



Image result for penicillin


பொதுவாக பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது . இதைப் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . அப்படிப்பட்ட பாம்புகள் நம் கனவில் வந்தால் நம் எல்லோருக்கும் அன்றைய உறக்கம் ஒரு கனவாகத்தான் மாறிப்போகும் .ஆனால் ஒரு அறிவியல் அறிக்கை சொல்கிறது பாம்பு கனவில் வந்தால் மிகவும் நல்லது என்று நம்புவீர்களா !? உண்மைதான் நண்பர்களே இன்று உலகத்தில் உயிர் காக்கும் மருந்துகளில் முன்னோடியாக விளங்கும் பென்ஸீன் மூலக்கூறு கண்டறிய அலெக்சாண்டர் ஃப்ளெமிங் நீண்ட நாட்களாக முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாம்பு, புதிய வடிவத்தை உணர்த்திவிட்டுச் சென்றது. அதற்குப் பின்னரே அவர் பென்சிலினுக்கான மூலக்கூறு (பென்ஸீன் கூட்டமைப்பு) வடிவத்தை கண்டு பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

வாழ்க்கை


                              வாழ்க்கை

                                           

                        தானாக உயரும் வயது !!
                      விடாமல் துரத்தும் காலம் !!
                        தடுக்க முடியாத நேரம் !!
                      கடக்கத் துடிக்கும் இளமை !!
                      காலைத் தடுக்கும் சமூகம் !!
                       தொட வேண்டிய இலக்கு !!
                இத்தனை போராட்டம் தான் வாழ்க்கை !!
                                             

உலகத்தின் முதல் பெண்கள்

                   உலகத்தின் முதல் பெண்கள்

                               

பல் மருத்துவர் – அமாலிய அசூ
பொறியாளர் – அமலின் ராபட்ஸ் ஜோன்ஸ்
மருத்துவர் – எலிசபெத் பெலக்வெல்
காவலர் – சோபியர் ஸ்டான்லி
கடல் பொறியாளர் – சோனாலி
விமானி – அமெரிய இயர்ஹர்டு
குடியரசுத் தலைவர் – பீரபெல் மார்டினைஸ்
ஆளுனர் – பியுட் ரோரிகான்
விண்வெளி பயணி – கல்பனா சாவ்லா
சமூக சேவகி – அன்னை தெரசா
விஞ்ஞானி – மேரி கியுரி 

வெள்ளி, 10 மார்ச், 2017

சில அரிய சுவையான தகவல்கள்...



நீங்கள் இதுவரை அறிந்திராத சில சுவையான உண்மைத் தகவல்கள்

 1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது

. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்

 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

 7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

 10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

 11)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

 12)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம். 13) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

 14) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

 15) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்

. 16)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

 17) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்

வியப்பான பொது அறிவு



அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வியப்பொபான பொது அறிவு தகவல்கள்...

ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.

புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.

யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை நுகர முடியும்.

ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம். 

ஞாயிறு, 5 மார்ச், 2017

500 வது பதிவு!


தமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து இணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், அவற்றுக்குட்பட்ட இணைவுபெற்ற கல்லூரிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியது.

                        கே.எஸ்.ஆா் மகளிர் கலை  அறிவியல் கல்லூரியில், தாளாளா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி எம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன், செயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் முதல்வா் மா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை 15.12.2015 இனிதே தொடங்கப்பட்டது. தமிழ்இணையக் கல்விக்கழகத்திலிருந்து திரு.தமிழ்ப்பரிதி ஐயா அவர்கள் கலந்துகொண்டு எம் கல்லூரி கணித்தமிழ்ப்பேரவைக்கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
 
கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக,  முனைவா் இரா.குணசீலன் அவர்கள் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

மாணவிகளின் ஒத்துழைப்புடன்,
1. கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க 

100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்.


2. ஒருங்குறி முறையிலான தமிழ்த்தட்டச்சு முறையைக் கற்பித்தல்.


3. தமிழ்த்தட்டச்சு தெரியாதவா்களாக இருந்தால் அவா்களுக்கு தமிழ் 99 

முறையை பயிற்றுவித்தல்.


4. தமிழ் வலைப்பதிவில் எழுதும் முறையை அறிமுகப்படுத்துதல்.


5. தமிழ்விக்கிப்பீயா குறித்த அறிமுகம், அதன் பிற திட்டங்கள் குறித்த 

அறிமுகம், அதில் பங்களிப்பாளராகும் வழிமுறைகளைத் தெரிவித்தல்


6. தமிழ்க்குறுஞ்செயலிகள் குறித்த அறிமுகத்துடன் அவற்றை 

உருவாக்குவதற்கான பயிற்சிகளை வழங்குதல்


7. தமிழ் மென்பொருள்களை உருவாக்குதல்.


8. இணையத்தில் மின்னூல் உருவாக்குதல்


9. இணையத்தில் உள்ள நூலகங்களைப் பயன்படுத்த துணைநிற்றல்


10. இலவச மென்பொருள்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி 

அவற்றைப் பயன்படுத்த வழிவகுத்தல் 


என்னும் நோக்கங்களுடன் எம் கல்லூரியின்  கணித்தமிழ்ப் பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எமது பணியைப் பாராட்டி தமிழ்இணையக் கல்விகழகம் ஆதார நிதியாக ரூ 25000 வழங்கியுள்ளது.
இன்று எம் கல்லூரியில் 600 மாணவிகள் தமிழ் ஒருங்குறி வழியிலான தமிழ்த்தட்டச்சுப் பயிற்சிபெற்றுள்ளனர்.
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல்கல்லூரியின் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவருகிறார்கள்.
எம் கல்லூரி மாணவிகள் கல்வி, அறிவியல், வணிகம், ஆன்மீகம், உளவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு, படைப்பாக்கம் என எல்லாத்துறைகளிலும் எழுதிவருகிறார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து பார்வையாளர்களையும், மறுமொழிகளையும் பெற்றுள்ளனர். தமிழ்மணம் திரட்டியில தரவரிசையில் எம் கல்லூரி வலைப்பதிவு 122 வது இடத்தில் உள்ளது.
இன்று 500 பதிவு என்னும் இலக்கை அடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இந்த வலைப்பதிவில் எழுதிய ஒவ்வொரு மாணவிகளையும் வாழ்த்துகிறேன். குறிப்பாக வணிகவியல் துறை மாணவிகள் செ.வைசாலி, மற்றும் அ.கோகிலா, மற்றும் ஆங்கிலத்துறை மாணவி ஜெ.ஜனனி, மூன்றாமாண்டு கணிதவியல் மாணவி கு.நந்தினி ஆகியோருக்கு எனது சிறப்பான பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொ்ளகிறேன். அவர்களை ஊக்குவித்த எம் முதல்வர் முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், வலையுலக உறவுகளுகம் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.