ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தியானம் என்றால் என்ன...?






         நம் நாட்டில் தியானத்திற்கு என்று பல பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. தியானம் பற்றி ரமண மகரிஷி கூறிய கருத்து மிகவும் எளிமையான ஒன்று.
        அவரைக் காண வந்த ஒரு பெண், ரிஷி அவர்களே!! என் குழந்தைக்கு ”தியானம் பற்றி எளிமையாக கூறுங்கள்” என்று கேட்டார். அந்த குழந்தையை அழைத்த ரிஷி, குழந்தை கையில் ஒரு தோசையைக் கொடுத்து சில விதிமுறைகளைக் கூறினார். அது என்னவென்றால் நான் “ம்ம்” என்று சொல்லும் போது நீ தோசையை சாப்பிட வேண்டும். அடுத்த முறை நான் “ம்ம்” என்று சொல்வதற்குள் நீ தோசையை சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்றார். மகரிஷி “ம்ம்” என்று கூறினார், குழந்தை தோசையை சாப்பிட ஆரம்பித்தது. குழந்தை, அவர் எப்போது “ம்ம்” என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டே தோசையை வேகமாக சாப்பிட்டது. மகரிஷி சிறிது நேரம் சென்ற பின் “ம்ம்” என்று சொன்னார். அதற்குள் குழந்தை தோசையை. முழுமையாக சாப்பிட்டு முடித்தது. அப்போது மகரிஷி குழந்தையிடம், “இதன் மூலம் நீ என்ன அறிந்தாய்?” என்று கேட்டார். அப்போது அக்குழந்தை சொன்னது, நீங்கள் எப்போது “ம்ம்” என்று சொல்வீர்கள், அதற்குள் தோசையை சாப்பிட்டு விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தேன் என்றது. அப்போது மகரிஷி கூறினார், ”கவனத்தை நீ செய்த காரியத்தில் ஒரு முகமாக செலுத்தினாய் அல்லவா அது தான் தியானம்”. நாம் செய்யும் காரியத்தில் முழு கவனத்துடன் இருப்பதே “தியானம்”. 

சனி, 25 பிப்ரவரி, 2017

நாலடியார்


      
                  
முன்னுரை:

          பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்ததாக  நாலடியார். இந்நூலுக்கு ‘ வேளாண் வேதம் ‘ என்ற பெயரும் உண்டு. இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு ஆசிரியர்களால் பாடப்பட்டது. கல்வி பற்றி நாலடியார் கூறும் கருத்துக்களைக் காண்போம்.

கல்வி அழகே சிறந்தது:

               நன்கு சீவப் பட்ட கூந்தல் அழகும், முந்தானைக் கரையழகும், மஞ்சள் பயன்படுத்துவதால் வரும் அழகும் அழகல்ல. மனதில் நல்ல நெறியுடன் நடக்கின்ற நடுவுநிலைமையை உண்டாகும் கல்வி அழகே சிறந்தது.

அறியாமையைப் போக்கும் மருந்து:

                கல்வி இன்பத்தை பயக்கும், பிறருக்கு எடுத்துச் சொல்லும் போது பெருகும், நம் புகழை எடுத்துச் சொல்லும், சாகும் வரை கல்வியால் சிறப்பு உண்டு. மூவுலகத்திலும் அறியாமையைப் போக்க கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே.

கல்வி கற்றோரின் சிறப்பு:

                புன்செய் நிலத்தில் விளைந்த உப்பை நன்செய் நிலத்தில் விளைந்த உப்பினைவிட பெரியதாக கருதுவர். தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் ஆயினும் கல்வி கற்றோரை உயர் குடியில் பிறந்தவராகவே கருதுவர்.


கல்வியின் சிறப்பு:

             கல்வியை யாராலும் களவாட முடியாது. பிறருக்கு வழங்குவதால் நன்மை மட்டுமே உண்டாகும். மன்னர் சினம் கொண்டு போர் புரிந்தாலும் கல்விச் செல்வத்தை மட்டும் கைப்பற்ற இயலாது. எனவே, ஒருவன் தமக்குப் பிறகு தம்முடைய அடுத்த தலைமுறைக்கு எஞ்சிய பொருளாக சேர்த்து வைக்க வேண்டியது கல்விச் செல்வம் மட்டுமே. பிற செல்வங்கள் அல்ல.

