புதன், 14 செப்டம்பர், 2016

நல்ல நோட்டுக்களுக்கென்றே சில பாதுகாப்பு அம்சங்கள்...!!!

இன்று நான் பகிரவுள்ள தகவல் எனது நண்பர் மூலம் எனக்கு அறிய கிடைத்தவை..இதனை தங்கள் பார்வைக்கும் கொணர்வதன் நோக்கமே இப்பதிவு..

திங்கள், 12 செப்டம்பர், 2016

செல்வாக்கு நிறைந்த பெண்கள் பட்டியலில் 8 இந்தியர்கள்...!!

நியூயார்க்: ஆசியாவின் செல்வாக்கு நிறைந்த பெண்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 8 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

த்ரான்ஸ் அன்ட் பெடல்ஸ்

      த்ரான்ஸ் அன்ட் பெடல்ஸ்

சிறுவன் ஒருவன் தனது வீட்டிற்க்கு அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்பொழுது பெரி பழங்கள் நிறைந்த தோட்டத்தைப்பார்த்து ஈர்க்கப்பட்டான்.பின்பு அந்த பழங்களை பரிக்கச் சென்றான்.அந்த பெரி செடிக்கு முன் முட்கள் நிறைந்த செடிகளும் படர்ந்திருந்தது.தன் இரு கரங்களையும் நீட்டி முட்களையும் பொருட்படுத்தாமல் பழங்களை பரித்தான்.
பின்பு ஒரு முள் அவனை கடுமையாக தாக்கியது.அழுது கொண்டே தன் அம்மாவிடம் ஓடி சென்று நடந்ததை கூறினான்.``தம்பி வாழ்க்கையில் பெறுவதற்க்காக நீ சிலவற்றை இழக்கத்தான் வேண்டும்.அந்த காயங்களுக்கு பின்னும் சுவையான இந்த பழங்கள் உனக்கு கிடைத்ததல்லவா?.பழங்களை பரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் முன்னே இருந்த முட்களை நீ கவனிக்கவில்லை’’ என்றார்.ஆகையால் ஒன்றை பெற வேண்டுமெனில் சில தடைகளை நாம் தாண்ட வேண்டும் என்பதனை அவன் இந்தன்மூலம் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்டான்.

தி டிஸ்ஹானஸ்ட் பியர்

 தி டிஸ்ஹானஸ்ட் பியர்
ஒரு முறை சிங்கத்தை சந்தித்தை பார்த்து நரி அவதூராக பேசியது.அதனைக் கேட்ட சிங்கம் அந்த நரியை வெறிகொண்டு விரட்டுயது.

வழியில் கரடியை பார்த்து நரி உதவி கேட்டது.கரடியும் ``நீ என்னுடைய குகையில் தாராலமாக ஒலிந்து கொள்ளலாம்’’ என்றது.நரியும் குகைக்குள் சென்று ஒலிந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தது.அப்பொழுது அங்கே வந்த சிங்கம் கரடியிடம் ``இங்கே நரி ஏதாவது வந்ததா?’’ என்று வினவியது.அதற்க்கு கரடி ``இல்லை’’ என்று தன் வாயால் கூறி க் அசைவின் மூலம் நரியின் இருப்பை சிங்கத்திற்க்கு காட்டியது.
ஆனால்,சிங்கத்தால் அதனை புரிந்து கொள்ள இயலாமல் சென்றுவிட்டது.வெளியே வந்த நரியிடம் நீ என்னிடம் நன்றி கூற மாட்டாயா? என்று கேட்டது அந் கரடி.அதற்க்கு நரி எதற்க்கு நன்றி நீ பொய் கூறியதற்க்கா? அல்லது சகை காட்டியதற்க்கா? என்று கூறி சென்றது.


ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

உலகின் முதல்...?????


உலகில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட சிலவற்றின்  நிழற்படத்தை  இங்கு தொகுத்து உள்ளேன்..!! 

தன்னம்பிக்கை 8


Image result for ramayana kaaviyam photos


(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
   
    நிறைய பேச வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சொல் பேசினாலும் மனதிற்கு நிறைவாகப் பேச வேண்டும். இல்லையென்றால் மவுனமாக இருப்பது உத்தமம்.
    
   பன்னீராயிரம் பாடல்களைக் கொண்ட ராமாயணத்தில் சத்ருக்கனன் எங்கே பேசுகிறான்? அவன் வாய்திறந்து பேசியதாக ஒரே ஒரு பாடலைத்தானே கம்ப காவியத்தில் நாம் காண முடிகிறது.
    
    வனவாசம் சென்ற ராமன், பதினான்கு ஆண்டுகள் ஆகியும் நாட்டுக்குத் திரும்பிவரவில்லை. எனவே, பரதன் ஏற்கனவே ராமனிடம் சொல்லியிருந்தபடி நெருப்பில் வீழ்ந்து உயிரைத் துறக்க முடிவு செய்கிறான்.
     
    நாட்டின் பொறுப்பை ஒருவரிடம் தந்து, அதை ராமனிடம் ஒப்படைக்கச் செய்ய வேண்டும். எனவே சத்ருனக்கனனை அழைத்து, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறான்.
     
    அப்போதுதான் சத்ருக்கனன் அந்த முழுக்காவியத்திலும் முதன் முறையாக வாய்திறந்து ஒரே ஒரு பாடல் மூலம் தன் கருத்தைத் தெரிவிக்கின்றான்.

                                            
                            (தொடரும்..)

சனி, 10 செப்டம்பர், 2016

அம்மா என்று அழைப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை…!!!


Image result for அம்மா

இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயின்று வரும் கோ.ஐஸ்வர்யா அவர்களின்  சொந்த படைப்பில் உருவான கவிதையினை  பகிரவுள்ளேன்…!!!

கல்லாய் இருந்த என்னை
சிலையாய் செதுக்கினாய்..!!

கரியாய் இருந்த என்னை
வைரமாய் உருவாக்கினாய்..!!

வற்றிய கால்வாயாக இருந்த என்னை
வற்றாத நதியாக மாற்றினாய்..!!

துன்பத்தை எல்லாம் நீ எடுத்துக் கொண்டு
இன்பத்தை மட்டும் எனக்களித்தாய்..!!

இதற்கு ஈடாய் எதை தருவேன்..????
’அம்மா’ என்று அழைப்பதைத்

தவிர வேறு ஒன்று இல்லை…!!!