ஞாயிறு, 27 மார்ச், 2016

வாங்க போலாம் பங்குச் சந்தைக்கு..!! (தொடர்ச்சி)

அன்புடையீருக்கு வணக்கம்,

இந்த வாரம் பங்குச் சந்தைக்கு தயார் ஆயிட்டிங்கனு நினைக்கிறேன் நட்புகளே.சரி கடந்த வாரங்களாக பங்குச் சந்தை பற்றிய தகவல்களை சிறிது சிறிதாக பார்த்து வருகிறோம்.இந்த வாரம்  பங்குத் தரகர்களிடம் எவ்வகையான கணக்கை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

Image result for பங்கு சந்தை


பங்குத் தரகர்கள்;

பங்குச் சந்தையில் பங்குகளை நேரடியாக வாங்கவோ விற்கவோ இயலாது.அதற்கென இருக்கும் பங்குச் சந்தையில் உரிமம் பெற்ற உறுப்பினர்களிடம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய இயலும் அவர்களே தரகர்கள்.இத்தகைய தரகர்களிடம் இருவகையான கணக்குகளை உருவாக்க வேண்டும் அவை,

1.டீ-மேட் கணக்கு(demat account)
2.வியாபார கணக்கு(trading account)

டீ-மேட் கணக்கு என்றால் என்ன..?? 

                    வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பேணப்படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.
விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.

Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும். 


வியாபார கணக்கு  என்றால் என்ன? 

                            Demat Account நமது கணக்கில் உள்ள பங்குகள், பராமரிக்கப் படும். அவ்வளவே! நாம் வாங்கி விற்க வேண்டுமானால், வர்த்தகத்திற்கான தனிக்கணக்கு (Trading Account) தொடங்கியாக வேண்டும். Demat Account உள்ளவர்கள் மட்டுமே Trading Account தொடங்க முடியும். வீட்டில் இருந்தவாறே இணையம் மூலமாகக் கூட பங்குப் பரிவர்த்தனை செய்யலாம். அதற்கான கணிணி மென்பொருளைப் பங்குத் தரகு நிறுவனத்திடம் பெற்று ( ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி) நமது கணிணியில் நிறுவிக் கொள்ளலாம். இதைச் செய்தோமானால், சந்தை நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து வாங்குவதா / விற்பதா என்று முடிவெடுப்பதும் வியாபாரம்  செய்வதும் எளிதாக இருக்கும். ஆனாலும், நமது பங்கு வணிகம், அப்பங்குத் தரகர் வழியாகவே நடைபெறுகிறது. ஆகவே, நமது பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு, நாம் அவர்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். 

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
                          01.  முதலீட்டாளர் (Investor)
                           02.  நாள்வணிகம் செய்வோர் (Day Trader) 

அடுத்த வாரம் இதுக் குறித்து விரிவாக பார்க்கலாம்.நன்றி.




