செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

தமிழின் தொன்மையும் சிறப்பும்

              தமிழின் தொன்மையும் சிறப்பும்
 முன்னுரை;

திங்களொடும்  செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்
 பொங்குகடல் இவற்றோடும் பிறந்ததமிழ்”- பாவேந்தர் பாரதிதாசன்
என்று பாடலின் மூலம் தமிழின் தொன்மையை நன்கு உணரலாம். தமிழின் முதன்மையையும் தொன்மையையும் அகம் மற்றும் புறச்சான்றுகள் மூலம் நன்கு உணரலாம்.
அகச்சான்றுகள்;

.தமிழின் தொன்மையைக் கூறும் அகச்சான்றுகள் பல அவற்றுள் சில,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்த குடி – புறப்பொருள் வெண்பாமாலை.
சேர சோழப் பாண்டியர் போலப் படைப்புக்காலந்தொட்டு
மேம்பட்டு வரும் குடி – பரிமேலழகர்
     இவ்வாறு தமிழ் சான்றோர் பலரும் தமிழின் தொன்மையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
     3500 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய தொல்காப்பியர் தமக்கு முன் வாழந்த தமிழ் அறிஞர்களை என்மனார் புலவர், யாப்பறி புலவர், தொன்மொழிப் புலவர், நூல்நவில் புலவர் என்று குறிப்பிடுகிறார். தொன்மைக் காலத்து வாழ்ந்த தொல்காப்பியரே தமிழைத் “தொன் மொழி” எனக் கூறியுள்ளார்.
தொன்மச்சான்று;

      உலகத் தோற்றத்தின் போது, சிவபெருமானின் உடுக்கையிலிருந்து ஒருபுறம் தமிழும், மறுபுறம் வடமொழியும் தோன்றின என்று கூறுவார்கள். இதை
தழற்புரை நிறக்கடவுள் தந்ததமிழ் என்று கம்பரும்
ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை என்று தமிழன்னை கூறுவதாக பாரதியாரும் கூறியுள்ளார்.
     தமிழின் தோற்றமும் தொன்மையும் அறியமாட்டாத ஒரு சிலர் கற்பனையாகத் தொன்மக் கதைகளைக் கட்டி வழிபடுவராயினர். இருப்பினும் இந்த தொன்மக் கதைகளாலும் தமிழின் தொன்மை புலனாகிறது.
வடமொழிச்சான்று;
       ஒரு காலத்தில் இந்தியாவின் இலக்கிய மொழிகளாக இருந்தவை தென் தமிழும், வடமொழியும் ஆகும். இவ்விரு மொழிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக ஊடுருவ முயன்றன. முதல் வேதமாகிய “இருக்கு வேதத்திலேயே முத்து” முதலிய தமிழ்ச் சொறகள் காணப்படுகின்றன. அகத்தியர், வால்மீகியார், கோதமனார் போன்றோர்களின் பாடல்கள் வேதங்களில் காணப்படுகிறது. அதே வேளையில், அவர்களை தமிழ் சங்க புலவர்களாக இறையனார் களவியலுறை குறிப்பிடுகிறது. இவர்களின் தமிழ் பாடல்கள் இன்றும் புறநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
திராவிட மொழியிற்சான்று;


      திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்றும், தொல் திராவிட மொழிகள் பெரும்பாலும் தமிழோடு ஒத்துள்ளன என்றும் மொழியியலாளர் கூறுவர்.  வடமொழியின் தாக்கத்தால் முதலில் தெலுங்கு உருவாயிற்று. பின், கன்னடம் உருவாயிற்று என்பதனை,
மழலைத் திருமொழியில் சில வடுகும் சில தமிழும்
குழறித்தரு கருநாடியார் குறுகிக் கடைதிறமின் – கலிங்கத்துபரணி
ஆரியர் இந்தியா வரும் முன் தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது என்றும், இதனாலேயே இந்த, மராத்தி முதலிய வட இந்திய மொழிகளின்  தொடரமைப்பு தமிழோடு ஒத்தும், ஆரிய மொழிகளாகிய சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தின், ஜெர்மன் முதலிய மொழிகளோடு வேறுபட்டும் விளங்குகின்றன என்றும் மொழியியலாளர் கருதுகின்றன.
தொல்பொருள் ஆய்வுசான்று;

