படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜூன், 2016

நிறம் மாறும் சிலந்திகள்

         
Image result for சிலந்திகள்


பச்சோந்திகள் நிறம் மாறுவதைப்போல சில வகை சிலந்திகளும் சூழலுக்கு ஏற்ப நிறம் மாறக்கூடியது.மிசுமினா எனும் சிலந்தி இனம் வெள்ளை,மஞ்சள்,ரோஜா நிற மலர்கள் மீது வசிக்கும்போது அந்தந்த மலரின் நிறத்தில் தோன்றுகிறது.இலைகளுக்கு இடம் மாறினால் பச்சை நிறமாக மாறிக் கொள்கிறது.
இதை பரிசோதித்துப் பார்க்க வெள்ளை நிற சிலந்தியை மஞ்சள் காகிதத்தில் போட்டுப் பார்த்தனர். அது ஒன்றிரண்டு நாட்களில் மஞ்சள் நிறமுடையதாக மாறியது.இதேபோல வேறு வண்ண சிலந்திகளும்,தான் வசிக்கும் இடத்தின் சூழலின் நிறத்திற்கு ஓரிரு நாட்களில் மாறி விடுக்கின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது..



பெருமைக்குரிய பெண்மை!

பெருமைக்குரிய  பெண்மை!

1)  சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்தான்.        –மகாத்மா காந்தி.

2)  இறைவனின் படைப்புகள் எல்லாவற்றையும் விட அழகிலும், மேன்மையிலும்  சிறந்தவள் பெண்தான்.        –மில்டன்.

3)  பெண்ணே   மனிதனின்   உயர்ந்த     ஊக்கங்கள்    ஏல்லாவற்றிலும்      விளக்கு.         –ஜேம்ஸ் எல்லீஸ்.

4)  அவதூறு  என்பது  நல்ல  பெண்ணின்  வீட்டு வாசலில் மாய்ந்து பலமிழந்து விடுகிறது.        –ஹீஸ்.

5)  பெண்ணின்   மடியில்   இறையன்பு  வளர்கிறது.        –இக்பால்.

6)  பெண்  இல்லாத   வீடு  மதிப்பில்லாதது.   –யாரோ.

7)  காற்றை விட கடும் வேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்.     –ஷேக்ஸ்பியர்.

8)  எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப் படுகிறார்களோ, அந்த வீட்டில் தேவதைகள் குடியேறும்.        –மாகாபாரதம்.

9)  பெண்ணுரிமை   இல்லாத  நாடு  காற்றில்லாத வீடு.    –லெனின்.

10)         ஒரு    பெண்ணை    படிக்க    வைப்பது,   ஒரு   குடும்பத்தையே   படிக்க   வைப்பதற்கு சமம்.    –சார்லஸ் டிக்கன்ஸ்.

11)         பொய்மை,  கோழைத்தனம்,  கீழ்க்குணம்   ஆகிய  மூன்றுமே  பெண்கள்  பெரிதும்  வெறுப்பவை.      –ஷேக்ஸ்பியர்.

12)         நல்ல  சந்தர்ப்பம்  வாய்க்கும்  போது, தன்னையே  தியாகமாக்கிக்  கொள்ள விழைவதுதான் பெண்மை ! அது அவர்களுடன் பிறந்த இயல்பு.    –வில்லியம் சாமர்சப்.


செவ்வாய், 31 மே, 2016

தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் ..!




1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப்
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு...
இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....

3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...
காலப்போக்கில்....

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரைக் குறை கூற
உபயோகிக்கிறோம்...
மாறுவோம்... பிறரை மாற்றுவோம்...

திங்கள், 30 மே, 2016

மனித கணிணி......!



சாகுந்தலாதேவி;

      கணிதத்தில் பிறவி மேதை என்று கூறப்படுபவர். உலக அளவில் பாராட்டப்படுபவர். கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை பதிவாகி உள்ளது.
      கணிணி வேகமா? அல்லது இவரது மனம் வேகமா? என்று தீர்மானிப்பது கடினம். இவரை ”மனித கணிணி” என்று கூறுவதும் உண்டு. ஆனால் இவர் அதை விரும்புவது இல்லை.
     மனித மூளை கணிணியை விட நுட்பமானது என்னும் கருத்தை உடையவர். 1980ம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் தேதி அன்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கணிணி தேர்ந்தெடுத்து கொடுத்த 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என்கிற இரண்டு 13 இலக்க எண்களை மனதினாலேயே பெருக்கி சரியான விடையை 28 நொடிக்குள் கூறிவிட்டார்.
     1939 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிறந்தவர். சாகுந்தலா தேவியின் தந்தை சர்க்கஸில் பணிபுரிந்து வந்தவர். சாகுந்தலா தேவி மனதினாலேயே பெருக்கும் திறமை அவரது மூன்றாம் வயதிலேயே வெளிப்பட்டது.
     அவருக்கு ஆறு வயதான போது மைசூர் பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடைய திறமை நிரூபிக்கப்பட்டது. அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது திறமை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயது 8.
     1980 ஆம் ஆண்டில் மீண்டும் இரண்டு 13 இலக்க எண்களை பெருக்கி 28 நிமிடங்களுக்குள் கூறினார். எல்லாம் மனதாலேயே அவர் செய்தார். சரியான விடையை மனதால் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட நேரத்தை விட, அந்த விடையை எண்களாக கூற எடுத்துக்கொண்ட நேரமே அதிகம் என்று பின்னர் தெரிவித்தார்.
     தான் சிறந்த கணித மேதையாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னைப் போன்ற கணித மேதைகள் உருவாக எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க பல புத்தகங்கள் எழுதி உள்ளார்.
                                   


செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஏக்கம்

               Image result for நிலா

வற்றிப்போன குளங்கள்….
முகம் பார்க்க முடியாத ஏக்கத்தில்
நிலா!

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஒரு இந்தியனின் கடமை..!!

  •   படைபாளர் பலர் உருவாக வேண்டும் .பாரதம் பாரினில் உயர்ந்தாக வேண்டும் .ஒவ்வொரு மனிதனும் படித்தாக வேண்டும் ஊருக்கும் நாட்டுக்கும் உழைத்தாக வேண்டும்.
Image result for ஒற்றுமை


  •  எறும்பிடம் நாம் பாடம் கற்றாக வேண்டும். என்றென்றும் ஓய்வின்றி பொருள் தேடவேண்டும். காகங்கள் போல நாமும் ஒற்றுமையுடன் உறவாட வேண்டும்.



  •  ஒவ்வொரு குடிமகனும் ஒரே வீட்டில் உள்ளோர் போல் இந்தியாவை உருவாக்க வேண்டும். ஒருமைபாட்டால் நாம் ஒன்றாக வாழ வேண்டும்!

Image result for ஒற்றுமை

திங்கள், 14 மார்ச், 2016

உன்னை உலக்கிற்கு அறிமுகம் செய்

   உன்னை உலகிற்கு அறிமுகம் செய்
 
Image result for அப்துல் கலாம்


v  துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு,ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!

v  ஒரு முறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் லட்சியம்!

v  உலகம் உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!

v  வெற்றி என்பது உன் நிழல் போல, நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!

v  கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே. உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்; காணாமல் போய்விடும்.




                          -டாகடர் அப்துல் கலாம்