சனி, 26 மார்ச், 2016

கல்லூரி காலம்

Image result for கல்லூரி காலம்

புன்னகை செய்து வரவேற்ற
முகம் தெரியாத தோழிகள்!
பின் உறவென பழகிய நிமிடங்கள்!
     போதிமரமாய் திகழ்ந்த வகுப்பறை!
பேசியே கடத்திய பாடவேளைகள்!
     புரியாத மொழியில் தாலாட்டு பாடும் ஆசிரியர்கள்!
வகுப்பறையில் என்னை கேட்காமல்
     வரும் குட்டித் தூக்கம்!
உள்ளங்கை கோர்த்து திரிந்த நாட்கள்!
     மனதின் நினைவிலிருந்து கரையாத நிமிடங்கள்!
கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்ட
     இந்த கல்லூரிக் காலம் – இனி
கண் மூடினால் கனவில் மட்டுமே!


வெள்ளி, 25 மார்ச், 2016

இரண்டும் ஒன்றல்ல!

                        இரண்டும் ஒன்றல்ல!

Image result for சட்டம்

       சட்ட மன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ மறைந்தால் அந்த தொகுதியில் நடத்தப்படுவது இடைத்தேர்தல் (பைஎலக்சன்), சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ குறிப்பிட்ட காலத்துக்கு முன் கலைக்கப்படுவதால் வருவது இடைக்கால தேர்தல் (மிட்டர்ம் எலக்சன்)
       
       நைஜூரீயா நாட்டினர்  Nigerian என்றும், நஜைர் நாட்டினர் Nigerien என்றும் குறிப்பிடுகிறார்கள்.
     
      பொலிவியானோ என்பது பொலிவியா நாட்டு நாணயம். பொலிவர் என்பது வெனிசுலா நாட்டு நாணயம்.
      
      ஒரு நாளில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றங்களை weather என்றும், பல மாதங்கள் நிலவும் தட்ப வெப்ப நிலையை climate என்றும் குறிப்பிடுகிறோம்.
     
      இந்திய அரசின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் ஆவார்.
அமெரிக்க விண்வெளி வீரர் அஸ்ட்ராநாட் என்றும், ரஷிய விண்வெளி வீரர் காஸ்மோநாட் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
     
      காமன்வெல்த் நாடு ஒன்றுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி
ஹை கமிஷனர் என்றும், காமன்வெல்த் நாடல்லாத பிற வெளிநாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி அம்பாசிடர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

நிறங்கள் மூலம் சிகிச்சை



              நிறங்கள் மூலம் சிகிச்சை
முன்னுரை


தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நோய்க்கு சிகிச்சை என்றால் நமக்கு தெரிந்தது ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று பல முறைகள் உள்ளன. ஆனால் நிறங்களைக் கொண்டு பார்க்கப்படும் ஒரு மருத்துவமும் இருக்கிறது. இதற்கு கிரோமோதெரபி என்று பெயர்.
கிரோமோதெரபி
இதுவொரு மாற்று மருத்துவ முறை ஆகும். ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. தனியே இருக்கிற வண்ணங்களை வைத்து செய்வது இன்னொரு முறை. ஒவ்வோர் உயிரும் ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும். நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு.
நம் முன்னோரின் சிறப்பு
 இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிவித்திருந்தார்கள் என்கின்ற போதும் அறிவியல் முறையில் எந்த நிறம் உடலின் எந்த பகுதியின் நோயை போக்கப் பயன்படும் என்பது தெரியாமல் இருந்தது. 2 வண்ணங்களை ஒன்று சேர்த்து புதிதாக ஒரு வண்ணம் எப்படி தயாரிப்பது என்பதை அறியாததால் அடிப்படை நிறங்களான சிவப்பு, நீலம், மஞ்சள்,  ஆகியவற்றையே அதிகம் பயன்படுத்தினார்கள். கி.பி 910-ல் அவிசென்னா என்பவர் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு நிறத்தைப் பட்டியலிட்டார். உடலின் நிறம் மாறுபட்டால் அது நோய்க்கான அறிகுறி என்று அறிவித்தார்.

உறுப்புகளை காக்கும் நிறங்கள்
1876-ல் பிளிசாண்டன் என்பவர் நீல நிறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வலி, காயம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தீர்வு கண்டார். அதன்பிறகு பல மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து நிற மருத்துவத்தை மேம்படுத்தினர். சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், நீல நிறம் தொண்டைப்பகுதியையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், இண்டிகா நிறம் சருமத்தையும், ஊதா நிறம் தலைப்பகுதியையும் காப்பதாக இந்த மருத்தவமுறை சொல்கிறது. டிஸ்லெக்சியா  போன்ற கற்றல் குறையாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள்.
முடிவுரை
ஆனால் நிற மருத்துவத்தைப் பற்றி கற்றவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள்.  இதனை  அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையாவது செய்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

திங்கள், 21 மார்ச், 2016

கல்வி கட்டணம் குறைப்பதற்கான கூக்குரல்..!!


Image result for மாற்று

அன்புடையீருக்கு  வணக்கம்,

தலைப்பு வைத்தே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.ஆம் கல்வி கட்டணம் குறித்த விழிப்புணர்வு தான் இந்த கட்டுரையை  அமைக்க  இருக்கிறேன்.