கல்வி கற்கும் முறை:

               கல்விக்கு கரை இல்லை, ஆனால் அதைக் கற்போருக்கோ சிறிய ஆயுட்காலம். அந்த குறுகிய காலத்திலும் அவர்களுக்கு பல பிணிகள் உண்டாகின்றன. அன்னப் பறவை பாலில் கலந்திருக்கும் நீரைத் தவிர்த்து எவ்வாறு பாலை மட்டும் அருந்துகிறதோ அது போல கல்வியை ஆராய்து தெளிவாக கற்க வேண்டும்.

கல்வி கற்றோரின் சிறப்பு:

                    தோணி இயக்குபவனை தாழ்ந்த குலத்தார் என்று இகழ்வர். ஆனால் அவனையே துணையாய் கொண்டு ஆற்றைக் கடப்பர். அதுபோல நால் கற்ற துணையால் நல்ல பயன்களை அடையலாம்.

தேவலோகத்தை விட சிறந்தது:

                  தேவலோகமே சிறந்தது என்ற கருத்துடையவர், குற்ற மற்ற நூல்களைக் கற்று நல்ல கேள்வித் தன்மையை உடைய சான்றோருடன் உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடிய பின்பு அவர் மனதில் கற்றோர் சபையை விட தேவலோகமே சிறந்தது என்ற கருத்து உண்டானால் அவர் தேவலோகம் செல்லலாம்.    

கற்றவரோடு நட்பு கொள்ளுதல்:

                 கல்லாதவரோடு ஒருவன் கொள்ளும் நட்பு கரும்பின் சுவைமிக்க அடிப்பகுதியை விட்டு நுனிப் பகுதியை உண்பதற்கு ஒப்பாகும். கற்றலரோடு ஒருவன் கொள்ளும் நட்பு கரும்பின் சுவை மிக்க அடிப் பகுதியை உண்பதற்கு ஒப்பாகும்.

கற்றாரோடு கொண்ட நட்பின் தன்மை:

               தண்ணீரில் உள்ள பாதிரிப் பூ எவ்வாறு அத்தண்ணீருக்கும் தன் மணத்தைத் தருகிறதோ கற்றவரோடு கல்வி அறிவு இல்லாத ஒருவன் கொள்ளும் நட்பு அவனுக்கு நாளும் நன்மையைத் தேடித் தரும்.

அறிவு சார்ந்த நால்களைக் கற்க வேண்டும்:

            மிகுதியான நூல்களைக் கற்று அறிவு சார்ந்த நால்களைக் கல்லாதவனுக்கு அதனால் பயன் ஒன்றும் இல்லை.

முடிவுரை:

          நாலடியார் மூலம் கல்வியின் சிறப்பையும், கற்றவரோடு கொள்ளும் நட்பின் தன்மையையும் அறியலாம். கல்வியின் பயன் அதன் வழி ஒழுகுவதால் மட்டுமே அடைய முடியும்.

தக்சாசிலா

                                                                  தக்சாசிலா



குறைந்தபட்சம் 2,800 ஆண்டுகளுக்கு முன்புஏறத்தாழ 800BCகாலத்தில்தக்சாசிலா  என்னும் ஒரு மாபெரும் பல்கலைக்கழகம் , இந்தியாவின் வட-மேற்கு பகுதியில் இருந்தது (இப்போது பாக்கிஸ்தானில் இருக்கிறது).

வடிவமைப்பு

 இராமாயணத்தில் உள்ள குறிப்புகள் படிஅரசன் பரதன் தனது மகன்பெயரில் Taksha என்ற நகரத்தை நிறுவினான்.பின் தக்சாசிலா என்னும் பல்கலைக்கழகத்தை நிருவினான். ஆரம்பத்தில் அங்கு சிறிய கட்டிடங்களாக கட்டப்பட்டு இருந்தது. அங்கு பயிலும் மாணவர்கள் அங்கேயே தங்கி படித்தனர்பல ஆண்டுகளாககூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டனஆட்சியாளர்கள் நன்கொடைகளைகளை அழித்ததால் மேலும் அறிஞர்கள் அங்கு இடம்பெயர்ந்தனர்படிப்படியாக ஒரு பெரிய வளாகமாக உருமாறியது.

