சனி, 26 மார்ச், 2016

கல்லூரி காலம்

Image result for கல்லூரி காலம்

புன்னகை செய்து வரவேற்ற
முகம் தெரியாத தோழிகள்!
பின் உறவென பழகிய நிமிடங்கள்!
     போதிமரமாய் திகழ்ந்த வகுப்பறை!
பேசியே கடத்திய பாடவேளைகள்!
     புரியாத மொழியில் தாலாட்டு பாடும் ஆசிரியர்கள்!
வகுப்பறையில் என்னை கேட்காமல்
     வரும் குட்டித் தூக்கம்!
உள்ளங்கை கோர்த்து திரிந்த நாட்கள்!
     மனதின் நினைவிலிருந்து கரையாத நிமிடங்கள்!
கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்ட
     இந்த கல்லூரிக் காலம் – இனி
கண் மூடினால் கனவில் மட்டுமே!


வெள்ளி, 25 மார்ச், 2016

இரண்டும் ஒன்றல்ல!

                        இரண்டும் ஒன்றல்ல!

Image result for சட்டம்

       சட்ட மன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ மறைந்தால் அந்த தொகுதியில் நடத்தப்படுவது இடைத்தேர்தல் (பைஎலக்சன்), சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ குறிப்பிட்ட காலத்துக்கு முன் கலைக்கப்படுவதால் வருவது இடைக்கால தேர்தல் (மிட்டர்ம் எலக்சன்)
       
       நைஜூரீயா நாட்டினர்  Nigerian என்றும், நஜைர் நாட்டினர் Nigerien என்றும் குறிப்பிடுகிறார்கள்.
     
      பொலிவியானோ என்பது பொலிவியா நாட்டு நாணயம். பொலிவர் என்பது வெனிசுலா நாட்டு நாணயம்.
      
      ஒரு நாளில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றங்களை weather என்றும், பல மாதங்கள் நிலவும் தட்ப வெப்ப நிலையை climate என்றும் குறிப்பிடுகிறோம்.
     
      இந்திய அரசின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் ஆவார்.
அமெரிக்க விண்வெளி வீரர் அஸ்ட்ராநாட் என்றும், ரஷிய விண்வெளி வீரர் காஸ்மோநாட் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
     
      காமன்வெல்த் நாடு ஒன்றுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி
ஹை கமிஷனர் என்றும், காமன்வெல்த் நாடல்லாத பிற வெளிநாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி அம்பாசிடர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

நிறங்கள் மூலம் சிகிச்சை



              நிறங்கள் மூலம் சிகிச்சை
முன்னுரை


தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நோய்க்கு சிகிச்சை என்றால் நமக்கு தெரிந்தது ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று பல முறைகள் உள்ளன. ஆனால் நிறங்களைக் கொண்டு பார்க்கப்படும் ஒரு மருத்துவமும் இருக்கிறது. இதற்கு கிரோமோதெரபி என்று பெயர்.
கிரோமோதெரபி
இதுவொரு மாற்று மருத்துவ முறை ஆகும். ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. தனியே இருக்கிற வண்ணங்களை வைத்து செய்வது இன்னொரு முறை. ஒவ்வோர் உயிரும் ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும். நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு.
நம் முன்னோரின் சிறப்பு
 இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிவித்திருந்தார்கள் என்கின்ற போதும் அறிவியல் முறையில் எந்த நிறம் உடலின் எந்த பகுதியின் நோயை போக்கப் பயன்படும் என்பது தெரியாமல் இருந்தது. 2 வண்ணங்களை ஒன்று சேர்த்து புதிதாக ஒரு வண்ணம் எப்படி தயாரிப்பது என்பதை அறியாததால் அடிப்படை நிறங்களான சிவப்பு, நீலம், மஞ்சள்,  ஆகியவற்றையே அதிகம் பயன்படுத்தினார்கள். கி.பி 910-ல் அவிசென்னா என்பவர் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு நிறத்தைப் பட்டியலிட்டார். உடலின் நிறம் மாறுபட்டால் அது நோய்க்கான அறிகுறி என்று அறிவித்தார்.

உறுப்புகளை காக்கும் நிறங்கள்
1876-ல் பிளிசாண்டன் என்பவர் நீல நிறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வலி, காயம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தீர்வு கண்டார். அதன்பிறகு பல மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து நிற மருத்துவத்தை மேம்படுத்தினர். சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், நீல நிறம் தொண்டைப்பகுதியையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், இண்டிகா நிறம் சருமத்தையும், ஊதா நிறம் தலைப்பகுதியையும் காப்பதாக இந்த மருத்தவமுறை சொல்கிறது. டிஸ்லெக்சியா  போன்ற கற்றல் குறையாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள்.
முடிவுரை
ஆனால் நிற மருத்துவத்தைப் பற்றி கற்றவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள்.  இதனை  அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையாவது செய்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

திங்கள், 21 மார்ச், 2016

கல்வி கட்டணம் குறைப்பதற்கான கூக்குரல்..!!


Image result for மாற்று

அன்புடையீருக்கு  வணக்கம்,

தலைப்பு வைத்தே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.ஆம் கல்வி கட்டணம் குறித்த விழிப்புணர்வு தான் இந்த கட்டுரையை  அமைக்க  இருக்கிறேன்.

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஒரு இந்தியனின் கடமை..!!

  •   படைபாளர் பலர் உருவாக வேண்டும் .பாரதம் பாரினில் உயர்ந்தாக வேண்டும் .ஒவ்வொரு மனிதனும் படித்தாக வேண்டும் ஊருக்கும் நாட்டுக்கும் உழைத்தாக வேண்டும்.
Image result for ஒற்றுமை


  •  எறும்பிடம் நாம் பாடம் கற்றாக வேண்டும். என்றென்றும் ஓய்வின்றி பொருள் தேடவேண்டும். காகங்கள் போல நாமும் ஒற்றுமையுடன் உறவாட வேண்டும்.



  •  ஒவ்வொரு குடிமகனும் ஒரே வீட்டில் உள்ளோர் போல் இந்தியாவை உருவாக்க வேண்டும். ஒருமைபாட்டால் நாம் ஒன்றாக வாழ வேண்டும்!

Image result for ஒற்றுமை