      சிந்துச் சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ, அரப்பா நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன என்று ஈராசு பாரதியார் கருதுகின்றார். ஆரியர் வருகைக்கு முற்பட்ட இந்நாகரிகம் திராவிடருடையது என நிறுவப்பட்டமையால் “கற்கால இந்தியா முழுமையிலும் வழங்கிய மொழி தமிழே. சமஸ்கிருத பிராகிருத சம்பந்தமான மொழிகள் வழங்கவில்லை” என்று நா.சி.கந்தசாமிபிள்ளை குறிப்பிடுகிறார். இதிலிருந்து இந்தியாவின் முதன் மொழி தமிழ் என்பதும், அது காலப்போக்கில் மேற்கு ஆசிய நாகரிக நாடுகளிடையே பரவி மாற்றமுற்றது என்பது தெளிவாகின்றன.
புவியியற்சான்று;
      தமிழ்நாட்டின் தெற்கிலுள்ள இந்துப் பெருங்கடலில் மிகப் பெரிய நிலப்பரப்பு ஒன்று இருந்ததெனப் புவியியலார் கருதுகின்றனர். அதற்கு இலெமுரியா எனப் பெயரிட்டார் ஹெக்கல். அவர் “தமிழ் நாட்டின் தென்பகுதியே மாந்தரின் முதற் பிறப்பிடம்” என்றார். அது மனித நாகரிக தொட்டில் என்கின்றனர். இலெமூரியாவே பழைய தமிழகம் எனப்படுகிறது.
கல்வெட்டு சான்று;

      கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து செதுக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழின் வரிவடிவம் காணப்படுகிறது. இப்பழைய எழுத்து முறையைத் தென் பிராமி என்று கூறி, வட மொழிக்கு உரிய எழுத்தாக்க முனைந்தனர். இப்போது ஆய்வு வல்லுநர்கள் வரிவடிவம் என்பது தமிழருடையதே எனக் கருதுகின்றனர். தமிழருக்கும் ஆரியருக்கும் உறவு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய மக்கள் தமிழரின் உதவியைப் பெற்று, வடமொழிக்குரிய ஒலிகளுக்குத் தமிழ் நெடுங்கணக்குப் போல வரிவடிவாகிய எழுத்துக்களை ஆக்கிக் கொண்டார்கள் என்பார் நா.பி. கந்தசாமிபிள்ளை. தமிழ் மொழியின் வரிவடிவம் எழுத்துத் தொன்மையை நிலைநாட்டுவன.
முடிவுரை;

     தமிழ் பிறமொழிக் கலப்பின்றி இயங்கும் திறனுடையது. உலகின் பெரும்பாலான மொழிகட்கு இத்தனித்தன்மை கிடையாது. தமிழில் வடமொழித் தாக்கம் கூடக் காலத்தால் முன்னோக்கிச் செல்ல செல்லக் குறைந்து போதலைக் காண முடியும். மேற்கூறப்பட்ட செய்திகள் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் நமக்கு புலப்படுத்துகின்றன.

திருக்குறள் பற்றி புலவர்களின் கருத்து


திருவள்ளுவர்:

                       திருக்குறளை இயற்றியவர் 'திருவள்ளுவர்'. இவரின் வேறு பெயர்கள்: "நாயனார் , தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர்" என்பனவாகும்.  

திருக்குறள்:

                       திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்: "முப்பால், உத்திரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை" என்பனவாகும்.


திருக்குறள் குறித்து மற்ற பல புலவர்களின் கருத்து

            "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
            குறுகத் தறித்த குறள்  -இடைக்காடர்

             "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

              குறுகத் தறித்த குறள்" -ஔவையார்.                                                                       

              "திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு

              உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க

              உருத்திர சன்மர் என உரைத்து வானில்

              ஒருக்கஒ என்றது ஓர் சொல்"                                                                                                                                                            -அசரீரி

            "தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

              பனையளவு காட்டும் படித்தால் - மனைஅளகு

              வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார்

              வெள்ளைக் குறட்பா விரி"                                                                                                                                                        - கபிலர் .

 

              "மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்

              மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்

              தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ?

              பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்"                                                                                                                                                           -சீத்தலை சாத்தனார்.


              "மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண்அடியால்

              ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வால்அறிவின்

              வள்ளுவருந்  தங்குறள்வெண் பாஅடியால் வையத்தார்

              உள்ளுவால் லாம் அளந்தார் ஓர்ந்து"                                                                                                                                                                            -  பரணர்.