கல்வி

இந்தியர்கள் மட்டுமல்ல பாபிலோனியாகிரீஸ்சிரியாஅரேபியாபெனிக்கே மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்துமாணவர்கள் படிக்க வந்தார்கள். அங்கு 68 விதமான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட்டன.

வேதங்கள்மொழிஇலக்கணம்தத்துவம்மருத்துவம்அறுவை சிகிச்சைவில்வித்தைஅரசியல்போர்வானவியல் சாஸ்திரம்ஜோதிடம்கணக்குகள்வர்த்தக, Futurology, ஆவணம்அமானுஷ்யம்இசைநடனம்முதலியன அனுபவமானவர்களால் கற்பிக்கப்பட்டது. குறைந்தபட்ச நுழைவு வயது 16 என்றும், அங்கு 10,500 மாணவர்கள் படித்தனர்.

முதுநிலை குழு கெளடில்யா ( "அர்த்தசாஸ்திரம்ஆசிரியர்), பாணினி (ஒரு சமஸ்கிருத codifier), Jivak (மருத்துவம்), விஷ்ணு சர்மா (ஆசிரியர் மற்றும் பஞ்சதந்திர ஒடுக்கி)” போன்ற புகழ்பெற்றவர்கள் அங்கு படித்தவர்கள்.

அழிவு

நான்காம் நூற்றாண்டின் கிமுவில், அலெக்சாண்டர் படைகள் பஞ்சாப் வந்தபோதுதக்சாசிலாவில் உள்ள பலரை தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்தியாவின் வடக்குமேற்கு எல்லைக்கு அருகில் தக்சாசிலா இருப்பதனால்வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து வரும் தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளின் சுமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததுபாரசீகர்கள்கிரேக்கர்கள் பார்த்தியன்கள், Shakas மற்றும் குஷானர்களின் இந்த நிறுவனம் மீது தாக்குதல் நடத்தினார்கள்.இறுதி அடியாக,ஹன்ஸ் என்னும் ரோம பேர்ரசன் (A.D 450 அன்று ), தக்சாசிலா நிறுவனத்தை தரைமட்டமாக்கினான்சீன பயணி Huen T'sang என்பவர்(கி.பி 603-64) தக்சாசிலா சென்ற போதுநகரம் அனைத்தும் அதன் முன்னாள் ஆடம்பரம் மற்றும் சர்வதேச தன்மையை இழந்ததிருந்தது.

வியாழன், 23 பிப்ரவரி, 2017

வாட்ஸ் ஆப் இரகசியம்..


நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை அதிகமாக பாதுகாக்க விரும்பினால் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் வைத்துக் கொள்ளலாம். இந்த முறையின் மூலம் உங்கள் தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக்கொண்டு 6 இலக்க கடவு எண் ஒன்றினை உருவாக்கி உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கினை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் போன் எதிர்பாராத விதமாக தொலைந்து போனால் வேறு எவரும் பயன்படுத்தாத வகையில் நாம் பாதுகாக்க இம்முறை உதவும்.

பார்க்காமல் விட்ட வாட்ஸ்ஆப் குரூப் மெசேஜ் அல்லது தனிப்பட்ட ஏதேனும் ஓர் மெசெஜ்க்கு பதிலளிக்க எந்த மெசஜ்க்கு பதிலளிக்க வேண்டுமோ அதனை அழுத்திப்பிடித்து பின்பக்கம் வரக்கூடிய பட்டனை செலக்ட் செய்து அதற்கான பதிலை அனுப்பலாம்.

வாட்ஸ்ஆப் குரூப்பில் உங்கள் மெசேஜ் எத்தனைப் பேரால் பார்க்கப்பட்டது எனக் கண்டறிய மெசேஜ் பற்றிய தகவல்கள் வேண்டுமோ அந்த மெசேஜ்யினை அழுத்திப்பிடித்து இப்போது திரையில் காட்டும் 'i' என்ற குறியினை செலக்ட் செய்தால் அந்த குறிப்பிட்ட மெசேஜ் எத்தனைப் பேரால் பார்க்கப்பட்டது எனக் கண்டறியலாம்.

வாட்ஸ்ஆப் ஆடியோ பொதுவாக பிளே செய்தால் ஸ்பீக்கர் முறையில் ஒலிக்கிறது என்றால் உடனே மொபைலை உங்கள் காதின் அருகே கொண்டு சென்றால் தானாகவே ஸ்பீக்கர் மோடில் இருந்து சாதாரண நிலையில் ஒலிக்கும்.

