ஞாயிறு, 24 ஜனவரி, 2016

கணித மேதை இவாாிஸ்ட் கலோயிஸ்







       
        இவாரிஸ்ட் கலோயிஸ் ஒரு பிரெஞ்சு கணிதமேதை ஆவார்;  இவர் 1811 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் பாரீஸ் நகரத்தின் அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார்.  இவரது தந்தை ‘நிக்கோலஸ் காப்ரியல் கலோயிஸ்’ ஆரம்பப்பள்ளி ஒன்றின் இயக்குநராகவும், பின்னாளில் பாரீஸ் நகர மேயராகவும் பணியாற்றினார்.
     கணிதமேதை கார்ல் ப்ரெட்ரிக் காஸைப் போலவே கலோயிஸ{ம் நினைவாற்றலில் சிறந்து விளங்கினார்.  கலோயிஸின் 12 ஆவது வயது வரை அவரது தாயாரே அவருக்குக் கல்வி கற்பித்தார்.  1823ஆம் ஆண்டு ‘லூயி பால் எமிலி ரிச்சர்டு’ என்ற கணித ஆசிரியரிடம் இவர் கணிதம் கற்றார்.
     கணிதத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது பதினேழாவது வயதில் ‘தொடர் பின்னங்கள்’ பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார்.
     தொடர்ந்து கணித ஆராய்ச்சியில் ஈடுபட்ட கலோயிஸ் “சமன்பாடுகளின் தேற்றம்” பற்றிய கட்டுரை ஒன்றை பாரீஸ் அகாடமியில் சமர்ப்பத்தார்.  அக்கட்டுரையைக் கண்ட கணிதமேதை ‘அகஸ்டின் காச்சி’, பெரிதும் வியந்தார். பாரீஸ் அகாடமிக்கு கலோயிஸை சிபாரிசு செய்தார்.
     1830ஆம் ஆண்டில் கலோயிஸ் கணிதம் பற்றிய தனது ஆராய்ச்சிகளை பல சிறு கட்டுரைகளாக விஞ்ஞான இதழ் ஒன்றில் எழுதி வந்தார்.  அகஸ்டின் காச்சி, ஜெகோபி, பாயிஸான் போன்ற கணிதமேதைகளின் கட்டுரைகளும் அந்த இதழில் வெளியாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
      கலோயிஸ் கண்டறிந்த ‘சமன்பாடுகள் பற்றிய தேற்றம்;’ பின்னாளில் அவரது பெயரிலேயே ‘கலோயிஸ் தியரி’ என்று அழைக்கப்பட்டது.
     பின்பு எகோல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, நுண்கணிதத்தில் தேர்ச்சி பெற்றார்.
     கலோயிஸ{க்கு அரசியலிலும் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  இவரது தந்தை நிகோலஸ் பிரெஞ்சுப் புரட்சியில் பங்கேற்றிருந்தார்.  அக்காலத்தில் அரச பதவிகளில் இருந்தவர்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாக நிக்கோலஸ் தற்கொலை செய்து கொண்டார்.  தந்தையின் மரணம் கலோயிஸின் மனதை வெகுவாகப் பாதித்தது.
     பிரெஞ்சு மன்னராட்சிக்கு எதிராக கலோயிஸ{ம் புரட்சியில் ஈடுபட்டார்.  ஜனநாயகம் கோரி புரட்சி நடத்திக் கொண்டடிருந்த ‘ஆர்ட்டிலரி ஆஃப் தி நேஷனல் கார்டு’ என்னும் ஆயுதம் தாங்கிய அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு, மன்னராட்சிக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார்.
     அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தினால் கலோயிஸ் எகோல் கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.  எனவே அவரது வாழ்க்கையை வறுமை சூழ்ந்தது.
     பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார் கலோயிஸ்.  இது தவிர, பாரீஷ் பள்ளி கல்லூரிகளில் கணிததத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது பற்றிய நூல் ஒன்றையும் இவர் எழுதினார்.  அந்நூலில் இவர் எழுதிய பயிற்சி முறைகள் அனைத்தும் அவரது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன.
     புரட்சியில்’ ஈடுபட்ட கலோயிஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.  1832 ஆம் ஆண்டு அவர் சிறையிலிருந்து விடுதலையானார்.  சிறையிலிருந்து வெளியான பிறதும் அவர் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளவே செய்தார்.
     கலோயிஸ் பங்கேற்றிருந்த புரட்சி அமைப்பில் ஒரு சிலர் தனி இயக்கமாகச் செயல்பட்டு வந்தனர்.  அவ்வேளையில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன.  அவ்வாறு நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவத்தில் 1832 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி, ஒரு துப்பாக்கிச் சூட்டில் கலோயிஸ் காலமானார்.  அப்போது அவருக்கு வயது 21 ஆகியிருந்தது.
      கலோயிஸ் போராட்டங்களில் கலந்து கொண்ட வேளையிலும் கணித ஈராய்ச்சிகளைப் புரிந்த வண்ணமே இருந்தார்.  அவர் இறப்பதற்கு முதல் நாள் இரவு ‘குழு எண்களின் தேற்றம்’ (புசழரி வாநழசல) பற்றி கலோயிஸ் எழுதிய கட்டுரை ஒன்று நிறைவு பெறாத நிலையில் இருந்தது.  அன்றைய தினமே கலோயிஸ் இருந்தார் என்பது குறிப்படத்தக்கது.
     ‘க்ரூப் தியரி’ பற்றி உலகிற்கு முதலில் கூறியவர் கலோயிஸ் ஆவார்.  அவர் தான் இறந்த அன்று இரவில், தனது நண்பரும் கணிதமேதையுமான ‘செவாலியர்’ என்பருக்கு எழுதிய கடிதத்தில் தனது புதிய கணித கண்டுபிடிப்பு பற்றி குறிப்பிட்டிருந்தது பின்னாளில் தெரியவந்தது.
     ‘குரூப் தியரி’ மட்டுமின்றி ‘அல்ஜீப்ரா சமன்பாடு’ மற்றும் மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ‘மீதங்களின் செயல்பாடு’ ஆகியவற்றின் தொடர்புகள் பற்றியும் கலோயிஸ் பல உண்மைகளைக் கண்டறிந்து கூறியுள்ளார்.
குறிப்பு: படித்ததில் பிடித்தது