             
             "எப்பொருள் யாரும் இயல்பின் அறிவுறச்

                செப்பிய வள்ளுவர் தாம்செப்பவரும் - முப்பாற்குப்

                பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை

                நேர்வனமற்ற(று) இல்லை நிகர்"                                                                                                   - உத்திரசன்ம கண்ணர்.


                 "செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த

                  பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே; - செய்யா

            அதற்குஉரியர் அந்தனரே, ஆராயின் ஏனை

            இதற்குஉரியர் அல்லாதார் இல்"                                                                                                                           - வெள்ளி வீதியார்.


           "கான்நின்ற தொங்கலாய்! காசி தந்ததுமுன்

           கூநின்று அளந்த குறள்என்ப - நூன்முறையான்

                வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்

                தாம்நின்று அளந்த குறள்"                                                                                                                                    - பொன்முடியார்.

                 இவ்வாறு திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் மேலும் பல புலவர்கள் பாடியுள்ளனர்

திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஆசிரியர் பணியின் அடையாளம் எது?


அன்பான மாணவிகளுக்கு..



இன்று நான் வாசித்த பதிவுகளுள் மணம் கவர்ந்த பதிவு.




கலாம் தன் வாழ்நாள் முழுக்க நினைவு கூர்ந்த பெயர் லடிஸ்லாஸ்

சின்னத்துரை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விண்வெளி 

இயற்பியல் பாடம் போதித்த ஆசிரியர். தனது மரணத்துக்கு 9 நாள்களுக்கு

 முன்புகூட திண்டுக்கல் வந்த கலாம், தனது ஆசிரியர் சின்னத்துரையை 

சந்தித்து, கெளரவித்து நினைவுகளில் மூழ்கினார்.

91 வயதாகும் சின்னத்துரை, கலாம் பற்றி பெருமிதம் ததும்பப் 

பேசுகிறார்: 1952-54 இல் கலாம் என்னிடம் படித்தார். விண்வெளி 

இயற்பியலில் அவருக்கு கூடுதல் ஆர்வம். நிறைய சந்தேகங்களைக் 

கேட்டுக் கொண்டே இருப்பார். 

மூன்று மணி நேரம் பாடம் நடத்தி, பாடத்தை முக்கால் பாகத்தோடு 

நிறுத்தி விடுவேன். நிறைவுப் பகுதியை .....




தொடர்ந்து வாசிக்க...

வி.என்.எஸ்.உதயசந்திரன்: ஆசிரியர் பணியின் அடையாளம் எது?



நன்றி வி.என்.எஸ் உதயசந்தின்.

குறிஞ்சிப் பாட்டு கூறும் 99 மலர்கள்


1.காந்தள்
2.ஆம்பல்
3.அனிச்சம்
4.குவளை
5.வெட்சி
6.செங்கொடு வேரி
7.குறிஞ்சி
8.தேமாம்பூ
9.மணிச்சிதை
10.உந்தூழ்
11.கூவிளம்
12.எறுழ
13.சுள்ளி
14.கூவிரம்
15.வடவம்
16.வாகை
17.குடசம்
18.எருவை
19.செருவிளை
20.கருவிளம்
21.பயினி
22.வானி
23.குரவம்
24.பசும்பிடி
25.வகுளம்
26.காயா
27.ஆவிரை
28.வேரல்
29.சூரல்
30.சிறுபூளை
31.குறுநறுங்கண்ணி
32.குருகிலை
33.மருதம்
34.கோங்கம்
35.போங்கம்
36.திலகம்
37.பாதிரி
38.செருந்தி
39.அதிரல்
40.சண்பகம்
41.கரந்தை
42.குளவி
43.மா(புளிமா)
44.தில்லை
45.பாலை
46.முல்லை
47.கஞ்சங்குல்லை
48.பிடவம்
49.செங்கருங்காலி
50.வாழை
51.வள்ளி
52.நெய்தல்
53.தாழை
54.தளவம்
55.தாமரை
56.ஞாழல்
57.மௌவல்
58.கொகுடி
59.சேடல்
60.செம்மல்
61.சிருசெங்குரலி
62.கோடல்
63.கைதை
64.வழை
65.காஞ்சி
66.மணிக் குலை
67.பாங்கர்
68.மரா அம்
69.தணக்கம்
70.ஈங்கை
71.இலவம்
72.கொன்றை
73.அடும்பு
74.ஆத்தி
75.அவரை
76.பகன்றை
77.பலாசம்
78.பிண்டி
79.வஞ்சி
80.பித்திகம்
81.சிந்துவாரம்
82.தூம்பை
83.துழாய்
84.தோன்றி
85.நந்தி
86.நறவம்
87.புன்னாகம்
88.பாரம்
89.பீரம்
90.குருக்கத்தி
91.ஆரம்
92.காழ்வை
93.புன்னை
94.நரந்தம்
95.நாகப்பூ
96.நள்ளிருணாறி
97.குருந்தம்
98.வேங்கை
99.புழகு


பதினாறு செல்வங்கள்




நிலைபெறும்   புகழ் - பாப்பா
நீடுகொள்   கல்வி!
உலைநிறை நெல் – தம்பி
 உரம்மிகு   அறிவு! 