வாட்ஸ்ஆப்பில் நமக்கு தேவையான குறியீடுகளை ஏற்ற நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக good morning  இதனைப் போன்று நட்சத்திரக் குறியீடுகள் இடுவதன் மூலம் நாம் முக்கியமானதாக குறிப்பிட நினைப்பதை பிறருக்கு உணர்த்தலாம்.

வாட்ஸ்ஆப் குரூப்பில் தனியாக எவரேனும் குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் அனுப்புகையில், @ குறியிட்டு அனுப்புவதன் மூலம் அந்த நபரின் கவனத்திற்கு நாம் எளிதில் கொண்டு செல்லலாம்.

ஷேர் செய்யப்படும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும்போதே ப்ளே செய்து பார்க்கலாம். இதன்மூலம் முழு வீடியோவையும் தரவிறக்கும் செய்யும் வரை காத்திருக்காமல் ப்ளே செய்து பார்க்க முடியும்.

டிக்... டிக் !

ஒரே ஒரு வெளிறிய டிக் அடையாளம், உங்கள் செய்தி வெற்றிகரமாக, உங்கள் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்டுவிட்டது எனக் காட்டுகிறது. ஆனால், அது இன்னும் அனுப்பப்பட்டவருக்குத் தரப்படவில்லை என்று பொருள்.

இரண்டு வெளிறிய டிக் டிக் : 

வெளிறிய வண்ணத்தில் இரண்டு டிக் அடையாளங்கள் இருந்தால், உங்கள் செய்தி சென்றடைய வேண்டிய ஸ்மார்ட் போனை அடைந்துவிட்டது. ஆனால், அதனைப் படிக்க வேண்டியவர் இன்னும் படிக்கவில்லை. (நீங்கள் செய்தி அனுப்பிய நபர், தான் படித்துவிட்டதனை, செய்தி அனுப்பியவர் அறியக்கூடாத வகையில், முடக்கி வைத்திருந்தாலும், அவர் படித்ததை நாம் அறிய முடியாது. இரண்டு வெளிறிய டிக் அடையாளங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.)

நீங்கள் வாட்ஸ்ஆப்பில், குழு ஒன்றின் உறுப்பினராக இருந்து, தகவல் ஒன்று அந்தக் குழுவில் அனுப்பப்பட்டால், அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அத்தகவல் சென்ற பின்னரே, இரண்டு வெளிறிய டிக் அடையாளங்கள் காட்டப்படும்.

இரண்டு நீல நிற டிக் :

 இரண்டு நீல நிற டிக் அடையாளங்கள், குறிப்பிட்ட அந்த செய்தி படிக்கப்பட்டுவிட்டதனை உறுதிப்படுத்துகிறது. தகவல் பெற்றவர் அதனைப் படித்தாரோ இல்லையோ, அதனைத் திறந்திருந்தாலே, அது படிக்கப்பட்டதாகக் காட்டப்படும்.

குழுவில், அனைவரும் குறிப்பிட்ட தகவலைப் பெற்று, திறந்து படித்திருந்தால் தான், இரண்டு நீல நிற டிக் அடையாளம் காட்டப்படும்.

யானைகளை பற்றிய தகவல்கள்...


உலகில் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு யானை.

யானைகளால் 70 வயதுக்கு மேலும் வாழ முடியும்.

யானை மட்டுமே குதிக்க முடியாத பாலு}ட்டி ஆகும்.

யானையின் தோலானது ஒரு அங்குலம் தடிமனாக இருக்கும்.

விலங்குகளின் ராஜ்ஜியத்தில் ஆப்பிரிக்க யானைக்கு மட்டுமே சிறந்த மோப்ப சக்தி உள்ளது.

ஒரு இளம் யானைக்கு ஒரு நாளைக்கு சுமார் 300 கிலோ உணவும், 160 லிட்டர் நீரும் தேவைப்படுகிறது.

யானையால் நீண்ட தூரத்திற்கு நீந்த முடியும்.

விலங்குகளின் ராஜ்ஜியத்தில் யானைக்கு மட்டுமே மிகப்பெரிய மூளை உள்ளது.

யானையின் வால் 1.3 மீட்டர் நீளம் இருக்கும்.

யானைகள் தாவர உண்ணிகள் ஆகும்.