நூல் :  உலக கணித மேதைகள் 
       பக்கஎண்- 44

வெள்ளி, 22 ஜனவரி, 2016

திருக்குறள் பலூன்


 திருக்குறள் பலூன்

சிறியவர் முதல் பெரியவர் வரை பலூன் என்றால் அனைவருக்கும் விருப்பம்தான். பல வண்ணங்களில் பல வடிவங்களில் இருக்கும் இது அனைவரையும் கவர்கிறது. குறள் பலூன் என்றால் என்னவாக இருக்கும்? பலூனில் ஒரு குறள் எழுதியிருப்பார்களா? என்று நாம் நினைக்கலாம். அதுதான் இல்லை. சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூனில் வள்ளுவர் எழுதிய 1330 குறளும்  தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடனும் வள்ளுவரின் படத்துடன் இடம் பெறும்.

உருவான வீதம்

  A.R. செல்வ சரவணா மற்றும் பெனெடிக் இருவரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் இந்த குறள் பலூன். இவர்கள் அழகிய பலூன்களை வடிவமைப்பதில் வல்லவர்கள். இவர்களின் வித்தியாசமான முயற்சி தான் இந்த குறள் பலூன். இந்த பலூனை கூடிய விரைவில் உலகெங்கும் பறக்க விட உள்ளனர். மிகப்பெரிய வெப்ப காற்று பலூனில் நம் புகைப்படமும பயணம் செய்ய முடியும் என்றால் அந்த சந்தோசத்தை விவரிக்க முடியாது. அதற்காக நாம் செய்ய வேண்டியது 7500 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் அடிப்படை நோக்கம் திருக்குறளை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே.
திருக்குறளின் சிறப்பு
 ஏன் ஒரு தமிழ் நூலை உலகறியச் செய்ய வேண்டும்? என நினைக்கலாம். இந்த உலகிற்குத் தேவையான அனைத்துக் கருத்துக்களையும் இரண்டடியில் கூறிய வள்ளுவரின் திறமே இதற்கு காரணம். வேறு எந்த மொழியிலும் இத்தனை சிறப்புடைய நூல் இல்லை. எக்காலத்திற்கும் பொருந்தாத திருக்குறள் முக்காலத்தையும் உணரத்துவதாக உள்ளது.