கலையாழ்  பொன் – பாப்பா
கனஞ்சூழ்   துணிவு!
தொலைக்கால ஆயுள் – தம்பி
தொய்விலாப்  பெருமை!

வளம்தரும் இளமை – பாப்பா
வாழ்வொத்த   நுகர்ச்சி!
உளம்மகிழ் மக்கள் – தம்பி
உய்யநல்      பொருள்!

களம்நல வெற்றி – பாப்பா
களிப்புறும்  நோயின்மை!
தளம்ஒளிர்  ஆற்றல் – தம்பி
தரணிவாழ் நல்லூழ்!

செல்வங்கள்   பதினாறும் – பாப்பா
செழித்திடப் பேறாகும்!
நன்னெறி      மனம்சூழ – தம்பி

நானிலம்   சீராகும்!

நீங்களும் நட்சத்திரமாகலாம்..




அன்புடையீருக்கு வணக்கம்.

கடந்த இரு நாட்களாக  சிந்தனைச் செய்து பலமுறை என்னுள் கேள்விகளைக் கேட்டு இந்த  பதிவை இப்பொழுது வெளியிடுகிறேன்.தலைப்பு பார்த்ததுமே சிலருக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பர்களே.ஆம் இது ஒரு விளையாட்டு தான்.இதன் தலைப்பு  “நில்,கவனி,சொல்”.சிந்தனையின் ஆடுகளமாக அமைய உள்ளது நண்பர்களே. வருகிற மார்ச்  1 தேதி முதல் தொடங்க உள்ளது.

விளையாட்டு   நிரல்;

1.மொத்தம் பத்து சுற்றுகள்.

2.ஒவ்வொரு சுற்றுக்கும் 5 கேள்விகள்.

3.அனைத்தும் வெவ்வேறு துறை மற்றும் சிந்திக்க வைக்கும் கேள்விகள்.

4.இதில் முதல் சுற்றில் விடையளிக்கும் நபர்கள் அடுத்தச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

5.இதில் வெற்றிப் பெறும் வெற்றியாளர்கள் எங்கள் வலைப்பூவில் தொடர்ந்து ஒரு வாரம் நட்சத்திரம்  என்ற சிறப்பு  இடத்தை தரவுள்ளோம்.

6.மேலும் இந்த கேள்விகள் அனைத்தும் போட்டித்தேர்வுகளும் உதவும் வகையில் அமையும்.

7.இது ஒரு விளையாட்டாக கருதாமல்,தங்களின் சிந்தனைக்கான ஒரு ஆடுகளமாக கருதி பதில் அளிக்கலாம்.

8.இதன் மூலம்  உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இயலும்.

9.கேள்விகள்  அறிவிக்கப்பட்ட  நேரத்தில் இருந்து  அடுத்த  நாள் மாலைக்குள்  விடைகளைத்  தெரிவிக்க வேண்டும்.

10.மொத்தம் 50 வினாக்கள்,சரியாக விடையளிக்கும் முதல் 3 நபர்கள் சிறப்பு  நட்சத்திரங்களாகவும்,பிறகு வரும் 2 நபர்கள் சிறந்த  பங்கேற்பாளராகவும் அறிவிக்கப்படுவர்.

முடிவு;

இது என்னுடைய சிறிய முயற்சி தான்.நான் இது விளையாட்டாக மட்டும் கருதவில்லை.எத்தனை நபர்கள் இதுப் போன்ற களத்தை உபயோகித்து தன்னை அடையாளப்படுத்த முன் வருகிறார்கள் என்று காண ஆவலாக உள்ளேன்.அனைவரும் ஆர்வத்தோடு  கலந்துக் கொண்டு தங்களின் சிந்தனைக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே..!என்ன தயாராயிட்டிங்களா..??தங்களின் வெற்றி என்னுடைய முயற்சி  நண்பர்களே.