புதன், 22 பிப்ரவரி, 2017

தூக்கம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்...



மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் தூக்கம். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபத்தை குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம். தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு.

நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.

நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள். இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.

தூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும், தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது.

தூக்கம் பற்றிய சில சுவாரஸ்சியமான தகவல்கள் :

தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே பாலூட்டி  மனித இனம் மட்டுமே.

தூக்கத்துக்கு இடையில் சராசரியாக 6 முறை விழிக்கிறோம்.

ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், ஆயுள் குறையும்.

ஒரு வாரத்துக்கு சரியாகத் தூங்கவில்லை என்றால், 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும். தூக்கமின்மை பசியைத் தூண்டும்.

பொதுவாக மனிதர்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு தூங்குகிறார்கள். அதாவது 25 ஆண்டுகள்.

ஜப்பானில் வேலை நேரத்தில் தூங்குவது, கடுமையான உழைப்புக்கு ஓய்வு எடுப்பது என்று கருதப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும். தூங்கும் போது தும்ம முடியாது.

விளையாடிவிட்டுத் தூங்கச் சென்றவர்கள் அது பற்றி கனவு கண்டு தூங்கி எழுந்து, அடுத்த நாள் விளையாடியபோது சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.

கனவில் ஏற்கெனவே பார்த்த முகங்களே வரும்.

நம்மை பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றியே பெரும்பாலும் கனவு காண்கிறோம். மனிதர்களைப் பற்றியும், குழந்தைகள், விலங்குகளைப் பற்றியும் அதிக கனவுகளைக் காண்கிறார்கள்.

11 நாளுக்கு மேல் தூங்காமல் இருந்தால் உயிர் வாழ முடியாது. சாதாரணமாக 2 நாட்களுக்கு ஒருவரால் தூங்காமல் இருக்க முடியும்.

விலங்கினங்கள் :

சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும்.

பூனைகள் தங்கள் வாழ்க்கையில் 70 சதவீத நேரம் தூங்குகின்றன.

கடல் நீர் நாய்கள் தூங்கும்போது ஒன்றின் கைகளை மற்றொன்று பிணைத்துக் கொண்டு தூங்கும். அதன் மூலம் அலையில் அடித்துச் செல்லப்படாமல் இருக்கின்றன.

சில உயிரினங்கள் தூங்கும் போது பாதி மூளையை மட்டுமே ஓய்வுக்கு அனுப்புகின்றன. திமிங்கலம் இப்படிச் செய்வதால் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து காற்றை சுவாசிக்கவும், எதிரிகள் வருவதை உணரவும் பயன்படுகிறது.

வாத்துகள் ஒரு கண்ணை மூடிக்கொண்டு, பாதி மூளையை ஓய்வுக்கு அனுப்புகின்றன.

ஒரு சில பறவைக் குழுக்களில் சில பறவைகள் பாதுகாப்புக்காக விழித்திருக்கும் போது, மற்ற பறவைகள் தூங்கும்.

அன்று இதே நாளில்...



பேடன் பவல் 

தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தைத் தொடங்கிய ராபர்ட் பேடன் பவல் பிரபு 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவர் 1906ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

இவருடைய பிறந்த நாளையே 1995ஆம் ஆண்டிலிருந்து உலக சாரணர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது சாரணியத்தின் லட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவு கூறும் தினமாக உள்ளது.

சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர் தனது 83வது வயதில் (1941) மறைந்தார்.


தில்லையாடி வள்ளியம்மை

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடியில் பிறந்தார்.

சிறு வயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை கவனித்து, ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகளுடன் போராட்டங்கள் நடத்தினார்.

'சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?" என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, 'இதுதான் எங்கள் தேசியக் கொடி" என்றாராம்.

பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை தன்னுடைய 16வது வயதில் (1914) தனது பிறந்த நாளன்றே மறைந்தார்.

ஜார்ஜ் வாஷிங்டன்

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் 1732ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தார்.

இவர் 1753-ல் ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு 1775-ல் அமெரிக்கப் புரட்சியில் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1783-ல் அமெரிக்க சுதந்திரப் போர் முடிந்தது. அர்ப்பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். 1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான்.

அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படும் பெருமைகுரிய இவர் 67வது வயதில் (1799) மறைந்தார்.