சனி, 26 மார்ச், 2016

சுற்றுச்சூழலின் வரலாறு




                        சுற்றுச்சூழலின் வரலாறு

முன்னுரை
இன்றைக்கு எல்லோருமே சுற்றுச்சூழல் சீர்க்கேட்டை பற்றி பரவலாக பேசுகிறோம். சமீபத்தில் தான் இது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.  ஒரு புறம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டாலும் மறுபுறம் அதை மாசுபடுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு
ஆனால் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டின் வரலாறு கிறிஸ்துப் பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. உலக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டார்கள் ரோமானியர்கள் தான். அவர்கள் தான் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டுக்கும், பிள்ளையார் சுழிப்போட்டனர். ஆனால் அது விவரம் தெரியாத காலத்தில் நடந்த அறியாமை செயல் என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள். கி.மு.400க்குப் பின் நெடி மிகுந்த மிகப் பழமையான மதுவின் கசப்புச் சுவையை மாற்றுவதற்காக ரோமானியர்கள் அந்த மதுவில் காரியம் கலந்த ஒருவித இனிப்புச் சுவையை கொடுத்தது. இந்த ரசாயனம் உடலுக்கு மட்டுமல்லாமல், மனநிலை பாதிப்புக்கும் காரணமாகிறது. இந்த மது உடலுக்குள் சென்று எலும்புகளை பெரிதாக பாதித்து இருக்கிறது. ரோமபேரரசர்களின் எலும்புக்கூடுகள் மிக அதிக அளவில் காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயிர்த்தியாகம்
கி.மு.வில் ரோமபேரரசில் இப்படி நிகழ்ந்தது என்றால், கி.பியில் நமது நாட்டில் சுற்றுச்சூழலை காக்க பெரும் உயிர் தியாகமே நிகழ்ந்து இருக்கிறது. 1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில், மன்னர் அஜய்ஜிங் என்பவர் தனது அரண்மனையை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மார்வார் என்ற வனப் பகுதியில் புதிதாக அரண்மனையை அமைக்க நினைத்தார். அரண்மனை அமைக்க வேண்டும் என்றால் அங்குள்ள மரங்களை வெட்டியாக வேண்டும்.அந்த வேலையை செய்ய  மன்னர் தன் வீரர்களை அனுப்பி வைத்தார்.அந்த பகுதியில் வாழ்ந்து வந்த பிஷ்ணோய் என்ற இனமக்கள், இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள். அவர்கள் மரங்களை வெட்ட வந்த வீரர்களை பார்த்ததும் பதறிப்போய் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் இவர்களின் எதிர்ப்பு மன்னரின் ஆணை முன்பு நமத்துப் போனது. வேறு வழியில்லாமல் ஒவ்வோரு பிஷ்ணோய் இனத்தவரும் ஒரு மரத்தை கட்டிபிடித்தவர்களை வெட்டி போட்ட பின்புதான் மரத்தை வெட்ட முடிந்தது.
சிப்கோ இயக்கம்
363 மரங்களையும் கட்டிப்பிடித்த மனிதர்களையும் சேர்த்து வெட்டிய மன்னனின் மனம் இலேசாக இளகியது. அந்த இடம் வேண்டாம் என்று திரும்பி வர கட்டளை இட்டான்.  பிஷ்ணோய் இன மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழல் பாதுக்காப்புகான முதல் போராட்டம். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான், இந்த நிகழ்வை சிப்கோ இயக்கம் என்று கொண்டாடுகிறார்கள். ஒரு பிரச்சனையைப் பற்றி எதாவது புத்தகம் வந்தால்தான், அந்த நிகழ்வு உண்மையில் பதிவு செய்யப்பட்டதாக அர்த்தம். சுற்றுச்சூழல் குறித்து முதல் விழிப்புணர்வு புத்தகம் 1864-ல் அமெரிக்க தத்துவ சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்கின்ஸ் மார்ஸ் என்பவர் எழுதினரார். மேன் அன்ட் நேச்சர்என்ற இந்த  புத்தகம் தான் சுற்றுச்சூழலின் அவசியத்தையும், அதன் பாதிப்பையும் முதன் முதலாக சொன்னது.
முடிவுரை
சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை நன்கு உணரந்த நம் முன்னோர்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் நாமோ அதை புரிந்து கொள்ளாமல்  சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கொண்டே போகின்றோம். இதனால் ஏற்படும் விளைவுகளை நன்கு உணர்ந்தும் நாம் அமைதியாக இருக்கின்றோம். தனிமனிதன் மாறினால் சமுதாயம் மாறும் என்று கூறுவர். எனவே நாம் மற்றவர்களை குறை கூறாமல் நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைப்போம். சுற்றுச்சூழலைப் பாதுக்காப்போம்.

கல்லூரி காலம்

Image result for கல்லூரி காலம்

புன்னகை செய்து வரவேற்ற
முகம் தெரியாத தோழிகள்!
பின் உறவென பழகிய நிமிடங்கள்!
     போதிமரமாய் திகழ்ந்த வகுப்பறை!
பேசியே கடத்திய பாடவேளைகள்!
     புரியாத மொழியில் தாலாட்டு பாடும் ஆசிரியர்கள்!
வகுப்பறையில் என்னை கேட்காமல்
     வரும் குட்டித் தூக்கம்!
உள்ளங்கை கோர்த்து திரிந்த நாட்கள்!
     மனதின் நினைவிலிருந்து கரையாத நிமிடங்கள்!
கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்ட
     இந்த கல்லூரிக் காலம் – இனி
கண் மூடினால் கனவில் மட்டுமே!