அனைவரும் வந்து பயன்பெறவும்.வெற்றி தோல்வி என்பது இயல்பே.தோல்வி வெற்றியின் ஏணிப் படி,வெற்றி தோல்வியில் இருந்து கற்றுக் கொண்ட பாடம்.இதுவே வித்தியாசங்கள்.

வெற்றி வாகை சூடிட தயாராகுங்கள்.விரைவில் சந்திப்போம்..!!வாழ்த்துகள் நண்பர்களே..!!





Tear gas










Tear gas  are synthetic organic halogen compounds. It is also called LACRIMATOR.This irritates the upper respiratory track causing caughing, chocking and general debility. They are not true gases under ordinary conditions , they are only in liquid or in solid state that can be finely dispersed ib the air through the use of sprays, fog generators and shells. The two most commonly used tear gases are w-chloro acetophenone, o-chloro benzylidenemalonitrile.Gas masks with activated charcoal filters afford good protection against them.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

என்னவென்று கண்டுபிடியுங்கள்

              
என்னவென்று கண்டுபிடியுங்கள்
நம் அன்றாட வாழ்வில் கணிதம் பல விதங்களில் பயன்படுகிறது. நான் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன் அது கணிதத்தின் எந்த பிரிவு என்று கண்டுபிடியுங்கள்.
ஒரு வகுப்பில் 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 15, 75, 33, 67, 76, 54, 39, 12, 78, 11.
n=10
சராசரி = 15+75+33+67+76+54+39+12+78+11/10
        =460/10
சராசரி  =46
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த பிரவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரிவு இல்லாமல் கணிதம் முழுமை அடையாது. கண்டுபிடிங்கள் பார்க்கலாம்.



முதல் இயற்கை வேளாண் மாநிலம்

                 முதல் இயற்கை வேளாண் மாநிலம்
முன்னுரை;
    

 தலைப்பே வித்தியாசமாக உள்ளது என்று நினைக்கலாம். இன்று நாம் செயற்கையையே அதிகம் விரும்புகிறோம். இதனால் நமக்கு தீங்கு விளைகிறது.இதை உணர்ந்து கொண்ட ஒரு மாநிலம் செய்த அதிரடி முயற்சி தான் இயற்கை வேளாண்மை.இந்தியா விவசாய நாடு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். விவசாய முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரு மாநிலமே அதன் முழுவிவசாயத்தையும் இயற்கை முறைக்கு திருப்பி இருக்கிறது. அந்த மாநிலத்தின் பெயர் சிக்கிம்.
விவசாயத்தின் மகிமை;
இந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். என்னதான் அரசியலில் அவர் ஜாம்பவனாக இருந்தாலும், ஐந்து முறை தொடர்ச்சியாக மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்திருந்தாலும், அவர் மனதின் ஓரத்தில் விவசாயம் என்ற உன்னதம் உறங்காமல் விழிப்போடு இருந்து கொண்டே இருந்தது. விவசாயத்தை விஷமாக மாற்றும் இன்றைய நவீன விவசாயத்தில் இருந்து மாற்று விவசாயத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கண்டார். அந்த விவசாயம் இயற்கை முறையில் தான் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். அவர் தனது விருப்பத்தை 2003-ம் ஆண்டு சிக்கிம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆர்கானிக் மாநிலம்;
மேலும் சிக்கிம் இனி ஒரு ஆர்கானிக் மாநிலம்என்றார். அதன்படி மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுவோர்க்கு ஒரு லட்சம் அபராதம், மூன்றாண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டன. “ஆர்கானிக் ஸ்டேட் போர்டு”  என்ற வாரியம் உருவாக்கப்பட்டது. இதையெடுத்து முதலில் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டி இருந்தது. அதற்காக தொடர்ந்து ஒரு பக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை தந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது.
  
இயற்கை உரம் தயாரிப்பு;
 அத்தனை நிலங்களையும் இயற்கை உரங்கள் தேவை. அந்த அளவிற்கு மாநிலத்தில் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனை சரி செய்வதற்கு, மாநிலம் முழுவதும் 24536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களையும், 1447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களையும் அரசு உருவாக்கியது. இயற்கை உரங்களை தயாரிக்க தாராளமாக மானியங்களை மாநில அரசு தந்தது. இயற்கை உரம் தயாரிக்கும் முறையை விவசாயிகளுக்கு பயிற்சி மூலம் சொல்லிக் கொடுத்தது. அதோடு நின்றுவிடவில்லை, “சிக்கிம் ஆர்கானிக் மிஷன்” என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் பல கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டன. அந்த கிராமங்களில் எல்லாம் இயற்கை வேளாண்மை முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன.
உயிர் கிராமங்கள்;