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஒரு இந்தியனின் கடமை..!!

  •   படைபாளர் பலர் உருவாக வேண்டும் .பாரதம் பாரினில் உயர்ந்தாக வேண்டும் .ஒவ்வொரு மனிதனும் படித்தாக வேண்டும் ஊருக்கும் நாட்டுக்கும் உழைத்தாக வேண்டும்.
Image result for ஒற்றுமை


  •  எறும்பிடம் நாம் பாடம் கற்றாக வேண்டும். என்றென்றும் ஓய்வின்றி பொருள் தேடவேண்டும். காகங்கள் போல நாமும் ஒற்றுமையுடன் உறவாட வேண்டும்.



  •  ஒவ்வொரு குடிமகனும் ஒரே வீட்டில் உள்ளோர் போல் இந்தியாவை உருவாக்க வேண்டும். ஒருமைபாட்டால் நாம் ஒன்றாக வாழ வேண்டும்!

Image result for ஒற்றுமை

கொசுக்களுக்கு இரத்தப் பிரிவு உண்டா?


               கொசுக்களுக்கு இரத்தப் பிரிவு உண்டா?
முன்னுரை


          மாலை நேரம் ஆகிவிட்டால் போதும், போர்ப்படைப் போல புறப்பட்டு வரும் கொசுப்படையும், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களும் தொடங்கிவிடுகின்றன.
ஒரு கடியில்
         கொசுக்கள் நம்முடைய ரத்தத்தை உறிஞ்ச, ரம்ப வடிவத் தூவிகள் கொண்ட உறிஞ்சுகுழலைத் தோலுக்குள் செலுத்துகின்றன. இந்த தூவிகள் லேசான வலியைத் தரலாம். ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து போய்விடாமல் இருக்க, நொதிகள் கொண்ட எச்சில் போன்ற பொருளைச் சுரக்கின்றன. இந்த எச்சில் ஏற்படுத்தும் அலர்ஜியால் தான் கொசு கடித்த இடத்தில் சிலருக்கு தடிப்பு ஏற்படுகிறது. ஒரு கொசு ஒரு கடியில் 3 மில்லிகிராம் ரத்தத்தைக் குடிக்கும். ஆனால், ஒரு கொசுவின் சராசரி எடையே 2.5 கிரான்தான்.
எப்படிக் கண்டுபிடிக்கின்றன?
          மனிதர்கள் சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு, வியர்வையில் உள்ள நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்கள், உடல் சூடு ஆகியவற்றை வைத்துக் கொசுக்கள் நம்மை நெருங்குகின்றன. இந்த அம்சங்கள் யாரிடம் அதிகம் இருக்கின்றனவோ, அவர்களைக் கொசு கடிக்க வாய்ப்பு அதிகம். அத்துடன் ‘ஓ’ ரத்த வகையைச் சேர்ந்தவர்களைக் கொசுக்கள் அதிகம் கடிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு காரணம் அந்த ரத்த வகையைக் கொண்டவர்களின் ரத்தத்தில் உள்ள புரதம்தானாம். கொசுக்கள் முட்டையிடுவதற்குப் புரதம் அவசியம்.
ரத்தப்பிரிவு
        இப்படியாகப் பெண் கொசுக்களுக்கு மனித ரத்தமே முதன்மை உணவாக இருக்கிறது. மனிதர்களிடையே பல்வேறு ரத்தப் பிரிவுகள் உண்டு. மனிதர்களில் ஒருவருடைய ரத்தத்தை வேறொரு ரத்தப் பிரிவைக் கொண்டவருக்குச் செலுத்தினால், உடல் ஏற்றுக் கொள்வதில்லை (ஓ பாசிட்டிவ் வகையைத் தவிர). அதே நேரம் வெவ்வேறு ரத்தப் பிரிவுகளைக் குடிக்கும் கொசுக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதா?

கொசுரத்தம்
          மனிதர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் மேற்புறத்தில் ஒரு வகையான புரதம் இருக்கிறது. இந்தப் புரதம் இருந்தால் அது பாசிட்டிவ் ரத்தம், இல்லையென்றால் அது நெகட்டிவ் வகை ரத்தம். அதே நேரம் நமது ரத்தத்தைக் குடித்து வாழும் கொசுக்களுக்கு எந்த ரத்தப் பிரிவும் கிடையாது. அதிகம் வளர்பானேன், கொசுக்களுக்கு ரத்தமே கிடையாது.
ரத்தத்திரவம்

         கொசுக்களுக்கு உடல் திரவங்கள் உண்டு, ஆனால் அது ரத்தமில்லை. ஹீமோலிம்ப் என்ற ரத்தத்தைப் போன்ற திரவம், அதன் உடலில் ஓடுகிறது. இது மனித ரத்தத்தைப் போன்றது அல்ல. அதில் ரத்தச் சிவப்பணுக்கள் கிடையாது. சிவப்பணுக்கள் தானே ரத்த வகைகளை பாசிட்டிவ், நெகட்டிவ்  என்பதை நிர்ணயிக்கன்றன. எனவே, கொசுக்களுக்கு ரத்தமோ, ரத்த வகைகளோ கிடையாது.