வெள்ளி, 25 மார்ச், 2016

இரண்டும் ஒன்றல்ல!

                        இரண்டும் ஒன்றல்ல!

Image result for சட்டம்

       சட்ட மன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ மறைந்தால் அந்த தொகுதியில் நடத்தப்படுவது இடைத்தேர்தல் (பைஎலக்சன்), சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ குறிப்பிட்ட காலத்துக்கு முன் கலைக்கப்படுவதால் வருவது இடைக்கால தேர்தல் (மிட்டர்ம் எலக்சன்)
       
       நைஜூரீயா நாட்டினர்  Nigerian என்றும், நஜைர் நாட்டினர் Nigerien என்றும் குறிப்பிடுகிறார்கள்.
     
      பொலிவியானோ என்பது பொலிவியா நாட்டு நாணயம். பொலிவர் என்பது வெனிசுலா நாட்டு நாணயம்.
      
      ஒரு நாளில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றங்களை weather என்றும், பல மாதங்கள் நிலவும் தட்ப வெப்ப நிலையை climate என்றும் குறிப்பிடுகிறோம்.
     
      இந்திய அரசின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் ஆவார்.
அமெரிக்க விண்வெளி வீரர் அஸ்ட்ராநாட் என்றும், ரஷிய விண்வெளி வீரர் காஸ்மோநாட் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
     
      காமன்வெல்த் நாடு ஒன்றுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி
ஹை கமிஷனர் என்றும், காமன்வெல்த் நாடல்லாத பிற வெளிநாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி அம்பாசிடர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

நிறங்கள் மூலம் சிகிச்சை



              நிறங்கள் மூலம் சிகிச்சை
முன்னுரை


தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நோய்க்கு சிகிச்சை என்றால் நமக்கு தெரிந்தது ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று பல முறைகள் உள்ளன. ஆனால் நிறங்களைக் கொண்டு பார்க்கப்படும் ஒரு மருத்துவமும் இருக்கிறது. இதற்கு கிரோமோதெரபி என்று பெயர்.
கிரோமோதெரபி
இதுவொரு மாற்று மருத்துவ முறை ஆகும். ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. தனியே இருக்கிற வண்ணங்களை வைத்து செய்வது இன்னொரு முறை. ஒவ்வோர் உயிரும் ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும். நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு.
நம் முன்னோரின் சிறப்பு
 இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிவித்திருந்தார்கள் என்கின்ற போதும் அறிவியல் முறையில் எந்த நிறம் உடலின் எந்த பகுதியின் நோயை போக்கப் பயன்படும் என்பது தெரியாமல் இருந்தது. 2 வண்ணங்களை ஒன்று சேர்த்து புதிதாக ஒரு வண்ணம் எப்படி தயாரிப்பது என்பதை அறியாததால் அடிப்படை நிறங்களான சிவப்பு, நீலம், மஞ்சள்,  ஆகியவற்றையே அதிகம் பயன்படுத்தினார்கள். கி.பி 910-ல் அவிசென்னா என்பவர் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு நிறத்தைப் பட்டியலிட்டார். உடலின் நிறம் மாறுபட்டால் அது நோய்க்கான அறிகுறி என்று அறிவித்தார்.

உறுப்புகளை காக்கும் நிறங்கள்
1876-ல் பிளிசாண்டன் என்பவர் நீல நிறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வலி, காயம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தீர்வு கண்டார். அதன்பிறகு பல மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து நிற மருத்துவத்தை மேம்படுத்தினர். சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், நீல நிறம் தொண்டைப்பகுதியையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், இண்டிகா நிறம் சருமத்தையும், ஊதா நிறம் தலைப்பகுதியையும் காப்பதாக இந்த மருத்தவமுறை சொல்கிறது. டிஸ்லெக்சியா  போன்ற கற்றல் குறையாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள்.
முடிவுரை
ஆனால் நிற மருத்துவத்தைப் பற்றி கற்றவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள்.  இதனை  அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையாவது செய்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.