இந்த கிராமங்களை  “உயிர் கிராமங்கள்” என்று அழைத்தார்கள். இவ்வாறான தொடர் அதிரடி நடவடிக்கையால் 2009-ம் ஆண்டு இறுதியில் 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறின. அப்போது மற்றொரு அறிவிப்பையும் பவன்குமார் வெளியிட்டார். இனி சிக்கிம் மாநிலத்துக்கு ரசாயன உரக் கோட்ட வேண்டாம். அதற்கான மத்திய அரசின் மானியமும் வேண்டாம் என்றார். மாநிலத்தில் ரசாயன உரத்துக்கான அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. எப்படிப்பட்ட உன்னத திட்டங்களும் அதனை தொடர்வதற்கான ஆராய்ச்சிகளும், ஆய்வு முறைகளும் இல்லாததால் பலன் தாராமல் தோல்வி அடைந்துவிடுகிறது. இதை கச்சிதமாக புரிந்து கொண்ட சிக்கிம் அரசு “சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் பார் ஆர்கானிக் பார்மிங்” ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியது.
தீர்க்கப்பட்ட சிக்கல்கள்;
அதன் மூலம் சிக்கல்கள் அவ்வப்போது தீர்த்துவைக்கப்பட்டன. இத்தனையும் போர்கால அடிப்படையில் செய்ததால் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலம் நஞ்சில்லா விளைநிலங்கள் கொண்ட விவசாய பூமியாக மாறியது. ஆரம்பத்தில் ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்தாலும் நாட்கள் செல்ல செல்ல சிக்கிம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை புரிந்து கொண்டார்கள். இன்றைக்கு சிக்கிமில் விளைவிக்கப்படும் விளை பொருட்களை வாங்க உலக நாடுகள் தவம் கிடக்கின்றன. இவ்வாறக, சிக்கிம் மாநிலம், நாட்டின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
முடிவுரை;
உலக நாடுகள் சிக்கிமை திரும்பி பார்க்க முக்கிய காரணமாக அமைந்தது இயற்கை விவசாயம் தான். ஆனால் இயற்கை விவசாயத்தை முதுகெலும்பாக கொண்ட நாமோ நவின விவசாயத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இயற்கை விவசாயத்திற்கு எப்போது நாம் திரும்புகிறோமோ அந்த நாள் உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் நம் நாடும் மாறும் என்பது உறுதி.

தமிழின் தொன்மையும் சிறப்பும்

 
  "வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி" 
என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ்மொழி மனிதன் முதன் முதலில் பேசிய பழம்பெரும் மொழிகளில் ஒன்றாகும்.
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்    விண்ணோடும் உடுக்க ளோடும்         பொங்குகடல் இவற்றோடும் பிறந்ததமிழ் என்று பாரதிதாசன் 
பாடுகின்றாரென்றால்அதற்குத் தமிழ் மிகத் தொன்மையானது என்ற கருத்துபரவலாக மேலோங்கி இருப்பதே காரணம்.
அகச் சான்றுகள்:
      கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
      முன்தோன்றிய மூத்த குடி.
என்று புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரும்,
      சேர சோழப் பாண்டியர் போலப் படைப்புக்காலந்தொட்டு
      மேம்பட்டு வரும் குடி
எனப் பரிமேலழகரும் கூறுவன தமிழ்க்குடி மக்களின்               தொன்மையைப் பறைசாற்றும்இவ்வாறு பல சான்றோர்கள் தமிழின் தொன்மையை வலியுறுத்தி வருகின்றனர்.தொன்மைக் காலத்து     வாழ்ந்த தொல்காப்பியரே தமிழைத் ‘தொன் மொழி’ எனக் கூறுவதை நோக்குங்கால் தமிழின் பழமையை நாம் உணர முடிகிறது.

தொன்மைச் சான்றுகள்:
                                  உலகத் தோற்றத்தின் போதுசிவபெருமானின்             உடுக்கையிலிருந்து ஒரு புறம் தமிழும்மறுபுறம்                 வடமொழியும்  தோன்றின என்று தொன்மத்தார் கூறுவார்.             இச்செய்தியினையே,
     ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை
என்று தமிழன்னை கூறுவதாக பாரதியார் வழிமொழிகின்றார்.