திருக்குறளை படிக்க அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க வேண்டும் - காந்தி

தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நம்மால் திருக்குறளின் சுவையை முழுமையாக உணர முடியாது. இதுவே திருக்குறளின் தனித்தன்மை ஆகும். உலக நாடுகள் அனைத்தும் நம் நாட்டை திரும்பிப் பார்க்கும் விதமாக இந்த குறள் பலூன் பயணம் இருக்கும் என நம்பப்படுகிறது.


வியாழன், 21 ஜனவரி, 2016

தலைவியின் வருத்தம்


                            மருதம்


           


           நோம் என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே
           புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
           கட்கு இன் புது மலர் முட் பயந்தா அங்கு,
           இனிய செய்த நம் காதலர்
           இன்னார் செய்தல் நோம், என் நெஞ்சே!
                          -அள்ளுர் நன்முல்லையார்(பா.-202)
                   
திணை
      மருதம்
 துறை
     வாயிலாகப் புக்கத் தோழிக்கு தலைமகள் வாயில் மறுத்த்து
துறை விளக்கம்
         பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்குத் தூதாகவந்த தோழியைநோக்கி, “தலைவர் இப்பொழுது எனக்கு இன்னாமையைத் தரும்ஒழுக்கத்தினராதலின் என் நெஞ்சு வருந்தும்; அவரை ஏற்றுக் கொள்ளேன்என்று தலைவி கூறியது.
பாடல் விளக்கம்
        தோழி,என் நெஞ்சு வருந்தும் முல்லை நிலத்தில் அமைந்துள்ள சிறிய இலைகளையுடைய நெருஞ்சியினது புது மலர் முன்னர் கண்ணுக்குத் தோன்றும் பின்னர் தான் அதன் முள் தெரியும். அதுபோல முன்னர் இனியது செய்த என் தலைவன் இப்போழுது இன்னாமை செய்யும் போது என் நெஞ்சு வருந்துகிறது என்று தலைவி கூறுகிறாள்.

தலைவியின் மென்மை



                              முல்லை





  
     முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
     கழுவுறு கலிங்கம், கழாஅது உடீஇ
     குவளை உண்கண் குய்ப்புகை கமழுத்
     தான் துழந்து அட்டதீம் புளிப் பாகர்
     இனிதுஎனக் கணவன் உண்டலின்
     நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
                                -கூடலூர் கிழார்(பா.-167)
திணை       
       முல்லை
துறை
       கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.


துறை விளக்கம்

   



     திருமணமான மகளின் குடும்ப  நிலையை பற்றி செவிலித்தாய் நற்றாய்க்கு உரைப்பது.

பாடல் விளக்கம்
       முற்றிய தயிரினை  பிசைந்த போது காந்தள் மலரை போன்ற மெல்லிய விரலை கொண்ட தலைவியின் கைகள் சிவந்தன, மேலும் தாளிப்பின் போது வரும் புகையானது குவளை போன்ற அவளது  கண்ணின் மையை கலைத்தது, தானே தூழாவி சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிது என உண்ணும் போது தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்ந்தது. இவ்வாறு தலைவியின் குடும்ப நிலையைப் பற்றி செவிலித்தாய் நற்றாய்க்கு உரைக்கிறாள்.
                    
          

புதன், 20 ஜனவரி, 2016

எதிர் வீட்டு தேவதை .



பதினோராம் வகுப்பில்தான்

பார்த்தேன் அவளை

கல்லூரி நான் செல்கையில்

கையசைத்து சிரிப்பாள்….


புத்தக சந்தேகமென

பார்க்க வருவாள்

புரிய வைத்தபின்

புன்னகைத்து செல்வாள்


முத்தம் பெறுவதட்காக

முதல்முறை சொன்னேன்

மனமுடித்து கொள்வேனென்று

முத்தமும் கொடுத்தாள்..


பெண் பார்க்கும்

படலமும் தொடங்கிற்று

பாவமாய் சுற்றினாள்

பேதை பாவை


சாகாலத்தி சண்டையிட

சற்றும் நேரமில்லை

சட்டென்று எல் கே ஜி

சேரவேண்டும் என்பதினால்...!!!