வெள்ளி, 18 நவம்பர், 2016

மரியா தி ஃபூலிஷ் கேல்

                                                  மரியா தி ஃபூலிஷ் கேல்
                                    --டைனி டாட் ஸ்டோரிஸ்
           

மரியா ஒரு சிறுமி அவள் எப்பொழுதும் எல்லாவற்றையும் மறந்துகொண்டே இருப்பாள்.அவள் அலட்சியமானவலும் கூட.நிறைய பொம்மைகள், பெண்சிலைகள், புத்தகங்கள் மற்றும் வண்ணங்களை தொலைத்திருக்கிறாள். அவளது தாயார் எப்பொழுதும் ``மரியா,நீ அடக்கமும் அமைதியும் கொண்ட சிறுமி ஆனால்,நீ கவனமாக இருக்க கற்றுக்கொள்.உன்னுடைய உடமைகளின் மதிப்பை நீ அறிய வேண்டும்’’ என்றார்.ஒரு நாள் மரியாவின் தந்தை அவளுக்கு அழகான ஒரு பொம்மை வாங்கி வந்தார்.மரியாவுக்கு அந்த பொம்மை மிகவும் பிடித்திருந்தது.நாள்முழுக்க அதனுடன் விளையாடிவிட்டு அதனுடன் தூங்கவும் செய்வாள்.அவள் தனது தந்தைக்கு அதனை தொலைக்கமாட்டேன் என்றும் உடைக்கமாட்டேன் என்றும் உறுதியளித்திருந்தாள்.

            விளையாடிவிட்டு அதனை மரப்பேழைக்குள் வைத்துவிடுவாள். ஒருநாள் மரியாவை வெளியே அழைத்துச்செல்ல அவள் தந்தை முடிவு செய்திருந்தார்.மரியா அதனை அறிந்தவுடன் வீட்டிற்குள் ஓடி அந்த பொம்மையை தன் பைக்குபின் இனைத்து முதுகில் மாட்டிக்கொண்டாள்.அவள் தந்தை இதனைப்பற்றி விசாரிக்கையில்``என் பொம்மையை தனியே இங்கு விட்டாள் அது தொலைந்துவிடும்.அதனை என்னுடன் எடுத்துச் சென்றா, நான் போகிற இடத்திற்கு அதுவும் வரும்.நான் அதனை தொலைக்க மாட்டேன்’’. என்றாள்.அவளது அறியாமையைக்கண்டு புன்முறுவல் செய்தார் அவள் தந்தை.

டிட் ஃபார் டாட்

                                                            டிட் ஃபார் டாட்
                                    டைனி டாட் ஸ்டோரீஸ்
             

காட்டில் நதி ஒன்று அமைதியாக பாய்ந்துக்கொண்டிருந்த்து.அங்கு பசியுடன் ஒரு சிங்கம் தண்ணீர் அருந்த வந்தது.அங்கு தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கையில் கழுதை ஒன்று அங்கிருப்பதை கண்டது.சிங்கம்``கழுதையெல்லாம் முட்டாள்கள்,அவற்றை இன்று மதியம் எனக்கு உணவாக்க நான் ஏதாவது செய்ய வேண்டும்’’ என்று எண்ணியது.அதற்கு சிங்கம் ``தோழர் கழுதையே அங்கு ஏதாதவது குள்ள நரிகள் இருக்கின்றனவா?அவர்களின் இனிமையான பாடல் சத்தம் எனக்கு கேட்கிறது?’’ என்றது.

            அதற்கு கழுதை``இல்லை ஐயா குள்ள நரிகளால் இனிமையாக பாட இயலாது.தான் உங்களுக்காக இப்பொழுது பாடுகிறேன்,’’ என்று கூறிய அந்த முட்டாள் கழுதை வானத்தை நோக்கி கண்களை மூடி கனைக்க தொடங்கியது.அச்சமயத்தில் நதியைக் கடந்து சிங்கம் கழுதையின் கழுத்தை கவ்வியது.ஆனால் கழுதை தந்திரமாக,``அட நீங்கள் என்னை உனவாக்க வேண்டுமா?எனக்கு ஆட்சியபனை இல்லை ஆனால், நல்ல சிங்கங்கள் உணவு உட்கொள்வதற்கு முன் இறைவனிடம் பிராத்தனை செய்யும் என்று கேள்விப்பட்டேன்?.என்றது. ஆமாம்!,ஆமாம்! நான் பிராத்தனை செய்ய வேண்டும் என்று கூறி கண்ணை மூடியது.அக்கனத்தில் கழுதை சிங்கத்தை நன்கு உதைத்து அங்கிருந்து ஓடிவிட்டது.