வடமொழிச்சான்று:
     ஒரு காலத்தில் இந்தியாவின் இலக்கிய மொழிகளாக இருந்தவை தென்தமிழும்வடமொழியாகிய சமஸ்கிருமும் ஆகிய   இரண்டு மட்டுமே.
கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன் ஆக்கப்பட்ட வால்மீகி            இராமாயணத்தில்வானரவீரர்களைப் பார்த்து சுக்ரீவன்,"பொன்னும் முத்துமுடைய பாண்டியனது பொன்மயான கபாடத்தை பார்ப்பீர்கள்என்று கூறுவதும்அனுமன் அசோகவனத்தில் சீதையிடம்             அரக்கர்க்குத் தெரிந்த வட மொழியை விடுத்து மதுரமான தமிழில்      உரையாடினான் எனக் கூறுவதும் இராமாயண செல்வாக்குப்           பெற்ற மொழி தமிழ் என்பதனைத் தெளிவிக்கின்றன.

திராவிட மொழியிற் சான்று:
         திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்றும்
தொல் திராவிட வடிவங்கள் பெரும்பாலும் தமிழோடு ஒத்துள்ளன 
என்றும்மொழியியலாளர் கருதுவர்.
        கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
        உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆய்டினும்.
என்ற பேராசிரியர் சுந்நரம்பிள்ளையின் கூற்று திராவிட மொழிகளின் தாய் தமிழே என வலியுறுத்தும்.
        ஒரு மொழிக் குடும்பத்தின் தாயாகவும்பரந்துபட்ட இந்தியாவின் அடிப்படை மொழியாகவும் தமிழ் விளங்குதலால்அது தொன்மை 
வாய்ந்த மொழி என்பதில் ஐயமில்லை.

தொல்பொருள் ஆய்வுச்சான்று:
        சிந்து சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாராஅரப்பா
 நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன என 
ஈராசு பாதிரியார் கருதுகிறார்.
இந்தியாவின் முதன்மொழி தமிழ் என்பதும் , அது காலப்போக்கில் 
மேற்கு ஆசிய நாகரிக நாடுகளிடையே பரவி மாற்றமுற்றது என்பதும் தெளிவாகிறன.

புவியியற் சான்று:
        "இலெமூரியாவே பழைய தமிழகம்" என்பார்
மாணிக்கவேலுநாயக்கர்தண்டகாரிணியத்துக்கும் 
கடலுக்குமிடையே ஆதி மாந்தர் தோற்றம் உண்டாயிற்று என்றும்  
பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறுவதிலிருந்துதமிழினத்தின் தொன்மையையும் தமிழின் தொன்மையும் உணர முடிகிறதுஎனவே தமிழ் நாகரிகம்ஏனைய நாகரிகங்களினும் தொன்மையானது என்பதும்
அத்தொல் பழங்காலத்திலேயே தமிழ் செந்தமிழ்கொடுந்தமிழ் என 
இரு பிரிவாகப் பரந்து விரிந்து இருந்தது என்பதும் புலனாகின்றன.

கல்வெட்டுச் சான்று:
 கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து செதுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் தமிழின் வரிவடிவம் காணப்படுகிறது.இப்பழைமை எழுத்து முறைக்கு தென் பிராமி என்று கூறிவட மொழிக்கு உரியதாக்க முனைந்தனர்இப்போது ஆய்வு வல்லுநர்கள் பிராமி எழுத்துமுறையை தமிழருடையது எனவே கருதுகின்றனர்.இதனால் தமிழ்நாடு
 தொல்பொருள் ஆராய்ச்சித் துறையும் தென் பிராமி என்றதை 
இன்று"தமிழி" என்றே குறிப்பிடுகின்றது. 3000ஆண்டுகட்கு முன்னைய தொல்காப்பியத்தில் வரிவடிவங்கள் 
செய்திகள் விரிவாக இருப்பதும்சிந்து சமவெளியின் முத்திரை 
எழுத்துதமிழ் எழுத்துக்களே என ஈராசு பாதிரியார் தெரிவிப்பதும்
தமிழ்மொழியின் வரிவடிவ எழுத்துத் தொன்மையை 
நிலை நாட்டுவன ஆகும்.

அயல்நாட்டுச் சான்று:
         சீனம் மலேசியா சாவா போன்ற கீழை நாடுகளோடு தமிழர் 
பழங்காலத்தில் கடல்வழித் தொடர்பு கொண்டிருந்தனர்.சுமேரிய 
மொழிக்கு தமிழோடு தொடர்புடையதுஐரோப்பிய மொழிக்கும் 
தமிழுக்கும் பழைய தொடர்பு உண்டு.இவ்வாறு எல்லா மொழிக்கும்அடிப்படையில் தமிழோடு தொடர்பு காணப்படுகின்றது என்பார் 
.சி.கந்தையாபிள்ளை.

சிறப்பு:
        மாந்த நாகரிக வளர்ச்சியின் முதற்படிதமிழ் என்றும்அஃது 
உலகின் முதற்றாய் மொழி என்றும் தமிழின் தொன்மையைப்
 பற்றிக் கூறுவனவெல்லாம்ஒருவகையில் தமிழின் 
தனிச்சிறப்பை பறைசாற்றுவனவேயாகும்.

இனிமை:
        எல்லா இனங்களும் சீர்மை பெற்றுத் திகழுமாறு தமிழ் என்னும் சொல்லே இனிமை எனப் பொருளுடையது எனபர்.
        இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்
என்று பிங்கல நிகண்டு இயம்பும்.

பாராட்டு:
        தன்னேரி லாத தமிழ்
என்றும்,ஒண்டமிழ்வான்றமிழ்தேன்றமிழ்பைந்தமிழ் என்றும் பலவாறு பாராட்டும் தமிழ்ப் புலவர்களேயன்றிப் பிற நாட்டாரும் நற்றமிழின்  ஏற்றத்தைப் போற்றிப் பரவியுள்ளனர்.
        தமிழே மிகவும் பண்பட்ட மொழி
என்றும் கூறுவர்.

வழக்கிறாமை:
                 உலகின் மிகப் பழைய மொழிகளில் இன்றும் பேச்சு வழக்கில் நின்று நிலவிவரும் மொழிதமிழ் ஒன்றே.இலக்கிய வழக்கு பேச்சு வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் தொடர்ந்து பரவலாக நிலைப்பெற்று வாழ்ந்து வருகிறது.

சொல்வளம்:
        எண்ணற்ற வேர்ச் சொற்களால் புதிய புதிய சொற்களை ஆக்கிக் 
கொள்ளும் திறன் படைத்ததுதமிழ்.
எண்கள்:
        ஒன்றுஇரண்டு எனப் பத்துவரை எண்ணும் பதின்கூற்று
 எண்மானம் தமிழருடையது.
        பதின்கூற்று எண்மானம் உலகுக்குத் தமிழ் ஈந்த தனிக்கொடை.

எழுத்து-வகையும் வரிசையும்
        தமிழின் எழுத்து வகைப்படும் வரிசை முறையும்மொழியியலாரையும் வியக்க வைப்பன.ஆங்கிலம் போன்ற ஆரிய மொழிகளிலும்பிறமொழிகளிலும் இச்சிறப்புகளைக் காண இயலாது.

இலக்கிய இலக்கணங்கள் :
           திருக்குறள் முதலிய நீதி நூல்களும் உலக அறிஞர்களால் 
முதன்மை நூலாகப் போற்றப்படுகிறது.
        கம்பனைப் போல் வள்ளுவன்போல் இளங்கோ வைப்போல்
        பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை.
என்ற பாரதியின் மொழி பொய்யன்றுமெய்ம்மையானது.

எழுத்து வடிவம்:
        வட்டெழுத்துகண்ணெழுத்துகோல் எழுத்து,கிரந்த எழுத்து என்று பல்வேறு வடிவங்களைத் தமிழ் அவ்வப்போது பெற்றுத் திகழ்கிறது.தமிழ் ஏறத்தாழ 5000 ஆண்டுகட்கு முன்பேயே வரிவடிவம் 
பெற்றுவிட்டது.

தனித்தமிழ்:
        தமிழ்பிறமொழிக் கலப்பின்றி இயங்கும் திறனுடையது.தனித்தமிழ்ச் சொற்களையும்தனக்கே உரிய தொடர் அமைப்புகளையும் பெற்றுப் பீடுநடைபோட்டு வரும் தமிழில்வெண்பா ஆசிரியம் போன்ற செய்யுள் வடிவங்களும் தமிழுக்கே உரியனவாய் உள்ளன.
தமிழே உலகின் முதற்றாய் மொழி என்பதற்குக் கலப்பற்ற தனித் 
தமிழே சான்றாகிறது.
        இவ்வாறு தமிழ் மொழி மிகவும் தொன்மையையும்சிறப்புகளையும் பெற்று திகழ்கிறது.