காட் ஈஸ் மெர்சீபுல்

                                                            காட் ஈஸ் மெர்சீபுல்
                                    --டைனி டாட் ஸ்டோரீஸ்
           

குறுநில மன்னர் ஒருவர் தன் தோட்டத்தில் பலவிதமான மரங்களை வைத்திருந்தார்.அதனை கண்காணிக்க திறமையான தோட்டக்காரனை நியமித்தார்.

            தினமும் அந்த தோட்டத்திலிருந்து சுவைமிகுந்த பழுத்த பழங்களை பறித்து கூடையில் சேர்பார்.அந்த பழங்களை காலையில் அரசவை கூடும்போது மன்னருக்குக் கொடுப்பார்.ஒரு நாள்``ச்செரி’’ பழங்களை மன்னருக்காக பரித்து கொண்டு சென்றார்.அப்பொழுது மன்னர் சற்று மனவுலைச்சலில் இருந்தார்.அந்த செரி பழம் ஒன்றை பறித்து சுவைக்கையில் அது புளிப்பாக இருந்தது.அதனால்,ஆத்திரமடைந்த மன்னர் தோட்டக்காரர் நெற்றியில் தூக்கி எரிந்தார்.அதற்கு அந்த தோட்டக்காரன்``கடவுள் கருணையுள்ளவர்’’ என்றார்.மன்னர் அதற்கு``நீ இப்பொழுது கோவப்பட வேண்டும் கடவுள் கருணையுடையவர் என்று ஏன் கூறுகிறாய்?என்று வினவினார்.அதற்கு தோட்டக்காரர்``மன்னரே நான் உங்களுக்கு இன்று அன்னாசி பழம் கொண்டு வர எண்ணியிருந்தேன்.
ஏதோ மனம்மாரி செரி பழங்களை உங்களுக்கு கொண்டுவந்து விட்டேன்.``நீங்கள் என்மீது அன்னாசியை தூக்கி ரிந்திருந்தாள்,நான் மிகவும் வருந்தியிருப்பேன். ஆகையால் ,இறைன் என் மனதை மாற்றி எனக்கு ன்மை புரிந்திருக்கிறார், என்றார்.

தி க்ரேட்டஸ்ட் சொல்யூசன்

                                                  தி க்ரேட்டஸ்ட் சொல்யூசன்
                                    --டைனி டாட் ஸ்டோரிஸ்



ஒரு யாசகர் சிறிய கிராமம் ஒன்றில் வசித்து வந்தார்.ஒரு நாள் அந்த கிராமத்து தலைவரை சந்தித்து யாசகம் கேட்க முடிவு செய்தார்.அங்கு செல்கையில் தலைவர் மன்னரை சந்தித்து கிராம மக்கள் நலனுக்காக நன்கொடை வாங்க சென்ற செய்தியை யாசகர் அறிந்தார்.மன்னர் ஊர் தலைவருக்கு உதவி செய்வதால் அவர் ஊர் தலைவரைவிட மிகுந்த செல்வாக்குடையவர் என்றறிந்து அவரிடம் யாசகம் கேட்க முடிவு செய்தார்.அவ்வூரின் தலைநகருக்கு செல்லும்போது கோயிலுக்கு வெளியே மிகப் பெரிய கூட்டத்தை பார்த்தார்.அங்குள்ளவர்களிடம் விசாரித்ததில் மன்னர் அங்குள்ள கோயிலுக்கு வருகை புரிவதை அறிந்தார்.யாசகர் எட்டிப்  பார்த்ததில் மன்னர் ஆண்டவனிடம்``என்னை ஆசிர்தித்து அரண்மனை கஜானா எப்பொழுதும் நிறைந்திருக்க அருளிபுரிக’’ என்று வேண்டினார்அக்கனம் யாசகர் ஆண்டவன் மன்னரை விட பெரிய பலம் பெற்றவர் என்றறிந்தார்.


      
   

பின்னர் இறைவன் அவர்முன் காட்சி ளித்து``உன்னுடைய சிக்கலுக்காக தீர்வு கடின உழைப்பு. யாசிப்பதை நிறுத்தி உழைக்க ஆரம்பித்தாலே வாழ இயலும்’’`என்று அறிவுறுத்தினார்.அந்த அறிவுரையை மதித்து யாசிப்பதை நிறுத்தி நன்றாக வாழ கடினமாக உழைக்க ஆரம்பித்தார்.